:rotfl:
Printable View
:rotfl:
கலைஞர் "டிவி'யில் திங்கள் முதல், வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் "லட்சியம்' தொடரில் திருப்பம். வெளியில் சமூகசேவகராகவும், திரைமறைவில் பெண் பித்தராகவும் இருப்பவர் பரசுராமன்
சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்டின் மகளை மணக்க விரும்புகிறார். ஆனால், பரசுராமனால், சகோதரியின் வாழ்க்கை பறிபோனதால் கொதித்த தங்கை கவிதா, இந்த திருமணத்தை நிறுத்துகிறாள். பரசுராமனாக மலையாள படங்களில் வில்லனாக வரும் தேவன் நடித்துள்ளார். சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் மகளாக தீபா வெங்கட், கவிதாவாக மஞ்சரி மற்றும் ராஜ்காந்த், சாய்பிரசாந்த், பிருந்தா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
'ஆட்டம் பாட்டம்' நடனப்போட்டியில், பேய்களின் அட்டூழியங்கள் ஒழிந்து, கடந்த மூன்று நாட்களாக 'இந்திய கலாச்சார நடனங்கள்' ரவுண்ட்.
பங்குபெறும் போட்டியாளர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கும் பல்வேறு நடனங்களான பரதம், கதகளி, குச்சுப்புடி, ஓடிஸி, பாங்க்ரா, டாண்டியா, நாட்டுப்புற நடனங்கள்... என பல்வேறு விதமான நடனங்களில் அசத்துகின்றனர். முந்தாநாள் ஒரு பெண் ஆடிய கிருஷ்ணா - ராதா நடனம் அழகாக இருந்தது. (அதில் வந்த பாடல் 'தசாவதாரம்' படத்திலுள்ளதாமே).
இன்னொருவர் கான்செப்டை தப்பாக புரிந்துகொண்டு, 'இந்திய நாடு என் வீடு' பாடலுக்கு குரூப் டான்ஸர்களோடு ஆடினார். அது கலாச்சார பாடல் அல்ல, மத மற்றும் மொழி நல்லிணக்கப்பாடல். அதனால் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது.
அதேசமயம், இன்னொரு பெண் ஆடிய 'பொம்மலாட்டம்' நடனமும் அருமையாக இருந்தது. (ஆடியவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். இனிமேல் கூர்ந்து கவனிக்க வேண்டும்). நேற்று பஞ்சாபி பாங்க்ராவுக்கு ஒருவர், நாம் எதிர்பார்த்தபடியே 'ஆடலுடன் பாடலைக்கேட்டு' பாடலுக்கு ஆடினார். ஆட்டத்தில் இறுதியில் கடத்தல் கும்பலை போலீஸார் மேடையிலேயே கைது செய்தனர்.
நேற்று இறுதியில் ஆடிய ஒருவர், தன் குழுவினருடன் முழுக்க வெள்ளை ஆடை அணிந்து மிக அற்புதமாக ஆடினார். அது என்ன வகையான நடனம் என்பது தெரியவில்லை. ஆனால் ஸ்லோ மூவ்மெண்ட்டுகளுடன் ரொம்ப அட்டகாசமாக இருந்தது. குரூப் நல்ல சப்போர்ட், அவர்களும் எந்த ஒரு ஸ்டெப்பையும் சொதப்பாமல் ஆடினர்.
பிரசன்னா மாஸ்டரும் பூஜாவும் நடுவர்களாக இருந்து அசத்துகின்றனர்.
saradhaa
:clap:
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் `ஆனந்தம் விளையாடும் வீடு'
தயாள குணமும், மனித நேயமும் கொண்ட தொழிலதிபர் ராம்குமாருக்கு, வெங்கட், விக்னேஷ், விஜய் என மூன்று மகன்கள். அப்பா மீது மகன்களும், மகன்கள் மீது அப்பாவும் அதிகமான அன்பு காட்டும் அழகிய பூந்தோட்டம் ராம்குமாரின்
குடும்பம்.
