Originally Posted by
MASTHAAN SAHEB
ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக மக்கள் திலகத்துக்கு இந்திய அரசு பாரத் விருது கொடுத்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம் மட்டுமல்ல, கண்ணதாசனின் அண்ணன் படத்தயாரிப்பாளர் ஏஎல். சீனிவாசனுக்கும் பங்கு உண்டு. இவர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். செளந்தரா கைலாசம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று அப்போது மதிஒளி பத்திரிகையில் வந்த செய்தியை முகநூலில் பதிவு போட்டு சில அறிவிலிகள் ‘வாங்கிய பட்டம்’ என்று சொல்கின்றனர். மதிஒளி பத்திரிகை சிவாஜி கணேசன் ஆதரவு பத்திரிகை. சண்முகம் என்பவர் அதை நடத்தி வந்தார். மேலும், தமிழர்கள் என்ற முறையில் செளந்தரா கைலாசமும் ஏ.எல்.சீனிவாசனும் மக்கள் திலகத்துக்கு ஆதரவு தேடியதில் என்ன தவறு?
இதே சிவாஜி கணேசன் பின்னர், தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டபோது, அதற்காக தேர்வுக்குழுவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் வாதாடினார். பிறகு தன்னை பார்க்க வந்த பாலச்சந்தரை பார்த்து சிவாஜி கணேசன் ‘தேங்க்ஸ் பாலு’ என்றாராம். இதை எல்லாம் வக்கனையாக சொல்பவர்கள் மக்கள் திலகத்துக்கு பாரத் பட்டம் கிடைத்ததை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். பொறாமை பிடித்தவர்கள். சிவாஜி கணேசனுக்காக பாலச்சந்தர் வாதாடும்போது மக்கள் திலகத்துக்காக செளந்தரா கைலாசமும் ஏஎல் சீனிவாசனும் வாதாடுவதில் என்ன தவறு?