-
dear saradhaa
னோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது).
Excellent writing . Mellisai Mannar SHENOY &TMS voice /KD lyrics .
Rare song& (THEIVATIN TSONG) . I dont think any one will even think of such composistion.
Thanks for your analysis.
regards
ramesh
-
கடந்த 08.08.2010 ஞாயிறு அன்று மாலை பாரத் திரையரங்கில் புதிய பறவை திரைப்படத்திற்கான பார்வையாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 600ஐ எட்டியது. தற்பொழுது சென்னை நகர சினிமா வட்டாரத்தில் இது ஒரு சிறப்பம்சமாக கருதப் படுகிறது. காரணம் அன்று தொலைக்காட்சியில் இடம் பெற்ற ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் தான். அன்றைய மாலைக்காட்சியில் நகரில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளுமே 100 அல்லது 200 பார்வையாளருக்கு மேல் ஒரு குறிப்பிட்ட அரங்கில் ஒரு குறிப்பிட்ட படத்தின் ஒரு காட்சிக்கு வரவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. தனித்து நிற்கும் விதமாக பாரத் திரையரங்கு மட்டுமே விழாக் கோலம் பூண்டதோடு மட்டுமல்லாமல் 550க்கும் மேல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு சாதனையாக வியாபார நோக்கர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
இது நமக்கு நேரடி தகவல் இல்லை என்றாலும் இதனை ருசுப்படுத்துவதாகத்தான் அன்றைய பாரத் திரையரங்கில் கண்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை அமைந்துள்ளது.
ராகவேந்திரன்
-
சாரதாக்கா,
பாட்டும் பரதமும் பற்றிய தங்கள் பதிப்புகள் அருமை. சின்ன வயதில் பெற்றோருடன் சென்று தியேட்டரில் பார்த்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று.
அருமையான பாடல்கள் - நாட்டுப்புற விழாக்கள் / திருமணங்கள் போன்றவற்றில் அக்காலங்களில் எப்போதும் ஒலித்தவை இவை.
"தூள்.காம்" சரவணனின் அழகான பதிவு இங்கே.
-
Thanks Shiv. Would continue to do as and when the opportunity comes. Hope to meet you in October.
மகேஷ்,
படங்களின் வெற்றி தோல்வியில் பெரும்பங்கு வகிக்கும் பொது மக்கள் அந்த நடிகரின் அரசியல் நிலைப்பாடுகளை வைத்து படம் பார்ப்பதில்லை என்பது உண்மை என்றாலும் கூட, எல்லா நேரங்களிலும் அது சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அன்பே ஆருயிரே, Dr .சிவா, வைர நெஞ்சம் போன்றவற்றிற்கு அது பொருந்தும். ஆனால் பாட்டும் பரதமும் மற்றும் உனக்காக நான் படங்கள் வெற்றி பெறாமல் போனதற்கு அரசியல் சூழ்நிலை ஒரு பெரிய காரணம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்களே அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்களை சரியாக ஆதரிக்கவில்லை என்பது நான் நேரில் கண்ட உண்மை. அவர்களெல்லாம் மீண்டும் திரையரங்கிற்கு வர ஆரம்பித்ததே தீபம் படத்திலிருந்துதான்.
சில நல்ல படங்கள் அரசியல் என்றல்ல வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்ட வரலாறும் நமக்கு இருக்கிறது. முதலில் வெளியான போது வெற்றி வாய்ப்பை இழந்த கப்பலோட்டிய தமிழன் மறு வெளியீடுகளில் வசூலை வாரி குவித்ததை நாம் பார்த்தோம்.
ஆக படத்தின் தரம் ஒரு பக்கம் என்றால், புறக் காரணிகளும் வெற்றி தோல்வியில் பங்கு வகித்தன. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலில் கூட மதுரை நடிகர் திலகத்தின் பக்கமே நின்றது. உத்தமன் படத்தை 100 நாட்கள் படமாக்கி 1952 முதல் 1987 வரை 36 ஆண்டுகளில், 100 நாட்கள் படங்கள் இல்லாத வருடமே கிடையாது என்ற பெருமையை பெற்ற ஒரு நடிகனாக இன்று வரை வைத்திருக்கிறது.
அன்புடன்
-
Puthiya Paravai doesn't allow us to move away. As a part of Madras week celebrations, I had written a small piece about Puthiya Paravai and its re-release for a tabloid called Madras Musings, thanks to Mohanram Sir who initiated me to write. I should also thank Ragavendar Sir and Swami for providing me with theatre datas regarding the NT acted movies of 1964. Here it is
Last Friday the 23rd July saw the re- release of the ever green classic “Puthiya Paravai” at Shanthi theatre. The release and the huge response it had generated from the fans and public alike had made me pen this.