மகன்கள் வெங்கட், விக்னேஷ் இருவருக்கும் பெண் பார்த்து திருமணம் நடக்கிறது. வீட்டுக்கு வந்த இரு மருமகள்கள் மூலம் குடும்பத்தில் புயல் உருவாகிறது. வீடு கலவர பூமியாகிறது.
அன்னை தெரசா இல்லத்தின் நிர்வாகி சீதா அந்த இல்லத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவர், ஆனால் அவர் ஒரு தூக்கு தண்டனைக் கைதி.
கலவர பூமியாகிவிட்ட ராம்குமாரின் வீட்டிற்குள் குடும்பத் தலைவியாக வருகிறார் சீதா. அவர் அந்த வீட்டில் அடியெடுத்த வைத்த பிறகு ராம்குமாரின் குடும்ப பிரச்சினை தீர்ந்ததா? சீதா தூக்கு தண்டனையிலிருந்து தப்பினாரா? கேள்விகளுக்கு விடையே `ஆனந்தம் விளையாடும் வீடு'
இத்தொடரில் சீதாவாக நடிகை மவுனிகா, தொழிலதிபர் ராம்குமாராக சுபலேக சுதாகர், மருமகள்களாக வினோதினி, தேவிபிரியா, மற்றும் `கவிதாலயா' `கிருஷ்ணன், `அச்சமில்லை' கோபி, தேவானந்த், விஜய் ஆனந்த், சரத், ராஜேந்திரன், புவனா, சங்கீதா பாலன், சொப்னா, சுந்தரி, வத்சலா ராஜகோபால், மாஸ்டர் சாருக்கான் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு: ராஜு வி.கிருஷ்ணா. இசை: கணேஷ். கதை, திரைக்கதை: விமலா கணேசன். பாடல்கள்: கிருத்தியா. வசனம்: கிருஷ்ணசாமி. தயாரிப்பு மேற்பார்வை: கானூர் என்.நிர்மல். தயாரிப்பு: ஆர்.ரவீந்திரன், ஜெ.அப்துல் லத்தீப். இயக்கம்: ஆர்.தேவேந்திரன்.
அடுத்த மாதம் 16-ம்தேதி முதல் இந்த தொடரை கலைஞர் டிவியில் காணலாம்.
ayyayyO, indha ammaavaa...?.Quote:
Originally Posted by R.Latha
Overaa alattikkuvaangaLE.. :evil: :shock: :oops:
thank God, this serial is coming in 12 noon, when we are in office.
தெக்கித்திப்பொண்ணு இனி திருப்பம் தான்Quote:
கலைஞர் டிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி தோறும் ஒளிபரப்பாகும், தெக்கித்திப் பொண்ணு தொடர் 30 நாளை தாண்டுகிறது.
பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கும் இந்த தொடரில் இனி படு திருப்பம் தான். நடிகர் நெப்போலியன், ரஞ்சிதா, சுவர்ணமால்யா, சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். ரேட்டிங்கில் சக்கை போடு போடுகிறது.
வைர மங்கை
கலைஞர் டிவியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் புது போட்டி நிகழ்ச்சி வைரமங்கை
பங்கேற்கும் பெண்கள், கராத்தே, டான்ஸ், மற்போர், கலை, ஓவியம், கைத்தொழில், சமையல் கலை, வாகன ஓட்டுதல் போன்ற சாதனைகளை படைப்பர். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சி இது.
AZHAGIYA TAMIL MAGAL
கலைஞர் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி, அழகிய தமிழ் மகள்நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகளிர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் என்று மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அலசி ஆராயப்படுகிறது.
ஸ்ரீவெங்கடேசுவரா டெலிபிலிம்ஸ் தயாரித்து வழங்கும் இந்நிகழ்ச்சி, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்தப் பகுதியின் கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள், இழைக்கப்படும் அநீதிகள் ஆகியவற்றை தோலுரித்து அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கலைஞர் டிவியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் புது போட்டி நிகழ்ச்சி வைரமங்கை
பங்கேற்கும் பெண்கள், கராத்தே, டான்ஸ், மற்போர், கலை, ஓவியம், கைத்தொழில், சமையல் கலை, வாகன ஓட்டுதல் போன்ற சாதனைகளை படைப்பர். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் நிகழ்ச்சி இது.