http://i67.tinypic.com/icntdt.jpg
Printable View
http://i66.tinypic.com/33cynn7.jpg
RIKSHAKARAN ALL IMAGES COURTESY TO KALAKKAL.CINEMA.
தற்போது ஜெயா மூவிஸில் , நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "ராஜா தேசிங்கு "
இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/1z3xo5f.jpg
நாளை (28/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "உரிமைக்குரல் " திரைப்படம்
ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/2r2lqia.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர் .
To night 7pm@ sunlife
makkal thilagam m.g.r in
neerum neruppum.
28.8.1965
To day
MAKKAL THILAGAM MGR IN
KALANGARAI VILAKKAM
52 nd Anniversary.
http://i64.tinypic.com/m5uo8.jpg
மக்கள் திலகத்தின் மாணவர் மயில்ராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..
---------------------------------
ஆண்டுதோறும் நிகழும் அர்த்தமுள்ள விழா...
விளையாட்டாய் ஆரம்பித்தோம் நண்பர்களாக...
விழுதுகளுடன் இன்று ஆலமரமாய் எங்கள் தென்றல்...
அவரவர் சக்திக்கேற்ப தங்கள் சொந்த பணத்தில் கல்லூரி நாட்களில் சேவை செய்ய ஆரம்பித்து... இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக மதுரையில் இன்னும் சில மணி நேரங்களில்...
பள்ளி கல்லூரி மாணவர்கள் வீணாய் போகிறார்கள் என்று புலம்பும் பலர் தன மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பொறுப்பான மாணவர் சமுதாயம் எங்கள் தென்றலில் உண்டு...
15 ஆண்டுகளாய் எங்களுடன் பயணித்த அந்நாள் மாணவர்கள் இன்று எங்கள் நட்பு வட்டம் தாண்டி குடும்ப உறுப்பினர்கள் ஆகி போனதுதான்... ஆச்சர்ய உண்மை...
விழி அசைவை பார்த்தபடி...
"அண்ணா... நான் ரொம்பநேரமா சும்மா இருக்கேன்... நான் என்ன செய்யணும்... ?"
" எனக்கு ஏதாச்சும் வேல இருக்கா...?" என கேட்டு கேட்டு செய்கிறார்கள் இன்றும் மாணவனாகவே தங்களை எண்ணிக்கொண்டு... இவர்களில் பலர் கல்யாணமாகி - தந்தையானாலும் இன்னும் இவர்களும் குழந்தையாகவே உள்ளனர் மனதளவில்...
இவர்கள் தான்... வேர்கள்... விழுதுகள்...
15 ஆண்டுகள் என்பது வெறும் வார்த்தை இல்லை... எங்கள் தென்றலுக்கு...
அது எங்கள் வாழ்க்கை...
மதுரை எம்.சி.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல்... மாலை 5 மணி வரை இன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க... நீங்களும் வரலாமே... வாய்ப்பிருந்தால்...
---------------------------------------------------------------------------------------
மதுரையில் இருக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எம்.சி.மேனிலைப்பள்ளியில் நடக்கும் அர்த்தமுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். நல்ல காரியத்துக்கு மக்கள் திலத்தின் வழியில் உதவலாம்.
http://i64.tinypic.com/m5uo8.jpg
மக்கள் திலகத்தின் மாணவர் மயில்ராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..
---------------------------------
ஆண்டுதோறும் நிகழும் அர்த்தமுள்ள விழா...
விளையாட்டாய் ஆரம்பித்தோம் நண்பர்களாக...
விழுதுகளுடன் இன்று ஆலமரமாய் எங்கள் தென்றல்...
அவரவர் சக்திக்கேற்ப தங்கள் சொந்த பணத்தில் கல்லூரி நாட்களில் சேவை செய்ய ஆரம்பித்து... இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக மதுரையில் இன்னும் சில மணி நேரங்களில்...
பள்ளி கல்லூரி மாணவர்கள் வீணாய் போகிறார்கள் என்று புலம்பும் பலர் தன மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பொறுப்பான மாணவர் சமுதாயம் எங்கள் தென்றலில் உண்டு...
