இருக்கு ஒரு வித கிறுக்கு
மேடையில் சாமியாடுது
தவளையாய் குதிக்குது
பறக்க முயற்சிக்குது
போதையில் மிதக்குது
புத்தியை தொலைக்குது
குருபக்தியில் திளைக்குது
ரொம்ப அருவருப்பாயிருக்குது
Printable View
இருக்கு ஒரு வித கிறுக்கு
மேடையில் சாமியாடுது
தவளையாய் குதிக்குது
பறக்க முயற்சிக்குது
போதையில் மிதக்குது
புத்தியை தொலைக்குது
குருபக்தியில் திளைக்குது
ரொம்ப அருவருப்பாயிருக்குது
அருவருப்பாயிருக்கிறது...
ஊர்ந்து செல்லும்
கம்பளிப் பூச்சியைப்பார்க்கையில்..
கூட்டத்தில் நடந்து செல்லும் போது
எதிரில் வந்து
மோதும் குடித்த மனிதனின்
நாற்றத்தை உணர்கையில்...
இவை எல்லாம் விட
கேட்கும் போது
முகஞ்சுளிக்க வைக்கும் விஷயம்..
அரசியல் வாதிகளின் பொய்கள்..
பொய்கள் பெருகுமா
நெடுநாள் காக்குமா
மதிப்பை கெடுக்குமா
இதயத்தை கிள்ளுமா
போய்யா அரிசந்திரா
பிழைக்கும் வழியைப் பார்
பார் பார்(bar) இல்லா
ஊரை பார்
பார்வை மட்டும் தெரிய
போர்வை போர்த்திய
பாவை பார்
(பாட்டுக்கு மட்டுமே பார்த்தாலே குற்றமாம்...)
எண்ணையில் நாடு செழித்தாலும்
திண்ணை கூட இல்லா
தின கூலியை பார்
ஏதும் இல்லை என்ற போதும்
பிள்ளை பெறலை கடமையாய்
காணும் குடியை பார்.
(சவுதியில் இருந்து.4 நாள் பயணம் )
பார் என்று பகட்டுகிறாள்
அணிந்தாலும் கவர்ச்சி
அணியாமலும் கவர்ச்சி
பேதமில்லாமல் பழகுகிறாள்
பொது உடமை கருதுகிறாள்
எடுக்கவும் கொடுக்கவும்
தாராளம் காட்டுகிறாள்
வேலியில்லை விதிகளில்லை
விருப்பம் போல வாழுகிறாள்
ஒளிவுமறைவு ஏதுமில்லை
வெட்கப்பட தேவையில்லை
கற்காலம் காட்டுகிறாள்
அறிமுக நடிகை..
காட்டுகிறாள் கண்களிலே கட்டுடலைச் சிற்றுடையில்;
மூட்டுகிறாள் உள்ளத்தில் உணர்வுகளின் நெருப்பினையும்;
கூட்டுகிறாள் வெண் திரையில் வெள்ளமெனக் கூட்ட்த்தை;
பூட்டுகிறாள் நெஞ்சமதில் தான்கொண்ட வேதனையை.;
வேதனையை ஏன் தருகிறாய்
அத்தை பெத்த அதிரசமே
அசையும் உலகின் அதிசயமே
சித்திரை மாத முழு நிலவே
விலகி விலகிச் செல்லாதே
விருப்பமென்ன சொல்லிவிடு
புலிவால் மீசையா
அணில் வால் மீசையா
மீசையே வேண்டாமா
தனிக்குடித்தனம் வேண்டுமா
துணி துவச்சிப் போடணுமா
சேவை செய்ய காத்திருக்கேன்
காலை சுற்றும் பூனைக்குட்டியை
மடியில் வைத்துக் கொள்ளம்மா
வைத்துக் கொள்ளம்மா நீயே..
என்றேன் பேத்தியிடம்..
அவ்ள் கேட்ட் குட்டிக் கறுப்பு ஆடு
சுறுசுறுப்பாய்த்
தழை மேய்ந்து கொண்டிருக்க..
இது வளர்ந்தா என்ன ஆகும்..
குட்டி நிறைய போடும்..
அப்புறம்..
அந்தக் குட்டிகள்ளாம் பெருசாகும்..
இந்தக் குட்டி ஆடு என்னாகும்..
இதுவும் பெருசாகும்..
அப்புறம்..
