கவலை என்ற சிலந்தி வலையில்
சிலந்தியும் நீ இரையும் நீ
நல்லெண்ண துடைப்பத்தால்
(க)வலை அகற்று
தன்னம்பிக்கை நெம்புகோலால்
மூலை முடுக்கை விட்டு
உன்னையே நீ நகர்த்து
இருத்தலில் மனதை ஒருத்து
இயங்கிக் கொண்டெ இரு
Printable View
கவலை என்ற சிலந்தி வலையில்
சிலந்தியும் நீ இரையும் நீ
நல்லெண்ண துடைப்பத்தால்
(க)வலை அகற்று
தன்னம்பிக்கை நெம்புகோலால்
மூலை முடுக்கை விட்டு
உன்னையே நீ நகர்த்து
இருத்தலில் மனதை ஒருத்து
இயங்கிக் கொண்டெ இரு
இரு என்று சொல்லிப் போனாள்
எங்கே தொலைந்துவிட்டாள்
கப்பல் வாங்கப் போனாளோ
சப்பல் வாங்கப் போனாளோ
ஒன்னும் புரியலையே அப்பாவி
நான் இவளை விரும்பும் பாவி
பாவியான மனம்..
இரு உடைமாற்றுகிறேன்
என்று சொல்லி
அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாய்..
உடல் மட்டும் வெளியில்
மனதிலோ
மோதுகிறது அலை..
அலை போல உயிர்க்காதல் தடுமாறுதே - உதிரும்
இலை போல என்னெஞ்சம் நிலை மாறுதே
மலை போல நினைவெல்லாம் உன் பிம்பமே - இனி
மறுபிறவி கண்டாலும் அகலாது நம் பந்தமே
பந்தமே நமக்குள்
இனி
தொட்ரட்டும் என்பதால் தான்
இந்த் ஏழடி...
இருந்தாலும்
நீ என்பின்னால் வருஅதால்
பார்க்க இயலவில்லை..
உன்னைத் திரும்பிப் பார்க்கவும்
இயலாது..
என் கால்களையாவது
உன்னால் பார்க்க் முடிகிற்து..
அது ச்ரி..
நிச்சயம் ஆனதிலிருந்து
எத்தனை எஸ் எம் எஸ்
ஈமெய்ல் அனுப்பினேன்..
எந்த்தனை புகைப்படங்கள் அனுப்பினேன்
ஒன்றிற்காவது ரெஸ்பான்ஸ் செய்தாயா..
முக நூலில் நான் எழுதும்
க்விதைகள் உனக்குப் பிடித்த்ததா இல்லையா..
என் சிறுவயதுப் புகைப்படங்கள் எப்ப்டி..
ம்ம்
நிறையக் கேட்க வேண்டும்..
**
இப்படியா தரதரவென்று இழுப்பார்..
நல்ல முரடு..
காலின் குதிகாலில் லேசாய் அழுக்கு
அவருக்கு..
நன்றாய் தேங்காய் நார் கொடுத்துத்
தேய்க்கச் சொல்ல் வேண்டும்..
வேறென்ன நினைக்க..
மெட்டியில் கொஞ்சம் புடவையின் நூல்
இழுக்கிறது..
சரியாக நடக்க முடியாது..
இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்..
ஹோமகுண்ட்த்துக்கு இவ்ளோ பக்கமாகவா
நடக்கணும்..
*
சரி சரி உட்காருங்கோ..
நினைவு கலைந்து
வந்தாயிற்று நனவுக்கு...
நனவுக்குக் கருணை உண்டோ
கடமையே கண்ணாய் நகருது
கனவுக்கு இல்லை கடிகாரம்
காலம் மறந்து கிடக்கிறது
இரண்டுக்கும் இடையே இன்புற்றிட
கால்கள் மண்ணில் ஊன்றியிருக்க
தலையோ மேகத்தில் மிதக்கின்ற
கலையில் தேர்ச்சி கைகொடுக்கும்
கை கொடுக்கும் இல்லை
கால் கொடுக்கும்..
இரு கால்க்ளால் நின்று
வார்த்தை வராது குரல் கொடுக்கும்
ஏய் விடுறா வர்றேன் என்றால் விலகும்
பின் மெல்ல பின்னால் வரும்..
ஆனால் என்ன ஆயிற்று..இன்று அப்படி
இல்லையே..
வீட்டுக்குள் சென்றால்
ம்க்ன் சொன்னான்
அதற்கு உடம்பு முடியவில்லையாம்
அம்மா டாக்டரிடம் போயிருக்கிறாள்..
கொஞ்ச நேரம் கழித்து
மனைவி திரும்ப
பின்னால் அது..
என்னைப் பார்த்ததும்
வேகமாய் வந்து
வழக்கமாய் செய்வதைச் செய்ய
முகத்தில் மட்டும் கொஞ்சம் சோர்வு..
மனைவி
ஒண்ணுமில்லீங்க.. அது உண்டாயிருக்கு..
ஏய் கள்ளி சொல்ல்வே இல்லையே
அதனிடன் நான் சொல்ல
புரிந்தாற்போல் வாலாட்ட
அதன் முகத்தில் தெரிந்தது
மெலிதான வெட்கமா என்ன..
என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
இல்லை நெருக்கம்
நீளும் தூரம்
நடுவில் திரை
விலக்கத் தடை
கிடைத்தது சுதந்திரம்
பறிபோனது உரிமை
பொருளில்லா உறவு
போராடும் மனது
சத்தமின்றி விலகவோ
சட்டப்படி விலகவோ
இதுதான் முடிவா
இல்லறத்தின் கதியா
இனிக்காத கட்டுப்பாடு
இணங்காத எழுச்சி
எங்கே தவறினோம்
எதனால் இழந்தோம்
கரும்பான நுகத்தடி
இரும்பாக கனக்குதே
பூட்டிய மாடுகள்
தனிப்பாதை தேடினால்
வண்டி எங்கு போகும்
பாரம் என்னவாகும்
என்னவாகும் என்றெல்லாம்
யோசிக்க வைக்க
விடவே மாட்டாள் அக்கா..
படம் பார்க்கும் பொதே
அதோ அந்த சிவத்தவன் இருக்காம்ல
அவந்த்தேன் கொலகாரன்
ரிவ்யூல படிச்சோம்ல் என்பாள்..
எங்களுக்குக் கோபமாய் வரும்...
ஒரு நல்ல நாளில் கல்யாணங்கட்டி
மதுரைக்குப் போச்சு அக்கா..
அப்புறம்
பார்த்த த்ரில்லர் திரைப்படங்கள் எல்லாம்
சுமாராய்த் தான் பட்டது
எனக்கும் என் தம்பிக்கும்..
ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கியில்
அக்கா இருந்துச்ச்ச்சுன்னா
சுவாரஸ்யமா எதாச்சும் சொல்லியிருக்கும்லா..
என்றேன்..
ஆமாம்லா என்றான் தம்பி..
தம்பி இந்த இடத்துக்கு எப்படிப் போகணும்
இது மாதிரி நிறைய உடன்பிறவா அண்ணன்கள்
வாடா வந்து பாரு சண்டியராய் வம்பிழுக்கும்
பதர்கள் தொப்புள்க்கொடி தொடர்பில்லா தம்பிகள்