Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
ஆனந்தவிகடனில் வந்த மக்கள் திலகத்தை பற்றி வந்த கட்டுரை அருமை .
எங்க வீட்டு பிள்ளை - படமும் கருத்தும் புதுமை .
1965ல் தன்னுடைய வலிமையை பற்றி பாடி காட்டினார் .
1971ல் ரிக்ஷகாரனில்
நானொரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
என்று எச்சரிக்கை விடுத்தார் .
1972ல்
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
என்று கூறி கணக்கு கேட்டார் .
1973ல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று பாடி
திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் வெற்றி கண்டார் .
1975ல்
நான் சபையேறும் நாள் வந்தது ...
என்று பாடி
1977ல் தமிழக ஆட்சியை பிடித்தார் என்றால்
சொன்னார் - செய்தார்
அவர்தான்
நினைத்ததை முடிப்பவர் எம்ஜிஆர் .