சாமிக்கிட்ட போகும்...
நெஜம்மாவா..
இல்லைசெல நேரம்
நாமே சாமிக்காக்க் கொடுத்துடுவோம்..
கருப்பசாமிக்கு கருப்பு ஆடு ரொம்ப்ப் பிடிக்கும்...
புத்திசாலி என நினைத்து மருமகள் சொல்ல..
பேத்தி மறுத்தாள் தீர்மானமாய்...
அப்ப இது இங்கேயே இருக்கட்டும்
என்க்கு வேண்டாம்...
வேண்டாம் வாதம் விவாதம்
வீம்பு வீண் பிடிவாதம்
வழக்கு விவகாரம் வினை
விரோதம் வெஞ்சினம் விசனம்
விபரீத விளயாட்டு வேதனை
வாழப்போவது கொஞ்ச காலம்
காலம் மாற்றுபவை ப்ல..அதில் ஒன்று..
சின்ன வயதில்
மேல மாசி வீதியில்
சித்திரைத் திருவிழாவின் போது
சாமி வருகையில்..
ரோஜா,வெள்ளை நிறங்கலந்த
மிட்டாய்.....
பள்ளியில் படிக்கும் போது
ட்ரிபிள் டேஸ்ட் என்ற மிட்டாய்
சுற்றியிருக்கும் பேப்ப்ரைச் சேர்ப்பதற்காக...
க்ல்லூரிப் போதில்
சென் ட்ரல் சினிமா அருகில்
உள்ள சந்தில்
பாம்பே மீல்ஸ் சாப்பிட்ட் போது
கொடுத்த
பால் பேடா...
வேலை சேர்ந்த போது
மனம் கவர்ந்த அலுவலகப் பெண்ணுடன்
சற்றே ஆர்வங்கலந்த் பேச்சுக்களிடையே
அசிரத்தையாய் உண்ட் குலோப் ஜாமூன்...
திரும்ணம் ஆன புதிதில்
புது மனைவி
பாலைக் கொதிக்க்க் கொதிக்க வைத்து
ம்றுபடியும் கையைச் சுட்டுக் கொண்டு
சுண்ட வைத்துக்
கிளறி
கண்களில் ஆவல் ம்ற்றும்
எதிர்பார்ப்பு மின்னக் கொடுத்து
உண்ட திரட்டுப் பால் அதன் பின்
அப்படியே நான் கொடுத்த முத்தம்...
பெண் பிறந்து பத்து வயதாகையில்
வேண்டுதலுக்காக ஸ்ரீரங்கம் சென்றதில்
அங்கு கிடைத்த அரவணை என்ற இனிப்பு
(டேஸ்ட் டிஃபரண்ட்டா இருக்குப்பா)
போன் மாதம் பத்தாம் வகுப்பில்
அதிகமார்க் வாங்கியதற்காக
அவளே செய்த சேமியா பாயசம்..
ம்ம்
காலம் செல்லச் செல்ல
என் இனிப்பின் ரசனையும்
மாறியிருக்கிற்து..
ஆனால் இனி முடியாது..
கண்ட்ரோலில் இருக்கணுமாம்
வைத்தியர் சொன்னாராம்..
சுகர் வந்தாலும் வருமாம்..
எனில்
காலைக் காப்பியிலும்
அதிகமாய் இருந்த்து
கசப்பு...!
கசப்பும் இனிப்பும்
பொய்யும் உண்மையும்
வெயிலும் நிழலும்
இன்பமும் துன்பமும்
வலியும் இதமும்
நோயும் ஆரோக்கியமும்
நாணயத்தின் இரு பக்கம்
சேர்ந்தே இருக்கும் லயம்
ஒன்றின் அருமை அறிந்திட
மற்றொன்றென ஓர் ஏற்பாடு
ஏற்பாடெல்லாம் செஞ்சாச்சா..
ப்க்கத்துவீட்டு ஆச்சி கேட்க் பெரிய மதனி
‘என்ன இப்படிக் கேட்குறிய்..
எல்லாம் செஞ்சாச்சுல்லா..
இவரோட தம்பிக்கு தலச்சன் புள்ளல்லா..
தம்பியோட மாமனார்
ஒரு பவுன்ல தோடு வாங்கிருக்காக..
திருச்செ ந்தூர் தான் முடி எறக்கற்து...
