http://i58.tinypic.com/j5fpj7.jpg
Printable View
CONGRATULATIONS SAILESH SIR
http://i59.tinypic.com/5eblmv.jpg
SUPERB POSTINGS.
WARM REGARDS
மக்கள் திலகத்தின்
பக்தர்களுக்கு
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள
திரு சைலேஷ் பாசு
5000 பதிவுகள் வழங்கிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
திரு கலைவேந்தன்
தங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு 18.3 1976 அன்று சேலம் சங்கம் அரங்கில் வெளிவந்து 25.6.1976 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது .100 வது நாள் விளம்பரம் 24.6.1976 மாலை இதழில் 100 வது நாள்விளம்பரம் வந்தது . எனவே மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் சேலம் சங்கத்தில் வெளியாகவில்லை. சேலம் அலங்காரில் 23.6.1976ல் உழைக்கும் கரங்கள் வெளியாகி 96 நாட்கள் ஓடியதாக தகவல் கிடைத்துள்ளது . விபரம் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
http://i61.tinypic.com/1j2jbd.jpg
Quote:
Congratulations Sailesh Sir for crossing the 5K mark of your streamlined and systematic postings in pursuit of singing in unison the name and fame of the iconic entertainer of Tamil Cinema Shri MGR!
மனதை 'மைக்'கிய மக்கள் திலகம் 'மோகன' கானங்கள் ....சைலேஷ் சாருக்காக!
Quote:
திலக நடிகர்களாக இருந்தாலும் மைக் பிடித்துப் பாடும் ஆசை யாரை விட்டது ! மக்கள்திலகமும் விதிவிலக்கல்ல!!
'மைக்' எடுத்துத் தரும் 'கலர்' காஞ்சனாவை மயக்கிய மதுர கானம்!
https://www.youtube.com/watch?v=S2RLsp1D58Q
பிரிந்த உறவுகள் சேர்ந்திட உதவியது குடும்பத்தின் தீம் சாங் மைக்கில் பாடப்பட்டதாலேயே!!
https://www.youtube.com/watch?v=tLdRE0o1zaE
senthil
இன்று சென்னை - திருநின்றவூர் - நத்தமேடு - அருள்மிகு எம் ஜி ஆர் ஆலய ஐந்தாம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டேன். பேராசிரியர் திரு செல்வகுமாரும் ஏனைய பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா புகைப்படங்கள் சில.
Quote:
தமிழ்த்திரைப் பாடல்களில் இந்திப் படப் பாடல்கள் இசையின் தாக்கம் மிகுந்திருந்த காலகட்டம்! 1950 1960 வரை!!
இசைத்தழுவல் இருப்பினும் கருத்து மிகுந்த கானங்களில் பின்புலமாகக் கோர்க்கப் படும்போது மனம் ஈர்க்கப் படுவது இயற்கையே !
இந்தி(ய)த் திரையுலகின் Showman on the earth என்று போற்றப்பட்ட ராஜ்கபூரின் ஸ்ரீ420 படத்தின் இசைக்கருவைக் கோர்த்து பணம் படைத்தவன் திரைப்படத்தில் புகழ் பெற்ற கருத்துத் தெளிப்புகள் நிறைந்த பாடலான கண் போன போக்கிலே பாடல் சௌகாரைப் பார்த்து மக்கள்திலகம் சற்று மனத்தாங்கலுடன் பாடுவதாக அமைக்கப் பட்டிருக்கும் !
Raj Kapoor's Shree 420!
Mudmudke na theko mud mudke!
https://www.youtube.com/watch?v=Ci6OfLH6Ogo
MGR's Kan Pona Pokkile ...
https://www.youtube.com/watch?v=0BjXwxj6CVY
quote=varadakumar sundaraman;1243891]இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.
1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன.
8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின.
