http://rufusonline.blogspot.com/2011...er-sivaji.html
Karnan Advt. published in B'lore Edition also.
Printable View
http://rufusonline.blogspot.com/2011...er-sivaji.html
Karnan Advt. published in B'lore Edition also.
திரு பம்மல் சார்,
கை கொடுத்த தெய்வம் பட விளம்பரங்கள் சூப்பர் .நடிகர்திலகம் மறைந்த செய்தியை தாங்கி வந்த நாளிதழ் பக்கங்கள் கண்ணீரை வரவைத்துவிட்டது.
கௌரவ கொண்டாட்டங்கள் என்னை உட்கார்ந்து கொண்டே ஆட்டம் போட வைத்தது,நன்றி.
புதியபறவை அளவுக்கு மலர்மாலைகள் இல்லாததில் ஒரு சிறு வருத்தம்.
மண்ணை விட்டு மறைந்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை விட்டு மறையாத நடிகர்திலகத்திற்கு பத்தாமாண்டு நினைவஞ்சலி
A tribute by Cable Murugan, Nelson, Stalin Enbaraj, Viruthunagar - THANKS
http://www.youtube.com/watch?v=5uOi9sin3MY
நடிகர்திலகத்தின் நினைவு நாளை நினைவுகூறும் வகையில் இன்று காலை மெகா டிவியின் 'அமுதகானம்' நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் திரைப்பாடல்களில், நவரசங்களையும் காட்டும் வண்ணம் ரசத்துக்கு ஒன்றாக பாடல்களைத்தொகுத்து வழங்கினார் திரு. ஆதவன்.
ஆனந்தம் - நான் தன்னந்தனிக்காட்டு ராஜா
கோபம் - நீயும் நானுமா கண்ணா
வீரம் - வெற்றிவேல் வீரவேல்
வெட்கம் - பாலக்காட்டுப் பக்கத்திலே
ஆசை - பொன்மகள் வந்தாள்
காதல் - மயக்கமென்ன்ன இந்த மௌனமென்ன
சாந்தம் - ஆறு மனமே ஆறு
இதுபோக கடந்த மூன்று தினங்களாக பொதிகையின் 'என்றும் இனிமை' நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் பாடல்களையே, விளக்கங்களுடன் தொகுத்து வழங்குகிறார் திரு வா.யோகானந்த்.
மரணமே இல்லாத மனிதன் அவன்
முடிவே இல்லாத தொடர்கதை அவன்
நாம் வாழும் காலம் மட்டுமல்ல
நம்முடைய சந்ததிகளின் தலைமுறைகளையும்
கடந்து வாழப் போகிறவன்
நூற்றாண்டுகள் இனியும் கடந்த பின்னும்
நினைவில் நிற்கப் போகும் காவியம் அவன்
தமிழ் சினிமா இருக்கும் காலம் வரை அவனின்
தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கும்.
நெஞ்செமெல்லாம் அவன் எண்ணங்கள் நிறைந்திருக்க
என்றென்றும் அந்த யுக கலைஞனின் நினைவோடு
நாம் வாழும் காலம் அவன் புகழை முன்னெடுத்து செல்வோம்!
அன்புடன்
எங்களின் இமயத்திற்கு கண்ணீர் அஞ்சலி
- பம்மலாரின் 2001 ஆம் ஆண்டு நடிகர்திலகத்தின் மறைவு தினப் பத்திரிக்கை பதிவுகள் உண்மையிலேயே கண்ணீரை மீண்டும் வரவழைத்துவிட்டது
சாரதா மேடம், உங்களுடைய அனுபவ பதிவு ஒரு பாக்கியம்தான்.
ராகவேந்திரன் சார் நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவுகளுக்காக நன்றி. 1000 பதிவுகளைக் கடந்ததற்கு வாழ்த்துக்கள்.
Please click the link below to view the news:
http://www.chennailivenews.com/Enter...i-Ganesan.aspx
இன்று நடிகர் திலகத்தின் நினைவுநாளை முன்னிட்டு சாந்தி தியேட்டர் சென்றிருந்தேன், அங்கு ரசிகர் மன்றத்தினர் சிவன் வேடத்தில் (திருவிளையாடல்) ntஅவர்கள் தோன்றும் பெரிய படத்தினை வைத்து விளக்குகள் ஏற்றி வழிபட்டு கொண்டிருந்தனர், இது பற்றிய புகைப்படங்களை பம்மலார் பதிவேற்றுவார் என நம்புகிறேன், பலதரப்பட்ட ரசிகர்கள் திரண்டு ntஅவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர், ஒரு வித்தியாசமான ரசிகர் பராசக்தி படம் முதல் பூப்பறிக்க வருகிறேன் வரை மனப்பாடமாக ஒப்பித்துகொண்டிருந்தார், மேலும் திரு ராகவேந்தர் சார், முரளி சார், மற்றும் பம்மலார் உடன் வெகு நேரம் ntஅவர்களின் சாதனைகள் பற்றி பேசினோம்.