நாங்க எட்டுப் பேர் மொத நாள் ராத்திரில்லபோவோம்..
ஆமா...செகண்ட்க்ளாஸ் ஏஸி தான் ட் ரெய்ன்ல..
இல்லன்னா வேகும்லா..
லாட்ஜ் எல்லாம் பாத்தாச்சு..
சாப்புடறதுக்கா..
அங்கேயே
கோவில் பக்கத்துல தேவஸ்தான ஹோட்டல் இருக்கு...
ஆர்டரும் சொல்லியாச்ச்சு..
ஒறம்பொற ஒரு இருவத்தஞ்சு பேர் வருவாக..
காலல்ல முடி எறக்கிட்டு தோடு குத்திட்டு
லஞ்ச்
அதான் பதினொன்னு ஆயிரும்லா
சாப்பிட்டுட்டு
பின்ன
கார்ல தின்னவேலி போய்
சாயந்திரம் அங்கேர் ந்து
ட் ரெயின் பிடிச்சா மக்க நாள் மதுர...
பாருங்க புள்ள் எப்படி சிரிக்குதுன்னு..
நாளக்கி அழாதுன்னு நினைக்கேன்...
மறு நாள்
மங்களகரமாக உறவினர்கள் வந்திருக்க
குழந்தைக்கு மொட்டை அடித்து
காது குத்தி
அழாதே என்று வாயில் சர்க்கரை வைத்து
உறவினர்களுக்கு விருந்து கொடுத்து
சம்பந்திகளை
பத்திரமாக
இரவில் ரயிலில் ஏற்றிய
பெண்ணின் அப்பா
தானும் ஏறி
சின்ன நோட்டில்
கணக்கு எழுதிப் பார்க்கையில்
சற்றே சோர்வு வந்த்து அவருக்கு..
காதுகுத்தல் நன்றாகத் தான் நடந்த்து
ஆனால் யாருக்கு என்று எழு ந்த்து கேள்வி...!
கேள்வி கேட்கச் சொன்னான் சாக்ரடீஸ்
தெளிவு பிறந்தது தத்துவஞானத்தில்
விஞ்ஞானியின் கேள்விகள் கொடுக்கும்
பதில்கள் அறிவியல் வளர்த்திடும்
கேள்வி கேட்காத மனைவிகளை
என்னாளும் ஆண்களுக்குப் பிடிக்கும்
பிடிக்கும் எனக்கு வேண்டும்
என
பொம்மையைக் கையில் வைத்து
அடம் பண்ணிய குழந்தையிடம்
பிடுங்கி
கீழே வைத்து விட்டு
அது அழ அழ
அம்மா தரதரவென இழுத்துச் செல்ல
மற்ற பொம்மைகள் ஆண்டவனிடம்
‘கடவுளே..
எங்களுக்கும் பேச்சுத்தன்மை கொடு
நாங்களும்
அந்தக் குழந்தையுடன் போகவேண்டுமென
அடம் பிடிப்போம் கடைக்காரனிடம்’
எனச் செய்தன பிரார்த்தனை..!
பிரார்த்தனை ஆராதனை பலன்தரா பகட்டிடம்
பக்தி பணியும் போது.
பணியும் போது மட்டும் பயப்படு
பாய்வதில் இல்லாத பயங்கரம்
குழையும் போது பதுங்கியிருக்கும்
நால்வகை ஆயுதம் பெண்புலியிடம்
பெண்புலியிடம் ஆண்புலி
‘கண்ணே.. உனக்காக
ஒன்று
கொண்டு வந்திருக்கிறேன்..’
கண்களில் ஆவல் மின்ன
‘மானா..’
‘இல்லை’
‘மாடா..’
‘இல்லை’
‘பின் யானையா..’
‘இல்லை இவளே..
உன் விழிகளின் அழகும்
உறுமலின் வீர்யமும் வைத்து
ஒரு சின்னக் கவிதை..’
'அடச்சீ போய்ய்யா’ என்றது பெண்புலி..
‘எனக்கு உணவு தான் வேண்டும்..பசிக்கிறது..
புலி பசித்தாலும்
கவிதை தின்னாது..!”
தின்னாது தானமும் பண்ணாது
நாய் பெற்ற தெங்கம்பழமாய்
வீணாய் போகும் பண்டம் நிறைய
சோமலியாக்கள் இருக்கக் காரணம்
காரணம் தான் புரியவில்லை...