If Friday and Saturday saw the general public thronging the theatres, Sunday was taken over by the fans. Many families had come on the first two days and there were many elderly couples who had come to relive their memories. It was widely expected that a large contingent of die hard fans of Nadigar Thilagam would be there on Sunday but the turnout exceeded everybody’s expectations. Matinee show had recorded 90% occupancy and for the evening show the crowd had started gathering even by 3.30 pm and it started swelling as the hours passed by. By 5.30 pm the theatre campus had become a sea of humanity. Fans had come from even Kancheepuram and Kadaloor not to forget the fans from Bangalore just to be a part of the fun. The Bangalore fans had ordered special garlands and they brought the same in a container lorry. With the big garlands in their shoulders the fans took out a big rally and they went round the Mount Road throwing the entire traffic out of gear. Police had rushed in and controlled the crowd. Once the procession was over the scene shifted inside the theatre.
There were two banners of the film, one at the entrance and the other inside. It required a lot of effort to garland the banner and people started climbing up and in no time the entire banner was covered with garlands. Once the portrait was garlanded the other rituals like lighting of camphor followed by bursting of crackers were carried out. Especially the 5000 and 10000 walas were burst quite a number of times. The grand gala affair that started at 3.30 pm went on till 6.30 pm and then the action shifted to the indoor. For many old timers it was a throwback to the 60’s and 70’s when the release of every Sivaji film at Shanthi would be a festival. Yes, on that Sunday the time stood still. More heart warming for the fans and the management because all this things are happening on the golden jubilee year of Shanthi. Shanthi was thrown open to public on 11.01.1961 and come January the theatre would be completing 50 years of glorious existence.
Coming to think of it, Shanthi theatre the Mecca to Sivaji fans and Sivaji acted movies were an inseparable part and it would surprise many that Puthiya Paravai was not screened in Shanthi when it was first released in 1964. All the more surprising because the film was the first home production of Sivaji films. Let us have a brief foray into the history.
Puthiya Paravai was the first Tamil movie to be produced by Sivaji Films [they had produced some Hindi films earlier and they were confining themselves with the distribution of Tamil films] and they made it in colour. Shanthi theatre originally built by Umapathy was later bought by Sivaji Ganesan and Puthiya Paravai was slated to be released in Shanthi on 12th of September 1964. But Raj Kapoor’s Sangam which had been released in Shanthi was doing a roaring business and the theatre management had a big dilemma in front of them. They decided not to disturb Sangam and to chart Puthiya Paravai in some other theatre. The only available theatre nearer to Mount Road was Paragon. But Paragon was no match for Shanthi when it comes to seats, screen and sound effects. So Sivaji films itself took up the job of re-modeling the theatre and made it as a comfortable viewing. For this the Paragon theatre had to be shut down for more than 2 weeks and alas while it enhanced the beauty of Puthiya Paravai, another movie of Sivaji, Aandavan Kattalai which was running there and which if left undisturbed would have completed a 100 day run had to be removed after 70 days. Had it been allowed to run it would have been 6 out of 7 films of Sivaji completing 100 day run in the city in the calendar year 1964.
That takes us to another aspect of films (i.e.) Box office success in the city of Madras and Sivaji movies of 1964 had created a record which even today stands unbeaten. Sivaji had a release of 7 films in the calendar year 1964 out of which 5 movies ran for 100 days and more in 15 theatres. The record of 5 films of one hero running to 100 days in 15 theatres in Madras city remains unsurpassed in the nearly 80 year old history of Tamil cinema. Add to it “Annai Illam” the last movie of Sivaji in the calendar year 1963 that completed 100 day run in Casino theatre in 1964, you have 6 movies of Sivaji completing 100 days run in 16 theatres. Extending this logic, if you look at the table given below, 7 films of Sivaji got released in 26 theatres in the city out of which 25 prints had completed 50 days and more. A phenomenal achievement indeed.
Karnan- 14.01.1964 - Shanthi 100, Prabath-100, Sayani -100
Pachai Vilakku -03.04.1964 - Wellington -105, Maharani-105, Roxy -105, Noorjehan -70
Andavan Kattalai -12.06.1964 - Paragon -70, Sri Krishna -56, Sayani -50, Noorjehan -50.
Kai Kodutha Deivam -18.07.1964 - Midland -105, Prabath -100, Saraswathy- 100, Ram -100
Pudhiya Paravai - 12.09.1964 -Paragon-132, Sri Krishna -76, Sayani -76
Muradan Muthu - 03.11.1964 - Star -52, Prabath–52, Saraswathy -52, Liberty - 45
Navarathiri - 03.11.1964 -Midland -101, Maharani -101, Uma -101, Ram -101.
