http://i64.tinypic.com/okq2pf.jpg
Printable View
மதுண்ணா!
அதே பெண் ஜோடிகள்
'ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி ஒரே நீதி ஒரே ஜாதி கெழவி கண்ணாத்தா----- இது 'ஜம்' ராணி
'வூட்டுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா'-----இது ராட்சஸி.
இரண்டு கான ஆத்தாக்களும்:) ஆளுமை செய்யும் பாடல். இருவருக்கும் குரல்கள் இளம் குருத்து போல் இனிக்கிறது.
ஆளுக்கொரு பாட்டாய் வீட்டிலிருந்து போட்டு விட்டோம்.. ஆனா வீடியோ பொசுக்குன்னு முடிஞ்சுட்டுது.
விஜயலஷ்மிக்கு ஜமுனாராணி குரல் தந்திருப்பார்.
ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மனமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு சிறிது நேரம் உரையாடினார்கள். 'வெகுளிப்பெண்'ணின் 'தித்திக்கின்றதா....முத்தமிட்டது' பாடலை அவர்களுக்கு நினைவுபடுத்தினேன். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பிறகு நம் மதுர கானத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
https://youtu.be/t0uPRY7DLHs?list=PL...B7YctjMCIgNj7H
https://youtu.be/DJ1LWNpBQKA
பகலிலே பார்க்க வந்ததென்ன..
யோவ் எலெக்*ஷன் டைம் அதனால வந்தோம்..இப்ப தான் முடிஞ்சுபோச்சுல்ல வரமாட்டோம்ல..
**
மாடி வீட்டு மாப்பிள்ளை ஜெயலலிதா ரவிச்சந்திரன்..படம் எப்படி இருக்கும்..
https://youtu.be/ci7M4WYj9z0
//ராகவேந்திரன் சாரில் உதவியால் ஜமுனாராணி அவர்களிடம் கைபேசியில் பேசி அவர்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். // நைஸ் வாசு..
**
சத்தியமே லட்சியமாய்க்கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா..
இப்ப எதுக்கு இந்தப் பாட்டு..
ஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..
*
https://youtu.be/T5-y7v17fRM?list=RDT5-y7v17fRM
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே.. சே அன்னிக்கே சொல்லிவச்சுட்டாங்கய்யா. நமக்குச் சேஞ்சே கெடையாதுன்னு...
யோவ்..அவர் பாடினது ஜெனரலா.. நீ சொல்றது இன்னித் தேதிக்கு..
*
https://youtu.be/t5cPpM4Q-wo?list=RDT5-y7v17fRM
From Jaathakam (1953)
madhi kulavum yaazhisaiye......
http://www.youtube.com/watch?v=xG0mbYOUqao
Original tune from Awaaraa(1950)
dam bhar jo udhar moon phere.....
http://www.youtube.com/watch?v=H1ivT6fDFME
I was earching for 'madhi kulavum yazhisaiye...'. for a long time. Finally I found it. A popular song in the 50s.
சக்சஸ் உங்களுக்கே மதுண்ணா!:)
அது 'கேளடி கண்ணாத்தா'தான். நைட் ஷிப்ட் கிளம்பற ஜோர்ல (நண்பர் வாசலில் நின்று கார் ஹாரன் அடிக்க) 'கேளடி' சரியா காதில் விழாம 'கெழவி' ஆயிடுச்சு.:) பின்னால 'ஆமடி பொன்னாத்தா' வந்தால் முன்னாடி 'கேளடி' தானே வரும்?. கொஞ்சம் காதை சரியா தீட்டலைன்னா 'கெழவி' ன்னு ஏமாற சான்ஸ் உண்டு. தாங்கள் இருக்க பயமேன்?
ஆனா ஒன்னு....பாட்டு ரீங்கரமிட்டுகிட்டே இருக்கு காதுல. செமையோ செம.
Melody song
https://youtu.be/Xn8zjmUkBMQ
Superb Melody from Vasanthathil Ore Naal
https://youtu.be/hjEe83VEt3c
One more melody
https://youtu.be/E0iOTH6Dt0o
சி.க. சார்.. ஆனாலும் உங்களுக்கு அசாத்தியமான நம்பிக்கைதான்...Quote:
ஓட் போட்டுட்டேன் இனி அஞ்சு வருஷத்துக்கு ஒருத்தரும் நம்மைச் சீண்ட மாட்டாங்க..அதான்..
