-
நீ
என்ன நினைத்துக் கொண்டு
என்னை
இப்படிப் படுத்துகிறாய்.....
**
சரீஈ....
நான் தான் இடம் கொடுத்தேன்
காரணம் நான் மட்டும் இல்லை..
அதெல்லாம் உனக்குப் புரியாது...
அதற்காக என்னைத்
தலைசுற்ற வைக்க வேண்டுமா...
***
எனக்கு
உருளைக்கிழங்கு கறி
காரசாரமாய்
சாப்பிடப் பிடிக்கும்..
உனக்குப் பிடிக்கவில்லை என்றால்
போயேன்..
ஏன் வெளித்தள்ளுகிறாய்...
**
எனக்கு
சத்தமான இசையுடன்
ஆடவும் பிடிக்கும்..
ம்ம் நன்றாகவும் ஆடுவேன்...
சத்தமாக்க் கேட்க்க் கூடாதாம்
ஆட்வும் கூடாதாம்
அம்மா சொல்கிறாள்..
எல்லாம் உன்னால் தான்...
**
நல்ல விஷயம் தான்
படிக்கணுமாம்....
நல்ல விஷயம் தான்
கேட்கணுமாம்..
இவர் சொல்கிறார்....
இவரே ஒரு
கெட்ட விஷயம்...!
**
போரடித்தால்
பேசாமல்
ராமா ராமா என்று
சொல்லிண்டு தூங்கு...
நடுராத்திரியில் உதைக்காதே..
எனக்குப் பிடிக்கவில்லை
சொல்லி விட்டேன்...!
இப்படியே தொடர்ந்தால்
என்ன செய்வேன் தெரியுமா..
வெளியில் வா...
வந்தவுடன் உன்னை...உன்னை...
பயப்படாதே...உதைக்க மாட்டேன்...
கொஞ்சுவேன்...!
***
-
கொஞ்சுவேன் கூந்தலை கலைக்கும் தென்றலை
கோலத்தின் மேல் ஓடி அழிக்கும் குட்டி நாயை
கழுத்தைச் சாய்த்துப் பார்க்கும் குருவியை
கடையில் வாங்கி வந்த புதுச் சேலையை
கையில் கலகலக்கும் கண்ணாடி வளையலை
காற்றாய் மனம் பறக்கையில் இன்பமயமே
-
…..இன்பமயம்”
கண்முடி அனுபவித்துப்
பாடிக் கொண்டிருக்க
எதிரில்
இரண்டாம் வரிசையில
அமர்ந்திருந்த ஒரு மாமா
குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்க
அங்கங்கே நாற்காலிகளில்
பரவலாய் அமர்ந்தபடி சிலர்
தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க
கொஞசம் தள்ளி
காதுகேட்கும் கருவி
வெளியில் வந்த்து தெரியாமல்
ஒரு பெரியவர் ஜோராய்த்
தாளம் போட்டுக் கொண்டிருக்க..
புதிதாய் நுழைந்த கண்ணாடி மாமி, குண்டு மாமா
மணமக்களை வாழ்த்திவிட்டு
செல் மாமாவிடம் சத்தமாய்ப் பேச...
நடுவில் சிலர்
ஈஸ்ட்மென் கலரில்
குளிர்பான்ங்கள் கொடுத்துக் கொண்டிருக்க..
சில சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன்
புதுசாய் சந்தித்த சினேகிதர்களுடன்
சத்தமிட்ட படி குறுக்கே ஓட...
பாடி முடித்துக் கண் திற்ந்தால்...
சோகையாய் ஓரிரு கைதட்டல்கள்...
அவள் கண்ணோரம் ஈரம்...
-
ஈரம் இரக்கம் இருக்கா
கீரைக்காரியிடம் பேரம் ஏன்
கடிகிறான் சின்ன மகன்
மிச்சப்படுத்திய பைசாவில்
மாடிதான் கட்ட முடியுமா
இது என்ன மடமையோ
-
மடமையோ என
நினைக்க வேண்டாம்..
