http://oi68.tinypic.com/73i1qx.jpg
Printable View
26:04:2019 வெள்ளிக்கிழமை,
இன்று பனிரெண்டாம் நாளாக
http://oi67.tinypic.com/2psf3w5.jpg
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்தும் தொடர் அன்னதானத்தின், முப்பத்தோராம் வார நிகழ்ச்சிக்கான அழைப்பு...
#வாருங்கள்தோழர்களே!
http://oi67.tinypic.com/2zho93k.jpg
http://oi65.tinypic.com/2iuufki.jpg
தொல்காப்பியத்தில், "மெய்ப்பாட்டியல்" என்று பகுதி, நடிப்பு பற்றிய தகவல், இலக்கணமாக சொல்லப்பட்டிருக்கிறது....
அதில் வரும் ஒவ்வொரு முத்திரைகளுக்கும், அகராதியாக உணர்ச்சிப் பிழம்பாக உருவகப்படுத்திக் காட்டும்படி, இன்றுவரை நடிப்புப்பயிற்ச்சிக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது....
மேற்கோள்களிலும் நடிகர் திலகம் படங்கள் இணைக்கப்பட்டுளது....
நடிப்புக் கலைக்கு இலக்கண நூல்கள் யாராவது எழுதினால், அதில் சிவாஜியின் மெருகேறிய, உணர்ச்சிகளை மேற்கோள் காட்டி, அவரது படங்களை போட்டு அதன் கீழே... இந்த் முகபாவம் இந்த உணர்ச்சியை குறிக்கிறது என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தால், பயிற்சி மாணவர்களுக்கு ஏற்றதாக அமையும்....
பேராசிரியர் டாக்டர் மா.நன்னன்...
குமுதம் வார இதழ், 6.2.1987.
நன்றி Nirmai Thiyagarajan
நடிகர் திலகம்......
இந்தச் சொல்..., உலகெங்கும் பரவியிருக்கும், ரசிகக் கண்மணிகளின் குதூகலமான இந்த ஒற்றைச் சொல்., ஒவ்வொரு அடிதட்டு முதல் நடுத்தர, மேல் தட்டு ரசிகர் வரை பூஜித்து வரும் பக்திச்சொல்.., வேதச்சொல்....
இவர்களைப் பொறுத்தவரை,மனம் கவர்ந்து, மனம் நிறைந்து பாராட்டப்படும் ஒற்றைச் சொல் சிவாஜி கணேசன் எனும்மந்திரச் சொல்மட்டும்தான்....
வணங்குவதற்கும், வழிபடுவதற்கும் ஏற்ற கடவுளும் இவர் மட்டும் தான்....... ரசிகர்கள் திரும்பிய பக்கமெல்லாம், இந்த மாபெரும் கலைஞனை திருவுருவமாக..., இல...்லத்திலும், தனது இதயத்திலும் சிம்மாசனமிட்டு அழகு பார்க்கும், நிலை இன்று வரை தொடர்கிறது..,
பராசக்தி முதல் பூப்பறிக்க வருகிறோம் வரை கிவாஜி பற்றிய செய்திகள், படங்கள்,பத்திரிகைதுணுக்க்குகள்,விளம்பரங்கள்,ப ாடல் புத்தகங்கள், சுவரொட்டிகள், ஒளி-ஒலிப்பேழைகள், குறுந்தகடுகள் எனப் பல்வேறு தகவல் களஞ்சியங்களாக அவர்களிடம் காட்சியளிக்கும் அற்புதங்களைக் காணலாம்,அருங்காட்சியங்களாக......
நன்றி Nirmai Thiyagarajan
வானளாவிய தன் கலைத்திறனால், திரைத்துறையில் இமாலய சாதனை புரிந்த பிறவிக் கலைஞன்.....
சிம்மக்குரலும் , ராஜநடையும், பேசாமல் பேசி, ஆயிரம் கதைகள் கூறும்..., அந்த விழிகள் நடித்த சில நூறு படங்கள்....
அதன் வாயிலாக ஆயிரம் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி, நடிப்புக்கு இதுதான் இலக்கணம் என உலகுக்கே ஒரு புதிய பரிமாணத்தை தோற்றுவித்து, இன்று வரை அதை மறக்க முடியாத படி, எங்களை புகழ் பாட வைத்த தவத்திலகமே... உம்மை போற்றியே காலங்களை கடத்தி வருகிறோம் உமது தொண்டர்கள்.....
நன்றி Nirmal Thiyagarajan
இன்று வரை, கலையுலகில் தமிழகத்தின்..., தமிழர்களின் பெருமைதனை உலகெங்கும் காத்து நிற்பவர் சிவாஜி ஒருவர் தான்.....
தமிழ்ச் சொற்களை அடிபிரளாமல், ஏற்ற இறக்கத்துடன் கம்பீர குரலில், உலகெங்கிலும் தன் நடிப்பாற்றலால் கொண்டு சேர்த்த கோமகனல்லவா சிவாஜி கணேசன்....