15 ஆண்டுகளாய் எங்களுடன் பயணித்த அந்நாள் மாணவர்கள் இன்று எங்கள் நட்பு வட்டம் தாண்டி குடும்ப உறுப்பினர்கள் ஆகி போனதுதான்... ஆச்சர்ய உண்மை...
விழி அசைவை பார்த்தபடி...
"அண்ணா... நான் ரொம்பநேரமா சும்மா இருக்கேன்... நான் என்ன செய்யணும்... ?"
" எனக்கு ஏதாச்சும் வேல இருக்கா...?" என கேட்டு கேட்டு செய்கிறார்கள் இன்றும் மாணவனாகவே தங்களை எண்ணிக்கொண்டு... இவர்களில் பலர் கல்யாணமாகி - தந்தையானாலும் இன்னும் இவர்களும் குழந்தையாகவே உள்ளனர் மனதளவில்...
இவர்கள் தான்... வேர்கள்... விழுதுகள்...
15 ஆண்டுகள் என்பது வெறும் வார்த்தை இல்லை... எங்கள் தென்றலுக்கு...
அது எங்கள் வாழ்க்கை...
மதுரை எம்.சி.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல்... மாலை 5 மணி வரை இன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க... நீங்களும் வரலாமே... வாய்ப்பிருந்தால்...
---------------------------------------------------------------------------------------
மதுரையில் இருக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எம்.சி.மேனிலைப்பள்ளியில் நடக்கும் அர்த்தமுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். நல்ல காரியத்துக்கு மக்கள் திலத்தின் வழியில் உதவலாம்.
Thedi Vantha Mappillai.29.8.1970
46 th Anniversary
முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்ப சோ வின் காமெடி கலக்கல். மக்கள் திலகம் -விஜயஸ்ரீ சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .
அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .
மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை
http://i68.tinypic.com/2e202v7.jpg
இன்று சன் லைப் தொலைக்காட்சியிலும் பொதிகையிலும் உரிமைக்குரல், ராமன்தேடிய சீதை, நீரும் நெருப்பும் ஆகிய மக்கள் திலகம் நடித்த படங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சியில் அவரது படங்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டரில் புரட்சித் தலைவர் நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் இன்று அரங்கு நிறைந்தது என்று தகவல் கிடைத்துள்ளது.
எங்கள் மதுரை மண்ணைப் போலவே மலைக்கோட்டை நகரத்திலும் புரட்சித் தலைவர் சாதனை புரி்ந்து கொண்டிருக்கிறார்.
கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகே சரோடி என்ற ஊரைச் சேர்ந்த சரோடி சகோதரர்கள்தான் விஞ்ஞானக் கற்பனைப் படமான மக்கள் திலகம் நடித்த கலை அரசி படத்தை எடுத்தனர். படம் நீண்ட தயாரிப்பில் கிடந்தது. நிலத்தை விற்று படம் எடுத்தார்கள். எல்லாம் தீர்ந்துவிட்டது. ஒரு கட்டத்தில் படத்தை கைவிட்டு ஊருக்கு திரும்ப நினைத்த சரோடி சகோதரர்களை தடுத்து அவர்களுக்கு மக்கள் திலகம் பணத்தைக் கொடுத்தார். அந்தப் பணத்தில் படத்தை எடுத்து வெளியிட்டனர்.
படம் 100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடி நல்ல லாபம் கிடைத்தது. மக்கள் திலகம் எப்பவும் கொடுத்ததை திரும்ப வாங்க மாட்டார். சரோடி சகோதரர்கள் மக்கள் திலகம் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தபோது அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். படத்தில் கிடைத்த லாபத்தில் சரோடி சகோதரர்கள் தாங்கள் விற்ற சொத்துக்களை திரும்ப வாங்கினர். திருவனந்தபுரத்தில் அவர்கள் கட்டிய வீட்டுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிற முறையில் எம்.ஜி.ஆர். நிலையம் என்று பெயர் சூட்டினர். சரோடி சகோதரர்களின் நன்றிக்கும் புரட்சித் தலைவரின் பெருந்தன்மைக்கும் பிறர் துன்பத்துக்கு உதவும் குணத்துக்கும் எடுத்துக்காட்டாக இன்றும் அந்த வீடு இருக்கிறது.