சுந்தர பாண்டியன் புலம்பினார்..
ஒரு பக்கம் மகன்கள்
வீர பாண்டியனும்,குலசேகர பாண்டியனும்
சண்டை போடுகிறார்கள் என்றால்
நாட்டை இழந்த நம்மையே
குறிவைத்துத் தாக்குகிறார்கள்
சோழர்கள்...
என்ன செய்வது...
அமைச்சர் உள்ளுக்குள் நகைத்து..
மன்னா..
நாட்டு நலத்திற்காக அரசை மக்கள் கொடுத்தனர்.
ஆனால் அதை நீஙகள் உங்கள் மக்களிடம் தந்தீர்...
எனச்சொல்ல நினைத்துச் சொல்லாமல்
கடைசியில் சொன்னார்..
என்ன பண்ண மன்னா..
எல்லாம் ஊழ் வினை..!
ஊழ்வினை தொடரும் நிழலாய்
முன்னெழுதியது தர்மன் தீர்ப்பு
தவறாது சித்திரகுப்தன் கணக்கு
என்பது ஒரு சாரார் நினைப்பு
தாண்டி வா அதையென சொன்னது
வள்ளுவன் தன்னம்பிக்கை வாக்கு
வாக்குத் தவறாதவர் அப்பா..
சொன்னால் சொன்னபடி செய்வார்..
அது மட்டுமல்ல..
வார்த்தைகளும் கூட..
அவர் குளிர்ந்திருந்தால்
பனி அருவியாய்க் கொட்டும்..
கோப்ப்பட வைத்திருந்தால்
எரிமலைக் குழம்பாய் வரும்..
என்ன காரணமோ..
அம்மா வழிப் பெரியப்பாவிடம்
பயங்கரமாக்க் கோபம் அவருக்கு..
எவ்வளவு உதவி பண்ணினேன்..
துரோகம் பண்ணிட்டாம்மா...
அவ்வப்போது உறுமுவார்..
ம்ம்
என் முகமுழி அவனுக்குக் கெடைக்கும்கற...
கை பிடித்து சமாதானம் செய்வேன்..
காலப் போக்கில்
அப்பாவும் பெரியப்பாவும்
சமாதானமாக...
ஒரு மாலைப் பொழுதில்
திடீரென வந்த மாரடைப்பில்
அப்பாவின் உயிர் பிரிய...
அதிசயமாக
அருகிலிருந்த உறவுகள் எல்லாம் வந்து
வேகவேகமாய்க் காரியங்கள் நடந்து
இரவு ஒன்பது மணியளவில்
எல்லாம் முடிய..
வீட்டுக்குவந்தால் பெரியப்பா..
விருதுநகரிலிருந்து அரக்கப் பரக்க
வந்திருக்க..
வாசலிலேயே அண்ணனுடன் சண்டை..
பார்க்க விடாமப் பண்ணிட்டயேப்பா..
மற்றவர்கள் சமாதானம் கூற..
ஒருசிலர் என்னிடம்
‘என்னவோடியம்மா..
ஆனாலும் உங்கப்பாக்கு கரி நாக்கு.
சொன்னது போல் நடந்துடுத்தே.” என
அது கரி நாக்கா..
அல்லது
சுடும் நாக்கா ’எனப் புரியவில்லை..
இன்றுவரை..
இன்று வரை குறையில்லை
தூங்காமல் ஏங்கவில்லை
பிடிபடாமல் பறக்கவில்லை
வலிகள் கொல்ல முடிந்ததில்லை
சில கனவாவது பொய்க்கவில்லை
பேராசை என்றும் இருந்ததில்லை
விதியுடன் சண்டை போடவில்லை
வீணாய் மண்டை உடையவில்லை
எனக்கென வகுத்த ஓர் எல்லை
அதற்குள் நான் தோற்கவில்லை
தோற்கவில்லையாம் சாதாரணமாக..
தோற்க வைத்து விட்டேனாம்..
ப்ணம் நிறைய வாங்கிக் கொண்டேனாம்..
குற்ற்ம் சாட்டுகிறார்கள்..
ஏன் வாங்கினால் என்ன..
இவர்களுக்காக
எவ்வளவு போட்டிகள் ஜெயித்திருக்கிறேன்..
எவ்வளவு தடவை
சொப்பு மாதிரியான கப்புகள்
வாங்கியிருக்கிறேன்..