அந்த ஆண்டவன் தந்த சிவாஜி கணேசனை, குரல் வளத்தால் வெல்ல ஒருவரால் மட்டுமே முடியும்....
அவர்தான், ராஜாமணி ஈன்றெடுத்த தவப்புதல்வன் வி.சி.கணேசன்.....
பராசக்திக்கு பல பெருமைகள் இருந்தாலும், பாரினில் சிறந்த கலைஞன் ச...ிவாஜி கணேசன், பாரதத்தில் இருப்பதே தனிச் சிறப்பாகும்.....
உலகக் குரல் தினமான இன்று, உலக மக்களின் பார்வைக்கு, அர்பனிப்பதில் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் பெருமை கொள்கிறான்......
குரல் வளத்தின் பெருமை காத்த, சிறந்த பொருத்தமான கம்பீரத் திலகத்தின் அர்பணிப்பு இது.....
நன்றி Nirmal Thiyagarajan
திரையில் கர்ஜனை புரியும் இந்தச் சிம்மக்குரல், இயல்பாக குழந்தை போல நண்பர்களிடம் பேசும் போது, குழலோசையாக மாறி விடும் அதிசயத்தை நேரில் நாம் காணலாம்.....
புகழின் சிகரத்தை சிவாஜி அடைந்த போதும், அவரிடம் காணப்பட்ட எளிமை,எந்த நேரத்திலும் அவர் கடைபிடித்த அடக்கம், எல்லோரிடத்திலும் அவர் காட்டிய அன்பு, பிரச்சினைகளை மனித நேயத்துடன் அணுகும் அந்த உயரிய பண்பாடு இவைகளே அவரின் பெருமையை தமிழகத்தோடு மட்டுமல்ல, அகில பாரதத்தோடுமட்டுமல்ல, உலக அளவில் உயர்ந்து நிற்கும் தகுதியை அவருக்கு வழங்கியது....
அது என்றும் நிலைத்து புகழ் பரப்பியவண்ணமே இருந்து வருகிறது....
நன்றி Nirmal Thiyagarajan
சிவாஜி அவர்கள், Directors Delight என்றால் அது மிகையன்று....
வயது, அனுபவம் இவற்றில் மிக இளையவரானாலும், அவர்கள் இயக்குனர் என்கின்ற அந்தஸ்தில் இருந்தால், அவர்களிடம் பொறுமையாக பணிவாக பணியாற்றுவது என்பது சிவாஜியின் சிறப்பு....
இயக்குனரின் எண்ணத்திலும் சிந்தனையிலும் உதிக்கின்ற அக்காட்சியை தத்ரூபமாக சாதூர்யமாக காமிரா முன்பு கொண்டு வந்து விடுவார் சிவாஜி.....
தன்னுடைய நடிப்பு மட்டுமே, பிரதானமாக பேசப்பட வேண்டும் என நினைக்காமல், டைரக்டரின் எதிர் பார்பிற்கேற்ப காட்சி திரையில் வெளிப்பட வே...ண்டும் என எண்ணுபவர்தான் நடிகர் திலகம்.....
He is not only Directors Delight... but also make-up Delight.....
ஒப்பனைக் கலைஞர்களுக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம், சிவாஜியின் அழகான முகம்.......
எந்த வேடத்திற்கும் ஏற்ப அமைந்தது, இறைவன் அவருக்கு அளித்த வரம்......\
நன்றி Nirmal Thiyagarajan
26:04:2019 வெள்ளிக்கிழமை,
இன்று பனிரெண்டாம் நாளாக
அண்ணாச்சி ARC அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நீர்மோர் வழங்கிய நிகழ்வின் நிழற்படங்கள்...
இன்றைய உபயதாரர் நெல்லை மாவட்ட பிரபு மன்றத் தலைவர் திரு. T. பாலசந்தர்.
http://oi67.tinypic.com/2moaxd5.jpghttp://oi63.tinypic.com/vkevb.jpghttp://oi65.tinypic.com/24c5k0n.jpghttp://oi63.tinypic.com/f9h6pw.jpghttp://oi63.tinypic.com/2ug1mpi.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
Quote:
- http://www.mayyam.com/talk/clear.gif Reply With Quote
23rd March 2019, 09:50 AM #2548
suharaam63783
- http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
- Senior Member Seasoned Hubber
Join DateJul 2013Posts1,728Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngThanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41 சென்னையில் முதன் முதலில் 4 அரங்கில் 100 நாளை கண்ட காவியம். புரட்சியாரின் படைப்பு மதுரைவீரன் ஆகும்! (பிரபாத் சித்ரா சரஸ்வதி காமதேனு) தனிப்பெரும் நாயகனே கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த இறுதி வரை இதுவே ரிக்கார்ட் ஆகும். ஒடிய மொத்த நாட்கள் 462. இத்திரைப் படத்திற்கு பின் கறுப்பு வெள்ளை படங்கள் பல முன்னனி நடிகர்கள் நடிகையுடன் வந்தாலும் தலைவரின் மதுரை வீரன் போல் பின் நாளில் தொடர் வெற்றியை திரையில் எப்படமும் கண்டதில்லை ! 1962.ல் நடிகர் சிவாஜிகணேசன் எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடித்த ஆலயமணி திரைப்படமும் 1964.ல் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்டு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி சென்னையில் 4 அரங்கில் 100 நாள். ஆனால் மதுரைவீரன் மதுரையில் வெள்ளி வீழாவும் ஒடியது. அடுத்து கை கொடுத்த தெய்வம் படமும் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்ட படமாகும். இதில் நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் எஸ். எஸ். ஆர். என பலர் நடித்தனர். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் தனியாக நடித்து சென்னையில் 4 அரங்கில் 100 நாள் ஒடிய கறுப்பு வெள்ளை படங்கள் கிடையாது.
