-
செந்தில்வேல்
தலைமுறைகளைக் கடந்து நிற்கும் அவதார புருஷனின் உன்னதங்களை உங்களுக்கே உரிய சிறப்பான வடிவில் இங்கு பகிர்ந்து வருவது உள்ளபடியே மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது. அடுத்த தலைமுறை மட்டுமல்ல, அதற்கு அடுத்த பல தலைமுறைகள் சிலாகித்து மகிழ ஏராளமான விஷயங்களை நடிகர் திலகம் அளித்துள்ளதும், அதற்கு இன்னும் பல தலைமுறைகளில் அதைப் பற்றிப் பலர் எழுதுவர் என்பதை உணர்த்தும் விதமாக உங்கள் பதிவுகள் விளங்குவதும் நெஞ்சுக்கு நிம்மதி அளிக்கும் நிறைவான விஷயங்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
-
ராகவேந்திரா சார்
மிக்க நன்றி
தங்களின் பாராட்டுகளுக்கு.
பேஸ்புக்கில் தலைவருடன் நீங்கள் இருக்கும் புகைப்படம் பார்த்தேன்.
அரிய படம்.அருமை.
-
-
-
-
நான் என்றுமே பீடத்தில் வைத்து வணங்கும் திரைக் கதை,வசனகர்த்தா ,இயக்குனர் கே.எஸ்.ஜியின் மறைவு என்னை மிக துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரை போல ஒருவர் தமிழ் திரையுலகுக்கு கிடைக்க மாட்டார்.ஆயிரம் ஸ்ரீதர்கள் ,பாலசந்தர்கள் வரலாம். ஆனால் ஒரு கே.எஸ்.ஜி இனி தோன்ற வாய்ப்பே இல்லை.
நடிகர்திலகத்தின் மீது அபார பக்தி கொண்டவர்.நடிகர்திலகம் மட்டுமே நடிகர் என்ற சொல்லுக்கே தகுதியுள்ளவர் என்று நேரடி சந்திப்புகளிலும்,பேட்டிகளிலும்,கூறி வந்தவர். இறுதியாக மறதி நோய் ஆட்கொண்ட நாட்களிலும் ,நடிகர்திலகம் மேக் அப்புடன் காத்திருப்பார் ,நான் போக வேண்டும் என்று கூறி வந்ததாக முரளி சொன்ன ஞாபகம்.
நடிகர்திலகத்துடன் ,அவர் சம்பந்த பட்ட படங்கள்.
வசனகர்த்தா.
1)தெய்வ பிறவி,
2)படிக்காத மேதை.
3)எல்லாம் உனக்காக .
வசனம்,இயக்கம்.
1)கை கொடுத்த தெய்வம்.
2)செல்வம்.
3)பேசும் தெய்வம்.
4)குலமா குணமா
5)படிக்காத பண்ணையார்.
பாடல்கள் மட்டும்.
1)எதிர்பாராதது.
2)அமர தீபம்.
3)உத்தமபுத்திரன்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய உண்மை ரசிகனாக பிரார்த்திக்கிறேன். இயக்குனர் மகேந்திரன் கூட இவரின் தீவிர ரசிகர்.
-
நன்றி
திரு .ராகவேந்திரா அவர்களுக்கு,
(திரி14ல் ராகவேந்திரா சார் எழுதியது)
சாதனைக்கென்றே பிறந்த மாமன்னன்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மய்யத்தை மட்டும் விட்டு வைப்பாரா என்ன..
36 தலைப்புகள்...*
24.01.2005 தொடங்கி இன்று வரை பத்து ஆண்டுகளில் இந்தப் பயணம் படைத்துள்ள வரலாறு.. மலைக்க வைக்கும் வரலாறு..
தொடர்ந்து பத்து ஆண்டுகள் இடைவெளியின்றி இயங்கி சாதனை படைத்துள்ளது, நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.
சமீப காலத்தில் திரியில் ஏற்படுத்தப்பட்ட வடிவமைப்பு மாற்றத்தினால் ஒவ்வொரு பாகமும் 400 பக்கங்கள் என்னும் போது இதனுடைய தாக்கம் இன்னும் அதிகமாகும்.
முப்பதிற்கும் மேற்பட்ட தலைப்புகளில் மக்கள் தலைவரின் மகத்தான வரலாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
இன்று வரை அநைத்து பாகங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 58 லட்சம் (11.02.2015 வரை)பார்வையாளர்களை நடிகர் திலகம் திரியின் பல்வேறு பாகங்கள் கவர்ந்துள்ளன என்பதிலேயே அவருடைய ஆளுமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் புலப்படும்.
பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள், பல்வேறு கோணங்களில் அவருடைய நடிப்பைப்பற்றிய திறனாய்வுகள், அவருடைய சமுதாய பங்களிப்பு, நேர்மையான அவருடைய அரசியல் வாழ்க்கை.. கர்ணனைப் போல் வலது கை தருவதை இடது கை அறியாத கொடையுள்ளம், தேசியவாதியாக, தன்னலமற்ற தொண்டனாக என அவரின் வாழ்க்கையின் திறந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் புரட்டிப் பார்த்து அலசிய ஒவ்வொரு ரசிகரின் எழுத்து வன்மை..
இவ்வாறு பல்வேறு வகையில் வரலாறு படைத்திட்ட நடிகர் திலகம் திரி, இம்மய்யம் திரியின் திலகமாகவும் விளங்குவதில் வியப்பேது...
குறிப்பாக நடிகர் திலகம் திரியின் உச்சகட்ட சாதனை, பம்மலார், வாசு உள்ளிட்ட அனைத்து நண்பர்கள் ஒருங்கிணைந்து படைத்த நடிகர் திலகம் திரி பாகம் 9... கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. முடிந்து இரண்டரை ஆண்டுகளான பின்னும், இன்று வரை இத்திரி தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது என்றால்..
அதில் பம்மலார் மற்றும் வாசு இருவரின் பங்கு மகத்தானது என்பதில் சிறிதும் ஐயமில்லை.*
வரும் நாட்களில் வரும் பாகங்களில் இவர்கள் இருவரும் மீண்டும் தொடர்ந்து பங்காற்றி இந்த ஐம்பத்தெட்டு லட்சம் பார்வையாளர்கள் என்பதை ஒரு கோடி என்கிற இலக்கை தாண்ட வைக்க தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் வேண்டுகோளுடனும்
பாகம் 18ஐ ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
திரி 9ல் பங்கெடுத்தவர்கள்விவரம்.
http://i1065.photobucket.com/albums/...pspvcchi9a.png
http://i1065.photobucket.com/albums/...psrkdtycs5.png
http://i1065.photobucket.com/albums/...ps1simajsi.jpg
http://i1065.photobucket.com/albums/...psidpyxzdf.jpg
-
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
-----------------
சுந்தரின் வீட்டிற்கு, சாந்தி மிகப்
பெரிய பலம்.
வறட்சியும், வெப்பமும் வாட்டும் இடத்தின் கொடுஞ்
சூழலை, ஒரு மழை மாற்றி
விடுவதைப் போல...
துன்பங்களை தொடர்ந்து
தாங்கிய நெஞ்சத்தின் தளர்வை,
ஒரு நம்பிக்கை தகர்த்து விடுவதைப் போல...
சுந்தரின் தந்தை, சுந்தர் குறித்தும், அவனது எதிர்காலம்
குறித்தும் கொண்டிருக்கும்
கவலைகளை மாற்றுபவளாகத்
திகழ்கிறாள்...சாந்தி.
அவரது மன வறட்சியைப்
போக்கும் மாமழை சாந்தி.
அவரது நெஞ்சம் தளராமல்
பார்த்துக் கொள்ளும் நம்பிக்கை
சாந்தி.
ஒரு இரவு.
சுந்தரின் தந்தை சிவக்கொழுந்து
தன் வீட்டு ஊஞ்சலில் அமர்ந்து
கொண்டு, தனது நண்பரிடம்
பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த நண்பரும் கூட
சிவக்கொழுந்துவின் தங்கை
மகள் சாந்தியை, சுந்தருக்கு
மணமுடித்து வைக்கும்படி
யோசனை தெரிவித்துப்
போகிறார்.
சிவக்கொழுந்து, சாந்தியிடம்
"சாப்பிட்டியா" என்று கேட்க,
"இல்ல மாமா.. நான் அத்தான்
வந்தவுடனே சாப்பிடறேன்"
என்கிறாள் சாந்தி.
அந்நேரம் பார்த்து சுந்தர் உள்ளே
வர, சாந்தி மலர்கிறாள்.
உற்சாகமாய் விசிலடித்துக்
கொண்டு, எதையோ வென்ற
சந்தோஷ முகமாய் ராஜநடை
போட்டு வரும் அந்தத்
திருவுருவத்தின் வருகை,
சாந்திக்கு மட்டுமா மகிழ்வு?