வாசு சார்
ஆளுக்கொரு பக்கமாய் பாடியவர்களையும் ஒன்றாக பாட வைத்த பாடல்களை பகிர்ந்து அசத்தி வருகிறீர்கள்.
பாராட்டுக்கள்.
”வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்”
:தலைவரே..தூக்கத்துலருந்து முழிச்சுக்குங்க.. எலெக்*ஷன் ரிசல்ட் நேத்துக்கே வந்துடுத்து..
*
ஆக இப்ப என்ன பண்ணலாம்..ஒரே டென்ஷனா இருந்த மனசு இப்போ பொங்குமோல்லியோ..பொங்கறதுன்னாலே காதல் தானே..
துள்ளலா பார்க்கலாமா..
வெள்ளமென நெஞ்சமதில் வேகமாகப் பாடலிலே
துள்ளிவரும் நற்கவிதை தூள்.
அந்தக்காலத்தில் ரேடியோல ஹிட் சாங்க்னு நினைக்கறேன்..முரளி ரஞ்சனி..மண்ணுக்குள் வைரம்
பொங்கியதே காதல் வெள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
உந்தன் மனம் தினம் இளகியது
ரஞ்சனியைப் பற்றி வாசு தான் பழைய பக்கெட் போடாம சொல்லணும்..:)
https://youtu.be/0ah7wbkJnbs
அந்த இள நங்கை பாவம் தான்.. எதனால..இளமை அழகு பணம் எதிலயும் அவளுக்கு குறைச்சல் இல்லை..
பழகிடும் கண்களும் பார்த்தவண்ணம் ரசிக்கும்
அழகினைக் கொண்ட அவள்..
யா அப்படி இருக்கையில எதனால பாவம் கறீங்களா..
அவளுக்கு க் காதல் வந்துடுத்து.. காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோன்னுகண்ணதாசன் சொல்லியிருக்காரில்லை
இவள் காதலித்தது இவளுடையசித்தப்பா வயதிருக்கும் ஒரு வயதானவரை..
கோட் சூட் எல்லாம் அணிந்து அவர் கடற்கரை வர அவருடன் ஆடிப்பாடுகிறாள்..இல்லை கற்பனை தான்
என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்துப் போல் தோன்றும் அன்புவிளக்கு எனச் சொல்லி
அதிசய மேனகை இடையில் மேகலை
ஆடிட வாடுகிறாள் என்று அவள் சொன்னதுபோலக்கனவு..
ஆனால் அவள் நனவில் காண்பதென்ன அந்த பெரிய வயதுக் காரர் தன் சின்னபுத்தியைக் காட்டி இன்னொரு சின்னப் பெண்ணுடன் ஆடுகிறார்.. ஈகுட்டி கண்ணுல மனசுல கரையாணு...அழுவாச்சியா வருது..:)
பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
இந்தப்பாடல் கேட்டால் உள்ளம் மயங்கும்
(மேற்கண்ட கதைச்சுருக்கும் என்னுடைய கதையே..!)
பொன்னும் மயங்கும் பூவும் மயங்கும்
கன்னிபார்வை தனில் தெய்வம் விளங்கும்
*
எடுப்பார் கைப்பிள்ளை ஜெய்ஷங்கர்
https://youtu.be/Fr2taBWIZhg
சிக்கா..
எடுப்பார் கைப்பிள்ளை படத் தொடர்புடையவர்கள் உங்க கதையைக் கேட்டு தற்கொலை முயற்சி செய்யவும் வாய்ப்பு உண்டு. இல்லாட்டி கொலைவெறியோடு வந்தா சிக்காம ஓடிடுங்க..
சட்டம் என் கையில் கமல் மாதிரி இங்கே ஜெய்சங்கரும் வக்கீல் பானுமதியின் மகனாகப் பிறந்து திருடனால் வளர்க்கப்படும் கதை.. திருடி (கன்னட) மஞ்சுளா அவர் தன்னைக் காதலிப்பதாக எண்ண உண்மையில் ஜெய் காதலிப்பது நிர்மலாவை...
