-
http://i67.tinypic.com/dffu4o.jpg
எம்.ஜி.ஆர் நலம்பெற ஏரி காத்த ராமரை விரதமிருந்து வழிபட்ட ஜெயலலிதா
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...le-264033.html
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் குணமடைய வேண்டி ஏராளமான மக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியிருந்த போது விரதமிருந்து வழிபாடு நடத்தியுள்ளார். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபட்டதாக தனது வாழ்க்கை குறிப்பில் எழுதியுள்ளார்.
1984 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவில் சேர்க்கப்பட்டார். மறுதினம் எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் தாக்கியது. ஒரு பக்க கை கால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீரகப்பிரச்னை வரவே, அமெரிக்காவின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, சத்துணவு உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவிற்கு கட்சிக்குள் நெருக்கடிகள் அதிகரித்தன.
எம்.ஜி.ஆரை பார்க்கவிடாமல் அப்போலோவிலிருந்தே தங்கள் அரசியலை துவங்கியிருந்தது ஜெயலலிதாவின் எதிர் அணி. அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்லும் வரை ஜெயலலிதாவினார் எம்.ஜி.ஆரை பார்க்க முடியவில்லை. இன்றைக்கும் மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்வில் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட உடன் அவருக்காக தமிழக கோவில்களில் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தன. எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதா மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனை ஜெயலலிதாவே குறிப்பிட்டள்ளார். எம்.ஜி.ஆருக்காக வழிபாடு 5.11.1984 ஆம் ஆண்டு தலைவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து என் கண்கள் குளமாகின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களில் ஒருவர் (இந்திரா காந்தி) மறைந்தார். இன்னொருவரான என் தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
அன்று எம்.ஜி.ராமச்சந்திரனுக்காக ஏரி காத்த ராமர் கோவிலில் விரதமிருந்து வழிபட்டார் ஜெயலலிதா. இன்று அவருக்காக தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் வழிபடுகின்றனர். நோயில் இருந்து எம்.ஜி.ஆர் மீண்டு வந்தது போல முதல்வர் ஜெயலலிதாவும் நலமுடன் திரும்பி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்
-
-
-
-
குமுதம் -சினேகிதி இதழ் -13/10/2016
http://i67.tinypic.com/eb35ll.jpg
-
http://i66.tinypic.com/2z7372e.jpg
புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் மீனாட்சி மற்றும் அலங்கார் திரையரங்குகளில் செல்வத்துக்கு மதுரை மக்கள் அமோக வரவேற்பு. இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்கள் திரண்டனர். முதல் காட்சியில் இருந்து கடைசியில் மஞ்சுளாவை ரி்க்க்ஷாவில் தலைவர் அழைத்து வரும் வரையில் புரட்சித் தலைவர் தோன்றும் காட்சிகளில் ஆரவாரத்தால் மதுரை குலுங்கியது. கொண்டாட்ட அலப்பரைகள் விரைவில்..
-
-
-
-
-
-
-
மக்கள் திலகத்தின் "ரிக்க்ஷாக்காரன்"
திருப்பூரில் சூர்யா மற்றும் ஜோதி திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.
-
மக்கள் திலகத்தின் '' ரிக்ஷாக்காரன் '' டிஜிட்டல் வடிவில் நேற்று வெளிவந்தது ..
முறையான திட்டம் சரியான விளம்பரங்கள் , திரை அரங்கு நிர்ணயம் என்று எதுவுமின்றி விநியோகஸ்தர்கள்
செய்த தவறுகள் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது .
'' ரிக்ஷாக்காரன்'' மிகவும் சிறப்பான முறையில் உருவேற்றம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்துள்ளது .மக்கள் திலகத்தை அகன்ற திரையில் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் இசையில் காணும்போது
45 ஆண்டுகள் முன்பு எத்தகைய வரவேற்பை பெற்றதோ அந்த அளவிற்கு மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது பெருமையாக உள்ளது .
