-
எனது ஆருயிர் நண்பர் திரு.வெ.சீனிவாசன், நமது நடிகர் திலகத்தின் அதிதிவீர பக்தர். நமது ஹப்பர்கள் திரு.சந்திரசேகரன், திரு.ராகவேந்திரன், திரு.முரளி ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கும் நெருங்கிய நண்பர். சிறந்த விஷய ஞானமும், மிகுந்த எழுத்துத் திறமையும் கொண்டவர். தற்பொழுது, நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவையின் தென் சென்னை மாவட்டத் தலைவராக தொண்டாற்றி வருகிறார். அவரது எழுதுகோலில் உருப்பெற்ற "கலையின் தாக்கம்" என்கின்ற படைப்பை, பதிவுத் தொடராக அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.
அன்புடன்,
பம்மலார்.
-
கலையின் தாக்கம்
[ஆக்கம் : வெ.சீனிவாசன்]
(அறிவுபூர்வமாக அல்லாமல் இதயத்தின் வழியாக உணர்வுபூர்வமாக இக்கவிதையை அணுக வேண்டுகிறேன். ஏனெனில் அதீதமான கற்பனையின் அடிப்படையில் பிறந்தது இக்கவிதை.)
நடிகர் திலகமும் ரசிகர்களும்
நடிகர் திலகமே ! திரைப்படங்களில்
- நீ மகிழ்ச்சி பொங்க சிரித்த போது எங்கள் முகங்களில் புன்னகைப் பூக்கள் பூத்தன !
- நீ கதறி அழுது கண்ணீர் வடித்த போது எங்கள் கண்களில் நீர் சுரந்தது !
- நீ தூக்கம் கலைந்து விழித்தபோது எங்கள் உறக்கமும் கலைந்தது !
- நீ காதல் வயப்பட்டபோது எங்கள் உடல்களில் இன்ப உணர்ச்சி பரவியது !
- நீ காமவயப்பட்டபோது நாங்கள் எல்லையில்லா இன்பத்தின் எல்லை கண்டோம் !
- நீ சிகரெட் பிடித்தபோது எங்கள் நாசிகளில் புகை வந்தது !
- நீ மது அருந்தியபோது எங்களுக்கு போதை தலைக்கேறியது !
- நீ ரசித்து ருசித்து சாப்பிட்டபொழுது எங்கள் பசிப்பிணி அகன்றது !
- நீ செல்வந்தனாக வலம் வந்தபோது எங்கள் நடையில் செருக்கு மிளிர்ந்தது !
- நீ சக்கரவர்த்தியாகக் கோலூச்சியபொழுது எங்கள் கைகளை செங்கோல் அலங்கரித்தது !
தொடரும்...
-
தேனும் பாலும் : 41வது உதய தினம்
[22.7.1971 - 22.7.2011]
ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு
http://i1094.photobucket.com/albums/.../GEDC4065a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் சந்திரசேகர்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. நடிகர் திலகம் நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் பாசக் கடவுள்
டியர் பம்மலார்,
உத்தம புத்திரன் தகவல்களுக்கும் தேனும் பாலும் பாடல் புத்தக முகப்பிற்கும் நன்றி.
தேனும் பாலும் வெளியீட்டு விளம்பரம், சித்ராலயா வார இதழில் வெளிவந்தது. படம் வெளியான நாள் 22.07.2011.
http://i872.photobucket.com/albums/a...eleaseadfw.jpg
நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன. அதிக விளம்பரமில்லை. ஆனால் மெல்லிசை மன்னரின் பாடல்கள் படத்திற்கு எதிர்ப்பார்ப்பை உண்டு பண்ணி விட்டன. சவாலே சமாளியின் ஆர்ப்பாட்டத்தில் அமைதியாக வெளிவந்தது. ரிசர்வேஷநும் திடீரென தந்தபடியால், முதல் நாள் முதல் காட்சிக்கு பதிவு செய்ய முடியவில்லை. காலை 10.00 மணி சுமார், திடீரென நண்பனிடம் கேட்டேன், தேனும் பாலும் போவோமா என்று. ரிசர்வேஷன் இல்லையே என்றான். பரவாயில்லை, க்யூவில் முயற்சிக்கலாம், நடிகர் திலகம் நமக்கு கருணை காட்டாமலா போவார் என்று கூறிப் புறப்பட்டோம். திருவல்லிக்கேணியில் இருந்து நடந்தே சென்றோம்.. சுமார் 11.00 மணிக்கு அரங்கில் நுழைந்தால் நம்மைப் போலவே அனைவரும் வந்து குவிந்து விட்டனர். முயன்று தான் பார்ப்போமே என்று வரிசையில் நின்றோம். முதல் 40, 50 பேர்களில் நின்றதால் கொஞ்சம் நம்பிக்கை. பொய்க்க வில்லை. டிக்கெட் கிடைத்து விட்டது. ஆனந்தத்திற்கு அளவேது. படம் துவங்கியதும் எழுந்த ஆரவார ஒலியில் வசனமே காதில் விழவில்லை. இளமையான தோற்றத்தில் ஆஹா.. நடிகர் திலகம் மிகவும் ஸ்டைலாக இருப்பார். சரோஜா தேவியின் பாடல் ஒட்டுக் கேட்கும் பெண்களே துவங்கியது... பாதிப் பேர் ஸ்டாலில்... நாகேஷின் பாடல் அடுத்தவன் போட்ட தாளத்திற்கெல்லாம் ஆடாதே... பரவாயில்லை... இவற்றிற்கு நடுவே இடைவேளை.. இடைவேளையில் அனைத்து ரசிகர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சொல்லி வைத்தாற் போல் ஒரே கமெண்ட், தலைவருக்கு டூயட் இல்லையே... இத்தனைக்கும் நடுவில் அவருடைய நடிப்பு கைதட்டல் விழாத காட்சியே கிடையாது. அமைதியாகவும் அமர்க்களமாகவும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நதியினில் வெள்ளம் பாடல் .... அவ்வளவு தான் அரங்கமே இரண்டானது... பாடல் முடிந்தது... படமும் முடிந்து விட்டதாக தீர்மானம் செய்து கொண்டு அரங்கை விட்டு வெளியே போனவர்கள் போக, உள்ளே மீதமிருந்தவர்களை எண்ணி விடலாம்...
