-
மதுரைக்கு மாயாஜால் வரும் சாத்தியம் கம்மி- எங்களுக்கு காசை வாரி இறைக்க மனம் வராதாக்கும்- ஒரு பொருளை வாங்கும் முன்னால் நூறு தடவை விலையைக் கேட்போமே!
ஆம், வட்டம் சுற்றி திரும்ப முதல் சதுர கட்டம்தான்! Back to square one!:)
எங்கும் அக்கினி நட்சத்திர வெயில் குறைவின்றி சுட்டெரிக்கிறது!
பாட்டி பற்றி எழுத முடியும் எந்த அடியிலும் முடியும்! எந்த பாட்டியைப் பற்றி?:roll:
-
இன்று முதல் கொஞ்சம் விடுமுறைக்காக மும்பை, சென்னை, கர்னாடகா, கேரளா எனச் சுற்றி வரலாம் என இருக்கிறேன்..உடனுக்குடன் முன்போல் எழுத முடியுமா எனத் தெரியவில்லை.. முய்ற்சி செய்து இடுகிறேன்...மறுபடியும் ஜீன் நடுவில் தான் மஸ்கட்...ஹையா..கொலம்பஸ் கொலம்பஸ் எடுத்தாச்சு லீவு!!
-
-
ஒரு வழியாய்விடுமுறை -மும்பை மஹாபலேஷ்வர்-மடிக்கேரி-சென்னை-தமிழ்நாட்டுக்கோயில்கள் ஒரு பதினைந்து என ப் பார்த்துமுடித்து வந்தாயிற்று.. அங்கும் விடுமுறை முடி ந்திருக்குமே... ஆமாம் எந்த க் கிளி பறக்கப் பார்க்கிறது..
நான் எழுதியது தஞ்சாவூரில் நேரில் பார்த்த ஒன்று..
-
காலையில அலுவல் சேர்ந்த முதல் ஒரே மீட்டிங்க் இருந்ததாலிட முடியவில்லை..தாங்கள் செளக்கியம் தானே..
-
விடுமுறை கொண்டாட்டம் அறிந்து மகிழ்ச்சி.
நான் சொன்ன கிளி பொதுவான நவீன பெண் மனவோட்டங்கள் பற்றி - மிகவும் விசாரம் அளிக்கும் பொறுமையில்லாத போக்கு! எதற்கெடுத்தாலும் பெண்தான் பொறுத்துப் போகவேண்டுமா என்ற புரட்சிக் குரல் ஓங்கி ஒலிக்கிறது! ரொம்ப ஆயாசமாய் இருக்கிறது - என்ன பதில் சொல்ல!மொத்தத்தில் ஆண்களுக்கு நேரம் சரியில்லை!!!
-
அது என்ன கதைக்கா. யாரந்த பால்கார முனீம்மா.?
-
பால் விற்கப்போகும் பெண் பால் வித்து வரப்போகும் காசில் படிப் படியாக எப்படி பணக்காரி ஆகி மாட மாளிகைக்காரியாய் அகங்காரமாய் எளியோரை காலால் எட்டி உதைக்கும் நிலை அடையப் போவதாய் பேராசை கனவு கொண்டே நடக்கையில் கனவின் செயலை- காலால் உதைத்தலை- நிசமாகவே செய்ய கால் தடுக்கி விழுந்து பால் கீழே கொட்டி வீணாகி கனவின் ஆதாரமே அழியும் நீதிக்கதை! பாலுக்கு பதில் முட்டை என்றும் சொல்லப்படுவதுண்டு. ரொம்ப சின்ன வயசில் படித்த கதை-ஏதேனும் மாற்றிவிட்டேனோ?
-
அச்சச்சோ.. அதெல்லாம் ஒன்றுமில்லை.. எனக்குத் தெரியாத கதைதான்..பால் என்று பார்த்தால் போப் ஜான்பால், அமலா பால் என்று தான் நினைவுக்கு வருகிறது...!
-
பால பருவத்தை தாண்டியதன் விளைவு!!!