-
அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்.
சபாஷ்மீனாவைத் தொடர்ந்து வெளியான காத்தவராயன் இலங்கையில் நூறு நாட்களும், சேலம் மற்றும் மதுரையில் இணைந்து நூறு நாட்களும்,
தங்கப்பதுமை சேலத்தில் 102 நாட்களும், ஷிஃப்டிங்கில் வெள்ளிவிழாவும், மதுரையில் 94 நாட்களும் , இணைந்து வெள்ளிவிழாவும் ஓடின.
இவற்றைத் தொடர்ந்து சென்னையில் நூறு நாட்கள் ஓடிய படப்பட்டியலில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன்...
http://oi67.tinypic.com/2wexh6s.jpg
courtesy vaannila f book
-
கட்டபொம்மனைத் தொடர்ந்து சென்னையில் நாறு நாட்கள் ஓடிய நடிகர்திலகத்தின் படப் பட்டியலில் இன்று மரகதம்.
கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவலின் திரை வடிவம்...
படத்தில் சிறப்பு அம்சம் நடிகர்திலகம் பத்மினி இருவருக்கும் தரப்பட்டிருந்த விதவிதமான ஆடை வடிவமைப்பு.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...b8&oe=5B9B9AF3
courtesy vaannila f book
-
-
படித்ததில் பிடித்தது:
யுவகிருஷ்ணா
August 5, 2017
சிவாஜி சிலை
ஜூலை 21, 2006.
அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.
அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.
அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.
ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.
சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.
ஸ்டாப்.
சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.
சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.
ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.
தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.
மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.
மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.
ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’
அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’
சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”
திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.
ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.
இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு, ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.
#######################################
படத்தை பெரிதாக்கி பாருங்கள். நமது உள்ளத்திலிருப்பவர்தான் உள்ளே இருக்கிறார். சாலையில் நின்றவரை அகற்றி மண்டபத்தில் அடைத்தாலும், நம் உள்ளத்தில் அடைந்தவரை அகற்றுபவர் யார் இருக்கின்றார்?
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...49&oe=5B8D5C67
courtesy net
-
தேவிகா.. நடிகர் திலகத்தின் திரை ஜோடிகளில் தவிர்க்கவியலாத இடத்தை பெற்றவர்... பாவமன்னிப்பு படம் தொடங்கி எண்ணெற்ற சிவாஜி சினிமாக்களில் முத்திரை பதித்தவர்... இன்றும் இந்த ஜோடியை ரசிக்கும் 50 வயதை கடந்த "இளைஞர்கள்" ஏராளம்... நடிகர் திலகத்துடன் திரை அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டு இருக்கிறார் நண்பர் ப.தீனதயாளன்... அவரது கட்டுரையில் இருந்து சில விஷயங்களை பார்க்கலாம்.. நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்திரி அளவுக்கு உயர்த்தி எழுதியது.
அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின் சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது... இப்படிப்பட்ட பாராட்டுகள் கிடைக்க நடிப்பால் பட்டை தீட்டப்பட காரணியாக இருந்த நம்மவரை மனம் நிறைந்து பாராட்டுகிறார் தேவிகா....
‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.
உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.
சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.
‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.
அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.
அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.
அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடித்துக் காட்டுகிறேன்.
நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?
நீ மணிமாலாவுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.
டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவருக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.
போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன். அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,
‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.
ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.
அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’
அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.
நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.
அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தன்மை குணம்!
திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.
சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த நடிகர் திலகத்தின் பாராட்டு மிக மிக அபூர்வம்...
‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு இரண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும் என்றெல்லாம் சிலாகிக்கிறார்....
நடிப்பு என்பது தனக்கு மட்டுமே உரித்தானது அல்ல... திறமை உள்ளவர்கள் யாராகினும் உடன் நடப்பவர்களின் நடிப்புத் திறமையை பட்டைதீட்ட தயங்கியதில்லை... காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறைதான் அவரை உயர்ந்த நடிகராக நிலை நிறுத்தி இருக்கிறது...