ஹீம்.. அவற்றில்
ஒரு காப்பி குடிக்க முடியுமா...
ரசிகைகள் எல்லாம்
சூழ்ந்து கொள்வார்கள் தான்..
வாஸ்தவம்
நெரிசலில்
சிரித்தபடி
கையெழுத்துப் போட்டதில்
எனக்கு
கை வலியும் சென் ட் ம்ணமும் தான்
மிச்சம்..!
அது யார்..
ஒரு திரைப்பட நடிகை..
லட்சணமானவள் தான்..
அழகாய் உடனிருப்பாள்
என நினைத்தால்
ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
இரவு விருந்து முடித்து
ச்சோ ஸ்வீட் யார்...
ஸீ யூ லேட்டர் எனச்
சொல்லிச் சென்றவள் தான்..
அந்த லேட்டர் தான் இன்னும்
வந்த பாடில்லை..
ம்ம்..
ஏய் கண்ணாடி
நீயே சொல்
நான் செய்வது சரிதானே
எனக்கெனச் சேர்த்துக் கொள்ளக்
கூடாதா என்ன...
கண்ணாடியில் தெரிந்த
பிம்பம்
சற்றே மாறி
ஒரு
ராட் ஷச உருவமாய்
ஒருகணம் தெரிந்து
மறுபடியும்
வழக்கமான பிம்பம் வர
கண்ணைக் கசக்கிக் கொண்ட
விளையாட்டு வீரர்
தனக்குள் சொல்லிக் கொண்டார்
‘சே.. எல்லாம் பிரமை..”
பிரமை பிடித்து சும்மா உட்கார்ந்திருக்காதே
உன்னை நம்பி இங்கே பல பணிகளிருக்கே
எடு சவக்காரத்தை கிளம்பு வான் மேலே
முதல் வேலை சந்திரனை சலவை செய்வதே
சலவை செய்வதே என் வாழ்க்கை..
எவ்வளவு துணிகள்..
எவ்வளவு அழுக்கு..
இவ்வளவு வருடங்களிலும்
கொஞ்சம் கூட முகம் கோணாமல்
துவைத்திருக்கிறேன்..
போன வாரம் இவள் சொன்னாள்..
இது சரியில்லை..
பதினெட்டு வருஷமாச்சு..
வேற வாங்கலாம்..
ஆயிற்று..
இப்பொழுது என் இட்த்தில்
வேறொன்று..
என் இடம் பால்கனி..
நான் துவைத்த துணிகள்
காய்வதை வேடிக்கை பார்த்தபடி..
மெல்ல மெல்ல
என் மேல் படிகிறது அழுக்கு..
அழுக்கு இவ்வளவு அழுத்தமாய் பதிந்துள்ளதா
பதறுது பாவி மனம் பத்திரிக்கை படிக்கையில்
எத்தனை வக்கிரம் விசித்திரம் விகாரம் வன்மம்
அறுபது வயதில் பிள்ளைப் பெற்று பூரிக்கும் பாட்டி
அரசு தொட்டிலில் அநாதையாய் பிஞ்சு சிரிக்கும் படம்
பதவி நாற்காலியை உடும்பாய் பற்றிய ஊழல் மந்திரி
காதலனுடன் சேர்ந்து பெண் கணவனை செய்த கொலை
சிறுமியை கெடுத்த சாமியார்- உளதோ வேறு நரகம்
நரகத்திற்குச் சென்றால்
கதவு பூட்டியிருந்தது..
குழம்பியபடி வந்து
எதிர்ப்பட்ட தேவனிடம் கேட்டால்..
‘அடடா..நீங்கள் வந்திருப்பது
டெர்மின்ல் ஒன்று..
இங்கு நிரம்பி விட்டது..
டெர்மினல் இரண்டுக்குச் செல்லவும்..
செல்லவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல்
என்ன ஒரு அவதி இது
அவரோ என் மேலதிகாரி
தொலைபேசிக்கொண்டேயிருக்கும்
ரொம்ப முக்கிய பொறுப்பு
கொட்டாவியை அடக்கிவிட்டு
கற்பனை குதிரையை தட்டி
அவர் நாற்காலியிலெனை இருத்தி-
ரொம்ப சுகமாய்த்தான் இருக்கு
இருக்கும் பொழுது
எதுவும் பேச மாட்டேன் என்கிறாய்.