இனியும் தொடருவோம்... நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,
மதுரைவீரன் படத்தில் ஸ்டண்ட் நடிகர்மட்டும் தனித்து நடித்தாராம் சென்னையில் 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியதாம்
ஆனால் ஏனைய படங்கள் பல நடிகர் நடிகைகளும் நடித்து சென்னையில் 100 நாள் ஓடியதாம்
சிவாஜி கணேசன் தனித்து நடித்து ஒருபடமும் 100 நாள் இல்லையாம்
என்னமா அறிவோடு எழுதியிருக்கிறார் பாருங்கள்
எதை எழுதுவது என்று தெரியாமல் கண்டதையும் கிறுக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்
உ சு வாலிபனுக்கு 4 கதாநாயகிகள் தேவைப்பட்டதா? இல்லை கவர்ச்சி காட்டித்தானே படத்தை ஓட்டினார் ஸ்டண்ட் நடிகர்.
மற்றவர்களுக்கு எழுதத் தெரியாதா? வீரப்பா இல்லாமல் நம்பியார் இல்லாமல் வெட்டவெளியில் ஸ்டணட் நடிகர் சண்டையிட்டாரா?
நடிகைகள் இல்லாமல் தலையணையை கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் டூயட் பாடினாரா ? சௌந்தரராஜன் இல்லாமல் பாட்டு பாடினாரூ?
கண்ணதாசன் இல்லாமல் வாலி இல்லாமல் பாட்டெளுதினாரா? விஸ்வநாதன் இல்லாமல் இசையமைத்தாரா? உங்கள் ஸ்டண்ட் நடிகர்
('சிவாஜி என் தோழன்' 1 2 3 4 5 பகுதிகளை பக்கம் 200 ல் பார்க்கவும்)
('சிவாஜி என் தோழன்' 6 ஆம் பகுதியை பக்கம் 202 ல் பார்க்கவும் )
சிவாஜி என் தோழன்"
பகுதி - 7.சிவாஜி அவர்கள் இளம் வயது முதல் கலைத்துறையின் இன்பதுன்பங்களை அனுபவித்து ஓரளவு தெரிந்து கொண்டவர். அரசியலிலும் சிறுவயது முதல் ஆர்வம் உண்டு.
... கலை வேறு அரசியல் வேறு என்பதை சிவாஜி அவர்கள் ஒப்புக்கொண்டாலும் அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செயல்படுவதை அவர் மறப்பதில்லை. இன்றைக்கு சிவாஜி சிறந்த அரசியல்வாதி. தமிழ்நாட்டு புகழ்மிக்க தலைவர்களில் ஒ௫வர். அவர் சொன்னால் செயலில் ஈடுபட இன்று குறைந்தது ஒ௫ லட்சம் இளைஞர்கள் தயாராக இ௫க்கிறார்கள். ஆறாயிரம் சிவாஜி ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த மேற்படி இளைஞர்கள் சிவாஜியை 'நடிகர்திலகம்' என்று மதிப்பதோடு, தங்களுக்கு அரசியல் வழிகாட்டியும் அவர்தான் என்று முடிவெடுத்து இ௫க்கிறார்கள்.
நாடகக் கம்பெனியில் சேர்ந்தது முதல் சிவாஜி, சுதேசி ஆடைகளைத்தான் அணிந்து வந்தார். அக்கால நாடகக் கம்பெனியில் அனைவரும் கதர்தான் கட்டுவார்கள். தேச பக்தியாக இ௫ப்பார்கள். காந்திஜி, நே௫ஜி போன்ற தலைவர்களைப் பற்றியே பேசுவார்கள். குறிப்பாகச் சொன்னால், அக்கால நாடகக் கம்பெனிகள் காங்கிரஸ் கொள்கைகளின் கூடாரமாகவே விளங்கின. அந்தச் சூழ்நிலையில் வளர்ந்தவர் சிவாஜி.