அப்படி பார்த்தாலுமே 1975 இல் 4 நூறு நாட்கள் ஓடிய படங்களில் 2 நூறு நாட்கள் படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள்தான் ! அதில் ஒன்று சென்னை தவிர மற்ற ஊர்களில் ஓடியுள்ளது ....ஒரு திரைப்படம் ( மன்னவன் வந்தானடி ) ரிலீஸ் செய்த அனைத்து சென்னை திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியுள்ளது....எப்படி பார்த்தாலும் 50% stake நடிகர் திலகத்தினுடயது மட்டுமே உள்ளது !
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் கூற்றின்படி... 8 அல்லது 9 100 படங்கள் மட்டுமே 100 நாட்கள் ஓடும் வழக்கமுடைய தமிழகத்தில் 1972ஐ எடுத்துக்கொண்டால் நடிகர் திலகத்தின் 7 படங்கள் வெளிவந்தது..அதில் 6 திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளது 2 வெள்ளிவிழா உட்பட !
6 நூறு நாட்கள் படங்கள் நடிகர் திலகத்தினுடயது 2 வெள்ளிவிழா உட்பட என்றால் மற்ற அனைத்து நடிகர்களின் படங்கள் சேர்த்தாலும் எண்ணிக்கை 2 அல்லது 3 தாண்டாவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம ? அல்லது யாருடைய படம் அதிக வசூல் செய்திருக்கும்...யாருடைய படம் அதிக வரி கொடுத்திருக்கும் என்று வாதம் செய்யதான் உகந்ததா ?
1973 எடுத்துகொண்டால் கூட...நடிகர் திலகம் அவர்கள் நடித்து 7 திரைப்படங்கள் வெளிவந்துள்ளது...திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் கூற்றின்படி ...7 படங்களில் 4 நூறு நாட்கள் படங்கள் சென்னையிலும் இதர நகரங்களிலும் நடிகர் திலகத்தினுடயது ஓடியுள்ளது...வாதம் செய்ய உகந்ததா ?
ஆகவே...விழாக்களில் பேசுவது நமக்கு சாதகமாக மட்டும் எடுத்துகொள்வது அதுவும் logically தவறான தகவலை அடிஸ்தானமாக எடுத்துகொள்வது சரியல்ல என்பது எனது நடுநிலையான கருத்து !
இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.- முக்தா பிலிம்ஸ் Thiru. ஸ்ரீனிவாசன்
1975 - வேறு எந்த படமும் சென்னையை தவிர மற்ற இடங்களில் 100 நாட்கள் ஓடவில்லை என்றால்.....திருச்சி, சேலம், மதுரை ஆகியவை சென்னை மாநகருக்குள் மாம்பலம், ராயபேட்டை போல சென்னையை சேர்ந்த மூன்று இடங்களாக அரசாங்கத்தால், பிரக்யாபிக்க பட்டதாக இருக்கவேண்டும். அப்படி எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை !
இப்படி தவறான தகவல் ..அந்த தவறான தகவல் தாங்கிய பதிவுகளை மையம் திரி படிக்க வரும் பொதுமக்கள் உண்மை என்று நம்பிவிடக்கூடாது என்ற காரணத்தால் இந்த என்னுடைய பதிவு...அதனுடன்...அந்த தகவல் சட்ட்று தூக்கி வைத்து பாராட்டவேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் வந்த விளைவு என்பதை விளக்கும் ஆதாரம் இணைத்துள்ளேன்.
நடிகர் திலகம் அவர்களின் 175வது படம் அவன்தான் மனிதன் ! அதன் விளம்பரம் பார்த்தால் புரியும்..மற்றபடங்கள் எதுவும் சென்னை தவிர ஓடவில்லை என்ற தகவல் எவ்வளவு தவறானது என்பதை புரியவைக்கும் !
http://i501.photobucket.com/albums/e...ps4cyaaewn.jpg
4 படங்கள் மட்டுமே தமிழகத்தில் 100 நாட்கள் ஓடிய 1975 ஆம் வருடத்தில் - 4 இல் 2 படங்கள் நடிகர் திலகத்துடைய படங்கள். ஒன்று சென்னையும் மற்றும் இதர நகரங்களில் ஓடிய அவன்தான் மனிதன் ...இரெண்டாவது சென்னையில் ரிலீஸ் செய்த 3 திரை அரங்குகளில் தினசரி 3 காட்சிகளும் குறைவின்றி ஓடிய மன்னவன் வந்தானடி திரைப்படம்..!