மதுண்ணா இந்த கீதாஞ்சலி ஷீலா போலவே கனண்ட மஞ்சுளா நான் அடிக்கடி கன்ஃபூஸ் ஆகும் ஒரு நடிகை...எல்லாவித வளங்களூம் உடலில்பெற்றிருந்தாலும் நடிப்பு என்ற மெய்ன் வளம் இல்லாததால் சி.க வால்புறக்கணிக்கப் பட்டவர்.
க ம பற்றி ஏற்கெனவே வாசு வியாசம் எழுதியிருக்கிறார்..க்ருஷ்ணா ஜியும் என்று நினைவு..
எ கை பி நான் பார்த்ததில்லை..காரணம் டைம் இல்லை..
திருடி நிர்மலாவைக் காதலிப்பது ஓகே..க மபார்த்து ஏமாறுகிறார் என்பது உண்மை தானே..க.ம யாராக்கும்..
க.ம புதுவெள்ளம் எல்லோரும் நல்லவரே என நினைவு உண்மையா இல்லையா..
சிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா ?
நிர்மலா திருடியல்ல.. க.ம.தான் ! அதுவும் ஆண் வேஷத்தில் வந்து ஜெய்சங்கருடன் சேர்ந்து சுற்றுவார். பானுமதி வில்லனின் ( எம்.ஆர்.ஆர்.வாசு )மகனை சிறுவயதில் திருடன் என்று தண்டிப்பதால் அவர் பானுமதியின் குழந்தையை திருடி திருடனாக வளர்த்து ஜெய்சங்கர் ஆக்குகிறார். பின் ஸ்ரீகாந்தை பானுமதியின் மகனாக அனுப்பி விட்டு பானுமதியை விட்டே ஜெய்சங்கரை குற்றவாளியாக்கி தண்டனை பெறும் நிலைக்கு ஆக்குகிறார்.
( முடிவை சொல்லணுமா என்ன ? )
பானுமதியின் "கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்), வனவாசம் போயிருந்து (மீட் மை சன்) ஆகிய பாடல்களுடன் க.ம.வின் "அழகு ராணி கதை இது" பாடலும் உண்டு. அதைத்தவிர உங்க சிக்கா பாடலும் உண்டு.
அது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு ?
https://youtu.be/JVWK4Ci12zEQuote:
madhu;1296414
பானுமதியின் "கண்ணபெருமான் ஆளப்பிறந்தான் ( கிஸ் மீ சன்),
சின்னா!
இந்தப் பாட்டிலேயே வாசு ஐ மீன் எம்.ஆர்.ஆர்.வாசு:) பானுமதி குழந்தையை கடத்தி விடுவார்.
இப்படத்திற்கு இன்னொரு விசேஷம் உண்டு. எம்.பி.ஸ்ரீனிவாசன் இப்படத்திற்கு இசையைப்பாளர். இன்னொரு கொசுறு செய்தி. பின்னாளில் 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் செம ஹிட் பாடல்களை கொடுத்த வி.எஸ்.நரசிம்மன் இப்படத்திற்கு உதவி இசையமைப்பாளர்.
விஜயன் இயக்கிய 'புதுவெள்ளம்' படத்தின் இசையமைப்பாளரும் ஸ்ரீசீனிவாசனே. (துளித் துளி). என்.வி.ஆர் பிச்சர்ஸ், சிவக்குமார், கே.விஜயன், எம்.பி.ஸ்ரீனிவாசன் என்ற கூட்டணி அப்போது வெற்றிகளை பெற்றது.
(எடுப்பார் கைப்பிள்ளை, மதன மாளிகை) எல்லாம் வண்ணப் படங்கள் மட்டுமல்ல... ஹை பட்ஜெட் படங்களும் கூட.
'எல்லோரும் நல்லவரே' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்த 'டாக்டர்' சிவா மஞ்சுளா. கன்னட மஞ்சுளா அல்ல. ஜான் ஏறினா முழம் சறுக்குகிறீர். ஒரு நபர் உம்மை விடாமல் வாட்ச் செய்து வருகிறார். ஜாக்கிரதோ.:)
மஞ்சுளாக்கள் பற்றி உமக்கு கிளாஸ் எடுத்து மண்டை பிஞ்சி பிஞ்சி போச்சே.:banghead: ஓய்... உம்ம பதிவுகளை இனி மே தான்:) உக்கார்ந்து படிக்கப் போறேன்.