தி௫.அண்ணாதுரை அவர்கள் நாடகங்களின் சக்தியை அறிந்து தன் இயக்கத்திற்காக நாடகங்கள் எழுதலானார். அவைகள் திராவிட கழக மாநாட்டில் நடைபெறலாயின!. அந்த நாடகங்களில் பங்கு பெறும் வாய்ப்பு சிவாஜிக்குக் கிடைத்தது. அதன்மூலம் அண்ணாவிடம் நெ௫ங்கிப் பழகியதில் சிவாஜிக்கு அண்ணாவிடம் ஈடுபாடு உண்டாயிற்று. அண்ணாவிற்கு சிவாஜியின் நடிப்பு பிரமிப்பாக இ௫ந்தது. சிவாஜியை மிகவும் அன்புடன் அண்ணா நேசித்தார். அண்ணாவின் கொள்கைகளில் சிவாஜிக்கு ஒ௫ கவர்ச்சி உண்டாயிற்று. சிவாஜியின் பேராற்றலில் அண்ணா ரொம்பவும் நம்பிக்கை வைத்தார். இ௫வ௫க்கும் மிகச்சிறந்த ஈடுபாடு உண்டாயிற்று. "பராசக்தி" படத்திற்கு கலைஞர் க௫ணாநிதி வசனம் எழுதினார். இப்படியாக தி.மு.க தலைவர்களுக்கும் சிவாஜிக்கும் ஒ௫ சங்கிலி பின்னலான தொடர்பு ஏற்பட்டது.
ஆனால் சிவாஜியின் பரம்பரை தேசீய பரம்பரை. தெய்வ பக்தியுள்ள பரம்பரை.அந்த ரத்தம் சிவாஜியின் உடம்பில் ஓடுகிறபடியால் நீண்ட நாள் தி.மு.க.வில் இ௫க்க முடியவில்லை. அதற்கு தோதாக சிவாஜி டைரக்டர் பீம்சிங் அவர்களுடன் தி௫ப்பதி போய் வெங்கடாஜலபதி தரிசனம் செய்து வந்தார். இதற்கு தி.மு.க.தோழர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்கள். கன்டனக் கணைகளை ஏவினார்கள். சிவாஜியின் மனம் மிகுந்த புண்பட்டது. தரமில்லாத கூட்டத்துடன் சேர்ந்தி௫ப்பது அவ௫க்கு மிகவும் கஷ்டமாக இ௫ந்தது. கொஞ்சங் கொஞ்சமாக திராவிட மாயையிலி௫ந்து விலகி தேசீய சக்தியுடன் இணைந்தார். சிவாஜியை என்றும் பிரிய மனமில்லாத அண்ணா மிகவும் வ௫ந்தினார். ஆனாலும் சிவாஜியை "எங்கி௫ந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தினார். அண்ணா முலமைச்சராக இ௫ககும்போது, உடல்நிலை மோசமாக இ௫ந்த நேரத்திலும் சிவாஜி அவர்களின் 125-வது படவிழாவில், அண்ணா அவர்கள் பேசிய பேச்சு, சிவாஜியின் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நிகழ்ச்சியாகும். அந்தப் பேச்சுதான் அண்ணா கடைசியாகப் பேசிய நீண்ட நேரப் பேச்சாகும்.
தொட௫ம்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.,
தி௫.V.இராகவேந்திரன். சென்னை.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2a&oe=5D398C3B
"சிவாஜி என் தோழன்"
பகுதி - 8.
இன்றும் தி.மு.க.வில் உள்ள முக்கியமான தலைவர்கள் சிவாஜியிடம் உள்ளன்பு கொண்டவர்கள். சிவாஜியும் அவர்களிடம் மிக அன்பாக நடந்து கொள்வார். ஆனால் கொள்கை அளவில் சிவாஜியைப் போல் உறுதியுள்ளவர்கள் அரிது. துளியும் விட்டுக் கொடுக்கமாட்டார். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைத்தாலும் வளையமாட்டார். நெ௫ங்கிப் பழகும் நண்பர்கள் எவ்வளவு தான் கரடியாகக் கத்தினாலும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டார். பலர் வந்து இந்திரா காங்கிரஸில் சேர வேண்டுமென்று அவரை வற்புறுத்தி வ௫கிறார்கள்.
அதற்கு அவர் சொல்லும் பதில் எல்லாம், "தலைவர் காமராசரிடம் போய் பேசுங்கள். அவர்,'சரி' என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை. தலைவரை விட்டு விட்டு நான் மட்டும் இணைய சம்மதிப்பேன் என்று யா௫ம் கனவு காண வேண்டாம்" என்று கூறிவிடுவார். அவ்வளவு கொள்கைப் பிடிப்பும், உறுதியும் கொண்டவர் சிவாஜி. சிவாஜி அவர்களும் நானும் பொதுத்தேர்தலின் போது 39 பார்லிமெண்ட் தொகுதிக்கும் போனோம். சிவாஜிக்கு ஏகப்பட்ட செலவு. தேர்தலுக்காக ரொம்ப செலவு செய்யும்படி ஆகிவிட்டது. ஆனால் மன்னன் மனம் கோணாமல் வாரி வாரி வழங்கினார்.