1975 - mannavan vandhaanadi - 100 days ad
http://i501.photobucket.com/albums/e...pse2nfqgrh.jpg
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
அந்த காலகட்டத்தில் 50% பொழுதுபோக்கு வரி இருந்ததாக நினைக்கிறன்..அப்படி பார்த்தால்....மக்கள் திலகம் அவர்கள் எல்லா சாதாரண படமும் ஒரு கோடி ருபாய் வசூல் செய்துள்ளதா ? அல்லது எல்லா பெரிய படமும் ருபாய் இரண்டு கோடி ருபாய் வசூல் செய்துள்ளதா, ஒரு கோடி ருபாய் அரசாங்கத்திற்கு வரி கொடுக்க ? என்ற கேள்வி கூடவே எழுகிறதே !
ஆனால் நண்பர் கலைவேந்தன் 10 படங்கள் தானே ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளார் ?
[/quote]
பொது விழாவில் பேசும்போது ...ஒரு சில விஷயங்கள் விழா நாயகரையோ அல்லது அந்த விழா சம்பந்தபட்டாதையோ சிறிது தூக்கி வைத்து பேசுவது மரபு, வழக்கம்...! உதாரணமாக ஒருவரை நாம் காந்தியையும் மிஞ்சிவிட்டார் என்று கூறினால்...காந்தியை உண்மையாகவே மிஞ்சிவிட்டார் என்று அர்த்தம்கொண்டு அதையே பேசிகொண்டிருப்பது நகைப்புக்குரிய விஷயமாகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே....!
திரு முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள்...பாராட்டி பேசியது மாற்றுகருத்தில்லை. தவறும் இல்லை ! ஆனால் அதுவே வேதவாகியமாகிவிடுமா என்ன ?
Rks
கலைவேந்தன் அவர்களே
திரு தேவர் அவர்கள் நடிகர் திலகத்தை வைத்து படம் எடுக்காத விஷயம் என்ன என்று உங்களுக்கு தெரியாதா ? அல்லது நாங்கள்தான் அறியாததா ..திரு தேவர் அவர்களுக்கும் மக்கள் திலகம் அவர்களுக்கும் ஒரு சமயம் கருத்துவேறுபாடு இருந்தபொழுது...தேவர் எடுத்த முடிவும்...அதன் பின் நடந்த சம்பவமும் தானே நடிகர் திலகத்தை வைத்து திரு தேவர் அவர்கள் ஒரு படம் கூட எடுக்காதது...!
இருந்தும் வியாபாரம் வேறு நட்பு வேறு ..நட்புக்காக வியாபாரம் செய்யலாமே தவிர...வியாபரத்திற்காக நட்பு செய்யகூடாது என்பதை எப்போதும் கடைபிடித்த நடிகர் திலகம் அவர்கள் - தேவரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவை திரு தேவர் அவர்கள் விரும்பாவிட்டாலும் இந்த நல்ல காரியத்தை கண்டிப்பாக நடத்தவேண்டும் என்று முன்னின்று பெருந்தன்மையாக ஆத்மார்த்த நட்பின் காரணம் நடத்தினார் நடிகர் திலகம்....!
