https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...46&oe=5C4F3822
Printable View
https://youtu.be/GMi3TMNImKE
சிவாஜி பாட்டு -46
---------------------------------
மனிதனின் கண்களில் நடப்பு
மட்டுமே காட்சிகளாய் இருப்பதில்லை.
அவனது இன்ப, துன்பங்கள் நிரம்பிய, அவன் மிகவும் சிரமப்பட்டுத் தாண்டி வந்த அவனது கடந்த காலம்...
ஏற்கனவே அவன் நுகர்ந்து தவித்த துன்பங்களின் பொசுங்கல் வாடையை இனியும்
நுகர்ந்து விடலாகாதென்று அவன்
பிரயத்தனங்கள் மேற்கொண்டிருக்கிற அவனது
இன்றைய நிகழ்காலம்...
வளமும், புகழுமாய் அவன் எதிர்கொள்ளக் துடிக்கிற அவனது
எதிர்காலம்...
இவற்றிலும் அவன் கண்களுக்குக் காட்சிகளிருக்கின்றன.
---------
"இருந்தோம்.. வாழ்ந்தோம்.. போனோம்" என்று அர்த்தமற்ற
வாழ்க்கை வாழ்கிற வெகுசராசரி
மனுஷர்களைத் தவிர்த்த மற்ற
எல்லோருக்கும் அவசியமான பாடல்.. இது.
எதிர்காற்றை மீறி மேட்டில் மிதிவண்டி அழுத்துவதற்கு நிகரானது.. நடைமுறை வாழ்வின்
சவால்களை மீறி இலட்சியத்துடன் வாழ்வது.
வாழ்வில் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும், நம்பிக்கை என்பது
அவசியத் தேவையாகிறது.
" எங்களுக்கும் காலம் வரும்"
இந்தப் பாடலை நிறையப் பேர்
நம்பிக்கைப் பாடல் என்றே கருதுகிறார்கள்.
ஊன்றிக் கவனித்தால் தெரியும்..
இது வெற்றிப் பாடலென்பது.
" நாளை இப்படிச் செய்வோம்.. அப்படிச் செய்வோம். அப்போது எங்களுக்குக் காலம் வரும்" என்பதாய் இந்தப் பாடல் நகரவில்லை.
"இன்றொரு இனிமை செய்தோம். வென்றோம்" என்று பாடல் நகர்கிறது.
உழைப்பின் உன்னதம் உணர்த்துவதாய் ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கிய சந்தோஷத்தில் வெடிக்கும் பாடல்
இது.
" செய்வோம்" என்கிற அலட்டல்
கிடையாது. செய்து முடித்தவர்களின் அடங்காத மகிழ்வு.
ஆர்ப்பாட்டமில்லாத ஆனந்தம்.
கர்வம் தடவாத களிப்பு.
புயலாய்ச் சாய்த்து விட்டுப் போகிற வேகமில்லை.. இந்தப் பாடலில். வியர்வை உலர்த்தும்
மென்காற்றாய் ஒரு நிதானம்
இந்தப் பாடலில்.
நன்மை செய்து விட்டு நல்ல விளைவுக்குக் காத்திருப்போரின்
பொறுமை " காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே!"
என்ற வரிகளில் புரியும்.
அடுத்த மனிதனுக்கும் அன்பு கொடுத்து வாழ நினைக்கும் பெருங்குணம் " உறவும், சுவையும்
என்றும் நாம் வளர்ப்போம்" என்ற
வரிகளில் புரியும்.
--------
ஒளிவு, மறைவற்ற உள்ளத்தின்
பேரானந்தம் பின்னணியில் இசை போட ஆடிப் பாடும் பெருங்கூட்டத்தை நம்மோடு ஒப்பிடலாம்.
அணிந்திருக்கிற முழுக்கால் சட்டையும், வெள்ளை மேல்சட்டையும் போன்ற "தாராளமான" மனங்கொண்ட நம்
தலைவன் நம்மை வைத்துக் கொண்டிய பாடிய " வஞ்சமில்லா
வாழ்க்கையிலே தோல்வியுமில்லை" என்கிற வரி
அப்படியே பலிக்கும்.
நம் சபைகளில் என்றுமிந்த வெற்றிப் பாடல் ஒலிக்கும்.