Regards
-
Dear Murali Sir,
The "Pudhiya Paravai" write-up is an awesome wrap-up of the happenings at Shanthi. The article as a whole, is an informative & brilliant piece and is worth a treasure for life.
Warm Wishes,
Pammalar.
-
Bharat Bonanza
[Pudhiya Paravai : Sunday Evening : 8.8.2010]
http://www.freewebs.com/pammalaar/ap...lbumid=9709345
Happy Viewing,
Pammalar.
-
Thanks Swami for your kind words.
பாரத் அரங்கில் நாம் பார்த்த கோலாகல காட்சிகளை இந்த உலகமே பார்க்கும் வண்ணம் புகைப்படங்களாக வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல!
அன்புடன்
-
நறும்புனல் என்ற தலைப்பில் வலைப்பூ பதிவுகள் செய்யும் வெற்றிவேல் என்ற அன்பர் நடிகர் திலகம் பற்றி எழுதியிருக்கும் பதிவு.
நடிகர் திலகம்-இன்றைய இளைஞர்களுக்காக
சிவாஜி பற்றி சில வரிகள்
எதை எழுதுவது எதை விடுவது ?
இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக்
காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா ?.. கவியரசர் கண்ணதாசன்
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு வலையுலக நண்பர் நடிகர் திலகம் பற்றி இளைஞர்கள் பார்வை என்ற ஒரு கட்டுரை எழுதி இருந்தார்..சிவாஜியின் முகபாவனைகள் யதார்த்த்தை காண்பிப்பதில்லை என்று.(?) அந்த நண்பர் மீது குற்றம் சொலவதற்கோ, பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்பதோ என் நோக்கம் இல்லை.ஏனென்றால் என் மகன்களும் அதே தான் சொல்கிறார்கள்..இது அவருக்காக எழுதியது இல்லை..என் மகன்களைப் போன்று உள்ள எண்ணற்ற இளைஞர்கள் நடிகர் திலகத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் , அனைத்து இளைஞர்களுக்குமான கட்டுரை..
சிவாஜி என்பது ஒரு சரித்திரம்..அதன் சில பக்கங்களை மட்டும் புரட்டிவிட்டு விமர்சனம் செய்வது. அந்த மகா கலைஞனுக்கு நியாயம் செய்வதாக இருக்காது..
இன்றைய இளைஞர்கள் சிவாஜியை , யானையை பார்த்த குருடர்கள் கதையில் வருவது போல பார்த்துவிட்டு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வது போல் சொல்வது எந்த வகையிலும் ஒரு உயர்ந்த மனிதனுக்கு செய்யும் மரியாதையாக இருக்க முடியாது.. அவர் யாதர்த்தமான படங்கள் அதிகம் கொடுக்கவில்லை என்றும் உங்களால் ஈடுபாட்டுடன் பார்க்க முடியாத படங்களில் அதிகம் நடித்துள்ளார் என்று சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஏனென்றால் அந்தக் காலம் வேறு..இன்று SMS காலம்..இந்தக் காலக் கண்ணோட்டத்தில் பழைய 50 வருஷங்களுக்கு முன்னர் வந்த படங்களை பார்க்காதீர்கள்..
பராசக்தியில் தொடங்குகிறது அந்த மகா கலைஞனின் திரைப்பிரவேசம். கமல் சொல்வது மாதிரி அன்றே முடிவு செய்து கொள்கிறார்..தாம் வளர வேண்டிய கலைஞன் அல்ல..நாம் செய்யவேண்டியது தனது திறமைகளை வெளிப்படுத்துவது மட்டும் தான் என்று முடிவெடுத்துக் கொண்டு தான் பல்வேறு கதாபாத்திரங்களை தெரிந்தெடுத்து 150 படங்கள் தொடர்ந்து வித்தியாசமான தோற்றத்தில் ,வித்தியாசமான உடல்மொழியில் ,திரையில் வாழந்து காட்டியுள்ளார்..
எனக்கு படத்துணுக்குகளை இணைக்கத் தெரியாது..இல்லை என்றால் அதை உங்கள் பார்வைக்கு வைத்து இருப்பேன்.. இருந்தாலும் சில படங்களில் சில காட்சிகளை இங்கு தருகிறேன்..