இது 'மீட் மை சன்'
https://youtu.be/vg6nLZO7KTM?list=PL...3DIz4_F5MvuvII
சரி....மதுண்ணா தொடங்கியதை நாம் தொடர ஆரம்பிப்போம். ஆங்கில வரிகள் கலந்த தமிழ்ப் பாடல்கள் இனி மதுர கானங்களை அலங்கரிக்கட்டுமே.
அதே பானுமதி அப்போதைய சூப்பர் நிர்மலாவுடன் பத்து மாத பந்தத்தில் பாடிய சூப்பர் ஹிட் பாடல்.
'லெட் மீ ட்ரை'
'மம்மி... மம்மி... இட்ஸ் ஸோ குட். அம்மா நிறுத்தாதீங்கம்மா... பாடுங்கம்மா' என்று பாடலின் நடுவே பானுமதியிடம் நிர்மலா சொல்லும் டயலாக் அப்போ ரொம்ப பாப்புலர்.
https://youtu.be/7mbNQoJd5eg
சின்னா!
உமக்கு ஒரு வீட்டுப் பாடம். இப்பாடலின் லிரிக்ஸ் தமிழ் அர்த்தத்தோடு அதே ஆங்கில வரிகளோடு வேண்டும். உன்னால் முடியும் தம்பி தம்பி.
நடிகர் திலகம் கிராக்கு டாக்டராக அமர்க்களப்படுத்தும் எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத 'மனிதருள் மாணிக்கம்' பாடல். 'ஐ வில் சிங் பார் யூ'
https://youtu.be/wzvt5PN5AXs
https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk
வாசு சார் சொன்னால் உடனே கேட்கணும்... நன்றி வாசு சார்...
தலைவரின் சூப்பரோ சூப்பர் புன்னகை தவழும் மதிமுகத்தில் மலரும் சூப்பர் ஸ்டைல்...
//சிக்கா... ஏற்கனவே முறுக்கு .. அதை ஜாங்கிரியாக்கணுமா ? // மதுண்ணா:) பாருங்க மெஞ்ஞமெஞ்ஞேன்னு தயிர்சாதம் மாதிரி மெளனமா இருந்த இடம் எப்படி களைகட்டிடுச்சு..அதான்ச்சும்மா கொஞ்சம் கிளறி விட்டேன்..
அது சரி... ஜெய்சங்கர் வயசான சின்ன புத்திக்காரராகவா தெரியறாரு ?// கதைக்காகத் தானே சொன்னேன் :) ஷமிக்கணும்.. (ஒரு ஷணம் க.ம கிட்ட ஜொள்ளு விட்டுட்டு அடுத்த சீன்ல லாவகமா வெ.ஆ. நி யை லாகவமாத் தூக்கறதுக்குப் பேரு என்னவாம்..:)
அந்தக்காலத்துல ஏன் ஹீரோக்கள் கலர் கோட் போட்டுக்கறாங்க என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை.. மீட்மை சன் பாடல் நினைவு படுத்தியமைக்கு நன்றி
*
மஞ்சுளாக்கள் பற்றி உமக்கு கிளாஸ் எடுத்து மண்டை பிஞ்சி பிஞ்சி போச்சே// வாஸ்ஸீ ரொம்ப முட்டிக்காதீங்க..என்னா பண்றது..கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆகிடுத்து :)
எல்லோரும் நல்லவரே' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்த 'டாக்டர்' சிவா மஞ்சுளா. கன்னட மஞ்சுளா அல்ல. ஜான் ஏறினா முழம் சறுக்குகிறீர். ஒரு நபர் உம்மை விடாமல் வாட்ச் செய்து வருகிறார். ஜாக்கிரதோ// இப்படில்லாம் பச்சப் புள்ளய பயமுறுத்தப் படாது ஆமாம் சொல்லிட்டேன்..அது என்ன டாக்டர் சிவா மஞ்சுளா.. ம பி மஞ்சு வச்சு த்தானே பிள்ளையார் சுழியே போட்டீர்..:)
நீங்க கொடுத்த ஹோம் வொர்க் நாளைக்குப்பண்றேன் சரியா :) இன்னிக்கு ஒர்ரே வெயிலா வெளியே போய் வந்தேனா.. தோலெல்லாம் பர்னிங்.. கொஞ்சம் உடம்பும் முடியாமப் போச்சா..ஒரு டேப்லட் போட்டுகினு தூங்கிக்கிட்டேன் ( எங்கிட்டிருந்தோ ரன்னிங் நோஸ் வந்துடுத்து :) ) மறுபடி உறக்கம் வருது..
