Quote:
எதிலும் கவனமா நடந்துக்கணும் : நாகரீக பெண்களுக்கு நித்யா அட்வைஸ்
"எந்தவொரு விஷயத்திலும் கவனமா நடந்துக்க வேண்டும் என்று நாகரிக பெண்களுக்கான அட்வைஸ்களை அள்ளிவிட்டார் நடிகை நித்யா ரவீந்தர். விளையாட்டு வீரர் சந்திரசேகரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஜெயா "டிவி'க்காக "சந்திரா' சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடித்துக் கொண்டிருந்த நித்யாவை "பேட்டி'க்காக சந்தித்த போது தான் இப்படி பதிலை அள்ளிவிட்டார். நித்யா ரவீந்தரின் பேட்டி:
டிவியால் வன்முறை அதிகரித்துள்ளது என்று அமெரிக்க புள்ளி விவரம் சொல்கிறதே?
எதில கெடுதல் இல்லை; கம்ப்யூட்டர் இருக்கு, மொபைல் போன் இருக்கு. இவைகள்ல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. மொபைல் போன்ல பேசுவதைவிட மெசேஜ் செலவு கம்மிதான். இப்படி வசதி இருந்தும் மணிக் கணக்கில் தேவையில்லாம கடலை போடுவதால அதிகம் செலவு செய்றவங்களும் இருக்காங்க. உலகப் பொருளாதாரத்தின் மேன்மைக்கு இன்டர்நெட் தொடர்பும் ஒரு காரணம்ன்னு சொல்றாங்க. இதுல கெடுதலும் இல்லாமலில்லை. நல்ல நோக்கத்திலதான் புதிய கண்டுபிடிப்புகளும், வசதிகளும் மேம்படுத் தப்பட்டு வர்றப்ப, என்ன நோக்கத்திற்காக இவைகள் உருவாக்கப்பட்டதோ அதற்காக மட்டுமே பயன்படுத்தினால் நல்லதே நடக்கும். அதைவிட்டுட்டு தேவையில்லாத விஷயங்களுக்கு பயன்படுத்தினால் சிக்கல் வரத்தானே செய்யும். .
* நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள், தற்போது சினிமா பக்கம் காணவில்லையே?
சீரியல்களில் அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்கள் பண்ணிட்டிருக்கேன். சீரியலில் உள்ளதைப் போல சினிமாவுல அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களுக்கு பெரிய முக் கியத்துவம் இல்லை. சீரியல்களில் எப்படி நடிக்கணும்ன்னு நினைக்கிறாமோ அப்படியே நடிக்க முடிகிறது. "சந்திரா, வசந்தம், செந்தூரப் பூவே, திருப்பாவை, நாகவள்ளி,' என சீரியல்களில் மாதம் முப்பது நாட்கள் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். இதில பிசியாக இருக்கும் போது இதை விட்டுட்டு சினிமாவுக்கு போக நினைக்கலை. இருக்கிறதை விட் டுட்டு பறக்கிறதை பிடிக்க நினைப்பதைவிட இருப்பதை நல்லபடியா பயன்படுத்திக்கிட்டா போதும்ன்னு இருக்கேன். எனக்கு திருப்தியா பிடித்த கேரக்டர் சினிமாவில் நடிப் பேன்.
* தெய்வ பக்தி நிறையவாமே?
தெய்வ நம்பிக்கை எனக்கிருக்கு. எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் நம்மால எதுவும் செய்ய முடியாது. அந்த ஆண்டவனோட உதவியும் இருக்கு. நல்லது செய்யணும்ன்னுங்கிற எல்லா மனுஷங்களுக்கும் தெய்வ நம்பிக்கை நிறையவே இருக்கும். நேரம் கிடைக்கும் போது எல்லா கோவில்களுக்கும் போவேன். நாம செய்ற விஷயங்கள் நல்லதா, கெட்டதா, பலன் என்ன, இதனால நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் நன்மை என்ன இப்படி பல விஷயங்களை அசைபோட்டு பார்த்து நல்லதுன்னு படுகிற விஷயத்தை தயக்கமில்லாம செஞ்சிடலாம்ன்னு முடிவுக்கு வருவதற்கு மனசு நல்லபடியா ரிலாக்ஸா இருக்கணும். கோவில்களுக்கு செல்லும்போது இந்த ரிலாக்ஸ் கிடைக்கிறது.
* நாகரீகம் பேர்ல ஏடாகூடமான டிரஸ்களை போடும் ஆர்வம் பெண்களிடம் அதிகரித்து வருகிறதே?
"நாகரீகத்தை பாலோ பண்றதில தவறில்லை. அவுங்களோட நாகரிகப் போக்கு மற்றவர்கள் பார்த்து முகம் சுளிக்கும் நிலையாகிவிடக் கூடாது. பிள்ளைங்களின் டிரஸ் விஷயத்தில பெற்றோர் தேவையானவைகளை அவுங்களுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைக்கணும். பெற்றோர் பிள்ளைங்களை எவ்வளவு சுதந்திரமா வளர்க்கிறாங்களோ அந்த நம்பிக்கைக்கு பாதகமா பிள்ளைங்க நடந்துக்கக் கூடாது. மனுஷங்களுக்கு எதையும் பகுத்துணரும் அறிவு இருக்கு. பாலும், தண்ணீரும் கலந்திருந்தபோதிலும் பாலைமட்டும் பிரித்தெடுக்கும் அன்னப் பறவையை போல எதிலும் கவனமா நடந்துக்கணும். அவசரப்பட்டு எடுக்கிற முடிவைவிட யோசித்து எடுக்கிற முடிவுக்கு பலம் அதிகம், பயனும் அதிகம்.
* பெண்கள் சாதிப்பதற்கு ஊக்குவிப்புகள் பற்றி?
பெண்கள் படிக்கிறபோது பெற்றோரின் வழிகாட்டுதல் அவசியம். உலக நடப்புகளை அவுங்களுக்கு தெளிவா புரியவைக்கணும். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போகும்போது அங்கு கணவரும், குடும்பத்தினரும் பெண்ணோட நல்ல செயல்களுக்கு சப்போர்ட் செய்றவங்களாக இருந்தால் நிச்சயம் அந்த பெண்ணின் வாழ்க்கையில் சந்தோஷத்திற்கு பஞ்சமிருக்காது. கணவர், மனைவிக்கு உரிய சுதந்திரம் கொடுக்கணும். பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் நல்ல சப்போர்ட் கிடைச்ச நிறைய பெண்கள் பல துறைகள்ல சாதிச்சிட்டிருக்காங்கன்னு சொல்லிக் கொண்டிருந்த நித்யாவை டைரக்டர் அடுத்த சீனில் நடிக்க அழைக்க, பறந்தார்..
* நெகிழ்ந்து போன சம்பவம் ஏதும்?
"பிளஸ் 2" படிக்கும் ஒரு மாணவ நேயர் கடிதத்தில் சொல்லும் போது, "தேர்வுக்கு படிப்பதால "டிவி' பார்க்கக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்காங்க. ஆனா "கேள்விக்கு என்ன பதில்' நிகழ்ச்சியை மட்டும் பாத்துக்கலாம்ன்னு அனுமதிச்சிருக்காங்கன்னு எழுதியிருந்தான். குழந்தைகளையும், பெற்றோர்களையும் இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது. ரீடெலிகாஸ்ட்