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d0&oe=5B82C986
courtesy jahir hussain f book
-
-
-
-
-
தினகரன் வெளியிட்ட திரிசூலம் சிறப்பு மலர்....
(senthilvel)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...98&oe=5B9B41D8
-
-
-
1970ல், தெலுங்கு பட நடிகர், நடிகைகள் ஒரு ஞாயிற்றுகிழமை சுற்றுலா போக தீர்மானித்தனர். மெட்ராஸ்க்கு அருகில் உள்ள சிவாஜி கார்டனில் விளையாட்டு போட்டிகள் வைத்து அந்த ஞாயிற்றுகிழமையை கழித்தனர். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் அவர்களுக்கு அந்த கார்டனுக்கு செல்ல அனுமதி அளித்ததோடு அங்கு நடந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கு ஏற்றார்.. முதலில் கபடி மேட்ச், MUSICAL CHAIR விளையாட்டு, MOVING ICE BABY GAME போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றது
புகைப்படங்கள் கீழே.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...57&oe=5B988B1B
courtey R.Vijaya f book
-
-
-
-
-
-
-
இன்றைய விகடன் இ மேகஜின் வலை தளத்தில் வந்தது,
அப்போதெல்லாம் தினத்தந்தி செய்த தொடர்ச்சியான செயல்,
அதாவது எம்ஜிஆர் திரைப்படங்கள் மட்டுமே ஓடியது போலவும், வசூலித்தது எனவும் எழுதுவது,
இன்றைய விகடன் வலைத்தளத்திலும் தொடர்கிறது,...
பொதுவாகவே Google ல் சென்று பார்த்தோமானால் கூட எம்ஜிஆர் இன் திரைப்படங்கள் 50 நாட்கள் ஓடியது, 75 நாட்கள் ஓடியது, many screens Run for 100 rd days போன்ற பொய்யானத் தகவல்களை பார்க்க முடிகிறது, ஆனால் நிஜமாகவே ஓடி வெற்றி கண்ட நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு அது போன்ற தகவல்களை பார்க்க முடிவதில்லை,
இன்றைய விகடன் வலைத்தளமும் அதைத்தான் சொல்கிறது,
காவல் துறை அதிகாரிகள் பாத்திரத்தில் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய பதிவு,
இங்கு நடிகர் திலகம் நடித்த தங்கப் பதக்கம் தான் நம்பர் ஒன் இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எஸ்.பி.சௌத்ரியின் அருகே ஒரு பயல் நிற்க முடியாது என்பது எழுதப் படாத சட்டம்.
அதைக் குறிப்பிட்ட விகடன் ஆசிரியருக்கு நன்றி,
அதே தருணத்தில் தங்கப் பதக்கம் அடுத்து எம்ஜிஆர் நடித்து வந்த ரகசிய போலீஸ் 115 என்ற திரைப்படம் எந்த விதத்தில் காவல் துறை அதிகாரிகள் பற்றிய பெருமை பேசுகின்ற திரைப்படம் என்பது புரியவில்லை, புகழுக்குரிய நடிகர் திலகம் திரைப்படத்தை எடுத்துக் கொள்ளும் போது கொஞ்சமும் தகுதியில்லாத பிற நடிகர்களின் திரைப்படங்களையும் ஒப்பிடுவது, இப்படித்தான் சினிமாக் காட்சிகளில் கூட புகுத்துகிறார்கள், உதாரணமாக விவேக் சிங்கம் ஒன்று என்ற திரைப்படத்தில் என் கடமை எம்ஜிஆர் தங்கப் பதக்கம் சிவாஜி என்பார்,
சாமர்த்தியமாக எழுதுகிறார்கள்
தங்கப் பதக்கம் 4 திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய ஈடு இணையற்ற வெற்றிக் காவியம், அதைக் குறிப்பிடாமல் எம்ஜிஆர் இன் ரகசிய போலீஸ் 100 நாட்கள் ஓடியது என மட்டுமே எழுதுவது,
