Quote:
மெய்யா, பொய்யா!
வசந்த் டி.வி.யில் சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி; `மெய்யா, பொய்யா.' சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ - மாணவிகள், சமூக சேவகர்கள், மனித உரிமை கழக பிரதிநிதிகள், தனியார் நிறுவன அலுவலர்கள் என பல்துறை அறிஞர் பெருமக்களும், பெண்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றிய சிறந்த விமர்சனங்களை எழுதுவோருக்கு `மெய்யா பொய்யா' நிகழ்ச்சி நடைபெறும் மேடையிலேயே பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். இயக்கம்: எஸ்.ஏ.விஜயகுமார்.