இதே போல் வெற்றி நடை
போட்டு அய்யன் திரையுலகில்
நுழைந்த 1952-ல் அகிலத்துக்கே தானே மகிழ்வு?
------------------
புன்னகை அரசி, நடிகர் திலகத்திற்கு உணவெடுத்துப்
போகும் அந்தக் காட்சி, அந்த
"சாந்தி" கதாபாத்திரத்தின் ஒட்டு மொத்த குணாதிசயங்களை ஒரே நேரத்தில் விளக்குவதாய்
அமைகிறது.
தனக்காக வெகுநேரம் இரவுணவு உண்ணாமல் காத்திருக்கும் அத்தை பெண்ணைக் கண்டிக்கிறதாய் இந்தக் காட்சியில் வேறொரு அவதாரம் எடுத்திருக்கிறார்..
நடிகர் திலகம்.
சத்தமிட்டுச் சிரித்தாலும், விழி
அகட்டிப் பார்த்தாலும், ஏற்ற
பாத்திரத்திற்கு உயிரூட்ட
தனது கற்பனைப்படி அந்தக்
கலையரசர் எது செய்தாலும்,
மிகை நடிப்பென்று எக்காளம்
செய்து, அலட்சியப்படுத்திய
அதிமேதாவிகளையெல்லாம்
உட்கார்த்தி வைத்து இந்தக்
காட்சியைப் போட்டுக் காட்ட
வேண்டும்.
"வாங்...க" என்று கே.ஆர்.விஜயாவைக் கிண்டலாய்
அழைக்கும் அழகை...
ஒரு பொய்க் கோபத்துடன்
தன் பின்னே வருமாறு நடந்து
கொண்டே
கே.ஆர். விஜயாவிற்கு சைகை
காட்டும் அழகை...
பளீரென்று திரும்புகையில்
முதுகில் கே.ஆர்.விஜயா
கொண்டு வரும் சாப்பாட்டுத்
தட்டு இடிக்க, செல்லக்
கோபத்துடன் முறைக்கும்
அழகை...
நாற்காலியில் அமர்ந்து கொண்டு கே.ஆர்.விஜயாவிடம்
தன் ஒரு உள்ளங்கை விரித்து,
மற்றொரு கையை மூடிக்
கொண்டு குத்திக் குத்தி, "நான்
யாரு" என்று கேட்கும் அழகை..
தன்னைக் கண்டு பயப்படுவது
ஏனென்று கேட்டதற்கு, சின்ன
வயசில் தான் குறும்பு செய்தால்
அவர் தலையில் குட்டியதால்
ஏற்பட்ட பயம் இன்னும்
நீடிப்பதாக கே.ஆர்.விஜயா
கூறும் சிறுபிள்ளைத்தனமான
காரணத்தைக் கேட்டு "கடகட"வென சிரிக்கும்
அழகை...
"நீ சாப்பிட்டியா" என்று கேட்க,
முதலில் "சாப்பிட்டு விட்டேன்"
என்று சொல்லி விட்டு, பின்
"இதோ..சாப்பிடறேன்" என்று கே.ஆர்.விஜயா பயந்தோடிய
பின், சிரித்துக் கொண்டே
"அபிஷ்டு" சொல்கிற அழகை..
அந்த அதிமேதாவிகள் பார்க்கப்,
பார்க்க அவர்களது மூஞ்சிகள்
போகிற போக்கைப் பார்க்க
வேண்டும்.
-------------
வாழ்க்கையில் தனக்குக்
கிடைத்த அத்தனையையும்
விட உயர்வாக,தன் அத்தான்
தனக்குக் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறது
சாந்தியின் மனம்.
அவனுக்காகவே தான் பிறந்து
வந்தேன் என்று அந்த உயிர்
ஆனந்தத்தில் மிதக்கிறது.
ஆடிப் பாடி களிக்கிறது.
வெள்ளைச் சிரிப்பொலி, வெள்ளி மணி ஒலியை மிஞ்ச
சந்தோஷக் கூத்தாடுகிறது.
" பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை"
-கனவிலும், நினைவிலும்
மாமன் மகனுடனே வாழும்
ஒரு பெண்ணின் சிந்தனையாய்
எத்தனை அழகான வரிகள்?