நான் சொல்வதை
தலையசைத்துக் கேட்கிறாய்..
கண்ணிமைகள் படபடக்க
நீ
ஒருபக்கம் தலையைச் சாய்த்து
கூர்மையாய்ப் பார்க்கிறாய்..
இவையெல்லாமும்
நீ இல்லாத பொழுது
எனக்குத் துணையாய் இருக்கிறது
நான் அசைபோட...
அசைபோட அவகாசமிருக்கு
வெள்ளி முடி வந்த பிறகு
அவசரமாய் உணவை உண்ணும் பசு
பின்னர் நான்கு அறை வயிற்றிலிருந்து
மீண்டும் அதை வாய்க்கு கொணர்ந்து
மெதுவாய் மென்று அதை விழுங்கி
செரித்து நலம் பெறுவது போலவே
அவசரமாய் உண்ட இளமையை
வசந்தகால தேன் உணவை
பனிகாலத்தில் அசைபோடும்
சுகத்தை ஆங்கில கவி கீட்ஸ்
அழகாய் சொன்னான் மனித வாழ்வை
இயற்கையின் நான்கு பருவமாக்கி
மறக்க முடியா ஓர் கவிதையில்
’கவிதையில் ஆரம்பித்து
கவிதையில் முடிவது எது தெரியுமா...’
‘இந்தச் செவ்வானம்’
‘இல்லை’
‘இந்தக் கடல்லை’
‘ம்ஹீம்’
‘இந்த்த் தென்ற்ல்..
இந்தப் ப்டகு மறைவு..
இந்த த் தனிமை..
இங்கு நாம் பேசிய ‘ஒன்றுமில்லா இனிப்புகள்’”
“எதுவும் இல்லை’
“பின்...”
“உன் நெற்றி உச்சி;
ம்ற்றும் உன் உள்ளங்கால்...”
குப்பென்று கன்ன்ங்கள்
ரசாயனத்தால் வான நிறம் பெற
உத்டு குவிந்துச் சொன்னாள்
“ச்சீ போடா”
போடா என்றால் வாடா
வஞ்சியின் அகராதி
அது மட்டுமா தனி
ஆழம் காணா கடல்
முத்தும் பவளமும்
சுறாவும் சிறுமீனும்
குவிந்திருக்கும் சுரங்கம்
எட்டாத தொடுவானம்
படைப்பின் அதிசயம்
விடை கண்டிடாத புதிர்
புதிர் தான்..
விழுந்து விழுந்து
மூன்று மாதங்கள் உழைத்து
ஆயிரத்தெட்டு மின்ன்ஞ்சல்,
நூறு தொலைபேசி அழைப்பு
பதினைந்து தடவை நேரில் சென்றது..
எனச் செய்து
நேற்று
தொழிற்சாலைப் பொருட்களை வாங்குவதற்கு
கிடைத்த ஆர்டரைச் சொல்கையில்
சிரித்து வாழ்த்திய எம்.டி
இன்று ஏனோ
சின்ன விஷயத்திற்குக் கோப்ப் பட்டு
வள் என்று விழுவது..
ம்ம்..என்ன செய்ய
தலையெழுத்து..
என்ன உழைத்தாலும்
மிஞ்சுகிற்து திட்டு ஒன்று தான்..
அட வீடு வந்து விட்ட்தே..
’சட்டை கழட்டும் போது
என்ன யோசனை..
கொஞ்சம் சிரித்தபடி
முகத்தை வைத்துக்
கொள்ளக் கூடாதா..’
‘அதெல்லாம் ஒன்றுமில்லை..
எங்கே பெரியவ..
‘அப்பவே வ்ந்துட்டாளே..
மாடில அவ அறையில் இருக்கா..
டீ இவளே..
அப்பா கூப்பிடறா பாரு..
*
போச்சு
அப்பா வந்துட்டார்..
எங்கே நைட்டி..
இந்தக் குட்டை டிராயர், டி ஷர்ட்டோட
கீழே போனால் அம்மா உதைப்பா..
வீட்ல தானே இருக்கேன்.
என் உடை என் செளகர்யம்..
அம்மாக்குப் புரிய மாட்டேங்குது..
கம்ப்யூட்டரை வேற மூடணும்..
என்ன இவன்..