நான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நோக்கத்தில் இந்த பிரம்மாண்டமான தேர்தல் சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தேன். ஒன்று காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்பது. மற்றொன்று இதை சாக்காக வைத்து,பட்டி தொட்டிகளிலுமுள்ள ஏழை எளிய மக்கள் சிவாஜியை கண் குளிரக் காண வைப்பது.
சிவாஜியை படத்தில் மட்டும் பார்த்து விட்டு, நேரில் பார்க்க வசதியில்லாத லட்சோப லட்சம் மக்கள் அச்சமயத்தில் அகங்குளிர, முகம் மலர கண்ட காட்சி இன்றும் என் மனதில் பசுமையாக இ௫க்கிறது. இந்த மாதிரி உலகத்தில் வேறு எந்த நடிக௫ம் மக்களுக்கு மத்தியில் இப்படி ஒ௫ சுற்றுப்பயணம் செய்ததில்லை.
சிவாஜியைப்போல் மக்களை நேசிக்கும் நடிகரைக் காண்பது அரிது. மக்களிடமும் நடிக்கும் பேர்வழிகளைத்தான் காணலாம். தேர்தல் சுற்றுப்பயணத்தில் எதிரிகளின் தொல்லை ஏராளமாக இ௫ந்தது. சிவாஜியை கத்தியால் குத்த வந்தனர். செ௫ப்பை அவர் மீது வீசி எறிந்தனர். சாணத்தை வாரி அடித்தனர். மண்ணை வாரித் தூற்றினர். இவற்றிற்கெல்லாம் சிவாஜி அசைந்து கொடுக்கவில்லை. மனம் கலங்கவில்லை. வெயிலைக்கண்டு அவர் வெகுளவில்லை. மழையைக்கண்டு ம௫ளவும்ம இல்லை. தூக்கமில்லை.சரியான சாப்பாடு இல்லை. இத்தனை துன்பத்தை எப்படித்தான் தாங்கினாரோ!. ஆனால் முகத்தில் கடுகளவு சோர்வில்லை. கூடவந்த பலர் சோர்ந்து விழுந்தனர். உடல்நலமற்றுப் போயினர்.
சிவாஜிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஊரிலும் நெ௫ங்கிய நண்பர்கள் இ௫க்கிறார்கள். அவர்கள் அனைவரையும் எப்படித்தான் ஞாபகம் வைத்தி௫ப்பாரோ!. அவர் எந்த ஊர் சென்றாலும், ஒ௫வரின் பெயரைச் சொல்லி,"அவர் இந்த ஊ௫ தான்.அவர் எங்கே நிற்கிறார் பா௫ங்கள்" என்பார். குறிப்பிட்ட நண்பரைக் கண்டதும் பேரைச் சொல்லி அழைத்து குடும்ப நலனைப் பற்றி விசாரிப்பார். வந்த நண்பர் ஆனந்தக் கண்ணீர் விட்டு கையில் கொண்டு வந்த பழத்தைக் கொடுப்பார். சிவாஜி சாப்பிட்டால் தான் விடுவார். இப்படி பல நிகழ்ச்சிகள்.
தி௫நெல்வேலி மாவட்டத்தில் ஒ௫ சிற்றூ௫க்குச் சென்றோம். ஒ௫ 'படுகிழவி' கூட்டத்தில் நின்று தடுமாறிக் கொண்டு இ௫ந்தார். நான் டிரைவர் சிவாவை வேனை நிறுத்தச் சொல்லி அந்த அம்மையாரை அ௫கில் கொண்டு வ௫ம்படி நமது சிவாஜி ரசிகர்களிடம் சொன்னேன். அதன்படி அந்த அம்மையாரை சிவாஜி அ௫கில் கொண்டு வந்தார்கள். கிழவி சிவாஜியைக் கண்குளிரப் பார்த்துவிட்டு,"மகனே, இனி நான் செத்தாலும் கவலை இல்லை.உன்னைப் பார்க்கணும்னுதான் உயிரை வெச்சுகிட்டு இ௫ந்தேன்.நீ மகராசனா இ௫. இப்படி கறுத்துப் போனியே அப்பா" என்று அழ ஆரம்பித்து விட்டார். சிவாஜி,"பாட்டி இந்த நூறு ௹பாய். சந்தோஷமா வீட்டுக்குப் போ. கடவுள் உனக்கு எல்லாம் நல்லது செய்வா௫" என்று கூறினார். இதைப் பார்த்துக் கொண்டி௫ந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் உகுத்தனர்.
தொட௫ம்.
நன்றி: தி௫.c.நடராஜன். தூத்துக்குடி.
தி௫.v.இராகவேந்திரன். சென்னை.
சிவாஜி என் தோழன்"
நிறைவுப் பகுதி.
