http://i68.tinypic.com/mabcly.jpg
Printable View
எங்கள் சங்கத்தின் என்றும் மறயா புகழ் கொண்ட நட்சத்திர உறுப்பினர்
தமிழ் திரை உலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி
பொற்கால ஆட்சி தந்த பொன்மன செம்மல்
இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்....
என்று உலகத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மையை சொல்லி
எட்டாவது வள்ளல், கலியுக கர்ணன், பொன்மன செம்மல், புரட்சி நடிகர், மக்கள் திலகம், புரட்சி தலைவருக்கு புகழ் ஆரம் சூட்டி பாராட்டி இருக்கும் நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!
காலத்தை வென்றவன் நீ காவியம் ஆனவன் நீ
https://youtu.be/bZ69lg7tArQ
'அன்பே வா' புகழ் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மரணம்
Read more at: http://tamil.filmibeat.com/news/dire...ay-040574.html
http://www.maalaimalar.com/News/TopN...m-industry.vpf
திருலோகசந்தர் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
சென்னை:
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15.6.2016) சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
திரைப்பட இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் திரையுலகம் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். இவர் நன்கு படித்த பண்பாளர். நாகரிகமான மனிதர். ஏ.சி.திருலோகச்சந்தர் படப்பிடிப்பிற்கு வரும் ஒவ்வொரு காட்சியையும் திட்டமிட்டு திறம்பட இயக்கும் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “அன்பே வா”, நான் நடித்த “எங்கிருந்தோ வந்தாள்”, “தர்மம் எங்கே”, “எங்க மாமா” மற்றும் “தெய்வ மகன்” போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் நான் நடித்த “தெய்வமகன்” ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்ற சிறப்பினை பெற்றது.
இவருடன் பணியாற்றுவது திரைப்படத் துறையினருக்கு மிகச் சிறந்த அனுபவத்தைப் பெற்று தந்தது. இவருடைய உதவி இயக்குநர்கள் பலர் வெற்றி இயக்குநர்களாக திகழ்ந்ததற்கு இவரிடம் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவமே முக்கிய காரணம் ஆகும்.
ஏ.சி.திருலோகச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைப்படங்களை இயக்குவதிலும், கதாபாத்திரங்களின் குண இயல்புகளை தனக்கே உரிய சிறப்பான பாணியில் சித்தரிப்பதிலும் வல்லவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு திரைப்படத் துறையினருக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
http://i66.tinypic.com/95sieg.jpg
இன்று (15/06/2016) இரவு 7 மணி முதல் , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
தலைவருக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். குணசித்திர வேடத்தில் தன்னாலும்
நன்கு சோபித்து இயல்பாகவும், இயற்கையாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்த காவியம் .
இன்று (15/06/2016) பிற்பகல் 1 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். துப்பறியும் அதிகாரியாக நடித்த "தாய் சொல்லை தட்டாதே " ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில்
ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/ejufs7.jpg