21.8.2016 அன்று பெங்களூரில் நடைபெற்ற டாக்டர் எம்ஜிஆர் எம்ஜிஆர் நூற்றாண்டு முன்னோட்ட விழா வில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் .
http://i68.tinypic.com/15yump2.jpg
பெங்களூரில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரசிகர் திரு பழனி அவர்கள் ''உழைக்கும் குரல் '' என்ற மாத பத்திரிகை துவங்கியுள்ளார் .
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .பெங்களுர்
திரு துரை சாமி - மூத்த தீவிர எம்ஜிஆர் பக்தர் - கோவை
திரு தமிழ் நேசன் - மதுரை
திரு சக்கரவர்த்தி - மதுரை
திரு சத்யா -சென்னை
திரு எம்ஜிஆர் ரவி - உரிமைக்குரல் எம்ஜிஆர் மன்ற தலைவர்
திரு கலீல் பாட்சா - திருவண்ணாமலை
திரு மேஜர் தாசன் - பத்திரிகை தொடர்பாளர் சென்னை
திரு சிவகுமார் - பொன்மனம் - சென்னை
சென்னை மற்றும் பெங்களுர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .
http://i68.tinypic.com/16bnc4g.jpg
தமிழ்நாடு காங்கிரஸின் தூணாக விளங்கியவரும் புரட்சித் தலைவரின் நண்பரும் காமராஜின் சீடரும் அன்னை இந்திரா காந்தி, இந்தியாவை முன்னேற்றும் துடிப்போடு இருந்த ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார் அய்யாவின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 19ம் தேதி மூப்பனார் அய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு போட்ட பதிவை மறுபடியும் பதிவு செய்திருக்கிறேன்.
பெங்களுருவில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் ரிக் ஷாக்காரன்
கலக்கல் பதிவுகள் செய்த அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் .
ஆர். லோகநாதன்..
இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு .
வெள்ளி முதல் (02/09/2016) மதுரை சென்ட்ரல் சினிமாவில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நேற்று இன்று நாளை " தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு வருகிறது .
http://i67.tinypic.com/2vv5f78.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
ஜன்னல் மாதமிருமுறை இதழ் -15/08/2016
http://i67.tinypic.com/2111leg.jpg
ராணி வார இதழ் -04/09/2016
http://i64.tinypic.com/1537a6h.jpg
சென்னை , தி.நகர் , ஜெர்மன் ஹாலில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா , கடந்த ஞாயிறு (28/08/2016) அன்று பிற்பகல் 3 மணி முதல்
இரவு 9 மணிவரை நடைபெற்றது .
நிகழ்ச்சியில் , பிரபல இசை அமைப்பாளர் திரு. லக்ஷ்மன் ஸ்ருதி அவர்களின் இன்னிசையில் புரட்சி தலைவரின் பாடல்கள் இசைக்கப்பட்டன .
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் குண்டு கல்யாணம், நடிகர் மயில்சாமி ,நடிகர் பாண்டியராஜன் , நடிகர் வின்சென்ட் அசோகன் , திரு.பொன்வண்ணன் (நடிகர் சங்க பொருளாளர் ), நடிகர் ஜூனியர் பாலையா ஆகியவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு
பெருமை சேர்க்கும் வகையில் சிறப்புரை ஆற்றினர் .
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அனைவரையும் வரவேற்று பேசினார் .
விழாவின் முக்கிய அம்சமாக , மறைந்த திரு. ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அவர்களின் குடும்பத்தினருக்கு பல முக்கிய பிரமுகர்கள் மூலம் குடும்ப நல நிதி வசூல் செய்யப்பட்டது . கணிசமான தொகை சேர்ந்ததும் இதயக்கனி மாத இதழ் சார்பாக , திரு. ராஜ்குமார் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்படும் என விழாவில் திரு. எஸ். விஜயன் தெரிவித்தார்.
திரு. ராஜ்குமாரின் மகள் நன்றி தெரிவித்து , தன் தந்தையின் சேவைகள்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொண்டாற்றிய விதம் குறித்தும்
சில நிமிடங்கள் பேசி பாராட்டுக்கள் பெற்றார் .
http://i64.tinypic.com/sesnlx.jpg