அடுத்து திரு பாலாஜி ....பாலாஜி அவர்கள் மக்கள் திலகம் அவர்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்...நடிகர் திலகம் போல நட்பு வேறு வியாபாரம் வேறு என்பது மக்கள் திலகம் அவர்களும் நன்கு உணர்ந்தவர்..ஆகையால் தான் ஒவ்வொரு வருடமும் விஷு பண்டிகைக்கு மக்கள் திலகம் அவர்களை கண்டு ஆசி பெற்று நூறு ருபாய் விஷுகைநீட்டம் பெற்று வந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் திலகம் அவர்கள் கூட நகைச்சுவையாக பாருங்கப்பா...காசு என்கிட்டே வாங்கறான்...படம் மட்டும் தம்பிய வெச்சு எடுக்கறான் என்று ஒரு சஹோதர வாஞ்சையுடன் நகைச்சுவையாக குறிப்பிட்டதை பாலாஜி தனது interview பலவற்றில் கூறியுள்ளார்..அதே பாலாஜி அவர்கள்தான் ...மக்கள் திலகம் அவர்கள் அரசியலில் மிகவும் ACTIVE ஆக இருப்பவர். ஆனால் தானோ குறிப்பிட்ட தினத்தில் படத்தை ஆரம்பித்து ...முடிவெடுக்கப்பட்ட தினத்தில் படத்தை வெளியிடுபவன் என்றும்...அப்படி ஒரு நிலைமையில்...நடிகர் திலகத்தை தவிர வேறு யாருடனும் அந்த TIMING ஒத்துவராது ...HE IS HIGHLY DEDICATED & THOROUGH PROFESSIONAL,...மேலும்...நாங்கள் இருவரும் இணையும் படங்கள் மிக சிறந்த வெற்றிபெருபவை, அந்த வழக்கத்தை மாற்ற தானும் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் !
ராஜ ராஜ சோழன் அமெரிக்காவில் ஓடியதாக தெரியவில்லை என்று கூறியுள்ளீர்கள் !
அமெரிக்காவில் ராஜ ராஜ சோழன் ரிலீஸ் செய்திருந்தால் நிச்சயம் ஓடியிருக்கும் ! ஓடியிருக்காது என்று தங்களால் மட்டுமல்ல ..நடிகர் திலகம் படம் பற்றி வஞ்ச புகழ்ச்சி செய்யும் எவராலும் கூறமுடியாது !
அமெரிக்காவோ அல்லது ஐரோபாவோ மற்றவர்களுக்கு புதிதாகவோ, மலைப்பாகவோ, அதிசயமாகவோ இருக்கலாம்.இருக்கதான் செய்யும் !
ஆனால் எங்களுக்கு அப்படியல்ல சார் !
காரணம் ....எங்கள் திரைப்படம் "வீரபாண்டிய கட்டபொம்மன் " 1959 லையே இந்திய ராணுவ காலாட்படை, குதிரைப்படை ஆகியவை முதன் முதலாக இந்திய திரை உலக வரலாற்றில் பயன்படுத்தி
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு...
லண்டனில் பர்மியர் ஷோ அரங்கேற்றப்பட்டு...
உலக படவிழாவில் விருதுகளை குவித்துள்ளது...!
"உலக நாயகர்" பட்டம்கூட எங்களுக்கு அன்கீகாரமுள்ளவர்களிடமிருந்து 1960 லேயே கிடைத்துவிட்டது ..!
உலக SUPER STAR கள் முன்னிலையில்...!
உலக நாடுகளின் அதிபர்கள் கரகோஷத்துடன்...! ...
அதுவும் நாங்கள் நடிக்க வந்து JUST 7 YEARS & 2 MONTHS இல் !
எங்கள் படம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யாமலே, 1962 இல் அமெரிக்க அதிபர் JOHN F KENNEDY அவர்கள் நடிகர் திலத்தை இந்தியா அமெரிக்க கலாசார தூதுவராக அங்கீகரித்து அமெரிக்க விற்கு அழைத்து, நயாகர நகரில் ஒரு நாள் மாநகர தந்தை ( ONE DAY MAYOR ) என்று கௌரவபடுத்தி, தங்கசாவி கொடுத்துள்ளார்...!
எங்கள் படம் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யாமலே...இப்படி !
இன்னும் நீங்கள் கூறியிருப்பதை போல, ராஜ ராஜ சோழன் அமெரிக்காவில் திரயிட்டிருந்தால் ...ONE DAY AMERICAN PRESIDENT என்று கூட JOHN F KENNEDY அவர்கள் நடிகர் திலகத்தை நிச்சயம் கௌரவித்திருப்பார் ! மாட்டார் ! என்று உங்களாலோ என்னாலோ வேறு எவராலோ கூறமுடியாது
இதற்கே, ..அதாவது ...எங்கள் திரைப்படங்கள் இந்திய இலங்கை அளவில் நிகழ்த்தியுள்ள எக்காலத்திலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்கே....அன்று முதல் என்றும் ...எங்களை பார்த்து பெருமூச்சு..விட்டு..விட்டு...வயிதெரிச்சல் பட்டு...காழ்புணர்ச்சியில் பொய் தூற்றி, வஞ்ச புகழ்ச்சி புனைந்து மகிழ்ச்சி காண்கிறது ஒரு கூட்டம் சார் !
அதை சமாளிபதர்க்கே ஒரு ஆயுள் போதாது எங்களுக்கு ! :-)
RKS
திரு கலைவேந்தன் சார்
பராசக்தியை கணக்கில் சேர்க்காமல் இதர வெள்ளிவிழா படங்களுக்கு வருகிறேன்..
1) நடிகர் திலகத்தின் சம்பூர்ண ராமாயணம் வெளிவந்த ஆண்டு 14-04-1958 - மதுரை ஸ்ரீதேவி திரை அரங்கில் வெள்ளிவிழா கண்டது.
அதே ஆண்டு நடிகர் திலகத்தின் மற்ற படங்கள் வெளியான விபரம்
1) உத்தமபுத்திரன் - 07-021958 - 100 நாட்கள்
2) பதிபக்தி 14-03-1958 - 100 நாட்கள்
3) சம்பூர்ண ராமாயணம் - 14-04-1958 - 175 நாட்கள்
4) பொம்மை கல்யாணம் - 03-05-1958
5) அன்னையின் ஆணை - 04-07-1958
6) சாரங்கதாரா - 15-08-1958 ( 50வது படம் 5 வருடம் 2 மாதத்தில்)
7) சபாஷ் மீனா - 03-10-1958 - 100 நாட்கள்
8) காத்தவராயன் 07-11-1958
உத்தமபுத்திரன் வெளியாகி 69 நாட்கள் கடந்து ஓடிகொண்டிருக்கிறது...அதற்குள் பதிபக்தி வெளியாகி 31 நாட்களாக ஓடிகொண்டிருக்கிறது...அதற்குள் சம்பூர்ண ராமாயணம் வெளியாகி...ஓடிகொண்டிருக்கும்போழுது ....20 நாட்கள் இடைவெளியில் பொம்மை கல்யாணம்....பொம்மை கல்யாணம் வெளியாகி ஓடிகொண்டிருக்கும்போழுது 61 நாள் இடைவெளியில் அன்னையின் ஆணை...அன்னையின் ஆணை வெளிவந்து 41 நாட்களுக்குள் தம்முடைய 50 வது படம் சாரங்கதார...அது வெளிவந்து...49 நாட்களுக்குள் சபாஷ் மீனா ....அதன் தொடர்ச்சியாக 35 நாட்களில் காத்தவராயன் வெளிவந்தது ....இப்படி..தொடர்ச்சியாக ஒரு நல்ல GAP கூட இல்லாமல் ...தொடர் 100 நாட்கள் வெற்றி வெளியீடுகளுக்கு நடுவே சம்பூர்ண ராமாயணம் வெள்ளிவிழா கண்டது....! இதன் சாதனை வீச்சு என்ன என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளலாம் !
