வாலியின் குறும்பு.
அதிசயப்பிறவி .. சூப்பர் ஸ்டாருடன் ஹிந்தி நடிகை ஷீபா
மலேசியா வாசுதேவன்.. என்ன பொருத்தமான குரல் ரஜினிக்கு
இதோ சிங்காரியை அழைக்கிறார்
https://www.youtube.com/watch?v=3dhxJag8ZJg
Printable View
வாலியின் குறும்பு.
அதிசயப்பிறவி .. சூப்பர் ஸ்டாருடன் ஹிந்தி நடிகை ஷீபா
மலேசியா வாசுதேவன்.. என்ன பொருத்தமான குரல் ரஜினிக்கு
இதோ சிங்காரியை அழைக்கிறார்
https://www.youtube.com/watch?v=3dhxJag8ZJg
கலை சார்,
//திருமால் பெருமை படத்தில், ‘கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி...’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்//
தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி! திருமங்கை ஆழ்வார் சிவக்குமார் அவர்களின் கால்விரலில் மி(எ)ஞ்சியிருக்கும் ஆழியைக் கழற்ற முதலில் அவரின் பாதம் தொட்டு, கைகளால் முயன்று தோற்று, பின் ஆழி மின்னும் விரலை தன் பற்களால் கடிக்க முயலும் காட்சி என் கண் முன்னே வந்து நிற்கிறது தங்கள் பதிவால்.
நடிப்பு என்பதன் அர்த்தம் இது அல்லவோ! வயது வித்தியாசம், சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற பேதம் பார்க்காமல் தான் ஏற்ற கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதனால்தான் நடிகர்களுக்கெல்லாம் நடிகராக, மாபெரும் நடிகர் திலகமாக எங்கள் குலதெய்வம் அமைந்தாரோ!
அதே போல,
'ஒருதாய் மக்கள்' படத்தில்
'இங்கு நல்லாயிருக்கணும் எல்லாரும்
நலம் எல்லாம் விளையணும் எந்நாளும்'
பாடலில்,
உங்கள் அன்புத் தலைவரின் ஆடை வடிவமைப்பு பற்றி சுருக்கமாக அழகாக வர்ணித்திருந்தீர்களே! (//மக்கள் திலகம், சில்க் ஜிப்பா, தார் பாய்ச்சி கட்டிய ஜரிகை வேட்டியுடன் மிக அழகாக இருப்பார்//.) அருமை! பாடலைப் பற்றிய விளக்கமும் சுவை.
அந்த '4 பேர் குந்தியபடி' அமர்க்களம். சிரிக்காமல் இருக்க முடியவில்லை .
இப்பாடலைக் கேட்கும் போது பல்லாண்டு வாழ்க' படத்தின் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற அருமையான பாடலும் நினைவுக்கு வருகிறது.
https://youtu.be/fcavjmHjDww
நல்ல பாடல்களை நினைவுறச் செய்தமைக்கு நன்றிகள் கலை சார்.
கிருஷ்ணாவை அவர் வண்ண நிறத்து எழுத்துக்கள் வாயலாக அருமையாக வரவேற்றதற்கு நன்றி!
ராஜேஷ் - திரு கல்நாயக் அவர்களுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தால் , ஒரு திரி போதாது - பதிவுகள் ஒரு முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும் .
வணக்கம் ஜி!
வார்ரே வா! இன்னா மாதிரி ஒரு பாட்டை சர்வ சாதரணமா கொடுத்தீட்டீங்க.
ராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. அந்த பியாரி பியாரி எக்கோ தூள். 2.1 ஸ்டீரியோவில் ராஜாவின் நகாசு வேலைகளை எத்தனை முறை இப்பாடலில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நிஜமாகவே கதி கலங்கச் செய்யும் பாடல்.
நீங்கள் எமக்களித்த சுசீலாம்மா பாடிய பாடல்களை இன்னும் கேட்க வில்லை. மதுர கான புதிய பாகத்தில் மூழ்கி விட்டதால். நிச்சயம் கேட்கிறேன்.
பாகம் மூன்றின் துவக்கதாரர் வெற்றிகரமாக முடித்தமைக்கு நன்றி!
பி.வாசு சத்யராஜ் கூட்டணியில் சில நல்ல பாடல்கள் கிடைத்தன
வாலி ஐயாவின் அருமையான வரிகள்
https://www.youtube.com/watch?v=WTqQfaulNeE
அன்றைய நண்பர்கள் என்னவோ வருது வருது பாடலைத்தான் மிகவும் விரும்பினார்கள் :)
ரவி,
வணக்கம். வாங்கோ! 'கரு'விற்கு 'எரு' இட்டாயிற்றா? எங்கே?
வாசு - உங்கள் தரத்துடனும் , உழைப்புடனும் என் பதிவுகளை எதிர்ப்பார்க்காதீர்கள் - ஏமாற்றமே மிஞ்சும் . மிகவும் எளியதாக , தினுமும் நாம் காணக்கூடியதாக , வணங்க தவறிவிட்ட ,தவறக்கூடிய ஒரு கருவை பற்றித்தான் சொல்ல விரும்புகிறேன் .
எடுத்துக்கொள்ளும் கருத்துக்கள் எல்லோரும் அறிந்தவையே - எடுத்துச்சொல்லும் முறையில் சில மாற்றங்கள் இருக்கலாம் . மற்றவர்களின் அருமையான பதிவுகளின் நடுவே என் பதிவுகள் just a gap filling - அவ்வளவே .
ஜி,
அருமை! சத்யராஜ் வாசு கூட்டணி ராஜேஷ் கோபால் கூட்டணி போல அருமை.
'வேலையின்றி ஒருவன் இங்கே மேல வந்துட்டா அவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியல்லே'
அதே மாதிரி சத்யராஜ் படங்களில் சில பாட்டுக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்ஜி! ரொம்ப! ரொம்ப!.
அதுல சிலது உங்களுக்காக. சுயநலமும் உண்டு.
'பாகு வெத்தல... வச்சுக்க வச்சுக்க... நாக்கு செவக்க... வச்சுக்க வச்சுக்க.... வா...
'மஞ்சக்குருவி மஞ்சக் குருவி கொஞ்சப் பாக்குதடி.. (கூட யாரு?...யாருன்னு கேக்குறேன்):)
'வானம் தொடாத மேகம்' அருமையிலும் அருமை.
அது போல
'என் ராசிய ஊரெங்கிலும் கேட்டுப் பாரு'
ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜி.