http://i63.tinypic.com/1z4lpmq.jpg
Printable View
தினத்தந்தி -8/3/19
http://i63.tinypic.com/a0dkzm.jpg
மாலைமலர் -8/3/19
http://i64.tinypic.com/2u72dza.jpg
இன்று முதல் (8/3/19) கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை "தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/t8t176.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
தினத்தந்தி -9/3/19
http://i63.tinypic.com/2gvr6dw.jpg
அழைக்கின்றோம்
அரும்பெரும் விழாவிற்கு.....
*************************
எந்த களம் என்றாலும்
அக்களத்தில்,
தற்பெருமை தகடுகளை தவிடு பொடியாக்கி,
தன்னிகரில்லா தங்கத் தலைவராக வென்று தரணியாண்ட ,
தூயத்தலைவர்....
கொடைவள்ளல்,
வாழும்தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 102வது மனிதநேயம் பிறந்த விழாவை முன்னிட்டு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " நடத்தும் " புரட்சித்தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019 " விழா பெங்களூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (10:03:2019) யன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை CKC கார்டன் 1வது (திறந்த வெளி) வீதியில் நடை பெறுகிறது.
விழாவில் மலேசியா மேகநாதனின் பொன்மனச்செம்மல் கலைக்குழுவினர் வழங்கும் மாபெரும் இசை மழையில்...
காலத்தால் அழியாத காவிய நாயகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958,68,78ல் வெளிவந்த திரைப்படங்களின், பாடல்கள் மட்டும் பாடி அசத்த வருகிறார்கள்.
(திரு. மேகநாதன் கலைக்குழுவினர் பெங்களூரில் இசை விருந்து படைப்பது 3வது முறை என்பது குறிப்பிட தக்கது)
இந்த புனித விழாவில் வெளியூர்களிலிருந்து வருகை தருவோர் முன் கூட்டியே திரு. சம்பங்கி GSR (ஆனந்தபுரம்), திரு. ராஜசேகர் (காக்ஸ் டவுன்) , திரு. பிரகாஷ் (கே. எஸ். கார்டன்) இவர்களிடம் வருகை பதிவு செய்தவர்கள், தயவுசெய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக) கொடுக்கவும்.
விழா மேடையில்... சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவரும், பேங்க் ஆப் பரோடாவில் பணி ஓய்வு பெற்றவரும்....
இணையத்தில் (திரி) வள்ளல் மகான் எம்ஜிஆரின் பதிவுகளை (குறுகிய காலத்தில்) 25,000 பதிவிட்டு அபார சாதனை நிகழ்த்திய திரு. ஆர். லோகநாதன் அவர்கள் விழா மேடையில் கௌரவிக்கப் படுகிறார்கள்.
இந்த மாபெரும் சரித்திர சாதனை விழாவிற்கு மலேசியா நாட்டிலிருந்து, டாக்டர் நெல்சன் முருகன் அவர்களும், சவூதி அரேபியா நாட்டிலிருந்து கடல்ராஜா அவர்களும்,
மற்றும் நடிப்புக்காக...விளம்பரத்துக்காக...உதவிக்கரம் நீட்டாமல் கொடைவள்ளலின் கொள்கை வழியில், நாள்தோறும் தன்னை நாடி வரும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி ஆதரவளித்து வரும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற , கருணைத்தாய் "கீதம்மாநாயக் " (திருநங்கை) அவர்களும் சிறப்பு வருகை தருகிறாரகள்.
கர்நாடக மாநில அ. தி. மு. க. முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னிலையில்... நமதுதெய்வம் எம்ஜிஆரின் தீவிர பக்தர்கள், தொண்டர்கள் நாமெல்லாம் ஒன்றுகூடி கொண்டாடும் இவ்விழாவிற்கு திரைத்துறை சார்ந்தவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவது திரு. ஏழுமலை (ராஜகோபால் கார்டன்) அவர்கள்.
சிறப்புரை வழங்குவோர்கள்....
முன்னாள் மாநகர உறுப்பினர் திரு.
(மம்தா) சரவணன(அல்சூர்) திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா,
மு. தமிழ்நேசன், காங்கிரஸ் பிரமுகர் திரு. சண்முகம், கர்நாடக கன்னடர் -- தமிழர் கூட்டமைப்பு குடும்பம் திரு. செந்தில்குமார் BNR ,
வாழ்த்துரை வழங்குவோர்கள்....
திரு. எம். ராஜா (சிக்பேட்டை தொகுதி முன்னாள் வட்டத் தலைவர் அ. தி. மு. க.)
திரு. எ. டாணியல் (பந்தல் அலங்கார சிறப்பாளர்)
திரு. க. ராஜசேகர் (மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் -- காக்ஸ் டவுன்)
திரு. எட்வின் குமார்
திரு. வெள்ளையதேவன் அவர்கள்.
வரவேற்ப்புரை திரு. சம்பங்கி GSR அவர்கள்,
நன்றியுரை திரு. என். பாஸ்கரன் அவர்கள். விழா ஏற்பாடு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "
விழா மேற்பார்வை....
திரு. சம்பங்கி GSR / திரு. பிரகாஷ் / திரு. ராஜசேகர்
விழா குழுவினர்....
ஆர். சீனிவாசன், அண்ணியப்பன்,
வடிவழகன், சௌந்தர், லால்பாக் மணி, மாயா, எஸ். முருகா, வீரா, கர்ணா, செந்தில், எஸ். ரஜினி வேலு, ஜே. ராஜூ, எஸ். வி. செல்வம், லஷ்மி, பெருமா, பூங்கா, அமுதா, முபீனா மற்றும் பலர்
வாருங்கள்....
சேருங்கள்....
ஒன்றுக்கூடி புனிதக் கடவுள் எம்ஜிஆரின் புகழ் பாடுவோம்.
இவன் :
எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி
9900902321
சம்பங்கி GSR
9731185524
ராஜசேகர்
9880825975
டி. பிரகாஷ்
9964466361
குறிப்பு :
பெங்களூரில் விளம்பர பேனர், போஸ்டர், நோட்டீஸ் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளதால் முடிந்தவரை fwd செய்யவும் 🙏............ Thanks wa.,
வாழ்த்துக்கள் 💐
********************
மக்கள் திலகத்தின் மாண்பு காக்கும் மாணவனும் ,
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற (காக்ஸ் டவுன் --பெங்களூர்) த்தின் தலைவருமான புன்னகை பூமுகம் கொண்ட பாசமிகு சகோதரர் திரு. க. ராஜசேகர் அவர்களின், "அகவை திருநாள் 55" இந்த நன்னாளில்....
புரட்சித்தலைவரின் பூரண நல்லாசியுடனும், நீண்ட ஆயுள் பலத்துடனும் வாழ,
எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆரை வணங்கி வழி படும் நேரத்தில், பெங்களூரில் தொய்வின்றி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு தோறும், ஏழைகளை நேசித்த அரும் பெரும் தங்கத் தலைவரின் திருப்பெயரில் இயங்கி இயங்கிக் கொண்டிருக்கும் "அமுத சுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "யின் ஒட்டு மொத்த உழைப்பாளிகளின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.
மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்....
என்றும் வணங்கும் தூயக்கடவுள் எம்ஜிஆரின் காலடி நிழலில் கானா க. பழனி மற்றும் நிர்வாக பெருமக்கள்.
💐💐💐💐💐. ... Thanks wa.,
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஒரு வசனம்..
மிஸ்டர் பைரவன் 10 கோடி டாலர் உங்களுக்கு பெரிசு. ஆனால் இந்த உலகத்தில் உள்ள ஒரு தனி மனித உயிர் எனக்கு அதை விட பெரிசு..
இந்த வசனத்தை தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காலம் முழுவதும் கடை பிடித்திருப்பார். சினிமாவிலும் சரி, (சமுதாய படங்களில் தன்னை கொல்ல வரும் எதிரியைக்கூட கொல்ல மாட்டார்) தனது சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி இந்தக் கொள்கையில் இருந்து அவர் அணுஅளவும் மாறவில்லை..
இனிய காலை வணக்கம் உறவுகளே..... Thanks wa.,
தலைவரின் படங்கள் பல பிலிமில் இல்லை. நெகடிவ் இல்லை. இருக்கும் நெகடிவ் படங்களை க்யூப்பிற்கு மாற்ற முயல்வதில்லை. குறிப்பாக அன்பேவா.. ஏவிஎம் நினைத்தால் க்யூப்பிற்கு கொண்டு வரலாமே? படகோட்டி..... உரிமை வைத்திருப்பவரிடம் பலர் கேட்டும் திரைக்கு கொண்டுவர முடியவில்லை. மலைக்கள்ளன் காவியம் பிலிமில் மதுரை ஏரியாவில் திரையிடப்பட்டாலும் கோவையில் திரையிட முடியவில்லை. முகராசி கோவையில் மட்டுமே பிரிண்ட் உள்ளதாம். நீரும் நெருப்பும் கோவையில் தரமான பிரிண்ட் இருந்தும் திரையிட முடியாத நிலை. வழக்கு, ரைட்ஸ், அதிக விலை என பல பிரச்சினைகளில் பிரிண்ட் இருந்தும் குடோனில் முடங்கி கிடக்கின்றன. இதுஒருபுறமிருக்க தலைவரின் ஆரம்பகால படங்கள் பல DVD யில் உள்ளன. குறிப்பாக மர்மயோகி, மந்திரிகுமாரி, மருத நாட்டு இளவரசி. அவற்றை சிறிய புரஜக்டரில் மட்டுமே போட்டு பார்க்க முடிகிறது. தியேட்டரில் போட்டுப்பார்க்க இந்த DVD படங்களை இன்றைய தொழில்நுட்ப வசதி உதவாதா? நிச்சயம் வழி இருக்கும். கருப்பு வெள்ளை படங்களை ஆந்திரா, கர்நாடகாவில் தத்ரூப வண்ணத்தில் மாற்றி உள்ளனர். தமிழில் சிலர் முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். 2014 ல் மறு வெளியீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை தியேட்டர் கிடைக்காமல் உள்ள உலகம் சுற்றும் வாலிபனை மே மாதமாவது திரையிட தியேட்டர் கிடைக்குமா என தெரியவில்லை. தலைவர் திரையுலகை விட்டு விலகினாலும் 1978 லிருந்து 2019 வரை புதிய படங்கள் வியாபாரத்தை தியேட்டர்களை வாழவைப்பது தலைவர் காவியங்கள்தான். குறிப்பாக 1954 ல் வந்த தலைவர் காவியம் இன்றுவரை திரையிடப்படுகிறது என்பதே சாட்சி. இப்படி இருக்க தலைவர் காவியத்தை அழிய விடாமலும் நெகடிவ் இல்லாத DVD யில் மட்டுமே புழக்கத்தில் உள்ள காவியங்களை அதிநவீன தொழில்நுட்ப உதவி கொண்டு கியூப் முறையில் திரையிடவும் இப்போது தியேட்டர்களில் திரையிடப்பட்டு வரும் சுமார் 50 படங்களை அனைத்து மாவட்டங்களிலும் திரையிடவும் முயற்சி எடுக்கவேண்டும். இதில் மேலே சொன்ன 3 பிரச்சினைகள் எழுமாதலால் உரிமை வைத்துள்ளவர்களிடம் பேசும் அதிகாரம் படைத்தவர்களை அணுகுவோம். இது நடக்கிற காரியமா என பேசுபவர்கள் தயவுசெய்து ஒதுங்கிவிடுங்கள்.இப்பக்கூட தலைவரின் புகழை பரப்ப முன்வந்து தொண்டு செய்துவரும் அவரால் பயன்பெற்ற ஒருசில பெரியவர்கள் உள்ளனர்.அவர்கள் மூலம் கோரிக்கை வைப்பதையே மிகப்பெரிய செய்தியாக்குவோமே? தலைவர் பக்தர்கள் பெரும்கூட்டமாக ஓரணியில் திரண்டு கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்வு ஒன்றை சென்னையில் நடத்தலாமே? ஆங்காங்கே தலைவர் பிறந்தநாள் விழாவில் நமது நண்பர்கள் பல ஆண்டாக இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்றாலும் இனி ' தலைவர் காவியங்களை காப்போம்' என்ற ஒற்றை முழக்கத்தை முன்எடுத்துச்செல்வோம். சென்டிரல் ரெயில் நிலைய பெயர் மாற்றம் வெற்றி போன்று இதையும் வெல்வோம். தலைமை தாங்குவது யார்? எதிர்பார்ப்புடன் உங்கள் உடன்பிறப்பு சாமுவேல்.( அரசகட்டளை, காவல்காரன், மாட்டுக்காரவேலன், இதயக்கனி, தாய்சொல்லைத்தட்டாதே உள்ளிட்ட ஒருசில காவியங்கள் டிஜிட்டலில் வரும் என்பது ஆறுதலான விஷயம். ஏற்கனவே டிஜிட்டலில் வந்துள்ள ரிக்சாக்காரன், நாடோடிமன்னன், அடிமைப்பெண், தர்மம் தலைகாக்கும், நினைத்ததை முடிப்பவன், எங்கவீட்டுப்பிள்ளை, ரகசிய போலீஸ்115 ஆகிய காவியங்களை இன்னும் தரமான ஒரிஜின் ஒலிஒளி தரத்தில் மெருகேற்றி திரைக்கு கொண்டு வரவேண்டும்...ஆயிரத்தில் ஒருவனைப்போல...ஆயித்தில் ஒருவனில்கூட நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும்.............. Courtesy: Samuel...
புரட்சி தலைவர் காவியங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு கொண்டிருக்கும் படைப்புகள் மதுரைவீரன், நாடோடி, நம்நாடு, மீனவநண்பன், ஆசைமுகம், குடும்பதலைவன், நான் ஆணையிட்டால் என செய்திகள் தெரிவிக்கின்றன...
அன்புள்ள தலைவர் பக்தர்களுக்கு ஒரு அரிய தகவல்.தலைவருடன் பயணித்தவர்களுக்கு இந்த செய்தி தெரியும்.ஆனால் அரசுகட்டில் இருக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை எனில் அறிந்து நெல்லை தூத்துக்குடி பக்தர்களின் கோரிக்கையை தலைமைக்கு வலியுறுத்தி நியாய வழிகளில் ராயப்பேட்டை அ.தி
மு.க தலைமை அலுவலகத்துக்கு 'ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை' என பெயர் சூட்டிட ஒட்டு மித்த குரலை கொடுக்கும்படி வேண்டுகிறோம்.:
நம் தலைவர் கடசியை நிர்வகிக்கும் காலத்தில் 1987 வரை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையக மாத வாடகையாக ரூபாய் 12,500 தலைமைக்கழக பொருளாளர் மாதவன் அவர்கள் அன்னை ஜானகி அம்மையாருக்கு வழங்கி வந்தார்.ஏனெனில் அந்த சொத்து அன்னை ஜானகி அம்மையாருக்கு சொந்தம்.அப்போது ப.உ. சண்முகம் பொதுச்செயலாளர்.தலைவர் நிறுவனர்.இது தான் நிலை.பின்னர் தலைவர் அன்னை ஜானகி அம்மையாரிடம் கோரிக்கை வைத்து,இந்த வாடகைப்பணம் நமக்கு வேண்டாம்.எனவே அந்த சொத்தை கழகத்திற்கு தானமாக வழங்கிவிடு என கேட்டுக்கொண்டார்.அதன்படி அன்னை ஜானகி அம்மையார் அந்த சொத்தை கழகத்துக்கு தானமாக வழங்கினார்.அதனால் தான் நாங்கள் அந்த தலைமைக்கழகத்துக்கு ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட கோரிக்கை விடுகிறோம்.நியாயம் தானே.ஆனால் ஒருமுறை மதுரை அமைச்சர் ஒருவர் தலைமைக்கழகத்துக்கு அம்மையார் பெயர் சூட்டும்படி கோரிக்கை வைத்தார்.யார் சொத்துக்கு யார் பெயர் வைப்பது ?
எனவே பக்தர்களே,கழக தொண்டர்களே,நிர்வாகிகளே இந்த கோரிக்கை நியாயமான ஒன்று.பெயர் சூட்ட ஒட்டுமொத்த குரலை கொடுங்கள். இத்துடன் எங்களது கோரிக்கை படத்தையும் இணைத்து பதிவிடுகிறோம்.
நெல்லை.எஸ்.எஸ்.மணி........ Thanks wa.,
ஆண்டவன்கட்டளையை அரசகட்டளை வெல்லமுடியுமா என்று கேட்டவர்களை ஒட.ஓட விரட்டியடித்து ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் எங்கள் புரட்சித்தலைவரின் சாதனைகளைத் தடுக்கவுமமுடியாது முறியடிக்கவும் முடியாது வாழ்க எங்கள் தானைத்தலைவன் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் மதுரை.எஸ் குமார்..... Thanks wa.,
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரி (இணைய தளத்தில் )25000 பதிவுகள் என்கிற அரிய சாதனை கடந்து பயணிக்கிறேன் என்பது தங்கள் கவனத்திற்கு. எந்த ஒரு நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் நடவாத நிகழ்வு. அந்த வகையில் நமது மக்கள் தலைவர் இதிலும் முதல்வரே என்பது பெருமைக்குரிய செய்தி...... Courtesy: Loganathan...
மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!
நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்
ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..
நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது
மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...
ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.
எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.
எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.
135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.
எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.
எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.
எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.
ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.
அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?
'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.
எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.
அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.
முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.
இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?
52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.
இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.
அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.
'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.
ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.
சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.
’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?
சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.
கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.
எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.
நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.
அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.
எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.
அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.
எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.
படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.
அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.
இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா
ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...
புரட்சித்தலைவர்
மறுபதிவு....... Thanks wa.,
அமரா எம்.ஜி.ஆர்
உயிர் வாழ்கிறவர்களும், ஜீவனைக் கொடுப்பவர்களும், அவருடைய ஞானத்தினாலும், உட்பார்வையினாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். ஜீவனைக் கொடுக்கும் பிரிவை சார்ந்தவர். எம்.ஜி.ஆர் மனிதகுலத்தின் இதயத்திலும் மனதிலும் உயிருடன் இருக்க முடியும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தவராகவும், மரணத்திற்குப் பிறகும் கூட உயிருடன் இருக்கமுடியும் என்று எங்களுக்குக் கற்பித்தார்.
எம்.ஜி.ஆர். மக்களோடு உணவு உண்ணுதல், கலந்துரையாடுதல் /அவர்களுடன் சமமானவராக பணிபுரிதல் என்று தான் விரும்புவதை செய்தார்.
எம்.ஜி.ஆர் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள்/இந்திய நாட்டின் பிரதமர்கள் இதயங்களையும் தனது நெறிவழியால் வென்றார். அவர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை ஒரு எளிய முறையிலேயே தீர்த்து வைத்தார் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக தனது முயற்சிகளையும் சக்தியையும் அர்ப்பணித்தார்.
அவரது மதி நுட்பம் மற்றும் அவரது பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட இதயங்களை கவர்ந்தார். இந்த அனுபவத்தின் ஞானத்தின் மூலம் இவையெல்லாம் அவரை அடைந்தன.
எம்.ஜி.ஆர் எதையும் எதிர்பார்த்து கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு வழங்கிய நன்கொடை அவர் எல்லோருக்கும் தெரிந்து வழங்கியதை விட மிக மிக அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் நேர்மையுடன் செய்தார்.
எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரது மறக்க முடியாத மாண்பு மூலம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தை தொடர அவரை ஒரு "திசைகாட்டியாக/கலங்கரை விளக்கமாக" பயன்படுத்துகின்றனர்.
எம்.ஜி.ஆர் ஒருபோதும் இறந்து போவதில்லை [நிழலிலும் நிஜத்திலும் ]. ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தவர் என்றும் இறக்க மாட்டார்...... Thanks fb.,
இரட்டை தலைமை அதிமுக ஆட்சியாளர்களிடமிருந்து எம்ஜிஆர் பக்தர்கள் எதிர்பார்க்கும் முக்கிய கோரிக்கைகள் .
1. எம்ஜிஆர் உருவப்படத்தை சிறியதாக போட்டு அவமானம் செய்யாதீர்கள் .
2. எம்ஜிஆர் விரும்பாத வாரிசு அரசியல் வேண்டாம் .
3. எம்ஜிஆர் முழு உருவத்தை இனி வரும் காலங்களில் அதிமுக அரசு மற்றும் கட்சி விளம்பரங்களில் .அச்சிடவும்
4. எம்ஜிஆர் பெயரில் டிவி துவங்கிட வேண்டும் .
5. எம்ஜிஆர் பெயரில் நூலகம் திறந்திட வேண்டும் .
6. எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் காப்பாற்றப்பட வேண்டும்
7. எம்ஜிஆர் படங்கள் நல்ல திரை அரங்கில் குறைந்த கட்டணத்தில் வெளியிட அரசு முன் வர வேண்டும் .
8. எம்ஜிஆரின் கொள்கைகள் காப்பாற்றப்படவேண்டும் .
9. எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளின் சிறந்த ஆலோசனைகளை கேட்க வேண்டும் .
10. எம்ஜிஆர் பெயரில் சட்ட மன்ற தொகுதி உருவாக முயற்சிக்க வேண்டும் ........... Thanks Friends Groups...
புரட்சித்தலைவர் பாடல் பாடமால் எந்த நிகழ்ச்சியும் முழுமை அடைவதில்லை. இதில் ஈஷா யோக மையம்"மஹாசிவராத்திரி" என்ன விதிவிலக்கா?
உண்மை சொல்லவேண்டும் என்றால் "குறிப்பிட்ட" பல புரட்சித்தலைவர் பாடல்களை கோயில்களிலும் ஒலிபரப்பு செய்யவேண்டும். பக்தி மட்டும் போதாது நல்நடத்தை, சமூக பொறுப்புணர்ச்சி மிக மிக அவசியம். ஒரு உதாரணத்துக்கு இந்த பாடல் வரிகளை பாருங்கள்:
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று.......
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
பிற*ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட* வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ..... Thanks wa.,
பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை ஏற்பாட்டின் பேரில் நேற்றைய முன்தினம்
10:03:2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, சி. கே. சி. கார்டன் , 1வது வீதியில் நடந்தேறிய , உலக மக்கள் பூஜிக்கும் உன்னதமான கடவுள் எம்ஜிஆர் அவர்களின் 102வது அகவை திருநாளை...
"புரட்சித் தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019" தலைப்பில் எழுச்சியுடனும், புரட்சியுடனும்.. சிறப்புடன் நடந்தேறியது.
விழாவின் சிறப்பம்சமாக மலேசியாப் புகழ் பொன்மனச்செம்மல் கலைக்குழு மேகநாதன் ஐயா குழுவினர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி அசத்தி்...ரத்த உறவுகளின் இதயங்களை தன்வசப் படுத்திக் கொண்டார்கள்.
அரும்பெரும் சாதனை நிகழ்த்திய...
வற்றாத ஜீவநதி வள்ளல் மகான் எம்ஜிஆரின் இப்புனித விழாவை வெற்றி விழாவாக்கிய,
திருநங்கையர்களின்
காவல் தெய்வம்,
இதயதெய்வத்தின் தூய வழியில் தனக்கென்று வாழாது...பிறரது நலனுக்காக , உழைத்து சேர்த்ததை...
உதவி கேட்டு வருவோர்க்கு, இல்லை என்று சொல்லாமல்,ஜாதிமதம் ... மொழி பேதம் பார்க்காமல் வாரி வழங்கி, வாழ்ந்து கொண்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப்பெற்ற கீதம்மாநாயக் அவர்களுக்கும்,
மலேசியா நாட்டின் மக்கள் நலன் காக்க துடிப்பான குரல் கொடுத்து, பசித்த வயிறுக்கு உணவளித்து சுயநலமற்ற மனிதராக
வாழ்ந்து கொண்டிருக்கும்
சிறந்த பண்பாளர்...
மனிதநேயர்... பிரபல தொழிலதிபர் ,
திரு. டாக்டர் நெல்சன் முருகன் ஐயா அவர்களுக்கும், கர்நாடக மாநில அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. கே. ஆர். கிருஷ்ணராஜ் அவர்களுக்கும்,
வெளியூர்களிலிருந்து வருகை புரிந்து, புரட்சித்தலைவரின் புகழ் காக்கத் துடித்த...
கொடை வள்ளலின் கொள்கை வழி தொண்டர்கள்...
மதுரை மு. தமிழ்நேசன், சண்முக சுந்தரம், திருச்சி தேவராஜ் ஆம்ரூஸ், சென்னை ஆர்.லோகநாதன்,தாராபுரம். வி்.குருநாதன் , சவூதி அரேபியா கடல்ராஜா , வாடியன் பாலன், திண்டுக்கல் அய்யம்பாளையம் எம்ஜிஆர் இளங்கோவன், கோவை கணபதி தாஸ்,
பெங்களூர் ராஜகோபால் கார்டன் ஏழுமலை, மகாலட்சுமி லே அவுட் சுதர்சன், ஜே. ஜேசுதாஸ், கே. சங்கர், ஏழுமலை, அய்யாவு, சுந்தர், ஆர். ரவி, செல்வா, பிச்சை, சேவாநகர் காங். பிரமுகர். பி. சண்முகம், கன்னடர் - தமிழர் கூட்டமைப்பு குடும்பம் அமைப்பின் தலைவர் செந்தில்குமார் BNR,
தமிழ் திரைப்பட இயக்குநர் திரு சக்தி.மா. சரோஜ்குமார் , பில்டிங் காண்ட்ராக்ட் எம். ராஜா, தொழிற் சங்கத் தலைவர் சிம்சன் சண்முகம், கே. சண்முகம் (விக்டோரியா மருத்துவ மணை) சத்யாநகர் சி. முருகன்,
கமல், சுகுமாறன், சோமசேகர், இளங்கோவன், லாவண்யா திரையரங்கம் சீனிவாசன், ஆட்டோ ஓட்டுனர் ராஜா, அல்சூர் வி. கேசவன், வினோத்குமார், சி. எஸ். குமார், கஜநாத்சிங், முகப்பேர் சங்கர், மேலும் வருகை தந்த பலருக்கும்....
விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் , நிறைந்த மனதோடு வாழ்த்து வழங்கிய, பெங்களூர் காவேரி ப்ரியதர்சிணி பெண்ணுரிமை அமைபழபின் தலைவி பி. ஆர். மஞ்சுளா, சென்னை நக்கீரர் தமிழ்ச் சங்கம் திரு. மீடியா பாஸ்கர் அவர்கள், கோவை காளியப்பன் ஐயா , மதுரை மர்மயோகி மனோகர், சென்னை மேரி செல்வமணி, மலேசியாவிலிருந்து வாழ்த்து வழங்கிய,
திரு. குணா ஐயா,எம்ஜிஆர் ஹரி, நளினா, புவனேஷ்வரி, மணிவாசகம் ஐயா, சாரோன், இன்னும் உள்ள பலருக்கும் நன்றி... நன்றி... நன்றி... Special thanks to.....
Dr. Nelson murugan (Malaysia)
sri. Gheethamma nayak (Thirunangaiyar)
Sri. Meghanadhan / music troup (Malaysia)
Sri. K. R. Krishnaraj (Admk ex. state secretary)
Sri. P. Shanmugam (shevanagar)
Sri. A. Aadhiyanna ksg
Sri. T. E. Moses
Sri. A. Daniel (Pendal works)
Smt. B. R. Manjula
Sri. K. Kamaraj ksg
Sri. Ravi (4th cross, k. S. Garden)
Sri. Rajani velu mss
Sri. J. Raju (market)
Sri. V. Keshavan (ulsoor)
மாபெரும் சாதனை விழாவாக்கிய, மக்கள் மனங்கள் வாழ்த்து கோஷம் எழுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி... Thanks wa.,...........
புரட்சி தலைவர் முதல்வராக இருந்த சமயத்தில் ,கோட்டை அலுவலக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணி செய்ய லிப் டுக்காக காத்திருந்தனர் , லிப்ட் வந்தவுடன் அனைவரும் ஏறினர் புறப்பட தயாராகும் போது புரட்சி தலைவர் வந்து விட்டார் , மரியாதைக்காக அனைவரும் வெளியே வந்தனர் , அவர்களை நோக்கி தலைவர் "ஏன் நின்று விட்டீர்கள்" என்றார்
அதற்கு அவர்கள்" நீங்கள் போங்கள் , நாங்கள் பின்னர் வருகிறோம்" என்றனர் தயக்கத்துடன் , அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட தலைவர் "நானும் அரசு ஊழியன் தான் மக்கள் என்னை ஐந்து வருஷம் ஆள உத்தரவிட்டிருக்கிறார்கள் , ஆனால் நீங்களோ58 வயது வரை அரசு ஊழியர்கள் , வாருங்கள் அனைவரும் லிப்டில் செல்வோம்" என அனைத்து ஊழியர்களுடன் லிப்டில் சென்றார் புரட்சி தலைவர் .(இந்த செய்தியை சொன்னவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற , இன்றளவும் திமுக கட்சிக்காரர் ).............. Thanks fb.,
மனைவியின் சபதம்!!
-----------------------------------
பி.எஸ்.வீரப்பா!!
அந்த நாட்களில் மிகப் பிரபலமான வில்லன்!!
ஹீரோ வாக இருந்து ஆளுக்கு ஆள் இன்று செய்யும்,ஸ்டைலை,,அந்த நாட்களிலேயே,,அதுவும்,தம் வில்லன் பாத்திரத்திலேயே அரங்கேற்றம் செய்தவர்??
ஹா--ஹா-ஹஹ்ஹா--என்ற இவரது இடி முழக்க சிரிப்பும்--
சபாஷ்! சரியான போட்டி??
அடைந்தால் மகாதேவி!! இல்லையேல் மரணதேவி??
உதய சூரியன்,,நாளை அஸ்தமிக்கும் சூரியன்??--இப்படி ஏராளமான,,ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய இவரது வசனங்கள் அன்று ரசிகர்களிடையே இவரது தனித்துவத்தை பறை சாற்றின!!
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்,,தன்னிடம் உயிருக்கு மன்றாடும் சக்கரபாணியை இமைக்காமல் வெறித்துப் பார்ப்பது இவர் வில்லத்தனத்துக்கு ஒரு சான்று!!
எம்.ஜி.ஆருடன்,,இவர் வாள் எடுத்து மோதும்போது---
திரை அரங்குகள் தீப்பற்றிக் கொள்ளும்??
அவ்வளவு சூடாக இருக்கும்!!
ஆரம்பத்தில் வில்லன் நடிகராக இருந்தவர்,,
எம்.ஜி.ஆரின்-நாம்-படத்தில் பங்குதாரர் ஆகி,,--சபாஷ்--யார் நீ--ஆனந்த ஜோதி என்று நிறைய படங்களை-பி.எஸ்.வீ என்ற தன் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்க ஆரம்பித்து--நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்!!
பொருளாதார நெருக்கடியால்--1975இலிருந்து தொடர்ச்சியாக,,,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை ,,,தன் படங்களில் இவருக்கு வாய்ப்பு தந்தார் எம்.ஜி.ஆர்!!
எம்.ஜி.ஆர்,,சிவாஜி,,ஜெமினி என்று எல்லா நடிகர்களையும் எதிர்த்த வீரப்பாவால் ஒருவரின் உண்மையான எதிர்ப்பை மட்டும் கடைசி வரை சமாளிக்கவே முடியவில்லை??
அது அவரது மனைவி??
ஏங்க?? நீங்க இவ்வளவு கெட்டவர்ன்னு தெரிஞ்சிருந்தா உங்களைக் கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்க மாட்டேனே??--என்று புலம்ப ஆரம்பிக்கும் மனைவியை--
மனைவியின் சொந்தக்காரர்கள் மூலம் ,,--இது தொழில் தான்!! உண்மையல்ல--என்று விளக்கம் சொல்லுவாராம் வீரப்பா!!--ஆனாலும்,,,,தன் கணவருடன் ஒரு படத்துக்குச் சென்ற அவரது மனைவி,,,,அதில்,,,,தன் கணவரின் கொடூரமான பாத்திரத்தைப் பார்த்து விட்டு --பாதியிலேயே எழுந்து கொண்டவர்,,தன் கணவர்--வீரப்பாவிடம் ஒன்றை உறுதியாகக் கூறி விட்டு--கடைசி வரை அதை நிறைவேற்றியும் காட்டினாராம் அந்த உத்தமி??
இனி நீங்க நடிக்கும் எந்தப் படத்தையும் நான் பார்க்க மாட்டேன்????
பி.எஸ்.வீரப்பா எவ்வளவோ விளக்கியும்,,சமாதானங்கள் கூறியும்,,,அவர் மனைவிக் கடைசி வரை அவற்றை ஏற்கவில்லையாம்??
அந்த கால ரசிகர்கள் எவ்வளவு தூரம் அப்பாவியாக இருந்திருக்கிறார்கள் என்பதையும்--
அந்த கால நடிகர்கள் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் உணர முடிகிறது அல்லவா உறவுகளே?????!!!!! Thanks wa.,
கோவை மாநகரில் வானவில் வரலாற்றுநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது. பிறந்தநாள் விழா வரும் 24.3.2019 ஞாயிறு கிளஸ்டர் திரைப்படக்கல்லூரி (ஹோப்ஸ்) மணீஷ் தியேட்டர் அருகில் காலை.9.மணி.முதல் இரவு. 7.மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது முடிந்தவர்கள் நேரிலும். வேலைப்பளுவால் வரமுடியாத நண்பர்கள் மனதாரவும் இதயபூர்வமாகவும் விழா மாபெரும் வெற்றிபெற வாழ்த்துங்கள் என்று விழாக்குழுவினர் சார்பாக வேண்டிக்கேட்டுக் கொள்கின்றேன் வாழ்கநட்பு ஓங்குக ஒற்றுமை நன்றி மதுரை.எஸ் குமார்........ Thanks wa.,
கோவை- ஈஷா ஆன்மீக மையத்தில் "மஹா சிவராத்திரி" வைபவத்தில் பாடிய பாடல் மக்கள் திலகம் காவியத்தின் "ஆயிரத்தில் ஒருவன்"... அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்...... காவிய பாடல்......
அமரா எம்.ஜி.ஆர்
உயிர் வாழ்கிறவர்களும், ஜீவனைக் கொடுப்பவர்களும், அவருடைய ஞானத்தினாலும், உட்பார்வையினாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். ஜீவனைக் கொடுக்கும் பிரிவை சார்ந்தவர். எம்.ஜி.ஆர் மனிதகுலத்தின் இதயத்திலும் மனதிலும் உயிருடன் இருக்க முடியும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தவராகவும், மரணத்திற்குப் பிறகும் கூட உயிருடன் இருக்கமுடியும் என்று எங்களுக்குக் கற்பித்தார்.
எம்.ஜி.ஆர். மக்களோடு உணவு உண்ணுதல், கலந்துரையாடுதல் /அவர்களுடன் சமமானவராக பணிபுரிதல் என்று தான் விரும்புவதை செய்தார்.
எம்.ஜி.ஆர் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள்/இந்திய நாட்டின் பிரதமர்கள் இதயங்களையும் தனது நெறிவழியால் வென்றார். அவர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை ஒரு எளிய முறையிலேயே தீர்த்து வைத்தார் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக தனது முயற்சிகளையும் சக்தியையும் அர்ப்பணித்தார்.
அவரது மதி நுட்பம் மற்றும் அவரது பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட இதயங்களை கவர்ந்தார். இந்த அனுபவத்தின் ஞானத்தின் மூலம் இவையெல்லாம் அவரை அடைந்தன.
எம்.ஜி.ஆர் எதையும் எதிர்பார்த்து கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு வழங்கிய நன்கொடை அவர் எல்லோருக்கும் தெரிந்து வழங்கியதை விட மிக மிக அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் நேர்மையுடன் செய்தார்.
எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரது மறக்க முடியாத மாண்பு மூலம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தை தொடர அவரை ஒரு "திசைகாட்டியாக/கலங்கரை விளக்கமாக" பயன்படுத்துகின்றனர்.
எம்.ஜி.ஆர் ஒருபோதும் இறந்து போவதில்லை [நிழலிலும் நிஜத்திலும் ]. ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தவர் என்றும் இறக்க மாட்டார்........ Thanks wa.,
அத்தியாயம் - 2
ஒரு நடிகன் நாடாள முடியுமா??? இதுதான் அன்றைய கேள்வி!
முடியும் என்று புரட்சித்தலைவர் நிரூபித்தார் [ அவரால் மட்டுமே முடிந்தது], அதற்கு அடிப்படை காரணங்கள் பல உள்ளது. இரண்டாவதாக :
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்
புரட்சித்தலைவர் முதலமைச்சர், கழக நிறுவனர் என்று அனைத்து பொறுப்புகளையும் தற்காலிகமாகவே கருதினார், அந்த "பதவிகள் தான் முக்கியமென்று அதற்கு பின்னால் ஓடவில்லை!!! ".
அவர் செய்த சமூகசேவை சாதனைகள் ஆகியவற்றில் அவரது உண்மையான மதிப்பு உள்ளது. தனது பணியில் கடினமாக உழைத்தார் அதன் விளைவு அவரது சாதனைகள் மற்றும் அவரது பெயரை என்றும் நிலைத்து நிற்க செய்தது.
புரட்சித்தலைவர் தனக்கு பதவி தான் முக்கியம் என்ற "அபிலாஷைகள் என்றும் இல்லாததால் தான்" தீர்க்கதரிசியாக பல "உயர்ந்த தீர்மானங்களை" நிறைவேற்ற தயங்கவில்லை........... Courtesy: fb., Friends...
#மக்களின் #முதல்வர்
தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்...
அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்...
எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க...!!!
எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்... "என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? ...
அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்..."அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்..." ன்னு கிளம்பிட்டார்.
அப்பெண்மணி வேறு யாருமல்ல...
நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்...
அடுத்த சிறிது நாட்களிலேயே
"#எம்எல்ஏக்களுக்கு #ஓய்வூதிய #திட்டம்" வழங்க அரசாணை பிறப்பித்தார்.
கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் #மக்கள்திலகம் #ஒருவரே.............. Thanks wa.,
கலையுலக சக்கரவர்த்தி நடிகமாமன்னன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தயாரிப்பில் 1958 ம் ஆண்டு வெளியாகி சரித்திரம் படைத்த நாடோடி மன்னன் காவியத்திற்கு பின் 1969 ம் ஆண்டு தயாரித்து மேலை நாட்டு படங்களுக்கு சவால் விட்ட இராண்டாவது படைப்பு வண்ணப்படைப்பு எம்.ஜி.யார் பிக்சர்ஸின் அடிமைப்பெண் (1969./2019) திரைப்படத்தின் 50 வது (பொன் விழா) ஆண்டு. வருகின்ற 2019 மே மாதம் 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00.மணி வரை நடைப்பெறகிறது. இந்நிகழ்ச்சி சென்னை தி.நகர் (.பாண்டி பஜார்) பகுதியில் நடைப்பெறும். விழாவில்.. அடிமைப்பெண் காவிய பொன்விழா மலர் வெளியிடப்படுகிறது. நிகழ்ச்சியில் முக்கியபிரமுகர்கள் மற்றும் புரட்சித்தலைவரின் அபிமானிகள் கலந்துக் கொள்கிறார்கள். விழா அமைப்பு ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ். நன்றி! உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,..........
இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் நல்லாசியுடன்.... புரட்சித்தலைவரின் 102 வது மனிதநேய விழா. மக்கள்திலகத்தின் தயாரிப்பில் வெளியான அடிமைப்பெண் திரைப்படத்தின் 50வது பொன் விழா.ஆண்டு! (1969/2019) நாள் : 21.04.2019, ஞாயிற்றுக்கிழமை இடம்: சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம்.( கவிஞர் கண்ணதாசன் சிலை , ஜி.என்.செட்டி ரோடு). நேரம்:.மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை . நிகழ்ச்சிகள்:. பொன்விழா மலர் வெளியீடு, பாடல்கள் , கவிதை கவியரங்கம் இன்னிசை நிகழ்ச்சி, மக்கள்திலகத்தின் பாடல்களை இடைவிடாது இசைப்பவர்கள்...... ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவினர்கள். விழாஅமைப்பு:. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் . நற்பணி சங்கம் ஒத்துழைப்பு:. ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ்... தலைவரின் பக்தர்கள் அபிமானிகள் அன்புடன் வருகை தந்து சிறப்பிக்கவும்!...... Thanks wa.,
சார் வணக்கம்! தலைவரின் சாதனை படைப்பான இரண்டாவது தயாரிப்பு அடிமைப்பெண் படத்திற்கு 50 ஆண்டு பொன்விழா சாதனை மலர் வெளியிடப் போகிறேன். ஆகையால் தாங்கள் வாழ்த்து செய்தி தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி !.உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி!!
அது பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி!!
நம் தலைவரின் வழி வந்த ஒரே கொடி!!
அதுதான் நம் தலைவரின் அஇஅதிமுக வெற்றிக்கொடி!!..... Thanks wa sharing...