-
நடிகர் திலகத்தின் பிறந்த நாளுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
-
அக்டோபர் -1972
ஒரு சரித்திர நாயகனின் புதிய சகாப்தமும் அந்த நாயகனின் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணங்களும் எதிர்கால வரலாற்றை உருவாக்க வித்திட்ட மாதம் ''அக்டோபர் 72 என்பது மறக்க முடியாத உண்மை .
பாரத் எம்ஜிஆர் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சி நடிகர் எம்ஜிஆர் என்ற புகழின் உச்ச நிலையாக ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பட்டம் கிடைத்த மாதம் அக்டோபர் -72
திரை உலகத்தில் தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கி அந்த இமேஜை கடைசி வரை தக்க வைத்து கொண்டு மக்கள் மனதில் இன்று தெய்வமாக நிலைத்து விட்டார் .அதற்கு காரணம் அக்டோபர் -72 தந்த பரிசு '''அண்ணா திமுக ''
மக்கள் திலகம் எம்ஜிஆர் சந்தித்த சோதனைகள்
எம்ஜிஆரின் படங்கள் செய்திகள் இருட்டடிப்பு
எம்ஜிஆரின் பட தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடிகள் - மிரட்டல்கள்
எம்ஜிஆர் படத்தை திரையிட்ட அரங்கங்களுக்கு மிரட்டல்
எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மீது தாக்குதல்கள்
இவற்றை எல்லாம் கண்டு எம்ஜிஆர் கலங்க வில்லை . அவரின் உண்மையான ரசிகர்கள் துவண்டு விடவில்லை .புலம்ப வில்லை .எம்ஜிஆர் எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் ராணுவ வீரர்கள் போல் செயலில் இறங்கி பணி யாற்றினார்கள் .வெற்றி மேல் வெற்றி கண்டார்கள் ,
எம்ஜிஆரின் சாதனைகளுக்கு , நடிப்பிற்கு , வளர்ச்சிற்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் செயல் பட்ட அன்றைய அதிகார வர்கத்தின் அநாகரீக செயல்கள் ,மேல்தட்டு என்று கூறும் சில படித்த மேதாவிகளின் புலம்பல்கள் எல்லாம் மக்கள் மன்றத்தில் அன்றும் எடுபடவில்லை . இன்றும் எடுபடவில்லை .
மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள் , அரசியல் சாதனைகள் , மனித நேயத்தின் மாண்புகள் எல்லாம் மக்களால் என்றென்றும் மறக்க முடியாத அழிக்க முடியாத காலப்பெட்டகமாக திகழ்கிறது .இதற்கு முக்கிய காரணம் அக்டோபர் 1972 . மறக்க முடியுமா மக்கள் திலகம் அவர்களின் தீர்க்க தரிசனம் .
-
-
தினத்தந்தி -01/10/2016- ஏ .வி.எம்.சரவணன் பேட்டி
http://i63.tinypic.com/2z3ov0i.jpg
-
இந்து ஆங்கில நாளிதழ் -17/08/2016 அன்று பிரசுரமான விளம்பரம் .
பெரியவர் திரு.சக்கரபாணி அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம் .
http://i64.tinypic.com/2j5yy4k.jpg
-
-
-
-
-
-
-
-
அபிராமி மெகா மாலில் வைக்கப்பட்டுள்ள பேனர் .
http://i65.tinypic.com/k389wj.jpg
-
தேவி பாரடைஸ் அரங்க வாயிலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு பேனர்கள் /சுவரொட்டிகள்
http://i67.tinypic.com/es5isp.jpg
-
-
-
-
முதல் நாள் (30/09/2016) தேவி பாரடைஸ் நுழைவு வாயிலில் பக்தர்கள் /ரசிகர்கள்
ஆரவாரத்துடனும், மிகுந்த எழுச்சியுடனும் திரைப்படத்தை காண திரண்டு
வந்த கூட்டம் .
http://i68.tinypic.com/20h9hqo.jpg
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
சென்னையில் ரிக்க்ஷாக்காரன் வெளியீடு படங்களை பதிவிட்டதற்கு நன்றி.
-
-
http://i68.tinypic.com/64ldg3.jpg
எப்போதும் ஏற்றம். எப்போதும் ஏறுமுகம். அது ஆசைமுகம்.
-
-
-
-
-