மறக்க முடியாத திரைக் காவியம் தேனும் பாலும்...
அன்புடன்
-
Nadhiyinil vellam song
http://www.youtube.com/watch?v=cqOaa...547EA&index=17
இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் விழிகளைப் பாடல் முழுதம் கவனியுங்கள்... இதை எழுதும் போதே உள்ளம் நெகிழ்கிறது, உடல் புல்லரிக்கிறது... பிறவிக் கலைஞனய்யா நீர்... எங்களைப் பிறவி ரசிகனாக்கி விட்டீர்....
என்ன தவம் செய்தோம்.. இவரை ரசிக்க... இவரைப் பார்க்க... இவருடன் கலந்துரையாட... இவர் வாழ்ந்த காலத்தில் வாழ...
இதற்காகவே இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்...
கண்ணீருடன்
-
அன்பு சகோதரி விஷாலி ஸ்ரீராம் அவர்கள் நேற்றைய நாளை மிகச் சிறப்பாக facebook பக்கத்தில் அனுசரித்துள்ளார்கள்.. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கான youtube இணைப்புகளைத் தந்துள்ளார்கள்.
விஷாலி ஸ்ரீராம் அவர்களின் பக்கம்
இதனைப் பார்க்க படிக்க facebook அங்கத்தினராவது அவசியம்
அன்புடன்
-
அன்பு சகோதரர் ஸ்ரீநிவாசன் அவர்களே,
- நீங்கள் கவிதை எழுதினீர்கள்
நாங்கள் கவிஞரானோமே
- நீங்கள் நடிகர் திலகத்தை நினைத்தீர்கள்
நாங்கள் உணர்வு கொண்டோம்
- நீங்கள் மேலும் எழுதுவீர்கள்
நாங்கள் தொடர்ந்து சிந்தனையாவோம்
அன்புடன்
-
தேனும் பாலும் -
பாடல்கள்
1. அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே - எஸ்.சி.கிருஷ்ணன், எல்.ஆர்.ஈஸ்வரி
2. ஒட்டுக் கேட்கும் பெண்களே - எல்.ஆர். ஈஸ்வரி
3. மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் - எஸ்.ஜானகி, ஜிக்கி
4. ஒருவனுக்கு ஒருத்தியென்று - பி.சுசீலா
5. நதியினில் வெள்ளம் - டி.எம்.சௌந்தர் ராஜன்
மேலும் சில பாடல்கள் உங்கள் பார்வைக்கு
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
http://www.youtube.com/watch?v=IEFJOdG_O-k
ஒருவனுக்கு ஒருத்தியென்று
http://www.youtube.com/watch?v=JhEUXGZ1lSQ
அடுத்தவன் போட்ட தாளத்துக்கெல்லாம் ஆடாதே
http://www.youtube.com/watch?v=H6E1phXM09g
ஒட்டுக் கேட்கும் பெண்களே உளவு பார்க்கும் கண்களே
- இந்த பாடலில் மெல்லிசை மன்னரின் தாளக் கட்டைக் கவனியுங்கள், யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத வித்தியாசம், பியானோவின் ஆளுமை, எல்.ஆர்.ஈஸ்வரியின் சிறந்த குரல்...
http://www.youtube.com/watch?v=D7NunCnGnho
அன்புடன்
-
Don't know this video already posted in this thread
சிவாஜி கணேசனை நினைவு கூர்தல்
Remembering Sivaji Ganesan
http://video.google.com/videoplay?do...3588006801092#
-
நண்பர் திரு சீனிவாசன் அவர்களின் கவிதை அருமை. எளிய நடை - தேன் சுவை. திரியின் வெளியே இருப்பவர்களுடைய பங்களிப்பையும் ஊக்குவிக்கும் விதத்தில் இந்தக் கவிதையை பதிவு செய்த நண்பர் பம்மலார் அவர்களுக்கு நன்றி.