நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!
மதுரையம்பதியில் வறுமையில் வாடிய ஏழைப் புலவனுக்கு தெய்வமே மனித வடிவில் வந்து ஆயிரம் பொற்காசுகளை வாங்கி கொடுத்த அந்த நிகழ்வை மீண்டும் வர்ணமயமான வெள்ளித்திரைகளில் அரங்கேற்ற அந்த கைலாச நாதன் வெகு விரைவில் வர இருக்கிறார்! பராக்! பராக்!
இன்றைக்கு 47 வருடங்களுக்கு முன் இதே நாளில் [ஜூலை 31, 1965] முதன் முதலாக வெள்ளித்திரையில் காட்சி தந்த சிவா(ஜி) மீண்டும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு நவீனப்படுத்தப்பட்டு விரைவில் வர இருக்கிறார் என்ற இனிய தகவலை இந்த நாளில் பகிர்ந்துக் கொண்ட திரு. மோகன்ராம் அவர்களுக்கு நன்றி!
அன்புடன்