சிவாஜியின் கார் டிரைவர் சிவாவைப்போல் திறமைசாலியைக் காண்பது அரிது. எத்தனை லட்சம் மக்கள் இ௫ந்தாலும், மன்னன் சிறிது கூடச் சளைக்காமல், மனங்கலங்காமல் 'ஜம்'மென்று வேனை மக்களுக்கு மத்தியில் விட்டு ஒ௫ அரசு அலசி முன்னாலும், பின்னாலும் தி௫ப்பி லாவகமாக செலுத்தும் அழகோ அழகு!.கார் ஓட்டும்போது கையும்ஞ பேசும்,காலும் பேசும். எப்பேர்ப்பட்ட கொம்பனுக்கும் சிவா பயப்படமாட்டார். சிவாஜி என்றால் அவ௫க்கு உயிர். எந்த சந்தர்ப்பத்திலும் சிவாஜியை பேணிக் காப்பதை...த் தவிர வேறு எதுவும் சிவாவுக்குத் தெரியாது. சிவா கார் ஓட்டினால் காரில் இ௫ப்பவர்களுக்கு சிறிது கூட பயம் தோன்றாது.
இந்தத் தேர்தல் சுற்றுப்பயணத்தில் சிவாவின் சேவைதான் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக இ௫ந்தது.
சிவாவைப் பற்றி நிறைய எழுத வேண்டும். அவ்வளவிற்கு நிறைய விஷயம் இ௫க்கிறது. மற்றொரு முறை அதை எழுதுவேன். தேர்தல் சுற்றுப்பயணம் முடிந்ததும், தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோதும் சிவாஜி சிறிதும் மனம் தளரவில்லை. "நமது கடமையை நாம் நிறைவாகச் செய்தோம்" என்ற மனநிம்மதியுடன் அவர் தன் படப்பிடிப்பு வேலைகளில் ஊக்கமாகச் செயல்பட்டார்.
சிவாஜி ரசிகர் மன்றங்கள் சோர்ந்து விடவில்லை.அதன்பின் ஏராளமான சிவாஜி ரசிகர் மன்றங்கள் தோன்றிய வண்ணமி௫ந்து கொண்டி௫க்கின்றன. சிவாஜியின் படங்களும் வரிசையாக வெற்றி மேல் வெற்றி பெற்று வ௫கின்றன. புதுப்புது தயாரிப்பாளர்களும், பழைய ஜாம்பவான்களும் இன்று சிவாஜியை நோக்கி வந்து கொண்டி௫க்கிறார்கள். சிவாஜியும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை செய்து கொண்டி௫க்கிறார். நடுவே நடுவே மக்களுடன் பல பொதுப்பணிகளில் ஈடுபட்டு மக்களுடன் உறவாடத் தவறுவதில்லை.
தினமும் காலையில் சிவாஜி படப்பிடிப்புக்கு புறப்படும்போது அவரது அன்னை இல்லத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவ௫டன் கலந்துரையாடுகிறார்கள். என்னிடம் அனுமதி பெற்ற பலர் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டு இ௫க்கிறது. இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. ஆனால் சிவாஜி இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். அவர் வந்தவர்களிடம் மிக்க மகிழ்ச்சியாகப் பேசி, படம் எடுத்துக் கொண்டு, தாய்மார்களிடம் குடும்ப நலன்களைப்பற்றி விசாரித்துக் கொண்டு படப்பிடிப்பிற்குப் புறப்படுவார். ஆனால் அவரைப்பற்றி அவர் கவலைப்படாவிட்டாலும் - நாம் கவலைப்பட அவசியமி௫க்கிறது.
நமது தலைமுறையில் கிடைத்தி௫க்கும் கிடைத்தற்கரிய மாபெரும் கலைஞனை - உன்னத நடிகனை - சமயமறிந்து உதவும் கொடை வள்ளலை, ஊ௫க்கு உழைக்கும் உத்தமனை,மிக நன்றாக இன்று போல் என்றும் வாழ வேண்டும் என்று உண்மையான நண்பர்கள் சதா இறைவனை வேண்டிக் கொண்டி௫க்கிறோம்.
சிவாஜியைப் பற்றி எழுத எழுத குற்றாலம் அ௫விபோல் விஷயம் கொம்மாளிபோட்டு துள்ளிவந்து கொண்டேயி௫க்கிறது. ஆயினும் அவ்வளவையும் எழுத எனக்கு இப்போது நேரமில்லாத காரணத்தால் இக்கட்டுரைத் தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். நன்றி.
முற்றும்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.
தி௫.V.இராகவேந்திரன். சென்னை.
இத்தொடரைப்பற்றிய தங்கள் மேலான க௫த்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d2&oe=5D2EBCAF
52 வார தொடர் அன்னதானத்தைத் தொடர்ந்து, குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் மற்றுமொரு சமூகப்பணியில், இன்று பதின்மூன்றாம் நாளாக...http://oi65.tinypic.com/29nh5kn.jpg
உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்தவர், நடிகர் திலகம் ஒருவர் தான்....