இங்க்லீஷ் மிக்ஸ் பாட்டுன்னா என் பாடல் உனக்காக என்ற ஆங்கிலப் பாடல் நினைவுக்கு வருகிறது..அதை நீங்கள் எழுதுவேன் என்று சொன்னதும் தான்.. எப்போ அந்த பாலா பாட் எழுதுவீங்க..
இப்போதைக்கு என்னோட கான் ட்ரி ப்யூஷனா உஷாக்கா குரலில் :)
Under a mango tree, on the banks of the cauvery
https://youtu.be/9FeDqEfTPf0
மேல் நாட்டு மருமகள் ல வாணி கணபதிக்கும் ஒரு மேல் நாட்டுப் பொண்ணுக்கும் ஒரு இங்க்லீஷ் டாமில் சாங்க் உண்டோன்னோ.. சாங்க் ஃபர்ஸ்ட் லைன் மறந்நு போயி :)
வேறுவேண்டும் எனக்கேட்டால் பதிலெதுவும் சொல்லாய்
...விஷமக்கண் பார்வையினால் மெளனத்தால் கொல்வாய்
மேருபோல நிமிர்ந்திருந்த முகத்தினையே சற்றே
..மேவித்தான் இதழமுதம் பருகிடவே அழைத்தால்
சேறுபட்ட சீலையினைப் பார்த்தாற்போல் பதறி
..செவ்விதழைத் தான்மடித்துத் தள்ளலாமோ பெண்ணே
தேருநிலை மாறியதே தங்கநிறப் பெண்ணே
..தெனாவட்டாய் நிலைகொள்ளச் செய்திடுவாய் கண்ணே..
https://youtu.be/y01HM-Inw3o
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
நிரந்தரமாய்க் கனவுகளில் நித்தம் வந்து
...நீலவிழி தனையுருட்டி மிரட்டிச் செல்வாய்
புறந்தள்ளிப் போவென்றால் போகா மல்தான்
..பூவிதழை விரித்துவொரு சிரிப்பைத் தந்து
வரங்களெதும் வேண்டுமென்றால் கேளேன் என்பாய்....
..வாய்திறந்து கூறுமுன்னே மறைந்து செல்வாய்
தரவேண்டும் நனவினிலே எனக்கே கண்ணா
..தக்கபடி ஒருபதிலை சொல்வாய் கண்ணா..
https://youtu.be/PvfWG-Jm_gg
கீதைக் கண்ணன் சொல்வது .....
மாற்றம் ஒன்றே வாழ்வியலில் மாற்றம் இல்லாதது ....
Quote:
Changes are inevitable and many a times indispensable too, in this human life! Changes only turn new leaves making the withered leaves shed down from a living tree!!
We accept the changes the way they come but we can challenge them if they are detrimental to our own existence within our limits and limitations of the invincible nature against which none can fight and survive! Changes are indicators of mind too...like the color change in a titration process ... till the mind color is exhibited we do not know what had been happening in the minds of our own kith and kin,,,in love too....sudden hate is an indicator!!
In family relationships still it is hard and complex to understand...even a father about the mind changes of his sons and daughters..wife...friends....daily so many changes...changes do not change with time...Bhagavath Geethaa!!
ஜெமினி சிவாஜி பந்தபாசம் ....அப்படியொரு மாற்றம்!
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ ......
https://www.youtube.com/watch?v=Lls3IwzcaiI
https://www.youtube.com/watch?v=h436LJixN4Y
மாற்றம் இப்படியும் இனிமையாகவும் இருக்குமோ
பணமா பாசமா ....இப்படியொரு தோற்றம்!!
மாறாத இளமைத் தோற்றத்தில் சரோஜாதேவி !!
https://www.youtube.com/watch?v=dBQRr5GT75Q
வளமையாய்ப் பூத்த வனப்பினில் மங்கை
இளமைக் கனவினில் இங்கே - உளத்தினில்
ஆற்றாகப் பொங்கி அழகாக ஓடிவரும்
மாற்ற முணர்ந்தாளே மான்..