பட்டியலில் மீதமுள்ள காவல் துறைஅதிகாரிகள் பற்றிய டாப் பத்து படங்கள்,
தங்கப் பதக்கம்
ரகசிய போலீஸ் 115
மூன்று முகம்
வேட்டையாடு விளையாடு
கேப்டன் பிரபாகரன்
வால்டர் வெற்றிவேல்
தெரி
என்னை அறிந்தால்
சாமி
காக்கி சட்டை,
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...4c&oe=5B82D5E6
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...16&oe=5BC2976F
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f7&oe=5B95A73E
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...61&oe=5B7EB3A4
courtesy sekar -n. t. fans
-
போலீஸ் உடைக்கே ஒரு மரியாதையை வாங்கி தந்தவர் நம்ம நடிகர் திலகம்தான் . தங்க பதக்கம் படத்துலே SP சவுத்திரியா அவர் நடிச்ச பிறகுதான் ,போலீஸ் ரோல் எல்லோராலும் பேசப்பட்டது ...என்ன நான் சொல்றது ?
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...3c&oe=5B88A300
courtesy krishnamoorthy.G f book
-
(நடிகர் சிவாஜி கணேசன், சினிமா உலகில் கால் வைத்து 50-வது ஆண்டு சாதனை விழாவுக்கு, ராஜீவ்காந்தி எம்.பி. கடந்த 1984–ம் ஆண்டு செப்டம்பர் 25–ம் தேதி எழுதிய அரிய கடிதம்)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
24,அக்பர் ரோடு, புதுடெல்லி–110011
... அன்பார்ந்த ஸ்ரீ சிவாஜிகணேசன்,
6 வயதில் நாடக உலகில் கால் வைத்து, சினிமா உலகில் 50 ஆண்டுகள் சாதனை படைத்துள்ள நீங்கள், தனிச்சிறப்பு பெற்றவர். உங்களின் நாடகம், சினிமா வாழ்க்கை, உங்களை மிகச்சிறப்பு பெற்ற கலைஞர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் தங்களின் நல்ல குணத்தையும், தாராளமாக நன்கொடைகள் அளிக்கும் மாண்பையும், தங்களுக்கே உள்ள தனிச்சிறப்பையும் பாராட்டுகிறேன்.
தாங்கள் 250–க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட வேடங்களில் நடித்து, திரளான ரசிகர்களை பெற்றுள்ளீர்கள்.
தங்களின் சினிமா உலகில் 50 ஆண்டு சாதனையை பாராட்டுகிறேன். தொடர்ந்து தாங்கள், கலையுலக பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
அன்புடன்.
(ஷிமிநிழிணிஞி) ராஜீவ்காந்தி
பெறுபவர்
ஸ்ரீ சிவாஜி கணேசன் எம்.பி.
16,போக் ரோடு, டி நகர்,
சென்னை 60017
courtesy senthilvel f book
-
அன்பிற்குரிய மக்கள்தலைவரின்
அன்பு இதயங்களே,
தொடர்ந்து மதுரையில் சாதனை படைத்து வரும் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம்,
... கலைத்துறையின் ஸ்டிரைக் காரணமாக
சென்ற மாதம் வெளியாக வேண்டிய
மாபெரும் வெள்ளிவிழாக் காவியம் சந்திப்பு வரும் 25.05.2018 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெற்றிநடை போட வருகிறது.
எப்போது வந்தாலும் நடிகர்திலகத்தின் திரைபபடத்திற்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து, வசூல் சாதனை புரிய வைக்கும்,சிங்கத்தமிழனின் வழி நடக்கும் உத்தம இதயங்களே,
சந்திப்பு திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து என்றும் மதுரை சிவாஜி கோட்டை என்பதை நிரூபிப்போம்.
