எல்லாம் தெரிந்த என் ஆருயிர் தம்பி ராமதாஸ் அவர்களே,
அன்பின் பால் தம்பி என்பது அழைப்பது தவறு என்று நீங்கள் கூறினால் நான் அந்த தவறை திரும்ப திரும்ப செய்வேன். காரணம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். நன்று ! அப்படியே அது உண்மையென்றாலும் என்ன செய்கிறோம் என்று தெரிந்த நீங்கள் "அண்ணா நீங்கள் இதை செய்கிறீர்கள் ...! இதை செய்யாதீர்கள்...! இதை இப்படி செய்யுங்கள் ..இந்த மாதிரி செய்யுங்கள் என்று எனக்கு தெரியபடுத்தவேண்டியதுதானே தம்பி ...அதுதானே முறையும் கூட தம்பி !
அதை விடுத்து குற்றம், நொட்டை சொல்ல மட்டும் எந்த இரும்பு கோட்டையில் இருந்தாலும் தவளையை போல ஒரு JUMP செய்து வருகிறீர்களே தம்பி !
தம்பி நாங்கள் எல்லாம் COPY யோ கார்பன் ஒ ..ஏதாவது செய்கிறோம் தம்பி..நீங்க அதுக்குகூட....சரி ...எதுக்கு இத நான் சொல்லிக்கிட்டு தம்பி ! உங்களுக்கே தெரியும் நீங்க யாருன்னு !
ஏன் குற்றம் காண்பதற்கு மட்டும் வரிந்து கட்டுகிறீர்கள் தம்பி ?
திரிக்கு வந்து மாதம் ஒருமுறையாவது ஒரு பதிவாவது நீங்களும் போடலாமே ? அதற்க்கு உங்களுக்கு ஏன் கை வரமாட்டேன் என்கிறது தம்பி ?
ஆக ..திரியில் குழப்பம் விளைவிக்க மட்டும் வருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் தம்பி !
பிறகு உங்கள் குற்றசாட்டு " பம்மலர் அவர்கள் போட்டதை கார்பன் கோப்பி போல போட்டு திரியை ஒரு வழி பண்ணுகிறேன். என்று...'
தம்பி ! அதில் மட்டும் ஒரு சிறு திருத்தம் தம்பி ...carbon copy என்பதை நான் ஒத்துகொள்ளவே மாட்டேன் தம்பி ..!
காரணம்...நான் கார்பன் காபி செய்யவில்லை தம்பி ...அதையே தான் அப்படியே போடுகிறேன். !
தம்பி...பேராசிரியர் என்று கூறிகொள்ளும் நீங்கள் இவ்வளவு கூட மூளையை உபயோகிக்காமல் இருப்பீர்கள் என்று யாரும் நினைக்கவில்லை. திரியில் நீங்கள், அல்லது நான், அல்லது, முரளி சார் அல்லது மற்ற திரி உறுப்பினர்கள் மட்டும் பார்ப்பதில்லை.
தினமும், புதியதாக பார்வையாளர்கள் வருகிறார்கள் ...அவர்களும் படித்து பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை திரும்பவும் பதிவிடுகிறேன். இது மீண்டும் மீண்டும் தொடரும்...!
திரி என்பது ராமதாசுக்கு மட்டும் படிக்க அல்ல தம்பி...புதிய தலைமுரயினருக்காக தான் !
நடிகர் திலகத்தை பற்றி எல்லா கால மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகதான். இந்த திரியின் மெம்பெர்ஸ் மட்டும் அல்ல audience . புதிது புதிதாக படிப்பவர்களும் தான் தம்பி ! உனக்காக மட்டும் அல்ல இந்த திரி தம்பி !
அல்லது வருத்தப்படும் உங்களுடைய நண்பரகளுக்காகவும் அல்ல ! அவர்கள் வருத்தம் இன்னும் உண்டென்றால் அவர்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் கொடுங்கள் நான் அவர்களுக்கு சமாதானம் சொல்கிறேன் என்று கூறியதில் என்ன தவறு ராமதாஸ் தம்பி ?
நீங்கள் எவ்வளவோ கேள்வி கேடீர்கள் ? உங்களுக்கு ஒரு கேள்வி ? If time permits you can reply !
திரியின் நன்மையை மட்டுமே எதிர்பார்க்கும் பெரிய யோக்யன் போலவே பேசும் தம்பி...
இது வரை ஒரு தும்பி அளவுக்காவது ஒரு பதிவு போட்டிருப்பீர்களா நடிகர் திலகத்தை பற்றி..?
அப்புறம் எதற்கு தம்பி உங்களுக்கு இந்த திரியை கெடுக்கும் வேலை ?
திரி நன்றாக இலையென்றால் நீங்கள் ஏன் இங்கே வருகிறீர்கள் தம்பி ?
நல்ல திரி பல உள்ளது என்றால் அங்கே போங்களேன்...? யாரும் உங்களை நடிகர் திலகம் திரிக்கு தான் வரவேண்டும் என்று கட்டி இழுத்துவரவில்லையே தம்பி !
அப்புறம் என்ன ? இதற்க்கு மேலும் நான் கூறவோ அல்லது அனுமதி கொடுக்கவோ எதிர்பார்கிறீர்களா தம்பி ? எதிர்பார்ப்பு இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன். !
என்னக்கு இன்னும் இங்கு பம்மலர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட விஷயங்களை மீண்டும் பதிவிடவேண்டும் தம்பி...ஆகையால் இதற்க்கு மேல் செலவு செய்ய என்னிடம் நேரம் என்பது கிடையாது தம்பி ராமதாஸ் !
பாசத்துடன்
அண்ணன் !