முதல் படம்..பராசக்தி..எல்லொருக்கும் பராசக்தி என்றால் கோர்ட் சீன் தான் ஞாபகத்திற்கு வரும்..அதே பட்த்தில் தான் “நானே ராஜா,நானே மந்திரி ‘ என்று ஒரு காட்சி பைத்தியமாக பண்ணியிருப்பார்.. மற்றொரு காட்சி..பிளாட்பாரத்தில் தூங்குபவரை எழுப்பி, ஏன் முழிக்கிறாய்? என்ற காவல்காரனின் கேள்விக்கு தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான் என்பார்...இந்தக் காட்சியினைப் பாருங்கள்..முதல் பட நடிகனா? முந்நூறு படங்களில் நடித்தவரா என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாய் வந்துவிடும்..
காட்சிக்கு தேவையானதை . இயக்குநர் கேட்பதை மட்டும்செய்து கொடுப்பவன் நடிகன்.. எம்.ஆர்.ராதா, சிவாஜி இருவரும் கலைஞர்கள்.. இருவரும் சின்னஞ் சிறிய நகாசு வேலைகள் செய்து அந்த ஒரு சில நொடி வரும் காட்சியினை ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்து விடுவார்கள் ..
அந்த வரிசையில்..
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரக்கச்சேரி நடந்து கொண்டு இருக்கும். வாசித்துக்கொண்டு இருப்பார். அந்த சமயம் அழகான பெண் வந்து கூட்டத்தில் அமரவே பக்கதில் இருக்கும பாலையா அண்ணனைப் பார்த்து ஒரு கண் அடிப்பார் பாருங்கள்.. அங்கே தான் சிவாஜி என்ற கலைஞன் உயிர்போடு இருப்பான்..
இதே படத்தில் ரெயிலில் பயணம் செய்யும் போது பத்மினியும் அவரும் கண்களால் பேசிக் கொள்வது மிகை நடிப்பாகுமா என்ன?
ஆண்டவன் கட்டளையில்..ஆறுமனமே ஆறு என்ற பாடல்.. அறுபடை வீடுக்கும் சென்றுவிட்டு பாட்டு முடியும் போது ஒரு சின்ன பிட் மியுசிக் வரும்..அதுக்கு எந்த நடன இயக்குநரும் நடகர் திலகத்திற்கு தேவை இல்லை..கையில் நிலக்கடலையை வைத்து கொண்டு அதை ஊதிக் கொண்டே ஒரு ஆண்டிப்பண்டார நடை நடப்பதை பாருங்கள்.அப்ப தெரியும் அவன் ஒரு யுகக் கலைஞன் என்று..
உத்தமபுத்திரன் ..யாரடீ நீ மோகினி பாடல் பாருங்கள் இன்றைய சூப்பர் ஸ்டார் நடக்கும் side walk க்கை அன்றே நடந்திருப்பது ஆச்சர்யத்தை தரும்.
பாகப்பிரிவினை படத்தில் சரோஜாதேவி தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டவுடன், தான் ஊனமானவன், தன்னை நன்றாக பார்த்துச் சொல் என்று சொல்லிக் கொண்டு அவர் முன் வலமும் இடமுமாக காலை இழுத்துக் கொண்டு ஒரு ஊன நடையை நடந்து காட்டுவதை அவதானியுங்கள்
பாசமலர்..முதலிரவுக்காட்சி..ஆண் வெட்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? தங்கையின் புகைப்படத்தைப் பார்த்து வெட்கப்பட்டு, அந்தப் புகைப்படத்தை திருப்பிவைக்கும் போது அவர் முக பாவங்களை கவனியுங்கள்..
நவராத்திரி ..நவரசங்களையும் காட்டும் மாதிரி ஒன்பது வகையான பாத்திரங்கள். ஒவ்வொரு வேடத்திற்கும் வேறு வேறு உடல் மொழி..அதில் ஒன்று தான் மனநோய் மருத்துவர்.. சாவித்திரியை வார்டுக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லிவிட்டு, ஒரு நடை நடந்து கதவு வரை சென்றவர் , திரும்பி வந்து மறந்து போன ஸ்டெத் தை எடுத்து திரும்பிச் செல்வார் ..அந்தக் காட்சியைப் பாருங்கள்..
பாலும் பழமும் படத்தில் மருத்துவருக்குரிய வெள்ளை உடை அணிந்து மருத்துவமனையில் ஒரு நடை நடந்து வருவார் .அதைப் பார்த்து டாக்டராக வேண்டும் என்று டாக்டராக ஆனவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியும்
திருவருட்செல்வரில் அப்பராக..காற்றில் பறக்கும் காவி உடையை கையில் பிடித்துக் கொண்டு அவர் எழுந்து வருவதாக ஒரு காட்சி ..பாருங்கள்..