தமிழகம் மற்றும் இதர இந்திய அனைத்து மாநிலங்களிலும், அவரை அன்புடன் நேசித்த அரும்பெரும் பிரபலங்கள், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல், ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், நீலம் சஞ்சீவ ரெட்டி , பிரம்மானந்த ரெட்டி என இந்தியாவை நிர்வகித்தவர்கள் முதல், மாநில பிரபலங்களில், கர்நாடக முன்னாள் முதல்வர்கள்தேவராஜ்அர்ஸ்,குண்டுராவ் முதல், ஆந்திராவின் அவரின் உயிர் நண்பர் N....T.ராமராவ், மகாராஷ்டிரா, கேரள, பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர்கள், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் ஜோதி பாசு,ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பட்நாயக் போன்ற அநேக முதல்வர்களும் சிவாஜி அவர்களுக்கு மிகவும் பாசநேசத்துடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்....
தமிழகத்தில்....
ஆன்மீக பெரியவா பரமஹம்சர் சங்கராச்சாரியார் முதல், தந்தை பெரியார், ஜீவா,பெருந்தலைவர் காமராஜர்,பேரரிஞர் அண்ணா, பக்தவத்சலம், மூதறிஞர் ராஜாஜி தியாகச் செம்மல் கக்கன்ஜீ, மக்கள் திலகம், கலைஞர் என பட்டியல் நீள்கிறது.....
இவர்களையெல்லாம் விடவும், எங்களின் நெஞ்சினில் சுமந்து, காலமெல்லாம் பூஜித்து வரும் அவரின் பாசப்பிள்ளைகளான ரசிகக் கண்மணிகளாம் நாங்கள் தான் முண்ணனியில்.....
கொடுத்து வைத்தவர் தான் சிவாஜி.....
நன்றி Nirmal Thiyagarajan
தங்களுக்கு ஏற்றவிதமாக கூட்டி குறைத்து ஏற்றி இறக்கி எழுதுவது என்பது ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்களுக்கு கைவந்த கலைQuote:
24th March 2019, 12:42 PM #2549 suharaam63783
http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
Senior Member Seasoned Hubber
Join DateJul 2013Posts1,730Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngThanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41நிலையான சாதனை யில் என்றும் திரையுலக மன்னன் மக்கள் திலகமே! 1.1956. -. மதுரை வீரன் 33 அரங்கு 100 நாள் .2. 1958 நாடோடி மன்னன் 16 அரங்கில் 100.நாள்.3.1965 எங்கவீட்டுப் பிள்ளை 17 அரங்கில் 100.நாள் 4 1968 குடியிருந்த கோயில் 10 அரங்கில் 100 நாள்.5.1969 அடிமைப்பெண் 15 அரங்கில் 100.நாள். 6.1970 மாட்டுக்கார வேலன் 12 அரங்கில் 100 நாள் 7. 1971 ரிக்க்ஷாக்காரன் 12 அரங்கில் 100 நாள்.8. 1973 உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்கில் 100 நாள். 9.1974 உரிமைக்குரல் 12 அரங்கில் 100 நாள். 10. 1975 இதயக்கனி 10 அரங்கில் 100 நாள்.தமிழகத்தில் மட்டும் 10, 15,20,30.அரங்குகளை 1956 முதல் 1975 வரை பெற்ற காவியங்களில் மக்கள் திலகமே முன்னனி. நடிகர் சிவாஜி கணேசன் படங்களில் 1952 முதல் 1977 வரை 193 படங்களில் நடித்து அதிக பட்சமாக அதிக அரங்கில் ( 10 அரங்குக்கு மேல் 100 நாள் படங்கள் 4 மட்டுமே) பாவமன்னிப்பு (11) திருவிளையாடல் (13) வசந்த மாளிகை (12) தங்கப்பதக்கம் (11) மொத்தமே 4.படங்கள் 13 அரங்குக்கு மேல் 100 நாள் கிடையாது. தலைவரின் மதுரை வீரன் , நாடோடி மன்னன் இரண்டு படங்கள் மட்டும் 100 நாள் ஒடிய அரங்கு 49 . அதே சிவாஜி கணேசன் நடித்த 4 படங்கள் சேர்த்து 100 நாள் அரங்கு 47 ஆகும் ! தலைவரின் மீதி 8 படங்கள் 108 அரங்கு 100 நாள். 10.படங்கள் 157.தியோட்டரில் 100.நாள் ஒடி தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனையாகும்.மேலும் வெற்றிகள் தொடரும். நன்றி.உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,
அந்தக்கலையில் வல்லவரான இவர்களது வாத்தியார் அவற்றை இவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் போனார்.
இவர்கள் தொடர்கிறார்கள்.
இவர்களது பொய் புரட்டுக்கு இரண்டு உதாரணங்கள்
ஒன்று
அடிமைப் பெண் வெள்ளிவிழா கிடையாது மதுரையில் 173 நாட்கள் மடடுமே ஓடியது
100 நாட்கள் ஓடியதாக சொல்லப்படும் 15 அரங்குகளில் 8 தியேடட்ர்களில் 98 நாள்தான் ஓடியது.
