மதுண்ணா எம்.எல்.வியின் தாலாட்டு பாடல் அருமை
நன்றி
Printable View
மதுண்ணா எம்.எல்.வியின் தாலாட்டு பாடல் அருமை
நன்றி
எப்படியோ இருந்த கோபாலை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த பெருமை ''சிரிப்பிற்கு ''உண்டு .
கொஞ்சம் சிரிங்க பாஸ்
ராஜேஷ் சார்,
'இன்றைய ஸ்பெஷலை'க் கண்டிப்பாகப் பாருங்கள். உங்களுக்காகவே தயாராகிறது.
ஹாய் ஆல் குட்மார்னிங்க்..
ஜஸ்ட் ஒரு ப்ரசண்ட் சொல்றதுக்கு வந்தேன்..ஆமாம் ராத்திரி 55 இப்போ 63 ஒரே ராவுல 8 பெக்கமா; சாரி 8 பக்கமா..
இருப்பினும் தனுஜா கொடுத்த்மைக்கு வாசு சாருக்கு நன்றி
//தனுஜா ஒரு செயின் ஸ்மோக்கர். (அப்படியே சி.க. கேட்பதற்கு முன்னாடியே அவருக்குப் பிடித்த வயதான படத்தையும் போட்டாச்சு// எனக்குப் பிடிச்சன்னு நான் எங்க சொன்னேன்..
ஜெயந்தியின் படங்களைக் கொடுத்த எஸ்.வி சாருக்கு நன்றி..
மத்தபடி ராகவேந்தர் சாரோட பொங்கும் பூம்புனல், மதுண்ணாவோட பாட்ஸ் ராஜேஷோட ரைடப்ஸ், கோபாலின் போஸ்டிங்க்ஸ் மன்னிக்க இண்ட்ரஸ்டிங்க் போஸ்டிங்க்ஸ் (ஏதாவது கோச்சுக்கிட்டாருன்னா..அதான் உஷாரா சொல்லிட்டேன்) .(ஹிந்திப் பாட்டுக் கேட்டல் அண்ட் அதர் சாங்க்ஸ் போஸ்ட் போண்ட் டு ஃப்ரைடே) எல்லாத்துக்கும் நன்றி
படிச்சுட்டு மீண்டுவர்றேன்..:)
இன்றைய ஸ்பெஷல் (57)
'இன்றைய ஸ்பெஷலி'ல் நான் மிக மிக மிக அனுபவித்துத் தரும் பாடல் இது. எனக்குப் பிடித்த பி.சுசீலா அவர்களின் டாப் 5 இல் இடம் பிடித்த பாடல். பைத்தியம் பிடித்து அலைவேன் இந்தப் பாடல் என்றால். இன்றைய ஸ்பெஷல் 50- அவது சிறப்புப் பதிவாக பதிவிட நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மையால் மிஸ் ஆகி விட்டது.
http://www.thehindu.com/multimedia/d...t_1577005e.jpg
படம்: அடுத்த வீட்டுப் பெண் (முழு நீள காமெடி)
ஆண்டு: 1960
நடிகர்கள்: டி.ஆர். ராமச்சந்திரன், அஞ்சலிதேவி, ஏ.கருணாநிதி, தங்கவேலு, 'பிரண்ட்' ராமசாமி, சட்டாம்பிள்ளை, பக்கிரிசாமி, (முக்கியத்துவம் கொடுத்து தனியே டைட்டிலில் போடுவார்கள்) எம்.சரோஜா, முத்து லஷ்மி
ஒளிப்பதிவு: நாகேஸ்வரராவ்
தயாரிப்பு பேனர் : அஞ்சலி பிக்சர்ஸ்
தயாரிப்பு, இசை: ஆதி நாராயணராவ்.
இயக்கம்: 'வேதாந்தம்' ராகவய்யா
பாடலென்றால் சாதாரணப் பாடல் அல்ல. சக தோழியருடன் அழகுப் பெட்டகம் அஞ்சலிதேவி மாடர்ன் உடை அணிந்து சைக்கிளில் பயணித்துக் கொண்டே பாடும் உல்லாச இன்பப் பாடல். இனிமை வண்டி வண்டியைக் கொட்டிக் கிடக்கிறது இந்த சைக்கிள் வண்டிப் பாட்டிலே.
என்ன வளமையான, தெள்ளத் தெளிவான, உலகில் உள்ள எல்லா குரல்களுக்கும் முதன்மையான, முழுமையான குரல் இசை அரசியினுடையது! அப்படியே கல்கண்டாக, தேனாறாக, அமிர்தமாக
காதில் பாய்ந்து கோலோச்சுகிறது இவர் குரல்!.
'அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா'
என்று ஒவ்வொரு முறையும் அவர் ஹம்மிங் செய்யும்போது சொர்க்கம் வரை சென்று சென்று வந்து விடுவோம். வார்த்தைகள் வர்ண ஜாலமாய் ஜொலிக்கிறது இந்தத் தங்கக் குரல் கொண்ட அதிசயப் பெண்மணியால். பாடகிக் கண்மணியால்.