தங்கள் தரப்பில் மக்கள் திலகத்தின் முதல் வெள்ளிவிழா படத்திற்கு முன்னர் எப்போது என்ன இடைவெளியில் மக்கள் திலகம் திரைப்படம் வந்தது....மற்றும் முதல் வெள்ளிவிழா படம் வெளிவந்து என்ன இடைவெளியில் மக்கள் திலகம் அவர்களுடைய அடுத்த படம் வெளிவந்தது என்ற தகவலை சற்று பதிவு செய்தால் நானும் நாடும் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் !
தங்கள் பதிவு வந்தபிறகு...அடுத்த வெள்ளிவிழா படத்தின் RELEASE தகவல்களை STATISTICALLY இருவருமே அலசுவோம் ..!
உங்கள் கணக்கு தவறு சார் ....200 இல் 10 வெள்ளிவிழா அல்ல.....உங்கள் 115 இன் 6 வெள்ளிவிழா படத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் நடிகர் திலகம் அவர்களின் 28-07-1967 இல் வெளிவந்த திருவருட்செல்வர் 115வது படம் . இந்த 115 படங்களில் 8 திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டவை !!
THEREFORE
மக்கள் திலகம் - 115 - 6 சில்வர் ஜுபிலி திரைப்படங்கள்
நடிகர் திலகம் - 115 - 8 சில்வர் ஜுபிலி திரைப்படங்கள்
ஒரு நடிகரின் சம்பளம் என்பது இரண்டு வகைப்படும்.....ஒன்று முழு தொகையும் பணமாக வாங்கிகொள்வது....இரண்டு குறிப்பிட்ட தொகை முன் பணமாக வாங்கி...மீதம் உள்ள தொகைக்கு AREA விநியோக உரிமை பெற்றுகொள்வது.!
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
முன்பணம் + ஏரியா விநியோக உரிமை = நாயகனின் சம்பளம்
தயாரிப்பாளர் முழுதொகையும் புரட்டி காசாக கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை நாயகருக்கு..அட்வான்ஸ் தொகை போக மீதி தொகையை விநியோக உரிமை கொடுத்துவிட்டால் கையில் உள்ள பணத்தை மற்ற திரைப்பட படபிடிப்பு மற்றும் இதர நடிகர் நடிகை சம்பளத்திற்கு, செலவிற்கு பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்..பண பிரச்சனை முக்கால்வாசி வராது !
தயாரிப்பாளரின் கஷ்டங்களை நன்றாக புரிந்துகொண்ட நாயகர்களால் மட்டுமே இந்த METHOD ஐ கடை பிடிக்க இயலும்.
09-12-1954 இல் திரு ஸ்ரீதர் கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின்
எதிர்பாராதது திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகம் முன்பணம் + ஏரியா விநியோக உரிமை முறையில் திரைப்படங்களில் நடிக்கலானார். அதாவது நடிக்க வந்த 2 வருடம் 2 மாதத்திலேயே ! எதிர்பாராதது திரைப்பட சென்னை நகர விநியோக உரிமை நடிகர் திலகத்தின் சம்பளத்திற்கு ஈடாக கொடுக்கப்பட்டது.
எதிர்பாராதது திரைப்படம் சென்னையில் சித்ரா, ப்ரோட்வே, காமதேனு, பாரத் மற்றும் பெரம்பூர் லக்ஷ்மி (இன்றைய மகாலட்சுமி)யில் வெளியானது...ஒரு திரை அரங்கு வரி நீங்கலாக 50,000 வசூல் (விநியோகஸ்தர் பங்கு)என்று தோராயமாக கம்மிக்கு கம்மியாக வைத்தாலும்...2,50,000 ருபாய் பிளஸ் முன்பணம் ருபாய் 25,000 வைத்தாலும் நடிகர் திலகம் நடிக்க வந்த இரண்டு வருடத்தில் சம்பளம் ருபாய் 2,75,000
இதிலிருந்தே...யாருக்கு அதிகம் சம்பளம் என்பது விளங்கும் !
Regards
RKS
Courtesy : Facebook
http://i62.tinypic.com/2la9bo9.jpg