-
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற
"குடியிருந்த கோயில் " வெளியாகி சுமார் ரூ.1 லட்சம் வசூல் செய்து மீண்டும்
அபார சாதனை படைத்தது .
இடைவிடாது பல்வேறு தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகி
வந்தாலும் , திரை அரங்கத்தில் வெளியாகும் போதெல்லாம் மக்கள் கூட்டம்
கூட்டமாக திரண்டு வந்து பேராதரவு தருவது மக்கள் தலைவரின் படத்திற்கே
என்பது மீண்டும் நிரூபணம் .
இதுதான் மறு மறு மறு மறு மறு வெளியீடுகளில் பிரம்மாண்ட அடையாள
சாதனை.
மதுரை மாநகரில் 18 மாத இடைவெளியில் வெளியாகி சாதனை படைத்துள்ளது
http://i68.tinypic.com/iw6bm0.jpg
தகவல்கள் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
-
-
-
the hindu -tamil
makkal thilagam mgr-100
comments portion
வாழ்க மக்கள் தலைவர்
m g r இக்கு என்றும் மறைவு இல்லை. இன்னும் நம்மோடு வாழ்கிறார் . பல சாதனை திட்டங்கள் மூலம்.
தாயுமானவன் . என்ன ஒரு கருத்தாக்கம். - இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தாரா என்று என்னையே அடிக்கடி கேட்டு உறுதி செய்து கொள்கிறேன். உண்மையிலேயே திரு mgr அவர்களை பற்றி இது ஒரு சிறந்த தொகுப்பு.
"எனது இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளே!" என்ற சொல் வெறும் உதட்டில் இருந்து மட்டும் வரவில்லை என்பதற்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தானே சாட்சியாக, மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!
மகாபாரத கர்ணனையும் மிஞ்சியவர் மக்கள் திலகம் .... ஏனெனில் கர்ணன் தானமாக கொடுத்தது எல்லாம் துரியோதனனின் சொத்துக்களே .... ஆனால் தன வியர்வை சிந்திய உழைப்பில் கிடைத்த சொத்துக்களை தானமாக கொடுத்தவர் நம் பொன்மனச்செம்மல்
எம் ஜி ஆர் தமிழர் அவர் வழிபடி நாமும் நடப்போம்
நல்ல தமிழனாக
கல்லினுள் தேரைக்கும் , கருப்பை உயிர்க்கும் உணவளிப்பவன் இறைவன் அவனிலும் மேலாய் , புனித தாய்மையின் செயலாய் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து தன்னை நம்பி உழைக்கும் தொழிலாளர்கள் பசி தீர்த்தவர் மக்கள் திலகம் . "வாழ்க்கை என்றொரு பயணத்திலே சிலர் வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி " ஊருக்கு உழைத்த எங்கள் தலைவன் இன்றும் எளியவர் இதயத்து " மன்னாதி மன்னன் " வாழ்க !
-
-
-
-
-