நல்ல மாற்றங்கள் பாட்டு தான் சி.செ.. நீங்கள் கட்டம் போட்டு வண்ணமயமாய் அழகாய் எழுதுவதிலும், நான் ஏதோ வெண்பா முயற்சி செய்து எழுதிப்பார்ப்பதிலும் மாறப் போவதில்லை தானே :)
அட .. நேற்று இல்லாத மாற்றம் என்னது
https://youtu.be/9_geeVUdWwc
Love at First S(F)ight!
காதலில் முடியும் மோதல் ....
Quote:
இயற்கையே ஆணையும் பெண்ணையும் முரணான தோற்றங்களில் படைத்திருந்தாலும் காந்தத்தின் பால் இரும்புத்துகள்கள் ஈர்க்கப் படுவது இயல்பே !! முதல் சந்திப்பில் மோதல் நிகழ்ந்தாலும் வரும் சந்திப்புகளின் சந்தர்ப்பசூழல்கள் காதல் முகிழ்த்திட காரணிகள் ஆவதும் இயல்பே வாழ்வியலில் !!
காதலான மோதல் 1 சாந்தி நிலலயம்
மோதலர்கள் : ஜெமினிகணேசன்-காஞ்சனா
Quote:
ஜெமினிகணேசன் படங்களிலேயே காதல் ஈர்ப்பு ரம்மியமாகவும் ரசிக்கத்தக்க விதத்திலும் திரைக் கதையோட்டம் அமைந்து அனைவரையும் ஈர்த்த மன மகிழ் காவியம் சாந்தி நிலையம் !
தான் ஆசிரியையாக சேரப்போவது ஜெமினியின் மாளிகையில் என்பதை அறியாது முதல் சந்திப்பிலேயே காஞ்சனா குதிரைவீரன் ஜெமினியுடன் மோதுவது சுவாரஸ்யம்! அதுவே பின்னாளில் காதலாக மாற வித்திடும் சூழல்களும் காதல் மன்னரின் பிராண்ட் வழிசல்களும் சூப்பரோசூப்பர்!!
https://www.youtube.com/watch?v=iRFjJsXCjIo
https://www.youtube.com/watch?v=aZg11IiHxLE
https://www.youtube.com/watch?v=HIFj257ODQk
https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
வாசு ஜி...
எனக்கு எப்போதும் பிடித்த ஆங்கில வரிகள் கொண்ட பாடல்..
https://www.youtube.com/watch?v=5GwF0HC3Rek
வாஹ்ரே வாஹ்....மதுண்ணா! எனக்கும் பைத்தியமான பாடல். நடிப்பவர் அதைவிட பைத்தியமாக்குபவர். அதனால் ஸ்பெஷல் கிரேடிலேயே இருக்கும் பாடல். எங்களவரின் ட்விஸ்ட் நடன அசைவுகள் வழக்கம் போல விளக்க இயலா பிரம்மிப்பே.
'உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே'
என்று ராஜஸ்ரீயிடம் கைகளைப் பக்கவாட்டில் பெருக்கி, தன்னைத்தானே உருவக் கிண்டல் அடித்து அதில் ராஜியையும் சேர்த்துக் கொண்டு சிரித்துக் கொள்ளும் இடம் என்னைக் கொல்லும் இடம்.
பல்லவி முடிந்து முதல் சரணத்தில் அந்த கிடாரின் இனிதான இசை ஓசையில் ராஜஸ்ரீயின் சிறிய பேயாட்டத்திற்குப் பின்:) நடிகர் திலகம் கொடுக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் முக்காலமும் மறக்க முடியாதது. தொடைகளில் கைகள் பதித்து, கை,கால்கள் விரித்து, பின் இடுப்பில் சேலை கட்டுவது போன்ற பாவனையில் இரு ஒய்யார ஓடிசல்கள் அவர் செய்யும் போது ஆனந்த அதிர்வுகள் நம்மில் உண்டாகும். நடன அசைவுகளின் போது அவர் முகத்தில் தெறிக்கும் அந்த அலட்சியங்களை சொல்லி மாளாது. அவரை அள்ளியும் மாளாது. போங்க மதுண்ணா! தூக்கம் போச்சு....வெறிதான் ஏறுது.
மதுண்ணா! சின்னா!
இதிலும் ராஜஸ்ரீதான். ஆங்கில வரிகள் ஆரம்பம்தான். உடன் நாகேஷ், ஏ.எல்.ஆர். ஈஸ்வரி குரல் கேட்டால் கல்லும் கனியாதோ! சும்மா பொறி பறக்கிறது. இசை இன்ப வெள்ள உற்சாகம்..
எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப........................................ ..... .....................................ப் பிடித்த பாட்டு.
பாடல் துவங்குமுன் ஒரு சொக்க வைக்கும் 'ஹா...ய்' சொல்வாரே ராட்சஸி! ஆரம்பத்திலேயே டாப்.
Haai
Girls on the beach
b-e-a-c-h
Birds on the tree
t-r-e-e
பெண்ணும் பறவையும் free free
டண்டண்டண் டண்டடண் டண்டண் டண்டண் டண்
(சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்)
டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(முத்தத்தைப் பார்த்தபின் மூடி வையுங்கள்)
டண்டண்டண் டண் டடன் டண்டண் டண்டண் டண்
(தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்)
எல்லாம் நமக்காக
வெள்ளி அலை கரையினில் துள்ளி வந்து விழுவதும் உள்ளிருந்த பொருள்களை அள்ளி வந்து தருவதும் தென்னை மரம் அசைவதும் தென்றலுக்கு இசைவதும் எல்லாம் நமக்காக
சரண வரிகளை மேற்கண்ட டியூனோடு பொருத்திப் பாருங்கள்.
அற்புதமாய் இருக்கும்.
இடையிசையில் ஒலிக்கும் வாத்தியக் கருவிகளின் இனிமையை எடுத்துரைக்க வார்த்தைகள் வரவில்லை. என்ன ஒரு பிரம்மாண்டம்!
'பக்கத்துக் காத்துக்கு பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் பொங்குது
வெட்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
எல்லாம் எதற்காக
பச்சைக்கிளி பறப்பதும் இச்சைக்கிளி அழைப்பதும் முத்தமிட்டு மகிழ்வதும் முன்னும் பின்னும் அசைவதும் கட்டிக் கொள்ளும் உறவினை திட்டமிட்டு உரைப்பதும் எல்லாம் நமக்காக' ('முன்னும் பின்னும்' அடி தூள்):clap:
அடேங்கப்பா!...மூச்சு விடாமல் மூர்க்கத்தனமாய் இப்படி பாட அரக்கியால் மட்டுமே இயலும்.
மதுண்ணா!
ஒரு சின்ன சுவாரஸ்யம் இந்தப் பாட்டில். நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இரண்டாவது சரணத்தின் இரண்டாவது வரியான
'பட்டத்து ராணியின் இதயம் பொங்குது' என்ற வரி முதல் முறை வரும் போது ஈஸ்வரி 'பொங்குது' என்று பாடியிருப்பார்.
அதே வரி இரண்டாம் தரம் மீண்டும் வரும் போது 'பட்டத்து ராணியின் இதயம் தூங்குது' என்று ஈஸ்வரி மாற்றிப் பாடியிருப்பார். காது கிழிந்துதான் சொல்கிறேன்.:) ராட்சஸி மாற்றிப் பாடி விட்டாரா?... இல்லை... பாடலே அப்படித்தானா?
ஏன் இந்த மாற்றம்? 'பொங்குது' 'தூங்குது' என்று மாறியதை தெரிந்து கொள்ள உள்ளத்தில் ஆசை பொங்குது.
சின்னா!
உங்களுக்கு ஒரு கேள்வி. ராஜஸ்ரீ கோஷ்டியினர் கடற்கரை பாறைகளில் மேடான பகுதிகளில் களிநடனம் ஆடும்போது இறக்கத்தில் நிற்கும் நாகேஷ் திடுமென கீழே படுத்துக் கொண்டு எதையோ தேட எத்தனிக்கிறாரே? என்னாது?:)
https://youtu.be/Sunqc5t66q0
வாசு ஜி...
யெஸ்... நீங்க சொன்னது போல பொங்குது / தூங்குது என்பது போலத்தான் கேட்குது. ஆனால் கூல்டோடில் இருந்து mp3 இறக்கி கேட்டுப் பார்த்தேன். ஹிஹி.. அப்பவும் குழப்பம்தான். மனசில் பொங்குது என்று நினைத்துக் கொண்டு கேட்டால் இரண்டுமே பொங்குது என்பது போல கேட்குது. தூங்குது என்றால் தூங்குது என்று கேட்குது. என்ன செய்வது ? :)