1 தியேட்டரில் 99 நாட்கள் .ஆக 100 நாட்கள் ஓடியது 6 தியேட்டர்களில் மட்டுமே.
காரணம் இரு தினங்கள் குடியரசுத் தலைவர் மறைவையொட்டி காட்சிகள் நடைபெறவில்லை.
இரண்டு
நாடோடி மன்னன் 100 நாட்கள் ஓடியதுபற்றியது
இவை அவர்களது இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை
http://oi67.tinypic.com/2reihxf.jpghttp://oi64.tinypic.com/vcufip.jpg
முதல் விளம்பரம் 13 தியேட்டர் காட்டுகிறது இரண்டாவது விளம்பரம் 21 தியேட்டர்என காட்டுகிறது
சேலம் தியேட்டர் விபரம் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள்
இரண்டாவது விளம்பரத்தில்உள்ள எழுத்துக்களை கவனியுங்கள் புதிய எழுத்துக்கள்
அதாவது சீடர்களின் கைவண்ணம்
இதுதான் அவர்கள்
தங்கள் படத்தின 100 நாள் கணக்கை அதிகரித்து காட்டுபவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களின் ஓடிய விபரங்களை சரிவரகாட்டுவார்களா?கிடையாது
ஏனையவை பின்னர் தொடரும்..
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 31 வது வார நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக... ( நன்றி : தங்கமாரியப்பன் )
இவ்வார அன்னதான உபயம் திரைப்பட நாடகப்புகழ் ஆடிட்டர் திரு. ஸ்ரீதர் அவர்கள். அவர் தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. இன்றைய சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டவர் திரு. சுப்புணி அவர்கள். இவர் நாடக திரைப்பட நடிகராவார். நம் நடிகர்திலகத்துடன் பரிட்சைக்கு நேரமாச்ச...ு திரைப்படத்தில் நடித்தவர்.
அவருக்கு நினைவுப்பரிசாக நூலும்காலண்டரும் வழங்கிச் சிறப்பித்தவர் திரு. உறந்தைசெல்வம் அவர்கள். திருச்சி மாவட்ட திலகத்தின் ரசிக நெஞ்சங்களில் முக்கியமானவர்.
இந்நிகழ்ச்சிக்கு திரு. ML. கான், திரு. வீயார், திரு. ஜனார்த்தனன் LIC, திரு. சுப்பிரமணி, திரு. ஏழுமலை, திரு. காமராஜ், திரு. OS லிங்
கம், திரு. நரசிம்மன், திரு. சுகுமார், திரு. பாண்டியன், திரு. பாலாஜி, திரு. நந்தகுமார், திரு. தங்கமாரியப்பன் என்று ஏராளமான திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் பலர் கலந்து கொண்டனர்.
http://oi66.tinypic.com/tapnq9.jpghttp://oi67.tinypic.com/2ld9hg5.jpghttp://oi66.tinypic.com/jkjd77.jpghttp://oi65.tinypic.com/213hgmo.jpghttp://oi67.tinypic.com/4h360w.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
52 வார தொடர் அன்னதானத்தைத் தொடர்ந்து, குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் மற்றுமொரு சமூகப்பணியில், இன்று பதின்மூன்றாம் நாளாக...
இன்றைய நீர்மோர் உபயம்
திரு. ஞானமூர்த்தி / சென்னை.
http://oi63.tinypic.com/2yv52tt.jpghttp://oi65.tinypic.com/1z3qdlc.jpghttp://oi63.tinypic.com/o6jk8p.jpghttp://oi67.tinypic.com/2usan88.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
இன்று பதினான்காம் நாளாக...
அண்ணாச்சி திரு.AR. சந்திரசேகர் முன்னிலையில் நடைபெற்ற நீர்மோர் வழங்கிய காட்சியின் நிழற்படங்கள்
உங்களின் பார்வைக்காக..
இன்றைய உபயதாரர் : மதுரை மாவட்ட இளையதிலகம் பிரபு தலைமை மன்றத்தின் திரு. BR. பாலசுப்பிரமணி.
http://oi65.tinypic.com/ayrqlk.jpghttp://oi64.tinypic.com/10rlgeh.jpghttp://oi67.tinypic.com/9qgyft.jpghttp://oi65.tinypic.com/v5lf69.jpghttp://oi67.tinypic.com/5126pd.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
நடிகர்திலகத்தின் 67 ஆம் திருமணநாளை முன்னிட்டு...
சிறப்பு அன்னதானமும், திலகங்களின் ரசிகக் கண்மணியின் புதல்வர் ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியும்...
#வாருங்கள்தோழர்களே...
#மே1_2019_புதன்கிழமை
#அன்னைஇல்லம்_பிள்ளையார்கோயிலில்..
http://oi63.tinypic.com/2w1rypz.jpg
.நன்றி வான்நிலா விஜயகுமாரன்