வாழ்க நடிகர்திலகத்தின் புகழ்.
டியர் பார்த்தசாரதி சார்,
எங்கே 'நமது திரியின் சாரதி' என எண்ணிக் கொண்டிருந்த போது, 'யாரடி நீ மோகினி' என வந்து அதகளப்படுத்திவிட்டீர்கள்.
எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !
தங்களது 21,22 ஜூலை 2001 நினைவுப்பதிவு, படிக்கும் போதே கண்களில் நீரை வரவழைத்துவிட்டது.
மேலும், தாங்கள் மிக அருமையாக பதிவு செய்துள்ள 'யாரடி நீ மோகினி' பாடல் குறித்து இன்னும் சில செய்திகள்:
- இப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது அவருக்கு High Fever. அதனுடனேயே அநாயாசமாக நடனமாடி பாடி நடித்து பேர் வாங்கியிருக்கிறார் என்றால் அவரை விட்டால் வேறு யார் அவதார புருஷர். இன்னொன்று, தன்னால் படப்பிடிப்புக்கும், படக்குழுவினருக்கும் எந்தவிதத்திலும் சங்கடம் வந்துவிடக்கூடாது என்கின்ற இறைகுணம்.
- தாங்கள் குறிப்பிட்டுள்ள 15.8.1986 சென்னைத் தொலைக்காட்சி மெகா பேட்டியில் கமலுக்கு அவர் பதில் கூறுவார், "FULL CREDIT TO HIRALAL" என்று. தான் பாடி நடனமாடி நின்று நிலைநிறுத்தி பேர் வாங்கிய Stylish Performanceன் Creditஐ அந்தப் படத்தின்/பாடலின் நடன இயக்குனருக்கு அளிக்க இவரைத் தவிர வேறு எந்த ஹீரோவுக்கும் மனம் வராது. தான் செய்த தர்மத்தைத் தாரை வார்த்தான் கர்ணன். அக்கர்ணனாக திரைக்காவியத்திலும், நிஜத்திலும் வாழ்ந்து காட்டியவரோ தனக்கு வந்த புகழையே தாரை வார்க்கிறார். கர்ணனை மிஞ்சும் கர்ணன் இவர்.
- இப்பாடலில் டி.எம்.எஸ், ஜமுனாராணி, ஜிக்கி, குழுவினருடன் சிறந்த பின்னணிப் பாடகியான ஏ.பி.கோமளாவும் பாடியிருக்கிறார். "விந்தையான வேந்தனே" எனத் தொடங்கும் வரியிலிருந்து அந்தப் பெண்குரல்[ரீட்டா] முடியும் வரை அவர்தான் பாடியிருப்பார்.
- நமது வீடியோவேந்தர் எப்பொழுதும் போல் ஒளிக்காட்சியை உடனுக்குடன் பதிவிட்டு அசத்தியதோடு, கத்திரிக்கு உள்ளான வரிகளையும் பத்திரப்படுத்தி கொடுத்திருக்கிறார். இதனுடன் சேர்க்க வேண்டிய இன்னொரு அரிய தகவல் என்னவென்றால்,
"ஹா ! காதலி நீதானடி
பேசவே ஆகாதடி
ரம்பை போல நீயே ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி" என்ற வரிகள் முதலில்
"ஹா ! திராக்ஷையின் தேன் சாறடி
மோக்ஷமே நீதானடி
மீறுகின்ற போதை ஏறுகின்ற போதே
மேலும் மேலும் நீ ஊற்றடி" என்றே இருந்தது.
[இந்த வரிகள் "உத்தமபுத்திரன்" ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தில் உள்ளன.]
இதுவும் சென்ஸாரின் செல்லரிப்புக்கு முழுதும் இரையானதால் முந்தைய வரிகள் பாடலில் பின்னதாக இடம்பெற்றன.
சென்ஸாருக்கும் நமக்கும் சரியான ராசிதான். முதல் திரைப்படமான "பராசக்தி"யை பிரச்னைகுள்ளாக்கியபோது அது பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. "யாரடி நீ மோகினி"யை நமது சாரதி பிச்சு உதறுகிற அளவுக்கு சிரஞ்சீவித்தன்மை பெற்றுவிட்டது. "காதல் ராணி கட்டிக் கிடக்க" பாடலுக்கு கத்தரி போடலாமா என சென்ஸார் எண்ணி விடுவித்ததில் மற்ற பாடல்களைப் போல அந்தப்பாடலும் சூப்பர்ஹிட், படமும் செஞ்சுரி[1900-1999]ஹிட்.
'யாரடி நீ மோகினி' என அறைகூவல் விடுத்து இந்தப் பதிவை எழுதத் தூண்டிய தங்களுக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.