படப்பிடிப்பு அருமை. படம் டைட்டில் முடிந்தவுடன் இசையரசியின் இனிமையான குரலோடு, அஞ்சலி தேவியின் சைக்கிளோடு சேர்ந்து நாமும் பயணிக்க ஆரம்பித்து விடுவோம். உற்சாகம் கரை புரண்ட காவேரியாய் நம் மனதில் பெருக்கெடுத்து ஓடும். சைக்கிள் பெல்களின் டிரிங் டிரிங் சப்தத்துடன் பாடல் துவங்கும். அஞ்சலி ஹீரோயின் என்பதால் முன்னால் அவரை சைக்கிள் ஓட்ட வைத்து விடுவார்கள். எம்.சரோஜா உள்ளிட்ட அஞ்சலியின் தோழிகள் அவரைப் பின் தொடர்ந்து வருவார்கள். (எம்.சரோஜா கொஞ்சம் முன்னாடி வருவார்). தோழியரின் கோரஸ் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி பாடல் துவங்கும்.
அஞ்சலி தலைமுடியின் வலது பக்க ஜடை கழுத்தின் முன்னால் புரள, இடது பக்க ஜடை முதுகில் ஒய்யாரமாக இருக்கும். காதுகளில் ஜிமிக்கி தோடுகள் அட்டகாசமாய் இருக்கும் இவருக்கு. இவரது சில ஷாட்களை தனியேவும், தோழியர் காட்சிகளைத் தனியேவும் எடுத்திருப்பார்கள். அஞ்சலி நிஜமாகவே சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருவார். ஸ்க்ரீன் ப்ரொஜெக்ஷன் சீன் அவ்வளவாக இருக்காது. நேச்சுரலாக சைக்கிள் ஓட்டியபடி காட்சிகள் அதிகம் இருக்கும். அழகான பூங்காவை சைக்கிளில் சுற்றியபடி வலம் வருவார்கள். பின் சாலையில் சைக்கிள் பயணம் தொடரும்.
பாடலின் மூன்றாவது சரணத்தில் சைக்கிளில் வேகம் அதிகம் எடுப்பார்கள் அந்தப் பாடலின் வரிகளுக்கேற்ப ('பட்டம் போலே வேகமாய் பறந்து செல்லுவோமே')
ஒரு பிகர் தலையில் கர்சிப் கட்டி கூலிங் கிளாஸ் அணித்ந்து அட்டகாசமாய் இருக்கும். (கோபால் கவனிக்க) பாடலின் முடிவில் தோழியர் ஒவொருவரும்
வஹ்வவ்வாஹ்வவா வவவவ்வவ்வாஹ்
வஹ்வவ்வாஹ்வவா வவவவ்வவ்வாஹ்
(அப்பாடி! இதை டைப் அடிப்பதற்குள் நான் பட்ட அவஸ்தை!)
என்று குரல் கொடுத்துக் கொண்டு வருவது செம ஜோர்.
பாடலின் கடைசி வரை அஞ்சலியின் இரட்டை ஜடைப் பின்னல் ஒன்று முன்னாலேயும், ஒன்று பின்னாலேயும் இருக்கும். மாறாவே மாறாது. அந்த அளவிற்கு பாடலின் காட்சிகளில் கண்டின்யூட்டி கெடாமல் கண்கொத்திப் பாமபாய்ப் பார்த்து கவனித்துச் செதுக்கியிருப்பார்கள்.
எத்தனயோ சைக்கிள் வண்டிப் பாடல்கள் உண்டு. அதில் 'வந்த நாள் முதல்' பாடலையும், 'இன்றைய ஸ்பெஷல்' பாடலையும் அடித்துக் கொள்ள எந்தக் காலத்திலேயும் தமிழில் பாடல்கள் இல்லை. (வினோத் சார்! 'பணக்காரக் குடும்பத்தை'த் தேட வேண்டாம்)
'இன்றைய ஸ்பெஷலி'ல் நான் அனுபவித்துப் போட்ட பாடல் இது.
http://i1.ytimg.com/vi/KAlOJAbuZc0/0.jpg
இனி பாடலின் முழு வரிகள்.
ஹஹஹஹாஹஹா ஹஹஹஹஹா
ஹஹஹஹாஹஹா ஹஹஹஹஹா
ஹோய்
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
பாரிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
ஓ ஓ ஓ வண்டுகளும் ஜோராய்
அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா
பாரிலே பூவிலே காணும் இன்பம் பாராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
ஓ ஓ ஓ வண்டுகளும் ஜோராய்
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே
(கோரஸ்)
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
சோலைக்குயில் மாலையில் இன்னிசையும் பாட
நீலமயில் ஆவலுடன் தோகை விரித்தாட
ஓ ஓ ஓ தோகை விரித்தாட
அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா
புள்ளி மான்கள் அங்கும் இங்கும் துள்ளித் துள்ளி ஓட
பொங்கும் கதிரவன் தங்கத் தகடாய் பூவாரம் போல் கூட
ஓ ஓ ஓ பூவாரம் போல் கூட
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே
(கோரஸ்)
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
வட்டம் போடும் சிட்டுகளும் வானகத்தில் நாமே
பட்டம் போலே வேகமாய் பறந்து செல்லுவோமே
பறந்து செல்லுவோமே
அஹ்ஹஹாஹஹா ஓஹ்ஹஹ்ஹோஹோஹா
அஹ்ஹஹ்ஹாஹஹா ஹஹ்ஹஹ்ஹா
சிட்டு போலே உல்லாசமாய் ஓடி ஆடுவோமே
இன்னல் தீர நாமே இன்ப கானம் பாடுவோமே
இன்ப கானம் பாடுவோமே
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே
கன்னித் தமிழ் மணம் வீசுதடி
காவியத் தென்றலுடன் பேசுதடி
(கோரஸ்)
http://www.youtube.com/watch?v=ehT_v...yer_detailpage
Adutha veetu penn arumai vasu Ji
Morning detaileda ezhudhuren