வணக்கம்,
மனிதநேய அறக்கட்டளை நிறுவனர்
திரு. சைதை ச துரைசாமி
அவர்களின் சிறப்பு நேர்காணல்
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில்
வரும் ஞாயிறு
(17/03/19) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும்
அதன் மறு ஒளிபரப்பு அன்று இரவு 10 மணிக்கு
ஒளிபரப்பாகும்
நன்றி.
www.ns7.tv என்ற இணையதளத்தில் நேரலையிலும் ஒளிபரப்பாகும் ......... Thanks wa.,
மதுரை- சென்ட்ரல் dts அரங்கில் மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்" சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை முன்னிட்டு திரையிடுவதாக இருக்கும் சூழ்நிலையில் தேர்தலை காரணம் காட்டி திரையிட கூடாது, சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என சொல்வதாக தகவல் வருகிறது... இப்போதும் புரட்சி தலைவர் படத்தை கண்டு பயப்படுவதை நாம் என்னவென்று சொல்ல??? !!!
புரட்சித்தலைவர் மறைந்துவிட்டாரா? யார்சொன்னது வரும் மதுரை சித்திரைத்திருவிழா மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "குடியிருந்தகோயில் "படம் வெளியிட தேர்தல் அதிகாரி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தடைசெய்கின்றனரே கேட்டால் புரட்சித்தலைவர் அரசியல் தலைவராம் மறைந்துவிட்ட மாமனிதர் இன்னமும் இருக்கின்றார் தானே , அதனால்தான் அவர்படம்போட்டால் அவருடைகட்சி ஜெயித்துவிடும் என்ற சந்தேகம் பயம் சிவாஜி நடித்த தியாகம் படம் போடத்தடை ஏதுமில்லை இன்னமும் அனைவரையும் தெறிக்கவிட்டு என்றும் வெல்லும் புரட்சித்தலைவரின் புகழ் ஓங்குக மதுரை.எஸ் குமார்.......... Thanks wa.,
அன்றும் இன்றும் என்றும் மக்கள் தலைவர் எம். ஜி .ஆர் .உடலால் மறைந்தாலும் உருவம் கண்டு மக்கள் வாக்கு அளித்து விடுவார்களோ என்று எண்ணி தேர்தல் அதிகாரிகள் ,எதிர்க்கட்சிகள் அலறும் நிலையை பாருங்கள் .தலைவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .பல காலம் நம்முடன் வாழ்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் ஆனால் ஆட்சியாளர்கள் இன்னும் தலைவரின் மதிப்பு செல்வாக்கு ஆகியவற்றை உணர்வதாக தெரியவில்லை... Thanks wa.,
நிஜம்!! சுடாது?
--------------------------
எம்.ஜி.ஆருக்கு மோட்ச தீபம் ஏற்றினார் காஞ்சிப் பெரியவர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்!!
அதைப் பற்றி கொஞ்சம் ஆராயலாமா??
சுந்தரம் ஐயர்!!
1992இல் காலமானவர்.
காஞ்சிப் பெரியவரின் தீவிர பக்தரான இவரது அறுபதாம் கல்யாணத்தையே காஞ்சி முனி தான் ,,தமது சங்கர மடத்தில் நடத்தி இவருக்கு அருள் பாலித்தார்!!
அவர்,,அடியேனிடம் சொன்ன நிகழ்வு தான் இந்தத் தகழ்வு!!
அது 1987 டிசம்பரில் சந்திரன்--கார் முகிலுக்குள் புகுந்து கொண்ட துயரமான நாள்??
அகிலம் எங்கும் அரற்றலுடன் கூடிய தருணம்!
காஞ்சி மடத்திலோ கனத்த மௌனம்?
தவ நிலை கலையாது சவ நிலையில் அசையாது --
சிவ சிலையாகக் காஞ்சிப் பெரியவர்??
குளிர்ந்த பூ என்னும்--
தண் மலர் என்ற கண் மலர் திறக்கும் காஞ்சிப் பெரியவரின் வாயில் இருந்து--
பொன் மலர் வார்த்தைகள் வெளிப்படுகின்றன?
ராமச்சந்திரனுக்கு மோட்ச தீபம் ஏத்தணும்!!
காஞ்சியைக் காக்கும் காமாட்சிக் கோயிலில் ஒரு அகல் விளக்கு--சில ஆன்மாக்களின் அருளைப்-- புகல் விளக்காக இந்தப் பிரபஞ்சத்தில் பொழிந்து கொண்டே இருப்பது தான் அந்த விளக்கு நமக்கு விளக்கும் உண்மை!!
ஆட்சி தீபம் அருமையாக இருப்பதற்கு--
சாட்சி தீபம் மட்டுமல்லாது சில அதிர்வுகளின்-
காட்சி தீபம் தான் அந்த மோட்ச தீபம்!!
காந்தி,,நேரு,,இந்திரா --இப்படி எல்லோருக்கும் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கு மட்டும் இப்படி ஒரு தீபம் ஏற்றுவதால் என்ன லாபம்??
சீடர் அனைவரும் சிந்தை குழம்ப--
வேடர் தம் கவனத்தைப் போல் தம் காரியத்திலேயே கருத்தாகக் காஞ்சிப் பெரியவர்??
பணியை முடித்தப் பெரியவர்--
பனியை ஒத்த அருள் குரலில் ரத்தினச் சுருக்கமாக காரணத்தை விளக்கியது இரண்டே வாக்கியங்களில்?
சிலரது ஆத்மாக்கள்!!
எனது கடமை!!
இவ்வளவு சுருக்கமாகப் பெரியவர் சொன்னதன் பொருளில் தான் எவ்வளவு உருக்கம்??
எம்.ஜி.ஆரின் ஆன்மா ஒரு சாதாரண மானிட ஆன்மாவே அல்ல?
செத்த புருஷர்கள் அனைவரைப் போலில்லாது-மத்த புருஷர்களோடு ஒப்பிட முடியாத--
சுத்த புருஷர்!! சுருங்கச் சொன்னால் எம்.ஜி.ஆர் ஒரு----
சித்த புருஷர்!!
கவனிக்க வேண்டும் இங்கே!!
காஞ்சிப் பெரியவர்,,நம்மைப் போல் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விசில் அடித்தவரல்ல??
அவரிடம் உதவி பெற்ற கட்சிக்காரரும் இல்லை??
ஆன்மிகம் என்னும்--
அற நெறியில் இருப்பவர்களுக்குப்--
பிற நெறியில் இருப்பவர்களின் உண்மையான-
நிற நெறி நிச்சயம் தெரிந்திருக்கும் !!அவர்களின்--
புற நெறிப் புரிந்திருக்கும் தானே???
உண்மை சுடும்! என்பார்கள்!--ஆனால்??
இந்தப் பதிவு நிஜம்! ஆனால் சுடவில்லை??
அதிசயம் ஆனால் உண்மை என்பார்கள்!!
இங்கேயோ--இது---
அதிசயமில்லை?? ஆனால் உண்மை!!
ஒப்புக் கொள்ளலாம் தானே உறவுகளே????.. ............ Thanks wa.,
சிலர் தாங்கள் செய்யும் அற்ப விஷயங்களைக் கூட அரியாசனம் ஏற்றிவிட பேராசை படுகின்ற காலமிது.😜😜
💐💐💐ஆனால் மாபெரும் மனிதர்கள் அரிய பெரும் சாதனைகளை அஸால்டாக செய்து விட்டு அமைதி காக்கின்றனர். அது அவர்களது பெருந்தன்மையை பறை சாற்றினாலும் நாம் மௌனம் காப்பது எவ்விதத்தில் நியாயம்? எனவே தான் என்னுடைய இந்தப்பதிவு 💐💐💐
நான் யாரைப் பற்றி கூறுகிறேன் என்பதை பலர் யூகித்திருப்பீர்கள். ஆம், அவர் வேறு யாருமல்ல, மனித நேய அறக்கட்டளை நிறுவனரும் தலைவரின் உண்மைத் தொண்டரும் தலைவர் பக்தர்களின் உறைவிடமுமான அண்ணன் திரு சைதை துரைசாமி தான். ஒரு தனி மனிதனாக தலைவரின் பூர்வீக இல்லத்தை புதுப்பித்த கையோடு நமது தாய்மொழி தமிழுக்கும், தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட தானைத் தலைவருக்கும் மிகப் பெரிய அங்கீகாரத்தை இந்திய அளவில் தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் பெற்றுத் தந்திருக்கிறார். இவ்வுண்மையை உலகிற்கு உணர்த்தவே இப்பதிவு.
பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் கடந்த 6 ம் தேதியன்று பெருங்களத்தூரில் தான் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழர்களாகிய நாமனைவரும் பெருமையும், பெருமகிழ்ச்சியும் கொள்ளும் வகையில் இரண்டு முக்கிய முடிவுகளை வெளியிட்டார், அவை:
1. புரட்சித் தலைவரை வானளாவப் புகழ்ந்துவிட்டு சென்னை சென்ட்ரல் இனி எம்ஜிஆர் என்ற பெயரில் அழைக்கப்படும்,
2. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும் மற்றும் வந்தடையும் தகவல்கள் தமிழிலும் இனி ஒளிபரப்பப்படும் ஆகியவையாகும்.