காவியக் கவிஞரை இன்னுமொருதரம் நன்றியோடு
நினைத்துக் கொள்கிறோம்.
நெஞ்சினிக்க மாமனைப் பாடிய
பின், நம் செவியினிக்க வீணை
மீட்டுகிறாள்.
கதவு திறந்து வரும் மாமனுக்கு
மருமகள் கலைமகளாகத்
தெரிகிறாள். நெஞ்சு நிறைந்த
சந்தோஷத்தில் அவளிடம்
பேசுகிறார். தன் மகனை
அவள்தான் மணந்து கொண்டு
நல்வழிப்படுத்த வேண்டும்
என்று வேண்டுகிறார். அன்பில்
நெகிழ்ந்த அவளும் ஆனந்தக்கண்ணீர் சொரிகிறாள்.
மாமன் பாதம் பணிகிறாள்.
-----------------
அவளது ஆனந்தம் கலந்த
கண்ணீர், அழுகைக் கண்ணீராக
வெகு சீக்கிரமே மாறப் போவதை அங்கே தூரத்தில்
கடற்கரையில் அரங்கேறும்
காதற் காட்சியொன்று அறிவிக்கிறது.
அங்கே, கடலில் ஆட்டம் போட்டு விட்டு வந்த சுந்தரை
"கிடைத்த கொஞ்ச நேரத்திலும்
என்னைப் பிரிந்து போவதா?"
என்று கண்டித்தபடியே ஒரு
அன்னை போலே அவனுக்குத்
தலை துவட்டுகிறாள்..உமா.
அம்மா தலை துவட்டுகையில்
குறும்பு செய்யும் குழந்தை
போலே ..நாக்கைத் துருத்திக்
கொண்டு அவளிடம் வேடிக்கை
செய்கிறான்..சுந்தர்.
காதலியைப் பிரிந்து நொடிப்
பொழுதும் தன்னால் இருக்க
முடியவில்லை என்பதை
அவளிடம் வெளிப்படுத்தும்
அந்தக் காட்சியில் மீண்டும் நடிகர் திலகம் நம் இதய
தேசத்தை வென்று அரியணை
ஏறுகிறார்.
"என்னால பேச முடியல..
அழணும் போல இருக்கு.."
என்று விசும்பி அழும் போது
விசிலடிக்கத் தெரியாத ரசிகன்
மிகவும் வேதனைப்படுவான்.
குழந்தைகளின் அழுகை விநோதமானது. அழுவதற்கான
நிஜமான காரணம் ஒருபுறமிருக்க, சமாதானப்படுத்துகையில்
அழுகை இன்னும் பெரிதாகும்.
குழந்தையாய்ப் பாவித்து, "என்
கண்ணுல்ல.. என் செல்லம்ல.."
என பத்மினியம்மா சமாதானப்
படுத்துகையில், இன்னும்
பெரிதாகும் அழுகையுடன்,
பத்மினியின் கழுத்தில் புதைந்து
விசும்பும் நடிகர் திலகத்திடம்
மீண்டும் ஒரு குழந்தையைப்
பார்க்கிறோம்.
நடிப்பதன்றி வேறொன்றறியாக்
குழந்தை.
திரைக்குப் பின்னே நடிக்கத்
தெரியாத குழந்தை.
(...தொடரும்...)
-
ஆதவன் ரவி
இருமலர்கள் பதிவு
ஒரு புத்தகமே போடலாம் எனும் அளவுக்கு பதிவுகள் அமையும்
என்று நினைக்கிறேன்.(அந்தக் காலங்களில் வந்த திரைப்பட கதை வசனம் புத்தகங்கள் போல்.)
பாராட்டுக்கள்.
-
நன்றி... செந்தில்வேல் சார்.
நீங்கள் சொன்னதைப் போல
ஒரு புத்தகம் போல இத்தனை
நீளமாய் நான் எழுதுவதற்கு, இம்மாதிரி எழுத வேண்டும்
என்கிற என் ஆவல் தவிர்த்து
இன்னொரு காரணமும் உண்டு.
மதிப்பிற்குரிய வாசு சார், முரளி
சார், அப்புறம் தாங்கள்..
எல்லோரும் பத்து வரி எழுதினால், பத்தையும் கண்களில் ஒற்றிக் கொள்கிற
மாதிரி எழுதி விடுகிறீர்கள்.
நூறு வரி எழுதுவோமே..
பத்தாவது தேறாதா என்கிற
நப்பாசை எனக்கு.