Quote:
யாதுமாகி நின்றாய்
கிட்டத்தட்ட சினிமாவைவிட்டு 8 ஆண்டுகள் விலகியே இருந்த ரேவதி, இப்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் `யாதுமாகி நின்றாய்' தொடர் மூலம் மீண்டும் திரை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கிரியேட்டிவ் ஹெட்டாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இன்னொரு கிரியேட்டிவ் ஹெட் நடிகை ரோகிணி.
தொடர் பற்றி கேட்டதும் நடிகை ரேவதி உற்சாகமாகி விட்டார். இது மூன்று பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை அவர்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பது பற்றியுமான கதைப்பின்னணி. இது கற்பனைக்கதை என்று சொல்வதை விட, நிஜம் கலந்த கற்பனைக் கதை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
இந்த தொடர் உருவான சூழல் கூட எதிர்பாராதது தான். கடந்த வருடம் ஒரு சேனலில் ஒரு சீரியல் கேட்டார்கள். அதற்காக கதை தயார் செய்ய உட்கார்ந்தபோதுதான் பெண்களின் இன்றைய போராட்டங்களை கதையாக்கும் எண்ணம் வந்தது. எழுத்தாளர் வெங்கி தான் கதை இந்தமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் வரமுடியாமல் போக, `கலசம்'அரவிந்தன், நடிகை ரோகிணி, சுதா வரதராஜன் ஆகியோருடன் கதை விவாதம் தொடர்ந்தது.
கதை என்று வந்து விட்டால் நான் எப்போதுமே பெண்கள் சப்ஜெக்ட் பற்றித்தான் யோசிப்பேன். அந்த வகையில் சமூகத்தில் பொறுப்புள்ள மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சந்திக்க அவர்கள் குடும்பம் உதவியதா என்ற கோணத்தில் கதையை உருவாக்கினோம். கதையின் நாயகிகள் சாரதா, காயத்ரி, துர்கா மூவரும் சமூகத்தில் வெவ்வேறு அந்தஸ்தில் இருப்பவர்கள். இவர்களின் நேர்மையான செயல்பாட்டால் சில பிரச்சினைகளைகளை சந்திக்கநேர்கிறது. அந்த மாதிரியான நெருக்கடி நேரத்தில் அவர்கள் குடும்பத்தினர் அவர்களுக்கு துணை நின்றார்களா? அல்லது கைவிட்டார்களா? எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் போராட்டத்தில் வென்றார்களா என்பது தொடரின் முக்கிய முடிச்சு. மூன்று பெண்களாக ஸ்வர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா நடிக்கிறார்கள்.
நடிகை ரோகிணி இந்த தொடருக்கான டைட்டில் பாடலை எழுதி முதன்முதலாக கவிஞராகியிருக்கிறார். ''
உற்சாகமாகவே சொல்லி முடித்தார் ரேவதி. தொடரின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகை ரேவதியும் நடிக்கவிருக்கிறார். காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா ஆகியோரும் தொடரில் இருக்கிறார்கள்.
மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் சார்பில் சூரியராஜ் குமார் தயாரிக்கும் இந்த தொடரை இயக்குபவர் சரவணன்.
நன்றி: தினதந்தி
Quote:
மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் லிட்' தயாரிக்கும் தொலைக்காட்சி நெடுந்தொடர், 'யாதுமாகி நின்றாய்'. பெண்களின் சமூக வாழ்க்கையை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இத்தொடர், 2009, நவம்பர் 23ஆம் தேதி முதல், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு 'ஜீ தமிழ்' (zee Tamil) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தொலைக்காட்சிப் பக்கம் வந்திருக்கிறார், நடிகை ரேவதி. இவர் நடிகை ரோஹினியுடன் இணைந்து இத்தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட் பொறுப்பில் உள்ளார். ரேவதி இதைப் பற்றி கூறும்போது. "'யாதுமாகி நின்றாய்' வித்தியாசமான கதை என்றெல்லாம் சொல்லி உங்களை நெளிய வைக்க மாட்டேன். ஏனென்றால் வித்தியாசம் என்ற வார்த்தையே அடிக்கடி உச்சரிக்கப்பட்டு, தரம் இழந்துவிட்டது" என்றார்.
மேலும் "எப்பவுமே பெண்களைப் பற்றியே சிந்திக்கிறீர்களே, அது ஏன்?" என்றதற்கு "இது பெண்களைச் சுற்றி வருகிற கதைதான். அதுக்காக ஆண்களைத் தவிர்த்துவிட்டு எடுக்க முடியுமா? ஆண்கள் இல்லாமல் உலகம் ஏது?" என்ற ரேவதி, இத்தொடரில் இடம்பெறும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் உள்ளார்.
மூன்று பெண்களின் வாழ்வில் நடைபெறும் குடும்பப் பின்னணி மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கின்ற குற்றங்களையும், அந்தக் குற்றங்களை வேரறுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் ஒரு திகில் பின்னணியோடு சொல்லும் இத்தொடரில், மூன்று பெண் கதாபாத்திரத்தில் ஸ்வர்ணமால்யா, நீரஜா, ஸ்ரீரேகா ஆகியோர் நடிக்க, சரவணன் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
[html:b9a431735e]<div align="center">http://www.dailythanthi.com/muthucha...91128/Tv04.jpg</div>[/html:b9a431735e]
Quote:
யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ?
பூத மைந்தும் ஆனாய் - காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
போத மாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய்.
இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்?
பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய்.