சி க
புது பாதையில் புது பார்வையில் திரியின் புதுமைப் பயணம் ..ராஜ்ராஜ் சார்/ராகதேவ் சாருடன்....ஜமாய்த்துக் கொண்டிருங்கள்!!
அடுத்த மூன்று வாரங்கள் எனக்கு கிரிடிகல் டைம் ! புது அசைன்மெண்ட் கால் பதித்ததும் வந்து கலந்து கொள்கிறேன்!
செந்தில்
Printable View
சி க
புது பாதையில் புது பார்வையில் திரியின் புதுமைப் பயணம் ..ராஜ்ராஜ் சார்/ராகதேவ் சாருடன்....ஜமாய்த்துக் கொண்டிருங்கள்!!
அடுத்த மூன்று வாரங்கள் எனக்கு கிரிடிகல் டைம் ! புது அசைன்மெண்ட் கால் பதித்ததும் வந்து கலந்து கொள்கிறேன்!
செந்தில்
Looks like people are taking a break with senthil. I will post some movie songs in Dwijavanthi and also a couple of carnatic compositions.
Here is one from Mr.Butler, a MalayaLam remake of a Tamil movie.
virahini radhe.....
http://www.youtube.com/watch?v=BwzydipTif4
'சுமதி என் சுந்தரி' படத்தின் 'பொட்டு வைத்த முகமோ' பாடல் பதிவைப் படித்துப் பாராட்டிய திரு. வினோத் சார், சின்னக்கண்ணன் சார், கோபால் சார், குமார் சார், செந்தில் சார், ரவி சார், சுந்தரபாண்டியன் சார், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எட்டாயிரம் பதிவுகளைக் கடந்தமைக்கு வாசு அவர்களுக்கு
எனது பாராட்டுக்கள்.
அன்புடன் கோபு.
சி.செ..மிக்க நன்றி தங்கள் பொன்னான ஊக்கத்திற்கு.. :) கவலைப்படாதீர்கள்..அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டு இருங்கள் சமயம் வாய்க்கும் போது.... வேலை முடித்து வாருங்கள்..
*
என்னமோ போங்க - 26
**
படத்தின் பெயர் பிஞ்சு மனமாம்..வேறு டீடெய்ல்கள் இல்லை கே.ஜே.ஜேசுதாஸ் வாணிஜெயராம்..
அட வித்தியாசமாக இருக்கே எனக்கேட்கையில்
முத்துமுத்துப்புன்னகையைக் கண்டேன்
முத்தமிழில் முத்தமிட வந்தேன்.. என்றவரி கேட்டு கொஞ்சம் மண்டை காய்ந்தேன்..
இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழில் முத்தமா
இயற்றமிழ்…
அன்பே
சில்லென்ற காற்று உணர்வுகளைச் சூடாக்குகிறது..குளிர்விக்க கனியிதழ் கொடு எனக் கவிதை படிக்கலாம்
இசைத்தமிழில் பாட்டுப் பாடலாம்..முத்தமோ மோகமோ..
நாடகத்தமிழில் எப்படி முத்தம் கொடுப்பது..
“ஹா.. இளங்குருத்தான வாழைத்தண்டில் செய்யப்பட்ட சிற்பம் போன்ற காரிகையே.. அதில் பூத்திருக்கும் ரோஜாபோன்ற மென்னிதழில் இந்தக் காரிகன்.. ஸாரி காதலன் இனிமையாய் முத்தம் தரட்டுமா” என்று வசனம் பேசி முத் கொடுக் வேண்டுமா என்ன என யோசிக்க யோசிக்க உதடு தான் உலர்ந்து போயிற்று..!
சரி என மறுபடி கேட்கையில்…
முத்துமுத்துப்புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்..
என்கிறார் ஜேசுதாஸ்..தப்பிச்சேன்.. இயல் இசை நாடகம் எல்லாம் கலந்தவராம் ஜெய்சித்ரா..(யாருக்காவது தெரியுமாங்க..இன்னிவரை!) என்னமோ போங்க…:)
வாங்க பாட் கேக்கலாம்..
வானம் பொழிந்தது பூமி நனைந்தது..
முத்துமுத்துப்புன்னகையைக் கண்டேன்
என் முத்தமிழை முத்தமிட வந்தேன்..
*
https://www.youtube.com/watch?v=3DVx...YDjuJSpFxQcNPl
பின்ன வாரேன்..
//ஆமாம் ..ஐந்தாவது பாகத்தின் இரண்டாவது கேள்வி.. இந்த நடிகையாரு? விஜயசாந்தியின் சாயலில் இருக்கிறார். வி.சா.வின் அம்மாவா.//
சின்னா! அது கன்னட மஞ்சுளா. அடிக்கடி உங்களைக் குழப்புபவர். எடுப்பார் கைப்பிள்ளை படத்தில் பொன்னும் மயங்கும் பாடலுக்கு ஜெய், நிர்மலாவை பொறாமையாய் பார்க்கும் நடிகை யார் என்று ஒவ்வொரு பாகத்திலும் கேட்பீர்களே!:) அவர்தான். புதுவெள்ளம் 'துளி துளி' மஞ்சுளா.
வாசு.. ஒருவேளை அவரை ஒவ்வொரு பாகத்திலும் பார்ப்பதால் புதிதாகத் தெரிகிறார் போல :) ( ஹை..சின்னாக்கு சிலேடைல்லாம் வருதே :) )
சின்னா!
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
பாடல் வரிகளுக்கு நன்றி! எனக்கும் ரொம்பப் பிடிக்கும். ஆனால் விஜய் மேக்-அப் கோரம்.
//இவர் வீட்டம்மாவிற்கு வீட்டில் வார்க்கும் தோசை, பாடகரின் உடல் நலன் அது மட்டுமே உலகம்..//
'லதா மங்கேஷ்கரா பொடி அரைச்சி தருவா?' சுலக்ஷ்னா முனகல்.
உங்கள் தேவதை இசைக் கதை பாட்டு நன்னாயிட்டு. கலையோ சிலையோ கொஞ்சம் அபூர்வ பாட்டுத்தான்.
தெலுங்குப் பாட்டு பார்க்கலை. ஆனா ஆடுபவர் அழகாகத் தெரிகிறார். பார்த்துட்டு சொல்றேனே.
உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எல்லோருக்கும்தான். அனேகமா நம் கிருஷ்ணா வந்தாலும் வரலாம். இப்பவே வரவேத்துடுவோம். வாங்க கிருஷ்ணா வாங்க.
சின்னா!
என்னவோ போங்க- வுல பிஞ்சு மனம் ரேர் சாங் போட்டு மது அண்ணா இல்லாத குறையை போக்கிட்டீரே! சபாஷ் சிங்கக்குட்டி. இன்னொரு சபாஷ் புலிக்குட்டி வேணும்னா இன்னும் ஒரு 5 மணி நேரம் செர்ச் பண்ணினாத்தான் கிடைக்கும். சொல்லிபுட்டேன்.:)