ஒரு மாசமா வெய்ட் பண்ணி
என்னைப் பார்த்து சிரித்து
அதுக்கப்புறம்
இன்னும் ஒருமாசம் கழிச்சு பேசி
இன்னும் ஒண்ணும்
உருப்படியா சொல்ல மாட்டேங்கறான்..
என்னமோ கவிதை மாதிரி எழுதியிருக்கான்..
’ஒவ்வொரு முறை
உன் பெயரை
உச்சரிக்கும் போதும்
நான் உயிர்த்தெழுகிறேன்..
சொதப்பலா இருந்தாலும்
ஏனோ எனக்குப் பிடிச்சிருக்கு..
நாளக்கழிச்சு காயத்ரி ஜபம்
ச்சும்மா
என் பேரை
ஒரு ஆயிரந்தடவை
உச்சரிக்கச் சொல்ல்லாம்..!
நாளைக்கு
கோவிலுக்கு வரச் சொல்லிப் பேசணும்..
எங்க இந்த ஸ்டிக்க்ர் பொட்டு..
இட்டுக்கலேன்னா அம்மா வையும்..
அட கிடைச்சுடுத்து..
இந்த்த் தம்பிக் கடன்காரன்
விளையாடப் போனவன்
இன்னும் வரலை..
கணக்கு சுட்டாலும் வரமாட்டேங்குது
ஒன்பதாம் கிளாஸ்
கடா மாதிரி வளந்துருக்கான்..
வந்த்தும் திட்டி
நாலு ஸம் போடச் சொல்லணும்..
‘எற்ங்கி வர்றதுக்கு
இவ்ளோ நாழியா..
ப ஜ்ஜி சூடா இருக்கு சாப்பிடு..”
இல்லம்மா ஆயில்..வேணாம்
இவன் எங்கே..
வருவான் வருவான்..
*
அடிச்சது சிக்ஸர்
என்ற போது கை தட்டினாங்க..
ஆனா பந்து காணோம்னா
நான் தான் வாங்கித் தரணுமாம்..
அட டா
மணி ஆறரையாச்சா..
அக்கா கொட்டுவா..
டேய் நீங்க தேடுங்க..
கிடைக்கலைன்னா நான் வாங்கறேன்..
சைக்கிள் திற்ந்து ஒரே மிதி..
நேத்திக்கு நட்த்தினது
கால்குலசா.. ச்சே ஒண்ணும்
நினைவுக்கு வரலையே..
எதிர்ல போற
அந்த பாவாடை சட்டை
என்னப் பார்த்து எதுக்கு சிரிச்சா..
யா.. அது நம்ம
கொமாரோட தங்கை..
அப்பாடி... வந்தாச்சு..
ஸ்டாண்ட் போடலாம்
’வாடா வா..
ஒடம்பு முழுக்க வேர்வை தூசு..
கால்லம்பிண்டு வா..
ப்ஜ்ஜி சாப்பிடு..’
போம்மா.. அப்றம் சாப்பிடறேன்...
ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு
போறேன் மாடிக்கு..
*
என்ன ஜென்மங்களோ..
ஏங்க பஜ்ஜி எப்படி இருந்துச்சு..
ஓக்கேயா..
ஏன் குரல் கம்மியா வருது..
ஓ இண்டர் நெட்டா..
வழக்கம் போல ஷேர் மார்க்கெட்டா..
எஸ் அண்ட் பி அங்க கொறச்சா
இங்க விழுந்துடுத்தா..
அட்டா.. அடி பட்டிருக்காதோ..
சிரிக்காதீங்க
எனக்கு இந்த விஷய்ம் லாம் தெரியாது..
இதுங்க எப்ப வரும்..
எப்ப சாப்பிடும்..
ஆறினா நல்லா இருக்காதே
பெரியவ ஆயிலாம்..
அவளக் கெஞ்சணும்
ஒண்ணேஒண்ணு எடுத்துக்கடி.
இவன் ஒருத்தன்..
நெறயக் குத்தம் சொல்வான்..
இப்போ டின்னர் வேற
என்ன செய்யறது..
நாளக்க்கு கால்ல்ல
தோச வாக்கலாம்..
லஞ்ச்சுக்கு லெமன் ரைஸா..
பாத்திரம் வேற நெறய இருக்கு
கண்ணக் கட்டுதே..
எனக்கு மட்டும்
கண்டினுவஸ் வேலை...வேலை..