தமிழர்களாகிய நாம் பெருமை படும் வகையில் வந்த இவ்விரண்டு அம்சங்களுக்கு காரணகர்த்தா யாரென்று ஆராய்ந்தால் அது நம் சைதையாரைத் தவிர வேறு யாருமல்ல. இவ்வளவு பெரிய சாதனையை ஜஸ்ட் லைக் தட்டாக செய்துவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இருப்பது அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்த்து விட்டது. ஆகையால் தான் முன்னாள் சென்னை மேயர் அவர்கள் நம் எண்ணங்களில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இரண்டு வரலாற்று சிறப்புமிக்க அறிவுப்புகளுக்கு அவர் பின்புலமாக இருந்துள்ளார் என்பது நம்மைப் போன்ற தலைவர் பக்தர்கள் கொண்டாடி மகிழ வேண்டிய நிகழ்வென்றால் அது மிகையாகாது.
எப்படி இது நிகழ்ந்தது என்பதை சுருக்கமாக விவரிக்கிறேன்.
சென்னை சென்ட்ரலுக்கு தலைவர் பெயர் சூட்ட வேண்டுமென்று முதன்முதலாக வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை மாநாட்டில் மத்திய அரசுக்கு கோரிக்கை இடுகிறார். அந்த மாநாட்டிலேயே கவர்னரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கிறார். இதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்து கொள்கிறார். தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் இதனூடே தமிழ் நாட்டிற்கு நலம் பயக்கும் வேறு சில முக்கிய கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வைக்கப்படுகிறது. அக்கோரிக்கைகளில் ஒன்று தான் சென்னை விமான நிலையத்தில் தமிழுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படவேண்டுமென்பது. கோரிக்கை வைத்ததோடு தன் பணி முடிந்தது என்று விட்டு விடாமல் தன்னால் இயன்ற வரை அழுத்தம் கொடுத்துக்கொண்டே வருகிறார். இறுதியாக திரு மோடி அவர்கள் சென்னை வருவதற்கு முன்பு மிகவும் முன் யோசனையுடன் தமிழ் நாட்டின் நலன் காக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டுமென்று தனது கோரிக்கைகளை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறார். இவ்வளவு அரும்பாடுபட்ட பின்பு தான் மார்ச் 6 அன்று இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுவரை இந்திய அளவில் அகில இந்தியத் தலைவர்களுக்கோ அல்லது மாநில அளவில் மாநிலத் தலைவர்களுக்கோ மாநிலத்தின் தலைநகரில் அதி முக்கிய பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் எந்தத் தலைவரின் பெயரும் சூட்டப்படவில்லை. இம்மாபெரும் சிறப்பு வாய்க்கப் பெற்றவர் நம் புரட்சித் தலைவர் ஒருவரே என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. நாம் அனைவரும் பெருமையும் பேருவகையும் கொள்ளும் வண்ணம் எந்த இந்தியத் தலைவருக்கும் கிடைக்கப் பெறாத, நமது எதிரிகளும் தீய சக்திகளும் பொறாமையடையும் வகையில் கிடைக்கப்பெற்ற சாதனையென்றால் அது மிகையன்று. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் தலைவர் புகழ் மறைவதில்லை, ஆணைகளிட்டே தடுப்பவர்கள் இருப்பினும் நீரிலே அமிழ்த்தப்பட்ட காற்றடித்த பந்து சீறி மேலெழுவது போல் அவரது மகிமை வெளிப்பட்டு நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம். கோயம்பேடு பேருந்து முனையத்திற்கு தலைவர் பெயர் தான் வைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் திரு சைதை சா. துரைசாமி. இப்போது அவரது சீரிய முயற்சியால் அதைவிட பெரும் பேறாக சென்ட்ரல் இரயில் நிலையம் இனி தலைவர் பெயரால் அழைக்கப்படும் என்கிற இனிப்பான தகவல் நம்மனைவரையும் எல்லையில்லா மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. சைதையாரின் இச்செயற்கரிய செயலை மனமார பாராட்டுகின்ற அதே வேளையில் புரட்சித் தலைவரின் அழியாப் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு தலைவரின் பெயரை சூட்டிய பாரதப் பிரதமர் திரு மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அரிய பெரும் செயலால் பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் உலகெங்கும் வாழும் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களின் இருதயத்தில் இடம் பிடித்து விட்டார். இதை ஏன் நான் இங்கு வெளிப்படையாக குறிப்பிடுகிறேன் என்றால், நான் உட்பட தலைவர் தொண்டர்களிடம் மட்டுமே காணப்படும் அரிய பெரும் குணம் ஒன்று உண்டு. அது யாதெனில், தலைவரை யாராவது உண்மையாக புகழ்ந்து விட்டாலோ அல்லது தலைவரால் ஈர்க்கப்பட்டவர் தான் இவர் என்று தெரிந்து விட்டாலோ அவரை எந்த நிலையிலும் கைவிட மாட்டார்கள். திரு மோடி அவர்கள் தந்திருக்கும் இந்த அரிய பரிசிற்கு தலைவர் பக்தர்கள், தலைவர் வாலிபனில் கூறியது போல் தக்க கைமாறு செய்யாமல் விட மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம். அவரது குறி எம்ஜிஆரின் ஓட்டு வங்கியாகவே இருப்பினும், தலைவர் பெயரைச் சொன்னால் தான் தமிழ்நாட்டில் ஓட்டு என்ற உண்மை அதன் மூலம் எதிரிகளுக்கு விளங்கட்டும்.
சைதையார் மேடைக்கு மேடை முழங்குவது போல் 1957 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள் எம்ஜிஆரென்ற மாபெரும் சக்தியால் இயங்கி வரும் இரத்தத்தின் இரத்தங்கள் தான் என்பது மீண்டுமொரு முறை இவ்வுலகிற்கு உணர்த்தப்படும் வகையில் வார்த்தைகளால் தலைவரை அர்சித்த திரு மோடி அவர்களுக்கு தலைவர் பக்தர்கள் தங்களது நன்றியை வாக்குகள் மூலம் தெரிவிப்பார்கள் என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறேன்.
வெற்றி வாகை சூடிய பின் இது போன்ற மேலும் பல புகழ்மாலைகள், திட்டங்கள் தலைவர் பெயரால் அலங்கரிக்க படவேண்டும். அதுவே தன்னலமின்றி தமிழர்களின் வாழ்வே தனது மூச்சாக வாழ்ந்த தன்னிகரில்லாத் தலைவனுக்கு செய்யும் நன்றிக்கடனாக அமையும்.
சைதையாரின் கல்விப்பணி மற்றும் சமூகப் பணிகளுடன் இதுபோன்ற சுயநலமில்லா சேவைகளும் மேலும் மேலும் சிறப்படைய நாமனைவரும் வாழ்த்துவோம். 🙏🏻🙏🏻🙏🏻
எனவே நல்ல பல காரியங்கள் செய்வதற்கு நல்ல எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால் போதும். பணம், பதவி, செல்வாக்கெல்லாம் அதன் பிறகே.
தலைவர், “பல்லாண்டு வாழ்க” படத்தில் கூறுவார்
"நல்லதை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அது நம்மை நோக்கி பத்தடி வருமென்று"
எனவே நல்ல எண்ணங்களைக் கொண்டு நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம். தலைவர் புகழ் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஓங்கி வளர்ந்து கொண்டே இருக்கும், அதை மறைப்பவர்கள் மறைந்து போவார்கள், வசை பாடுபவர்கள் வீழ்வார்கள்.