ஞாயிறு மாலைக் காட்சி ரசிகர்கள் சிறப்புக் காட்சி,
இன்றே தயாராகி விடுங்கள்.
கலையுலக டானை சந்திக்க....
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...41&oe=5BC39553
Sundar Rajan
-
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து வெளியான இரும்புத்திரை கோவையில் 23 வாரங்களும், மதுரை மற்றும் திருச்சியில் 90 நாட்களும் ஓடியது. பட்டியலில் அடுத்து தெய்வப்பிறவி.
1960 ஆம் ஆண்டில் அகில இந்திய சிறந்த படமென நற்சான்றிதழ் பரிசைப் பெற்றது.
தெலுங்கில் 'பிந்தியா' என்னும் பெயரில் REMAKE செய்யப்பட்டும், 'அனுமானம்' என்னும் பெயரில் DUBBING செய்யப்பட்டும் வெளியானது.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...00&oe=5B7D5B12
vaannila
-
-
-
-
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a9&oe=5B8E0A32
சினிமா சினிமா to மலரும் நினைவுகள் தமிழ் திரைப்பட பழைய பாடல்கள்
நான் சிவாஜியின் ரசிகன்: தேவே கெளடா
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும். மொழி புரியாவிட்டாலும் சிவாஜியின் படங்களைபார்க்காமல் விட மாட்டேன் என்று ...முன்னாள் பிரதமர் தேவே கெளடா கூறினார்.
சிவாஜி-பிரபு அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த மாணவர்களுக்கு கல்வி உதவியளிக்கும் விழாவில் கெளடா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, சிவாஜி கணேசனின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் அந்தபாத்திரமாகவே மாறி விடும் ஆற்றல் அவருக்கு மட்டுமே உண்டு. சிவாஜி நடித்த பராசக்தி, வீரபாண்டியகட்டபொம்மன் ஆகிய படங்கள் இன்றும் எனது நினைவில் நிற்கின்றன. மறக்க முடியாத படங்கள் அவை.
தமிழ் எனக்கு அவ்வளவாக புரியாவிட்டாலும் கூட சிவாஜியின் தீவிர ரசிகன் நான். அவர் நடித்த ஒரு படத்தையும்விடாமல் பார்த்து விடுவேன் என்றார் கெளடா.
கர்நாடகத்தைச் சேர்ந்த அனைவருமே அந்த மாநிலத்தி சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரை மட்டுமே புகழுவார்கள்.வேறு யாரையாவது புகழ்ந்து பேசினால், அடுத்த நாளே அவர்களை ராஜ்குமார் ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம்.
ஆனாலும் கெளடா, சிவாஜியை மிகவும் வெளிப்படையாக புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Sekar .P
தொலைக்காட்சி சேனல்களில் இன்று ஒளி பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!!
காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் "புதிய பறவை"
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் " எமனுக்கு எமன்"
பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் "ஜல்லிக்கட்டு"...
மாலை 4 மணிக்கு ஜெயா மூவியில் "புதிய பறவை"
இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் "தங்க மலை ரகசியம்"
இரவு 7:30 க்கு முரசு சேனலில் "என் மகன்"
இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் "சவாலே சமாளி"
போதும் என நினைக்கிறேன்,
கண்டு மகிழ்வோம்
இனிய காலை வணக்கம்!!!
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...13&oe=5B82C824
-
-
-
-
-
வசூல் ராஜாவின் வருகை ..
நாளைமுதல் சென்னை அரங்குகளில்...
( புகைப்படம் உதவி : மதுரை சுந்தர்ராஜன்)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a3&oe=5B8A53BC
vaannila
-
-
-
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...ef&oe=5B79B501
நலிந்து கிடக்கும் திரையுலகத்திற்கு புத்துயிர் ஊட்ட வருகிறார் நம் உள்ளம் கவர்ந்த ராஜா The Great
-
-
-