திரு. குண்டு ராவ் அவர்களுக்கு சமர்ப்பணம்:
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆற்டி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா......
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா......
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா..........
வகுப்பார் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைப்பதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா