Originally Posted by Murali Srinivas
நடிகர் திலகம் ஒரு அற்புதமான நடிகர். ஆனால் அவரது படங்கள் எப்போதாவது தான் சிறப்பாக ஓடியிருக்கிறது. மினிமம் காரண்டி கிடையாது என்றெல்லாம் சொல்ல, எழுத ஆரம்பித்தார்கள். முதலில் கர்ணன் தோல்வி, பிறகு சிவந்த மண் தோல்வி, உத்தம புத்திரன் தோல்வி என்றெல்லாம் பல வருடங்களாக சொல்லி சொல்லி வந்தவர்கள் இப்போது அண்மையில் வீர பாண்டிய கட்டபொம்மன் தோல்வி என்று எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியே போனால் வசந்த மாளிகை கூட தோல்வி படம் என்று சொல்லுவார்கள். அதிலும் இணைய தளமும் வலைப்பூக்களும் வந்த பிறகு விஷயம் தெரியாதவர்கள், ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் எல்லாம் படம் ஓடிய அரங்குகளில் இருந்த டி.சி. ஆரை பக்கத்திலிருந்து பார்த்தது போல கமன்ட் வேறு. இன்று இணையதளத்திலேயே வாழும் இளைய தலைமுறையும் அடுத்தடுத்த தலைமுறைகளும் இதை உண்மை என்றே நம்பி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உடனே அடுத்த கேள்வி எழும். இவர்கள் சொல்வதாலோ, எழுதுவதாலோ கட்டபொம்மனோ வசந்த மாளிகையோ தோல்விப் படமாகி விடுமா? அப்போது இந்த எழுத்துகளை பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற வினா வரும், வந்திருக்கிறது. இதை கேட்கும் போது நான் படித்த ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது.