குங்குமம் வார இதழ் -27/06/2016
http://i66.tinypic.com/dcsgk.jpg
http://i67.tinypic.com/2zrjq50.jpg
http://i67.tinypic.com/ngstn8.jpg
Printable View
குங்குமம் வார இதழ் -27/06/2016
http://i66.tinypic.com/dcsgk.jpg
http://i67.tinypic.com/2zrjq50.jpg
http://i67.tinypic.com/ngstn8.jpg
http://i64.tinypic.com/2mdq9m9.jpg
பேசுவது கிளியா பாடல் இடம் பெற்ற திரைப்படம் பணத்தோட்டம். இதழில்
தவறாக " தெய்வத்தாய் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது )
http://i63.tinypic.com/2lnt6h.jpg
தேவரின் 100 நாட்கள் ஓடிய படங்கள்
தாய்க்கு பின் தாரம் - 1956
தாய் சொல்லை தட்டாதே - 1961
தாயை காத்த தனயன் -1962
நீதிக்கு பின் பாசம் -1963
வேட்டைக்காரன் -1964
முகராசி-1966
1972 - நல்ல நேரம்
தேவர் எடுத்த படங்களில் அதிக அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது .
தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர்ஸ்டாரான தியாகராஜ பாகவதரைக் கவனித்தால், அவரது படங்கள் ஆரம்பத்தில் இருந்தே கிட்டத்தட்ட ஒரே வார்ப்புருவைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மொத்தமே பதினான்கே படங்களில்தான் பாகவதர் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அவற்றில் ஏழு படங்கள்தான் வசூல் சாதனைகளைப் புரிந்தன என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆனால், அந்த ஏழு படங்களைக் கவனித்தால் அவரது வெற்றியின் ரகசியம் புரியும். பாகவதரின் முதல் படமான 'பவளக்கொடி', ஒன்பது மாதங்கள் தமிழகத்தில் ஓடியதாக அறிகிறோம். அவரது வெற்றிகரமான நாடங்களில் ஒன்றை எடுத்துத் திரைப்படமாக இப்படி அளித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. சுப்ரமணியம். இதுதான் அவரது முதல் படமும் கூட. வெளியான ஆண்டு 1934. இப்படம் வெளியானபோது, ஸ்பாட்டிலேயேதான் நடிகர்கள் பாடி நடித்தனர். பவளக்கொடி என்ற இளவரசியைக் காதலிக்கும் அர்ஜுனனின் கதை இது (மேகமூட்டமாக வானம் கானப்படும்போதெல்லாம் நடிகர்கள் வேகமாக ஓடிச்சென்று உணவு உண்டனர். மேகம் கலைந்ததும் உணவுப்பொட்டலங்களை அப்படியப்படியே விட்டுவிட்டு நடிக்கத் திரும்பினர். அப்போதெல்லாம் அந்த உணவை உண்ணக் காகங்கள் குழுமும். இது படப்பிடிப்பைப் பாதித்தது. எனவே ஒரு ஆங்கிலோ இந்தியர் - ஜோ என்பவர் - காகங்களை விரட்டுவதற்காக துப்பாக்கி சகிதம் எப்போதும் அமர்ந்திருந்தார். இப்படத்தின் டைட்டில்களில் 'Crowshooter - Joe' என்ற வித்தியாசமான டைட்டிலைக் காணலாம்).
இப்படத்தின் பின்னர் பாகவதர் மிகவும் புகழ் பெற்றார். சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் ஆகிய அவரது படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடின. பெரும்பாலும் அவரது படங்களில், நல்ல இளைஞன் ஒருவன், விதிவசத்தால் காதலிலோ அல்லது சில சோதனைகளிலோ விழுந்து, தண்டிக்கப்பட்டு, பின்னர் மனம் திருந்துவான். இது அக்காலத்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதையமைப்பு. கூடவே கணீரென்ற குரலில் பாகவதர் பாடிய பல பாடல்கள் அவரது பிராபல்யத்துக்குக் காரணமாக அமைந்தன.
பாகவதரை விடவும் புகழ்பெற்ற எம்.ஜி.ஆர், ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பெரிதும் கஷ்டப்பட்டவர். 1936ன் சதிலீலாவதியில் சிறு வேடத்தில் அறிமுகமானாலும், எம்.ஜி.ஆரின் முதல் ஹிட், 1947ல் வெளியான ராஜகுமாரிதான். இதன்பின் 1950ல் வெளியான மந்திரி குமாரி எம்.ஜி.ஆரை ஒரு வெற்றிகரமான ஹீரோவாக உயர்த்தியது. பின்னர் 1954ன் மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்கு மறக்கமுடியாத வெற்றிப்படமாகியது. இதன்பின்னர் வரிசையாகப் பல ஆக்ஷன் படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரின் வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல நாடோடி மன்னன் விளங்கியது.
அறுபதுகள் துவங்கும் வரை எம்.ஜி.ஆர் நடித்தது பெரும்பாலும் சரித்திர வேடங்களில்தான் என்பதை அனைவரும் அறியக்கூடும். சமூகப்படங்களில் நடிக்கத் துவங்கியபோது எம்.ஜி.ஆருக்கென்றே எழுதப்பட்ட தத்துவப் பாடல்கள் மற்றும் அவருக்கென்றே அமைக்கப்பட்ட காட்சிகள் (அநீதியைக் கண்டு பொங்குதல், தாய்/சகோதரி பாசம், குடி/புகைப்பிடித்தல் இல்லாத காட்சிகள், சண்டைகள், ஏழைகள்/மக்களுக்காகப் போராடுதல் இத்யாதி), எம்.ஜி.ஆரை மக்கள் நடிகராக மாற்றின. அவரை நடிகராகவும், எம்.ஜி.ஆரைக் கடவுளாகவும் மக்கள் பார்க்கத் துவங்கினர். இதனாலேயே பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராகவும் ஆக முடிந்தது.
courtesy - jannal