புரட்சித் தலைவர் நாமம் வாழ்க✌🏻✌🏻
பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக 🌱🌱🌱
க. சந்திரசேகர், தலைவர் பக்தன், சென்னை.... Thanks fb.,
வாய்கிழியக்கத்துவது முழிபிதுங்கப் பார்பது யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் நெஞ்சைப்பிடித்துக் கொண்டு ஓடுவது தான் நடிப்புஎன்றால் ஒரு உயிரைக்காக்க தனதுஉயிரைப் பெரிதாகநினைக்காமல் எதிரிகளோடு கிடைக்கும் ஆயுதத்தை கையில் எடுத்து அதை சரியான முறையில் கையாண்டு எதிரிகளை ஓட.ஓட. விரட்டும் வீரமும் ஒரு அற்புதமான நடிப்புதான் கலைதான் என்ற புரட்சித்தலைவரின் இயல்பான நடிப்பாற்றல்............. அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்
காலத்தை வென்று என்றும் மனிதநேயத்தின் மாமனிதராக எங்களின் இறை தூதுவராக நம்மை வழி நடத்தி செல்லும் தீர்க்கதரிசியாக நம் நெஞ்சங்களில் வாழும் அன்பு தலைவராம் புரட்சித்தலைவரின் புகழை பாடும் பல விழாக்களை எடுத்த நாம்! இப்பொழுது இதயதெய்வத்தின் மனிதநேய102 வது பிறந்த நாள் விழாவுடன்... 1958 ல் தமிழ் சினிமா உலகம் மூலம் ஒரு ஆட்சி எப்படி சிறப்பாக மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதை இந்த உலகத்திற்கு தான் பங்கு கொண்ட கதாபாத்திரத்தின் வாயிலாக தன் சொந்த தயாரிப்பில் இயக்கி வெளியிட்ட புரட்சிப்படைப்பான எம்.ஜி.யார். பிக்சர்ஸின் நாடோடி மன்னன் காவியத்தை தொடர்ந்து 2வது காவியமாக 1969 ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் படைப்பில் வெளியாகி ஒரு ஆட்சி எப்படி இருக்ககூடாது என்பதை சித்தரித்து காண்பித்து உலக அரங்கிற்கு அறை கூவல் விட்ட படைப்பு.வெளி நாட்டு படங்களை விட இந்திய மண்ணிலும் ஒரு பிரமாண்டத்தை உருவாக்க முடியும் என்பதை அடிமைப்பெண் திரைக்காவியம் மூலம் தன் சொந்த தயாரிப்பில் வெளியிட்ட அடிமைப்பெண் காவியத்திற்கு 2019 ல் பொன்விழாவை பொன்விழா சாதனை மலருடன் வெளியீட்டு கொண்டாடி மகிழ்வோம். அதன் பின் 2014 ல் தலைவர் புகழை மட்டுமே பாடி நற்பணிகளை செய்து ஒற்றுமையுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல் பட்டு வரும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கத்தின் 5 ம் ஆண்டு விழாவுடன் 102.நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி புரட்சித்தலைவரின் வழியில் செல்கின்றோம். இந்த மூன்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து...... புரட்சித்தலைவரின் புகழ்பாடும் முப்பெரும் விழாவாக சென்னையில் வருகின்ற 21.04.2019.ஞாயிறு அன்று தி.நகர் சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளை அழைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றோம். தாங்களும் தலைவரின் புகழ்பாடும் விழாவில் இனிதே கலந்து நாம் யாவரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் குடும்பத்தின் உறவுகளாக, உண்மை உள்ளங்களாக.அன்பின் வடிவமாக திகழ்வோம்! வாருங்கள் தலைவரின் புகழை சுயதலமின்றி பாடும் உண்மை உள்ளங்களே வாருங்கள்.... வரவேற்கின்றோம்!. இங்ஙனம். ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ்! மற்றும் பொன்மனச்செம்மவ் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்..... Thanks wa.,
திரையுலக சக்கரவர்த்தி, திரைப்படங்கள் மூலம் வசூலை எந்நாளும் தந்து கொண்டிருக்கும் ஒரே வசூல் சக்கரவர்த்தி , அகில உலக திரைவானில் எடுத்துக் கொண்டோமானால் அவர் மக்கள்திலகம் ஒருவர் மட்டுமே என்பது விஞ்ஞான அடிப்படையில் உண்மையாகிறது. இதை வரவேற்பவர்கள் பலர் இருந்தாலும்..... ஒரு சில உள்ளங்கள் தவறான கண்ணோட்டத்திலேயே அன்று முதல் இன்று வரை பொறாமை கொண்ட பார்வையுடனே பார்கின்றார்கள். உண்மையை எடுத்து சொன்னாலும் அதை சிந்திக்காமல் தாங்கள் எழுதுவது பதிவிடுவது தான் சாதனை என்கிறார்கள். ஆனால் நம் மக்கள் திலகம் திரைப்பட உலகில் 1936 முதல் 1949 வரை (ராஜகுமாரி திரைப்படத்தை தவிர்த்து) அன்றை பல முன்னனி நடிகர்களுடன் சுமார் 20 படங்களில் நடித்துள்ளார்கள். நாம் அதை கணக்கில், சாதனையில், ஒடிய படங்கள் என பட்டியலில் சேர்க்காது... 1950 ம் ஆண்டு வெளியான மருத நாட்டு இளவரசி திரைப்படத்திலிருந்து 1978 ஜனவரி மாதம் வெளியான தலைவரின் மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் திரைப்படம் வரை தனிப்பெரும் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டு அவ்வருடங்களில் வெளியான திரைப்படங்களில் நேரடி தமிழ் படங்கள் மட்டும் பார்த்தால் 1947.ல் வெளியான ராஜகுமாரி திரைப்படத்தையும் சேர்த்து 115 திரைப்படங்களாகும். 1950 ல் மருத நாட்டு இளவரசி முதல் மதுரையை மீட்ட சுந்திரப்பாண்டியன் வரை (.அதாவது 'ம' வரிசையில் தொடங்கி 'ம" வரிசையில் முடிந்த இத்திரைப்படங்கள் மட்டுமே புரட்சித்தலைவரின் லட்சியத்தில், கொள்கையில் சிந்தனையில், வெளியானவை களாகும். இதுவே தமிழ்படவுலகில் முதன்மை சாதனையாகும்!.மேலும் முதல் வெளியீட்டிற்கு பின் அடுத்தடுத்து வெளிவராது பெட்டியிலேயே முடங்கி போன பல ஆயிரக்கணக்கான நடிகர்களின் படங்கள் போல் இல்லாது தான் திரையுலகில் பவனிவந்த காலங்களிலும் சரி அதன்பின் முதல்வரான பின்பும் சரி மக்கள் உள்ளத்தில் மறைந்தும் மறையாது புகழ் மனம் வீசும் 31 ஆண்டு களிலும் சரி அன்று முதல்(1947..... 2019) இன்று வரை சுமார் 72 ஆண்டுகளில் புதிய திரைப்படங்கள் ஏற்படுத்திய சாதனைகளை விட அடுத்தடுத்து பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் நம் மக்கள் திலகம் சாதித்த வெற்றிகளும், சாதனைகளும், வசூல்களும் கணக்கில் அடங்காத பிரமிக்கும் இமாலய சரித்திரங்கள் ஆகும். மேலும் தலைவரின் சாதனைகள் நாளை முதல் உங்கள் பார்வைக்கு தினம் தோறும் தொடரும்.. நன்றி. உரிமைக்குரல் ராஜு. ....... Thanks wa., Share...
..
தன் வியர்வை சிந்தி உழைத்து, சினிமாவில் நடித்து கட்சிக்காக செலவளித்தவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்,
கட்சி துவக்கி பல இன்னல்களை சந்தித்து, முதல் தேர்தலில் ( திண்டுக்கல்) இரட்டை இலை சின்னத்தை விளம்பரப்படுத்தகூட விடாமல் செய்தனர் அப்போதைய ஆளுங்கட்சி திமுக, காங்கிரஸ், மற்றும் சில கட்சிகள்,
அதையெல்லாம் மீறி வெற்றிபெற்றது புரட்சி தலைவரின் கட்சி,
1972 ல் துவக்கிய கட்சியில் 1982ல் சேர்ந்த ஜெயலலிதாவை உயர்த்தி காண்பிக்கும் இன்றைய அஇஅதிமுக கட்சியினரே, பழைய வரலாறை திரும்பி பாருங்கள்,
விதைத்தவர் புரட்சி தலைவர், அவர் ஊழல் ஆட்சியில்லாத, குடும்ப வாரிசு இல்லாத, மக்களுக்கு சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டு, பொதுநல நோக்கத்திற்காக துவக்கினார், அதன்படி செயல்பட்டார்,
ஆனால் அவர் கட்சியில் அவர் படமில்லை,
கட்சி வேண்டும், சின்னம் வேண்டும், புரட்சி தலைவர் வேண்டாமா..? உங்களுக்கு ..?
புரட்சி தலைவரால் உருவாக்கபட்ட இரட்டை இலை கண்ணீர்தான் வடிக்கும்..... Thanks wa.,
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார். அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…” எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’ ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால் தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”........ Thanks wa.,