இது
மக்களின் நலனுக்காகவே
ஏற்பட்ட கூட்டணிஎன
பேசி முடித்த தலைவர்
சொல்லவில்லை
தன் மக்களின் நலன் என்பதை
-
நலன் என்பதை நினைத்தால்
நல் விவேகம் இருந்தால்
பயிருக்கு வேலி வேண்டும்
காத்திருக்கு வெள்ளாடு
நட்பிற்கு வரம்பு வேண்டும்
கள்ளம் புக வழியிருக்கு
ஆசைக்கு எல்லை வேண்டும்
போதுமென்பது பொன் மருந்து
-
*
மருந்துக்குக் கூட
பொறுப்பிருக்கிறதா பாரேன்
பரீட்சை நேரம்..
இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கறான்
படித்தானோ என்னவோ...
எலக்ட்ரிசிடி பில் கட்டிட்டீங்களா..
ஏன் இப்படி இருமறீங்க
அந்தக் கண்றாவியக்
குறைத்துக் கொள்ளலாமில்ல..
நீ என்னடி இப்படி
தலையை பேன்னு போட்டுக்கிட்ட்ருக்க
வா உட்கார்.. வாரி விடறேன்
பேன் வந்துடப் போவது..
இந்த வேலைக்காரி இன்னும் காணோம்..
கால் வேற நமநமங்குது..
சக்கரை ஜாஸ்தியாய்ருக்குமோ
உங்க அக்காக்கு வேற
போன் போட்டு பேசணும்
நாளாச்சு
மாப்பிள்ளை எப்படி இருக்காரோ..
இவ குளிச்சாளோ என்னவோ..
ஏய் இவனை எழுப்பேன்..
ஞாயித்துக்கிழமைன்னா என்ன
படிக்கலாமே..
**
அம்மாவின் கவலைக்கு
அளவே இல்லை..
எல்லா அம்மாக்களுக்குமே
அப்படித் தான்...
-
அப்படித்தான் நடக்கவேண்டும் என்று இருந்தால்
அப்படித்தான் நடந்தே தீரும் நிச்சயமாய்
அப்படித்தான் நடக்குமென்று சொல்லும் உள்ளுணர்வு
அதிசயமாய் சிலருக்கு வாய்த்த ஏழாம் அறிவு
அப்படித்தான் நடக்கவேண்டும் என்று எண்ணுவது
அப்பட்டமான பிடிவாதம் அல்லது பேராசை
ஆளப்பிறந்தவர்கள் திறமையாகும் பல நேரம்
ஆக்கமுடன் முயல்பவர்கள் சாதனை பெருகட்டும்
-
****
பெருகட்டும் பாவலரே உன் திறமை என்றே
...பேரரசன் உவகையுடன் பரிசுதனைத் தரவும்
உருகித்தான் உளமுழுதும் உற்சாகம் பொங்க
..உணர்வுகளீன் ஓசையினால் குரலதுவும் குழற
கருகட்டும் மன்னாஉன் எதிரிகளின் வீரம்..
..க்ண்களிலே பட்ட்தெலாம் உன்னடிமை ஆகும்..
மெருகுபெறும் உன்னாலே மக்களவர் வாழ்வே..
..பெருந்தகையே வாழிநீ என்ற்வரின் நினைவும்
பின்னோக்கி அன்றையநாள் நடந்த்தையே எண்ண்..
..”பலவிடங்கள் சென்ற்திலே உடலசதி கொண்டு
முன்னோக்கிப் பார்க்கவொரு மரப்பலகை கண்டே..
..முரசறையும் கட்டிலெனத் தெரியாமல் ஏறி
நன்றாகத் தூங்கிய்பின் மென்காற்றில் விழித்தால்..
..நின்ற்படி முறுவலுடன் விசிறியுடன் மன்ன்ன்..
கண்விழித்து மனம்பதைத்தால் பொற்கிழியைத் தந்தான்..
...கருணைமன மன்ன்னிவன் என்றென்றும் வாழ்க!”
-
வாழ்க இந்த மாயாலோகம்
வலம் வர எத்தனை வழி
வசதியாய் ஒரு முகமூடி
வேண்டாம் உண்மை முகவரி
வளரும் முகம் பாரா நட்பு
சோழனும் ஆந்தையாரும் தூசு