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...6c&oe=5C7A4AE1
சென்னை சாந்தியில் எங்கிருந்தோ வந்தாள் ஓடிக்கொண்டிருந்தபோது.. இக்காட்சி தங்கைக்காக படத்தில் இடம் பெற்றுள்ளது.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
ஒரு மாதகால இடைவெளியின் பின்
மீண்டும் இங்கு வருவதில் மகிழ்ச்சி
இத்திரியினை தொய்வின்றி கொண்டு செல்லும்
திரு ராகவேந்திரா சார் அவர்களுக்கு மிக்க நன்றி
நடிகர் திலகத்தின் 90 வது பிறந்த நாளை ஒட்டி
இலங்கை பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை
http://oi65.tinypic.com/2mzz68l.jpghttp://oi65.tinypic.com/1t0do4.jpghttp://oi68.tinypic.com/dw7szk.jpg
யாழ் சிவாஜி ரசிக நண்பர்களால் ஒட்டப்பட்ட போஸ்ட்டர்
http://oi66.tinypic.com/2s80lfc.jpghttp://oi65.tinypic.com/2ef5o40.jpghttp://oi63.tinypic.com/2wdaky8.jpg
( a v m குமரன் )
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...e5&oe=5C8317DB
சிவாஜி – எம்.ஜி.ஆர்., வள்ளல் யார்?
பத்திரிகையாளர்களுக்கு ‘கவர்’ கொடுக்கும் பழக்கம் ‘சிவாஜி’யிடம் இல்லாததால் அவரை ‘கஞ்சன்’ என்று கதை கட்டியவர்கள் பத்திரிகையாளர்களே.
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ஒழித்து, காமராஜர் கொண்டு வந்த கிராமபுறப் பள்ளிக் கூடங்கள் திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாய் கொடுத்தவர் சிவாஜி கணேசன். இன்றைய மதிப்பு சில கோடி....
அதற்காகவே ‘கொடைவள்ளல்’ என்றுவிடுதலையில் தலையங்கம் எழுதி கொண்டாடினார் சிவாஜியை பெரியார்.
100 முறைக்கும் மேல் நடத்தப்பட்ட கட்டபொம்பன் நாடகத்தில் வசூலான லட்சக்கணக்கான தொகையையும் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கே கொடுத்தார் சிவாஜி.
சிவாஜியைப் போல் அரசு திட்டங்களுக்கு அப்போது எம்.ஜி.ஆர். எந்த நன்கொடையும் கொடுத்ததில்லை. அவர் பிரமுகர்களுக்கு உதவி செய்தார். அதைப் பத்திரிகையாளர்களுக்குக் கவர் கொடுத்து செய்தியாக்கிக் கொண்டார்.
வாங்கிய பிரபலங்களும் இன்றுவரை அதைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். - வே.மதிமாறன்.
பாகப்பிரிவினை
இன்றைக்கு 59 ஆம் ஆண்டினை நிறைவு செய்யும் பாகப்பிரிவினை வெற்றிக் காவியத்தை, இந்தி மொழியில் தயாரிக்க முடிவெடுத்து, அன்றைக்கு அங்கு முன்னணி நாயகர்களாக இருந்த திலீப்குமார், ராஜ்கபூர், தேல் ஆனந்த் ஆகியோரை அணுகியபோது, நடிகர்திலகத்தின் ஊனமுள்ளத் தோற்றமும் நடிப்பும் கண்டு, இவரைப்போல் நம்மால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். கடைசியில் சுனில்தத் நடிக்க, பீம்சிங் இயக்க, 'காந்தான் ' என்ற பெயரில் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கிடைத்த பெரும் இலா...
பத்தில் தயாரிப்பாளர் வாசுமேனன் 'வாசு ஸ்டூடியோ'வையே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின்போது கண்டினியூட்டி ( Continuity) தவறக்கூடாது என்பதற்காக, நடிகர்திலகம் ஏற்றிருந்த கன்னையன் கதாப்பாத்திரத்தின் கையசைவுகளை கவனிப்பதற்காகவே ஒரு உதவி இயக்குநரை நியமித்திருந்தது அன்றைய திரையுலகில் அதிசயமான செய்தி.
நடிகர்திலகம் நடித்து பராசக்திக்குப் பிறகு 200 நாட்களைக் கடந்த இரண்டாவது கருப்பு-வெள்ளைப் படமான பாகப்பிரிவினை 'கலசி உண்டே கலது சுகம்' என்னும் பெயரில் தெலுங்கிலும், 'நிறகுடம்' என்னும் பெயரில் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
ஸ்ரீ, கீதா, சாரதா, ஸ்வஸ்திக் என்று பெங்களூரில் முதன்முதலாக நான்கு அரங்குகளில் 50 நாட்ளைக் கடந்து ஓடிய பாகப்பிரிவினை முதன்முதலாக திண்டுக்கல் NVGB அரங்கில் 100 நாட்கள் ஓடிய படமாகும்.
மதுரை சிந்தாமணி அரங்கில் 216 நாட்கள் ஓடிய மொத்த வசூல் ரூ. 3,36,180.54 ஆகும்.
1959 ஆம் ஆண்டுக்கான தேசியவிருது வெள்ளிப்பதக்கம் பெற்ற படமும்கூட.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c0&oe=5C80EA78