ஹீம்..
இது தான் வாழ்க்கையா..
எப்போ முடியுமோ இந்தப் புதிர்..
கடவுளே..
*
.
கடவுளே உமக்கு சுக்கிர தசையோ
மக்களை வசியம் ஏதும் செய்தீரோ
நாளென்றும் கிழமையென்றும் புதுசாய்
பகலிலும் இரவிலும் அலங்காரமாய்
சந்து முக்கிலும் மலை உச்சியிலும்
ஊர் எல்லையிலும் கடைத்தெருவிலும்
எல்லா பெரிய சிறிய கோவில்களிலும்
பக்தி வெள்ளம் பெருக்கெடுத்தோடுதே
தொடரும் புதுப் புதுக் கேளிக்கையிடை
மனங்கள்தான் பழுத்த மர்மமென்ன
என்ன என்ன
என்ற கேள்விகளுக்கு
எதையாவது சொல்லிவைத்தால்
பின்வரும் நாட்களில்
முன்சொன்ன பதில்களை
முடிச்சு போட்டு
கேள்வி எழுப்ப
முழி பிதுங்குது
மழலையின் முன்.
முன் நடந்தான் நெஞ்சு நிமிர்த்தி ஆடவன்
அவன் பின் குனிந்து நடந்தாள் பெண்மணி
நூற்றாண்டுகள் பல சென்றன இப்படியே
நாகரிகம் நல்லெண்ணம் சமத்துவம் தோன்ற
தோளோடு தோளாய் சேர்ந்து இருவரும் நடக்க
மேலும் உருண்டன வேகமாய் வருடங்கள் பல
புலியாய் பாய்கிறாள் முன்னேறிய பெண்ணின்று
பூனையாய் பம்மிக்கொண்டு பின்னால் ஆண்மகன்
வட்டம் முடிவது துவக்கப் புள்ளியில் அறிவோம்
பெண்ணே உடைப்பாயோ பழைய சித்தாந்தம்
புதிதாய் படைப்பாயோ நிகரில்லா சரித்திரம்
”சரித்திரம் படைப்போம் நாம்..
கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது..
இனி
எல்லா உயிர்க்கும் தீங்கு வராத
நல்லாட்சியை வழங்குவோம்..”
முழங்கினான் சோழ மன்னன்
முகம் மாறாமல் சிரித்தபடி
நசுக்கினான்
காலில் கடித்த எறும்பை..
எறும்பை அழைத்தூட்ட அரிசி மாவு கோலம்
ஆயின் அதை விரட்ட இனிப்புகளைச் சுற்றி
கோடாய் வரைந்த பூச்சி மருந்து தடுப்பு
அனுமதித்த சலுகைகள் அவசிய தடைகள்
என்றும் எங்கும் இருப்பது எறும்புக்கு மட்டுமா
எழுதாத சட்டங்கள் எல்லைகள் பாதுகாப்பா
பாதுகாப்பாய் இருக்க நினைப்பதில்
தவறில்லை..
ஆனால் நான்
நெருங்கும் போது
இறுகுவதும்
விலகி அமரும் போது
ஏக்கப் பெருமூச்சும்
ஈரவிழிப் பார்வை கொள்வதும்..
ஏன் இந்த நாடகம்...
ஏன் இந்த நாடகம
அஹிம்சா வழி அதர்மமாம்
ஆட்டைய போடுவது தர்மமாம்
மக்கள் தீர்மானத்தை விட
மக்களால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்
(மக்கள் விரோத)தீர்மானம் தான் இறுதியானதாம்
என்ன கொடும சரவணன்...
உண்ணாவிரததுக்கு 144 போட்டா
ஊராடிச்சு உலைல போடுரவனுங்களுக்கு
என்னத்த போட
சுவிஸ் வங்கி கணக்கு
சுழியத்தின் அணிவகுப்பு
சுத்தமானவங்களாம் இவனுங்க
சொல்லி திரியரானுங்க
1 வருசத்துக்குள்ள
5 லட்சம் கோடி
வெளிய எடுத்துருக்கானுங்க
வெளங்காதவனுங்க
சொல்லுது சுவிஸ் வங்கிகள்.
பாமரனை பசிக்கவிட்டு
சுகிக்கும் நீங்கள்
வெறும்
பணம் திண்ணும் பிணங்களடா...
ஹ்க்த்துதூ..................