உயர்ந்த மனிதன் பாருங்கள். அதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத உயர்ந்த மனிதனுக்குரிய வித்தியாசமான உடல் மொழி கையாண்டு இருப்பார்..
ஞானஒளி படத்தில் இடைவேளைக்கு முன்னர் மணி அடிக்கும் ஆண்டனியாகவும், பின்னால் பணக்கார்ராகவும் இரண்டு வேடங்களுக்கும் ஒட்டுமொத்த வித்தியாசம் காண்பித்து இருப்பதை கவனியுங்கள்..
பார்த்தால் பசிதிரூம் படம் பாசமலர் வந்து வெற்றி பெற்றவுடன் அதே குழுவினர் பங்கேற்று வெளிவந்த படம்.. பாசமலர் பார்த்துவிட்டு பா.பசிதீரும் பாருங்கள்.. பாசமலருக்கும் இப்படத்திற்கும் 100 விழுக்காடு வித்தியாசம் காட்டி இருப்பார்.ஒரு காலை விந்தி விந்தி அப்படம் முழுக்க ஒரு புதிய உடல் மொழி காட்டி இருப்பார். படம் பார்க்க நேரம் இல்லை என்றால்..உள்ளம் என்பது ஆமை.என்ற பாடலாவது கேட்டுப் பாருங்கள்...அந்த இமயத்தின் சில கூறுகளை அறிந்து கொள்வீர்கள்
புதியபறவை கிளைமாக்ஸ் காட்சியை தமிழ் திரைப்பட வரலாற்றில் மறைக்க முடியாத காட்சியாக மாற்றி அமைத்து அவரின் அபார நடிப்புத் திறமைதானே..
இது மாதிரி அவர் படங்கள் முழுதும் சின்னச் சின்ன மறக்க முடியாத காலத்தால் அழியா காட்சிகள் இருக்கும்..
இப்படிப் பட்ட அற்புத திறமைக்காகத் தான் அவரை பல்கலைக் கழகம் என்றார்கள்..
மிகை நடிப்பு என்று சொல்லப்பட்ட பாசமலரில் தான் ஜெமினியோடு ஒரு ஆக்ரோசமான விவாத்த்திற்குப் பிறகு வசனமே பேசாமல் ” கெட் அவுட்” என்று சொல்வார்..
எந்தவித முன்னுதாரணங்களும் இல்லாமல், தான் பார்த்த, பழகிய நபர்களின் ஆளுமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, திரைவடிவமாக்கியவர்..
கப்பலோட்டிய தமிழன் பாருங்கள்.. கொஞ்சம் கூட மிகை நடிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மனின் அபார வெற்றிக்குப் பிறகு அதே நிறுவனம், அதே விடுதலைப் போராட்டம் பற்றிய திரைப்படம்..கட்டபொம்மனில் கர்ஜித்தவர் , அந்த வெற்றியைச் சுவைத்தவர், அதே மாதிரி க.தமிழனிலும் கர்ஜித்திருக்கலாம்.. செய்யவில்லை..அடக்கமான, சாந்தமான முகத்துடன் வ.உ.சியாக வாழ்ந்து காட்டி இருப்பார்.
வாழும் மனிதர்களை மட்டுமா திரையில் காண்பித்தார்?
புராண கதாபாத்திரங்களான சிவன், நக்கீரன், நாரதர்,கர்ணன், பரதன், அரிச்சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள்..
உங்கள் பார்வைக்கு என்னால் நடிகர் திலகம் நடித்த 50 படங்களாவது வரிசைப்படுத்த முடியும்
பாருங்கள்..நடிகர் திலகத்தை திறந்த கண்ணோடு பாருங்கள்.. வேண்டுமென்றால் எனக்கு மின்ன்ஞ்சல் அனுப்பவும். நல்ல படங்கள் அல்ல.. அவர் நடித்த நடிகர்களுக்கான பாடங்கள் வரிசை தருகிறேன்..
இதையும் பாருங்கள்
http://www.youtube.com/watch?v=da89d...eature=related
அன்புடன்
அ.வெற்றிவேல் தொடர்புக்கு : vetrivel@nsc-ksa.com
http://avetrivel.blogspot.com/2010/08/blog-post.html
அன்புடன்
-
டியர் முரளி சார்,
"வெற்றிவேல்! வெற்றிவேல்! சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் வெற்றிவேல்! எங்கள் வெற்றிவேல்!"
நறும்புனல்,
பக்தர்க்கு பூந்தென்றல்!
எத்தர்க்கோ கடும்புயல்!
வேலும் புனலும் வாழ்க! வாழ்க!
அன்புடன்,
பம்மலார்.