வாசு - போலீஸ் இலாக்காவில் எப்பொழுது சேர்ந்தீர்கள் ?
Printable View
வாசு - போலீஸ் இலாக்காவில் எப்பொழுது சேர்ந்தீர்கள் ?
அன்பு நண்பர் ரவி அவர்களுக்கு,
நீங்கள் எப்பொழுது மேடை பாடகர் ஆனேர்களோ அப்போழுதே வாசு அவர்கள் போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டார்.
Regards
ilayaraja one of the melodious song movie karakattakaran
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே
(குடகு மலை..)
மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந் தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு பாட்டு பாடுது
(குடகு மலை..)
மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி மாமா
https://www.youtube.com/watch?v=g5WQc88dJyA
இந்த பாடலை கேட்டால் உறக்கம் தானாகவே
வரும் ஒரு இனிமையான பாடல். தனது குரலில் தேன்வளம் உள்ள யேசுதாஸ் பாடிய அற்புத பாடல். என்றும் எப்போதும் கேட்க தோன்றும் நல்ல பாடல்.
http://youtu.be/8lIzPue8IXI?list=PLh...Be1JH4CwcSZX2P
பாடல் இரண்டு
பாணி ஒன்று
புதிய தொடர் 1
ஆமாம். ஒரே பாணியில் இரண்டு பாடல்களைத் தந்தால் என்ன என்று ஒரு எண்ண ஓட்டம் தோன்றி மறைந்ததன் விளைவே இந்தத் தொடர்.
முதலில் இரண்டு திலகங்களில் இருந்து ஆரம்பிப்போம்.
நடிப்பின் நாயகரும், புரட்சி நாயகரும் குழந்தைகளுடன் குதூகலித்து பல பாடல்கள் பாடியுள்ளார்கள். அவை மிக பிரபலமான பாடல்களாய் இன்றும் எங்கும் ஒலிக்கின்றன.
உலகே வியந்து பார்த்த இரு மாபெரும் நட்சத்திரங்கள் இமேஜ் பார்க்காமல் குழந்தைகளோடு இணைந்து தந்த காவியப் பாடல்கள்.
நடிப்பின் வேந்தர் குழந்தைகளின் செல்ல 'எங்க மாமா'வாக மழலைகளோடு மழலையாய் ஜீப்பில் உலா வரும் அழகு, பொருட்காட்சியில் குழந்தைகள் ரயிலில் அவர்களோடு பயணம் செய்து களிக்கும் அழகு. நல்ல புத்திமதிகளை நளினமாகத் தெரிவிக்கும் நயம். ரயிலுடனேயே ஆடியபடி ஓடி வரும் அற்புதமான ஸ்டைல். ராட்டினத்தில் அமர்ந்து சின்னப் பிள்ளையாய் சிங்கார சிரிப்பை கள்ளமில்லாமல் உதிர்த்து குதூகலிக்கும் உற்சாகம் பிள்ளைகள் யார் மாமா யார் என்று தெரியாத அளவுக்கு அழகு கொட்டிக் கிடக்கும் இளமை அழகன். என்றுமே நடிப்பில் 'தன்னந்தனிக் காட்டு ராஜா'. அவர் தோட்டத்தில் ரசிகர்களாகிய நாங்கள் ரோஜாதானே!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2BqghZZSNnQ
இதோ உலகம் சுற்றும் இந்த நாயகரை பாருங்கள். 'சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்ச பாப்பா' என வெளிநாட்டுக் குழந்தைகளுடன் கள்ளமில்லாமல் இவரும் சிரித்து மகிழ்ந்து ஆடிப் பாடி நல்லதைக் கற்றுக் கொடுக்கும் பாங்கு. அந்தக் குழந்தைகள்தான் எத்தனை அழகு! மல்லிகைப் பூவைச் சிதற விட்டது போல் முல்லைப் பறக்ளைக் காட்டி சிரிப்பைச் சிந்தும் முத்து முத்தான, சத்து சத்தான குழந்தைகள். 'சிரித்து வாழ வேண்டும்... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்ற தன்மான அறிவுரையை பிஞ்சு மனங்களில் விதைத்து இந்த நாயகரும் அவர் கடமையை செவ்வனே செய்து காலத்தால் அழியாத கருத்துள்ள இப்பாடலைத் தந்தாரே!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YN3a660t6Mo
இந்த இரு திலகங்கள் இடத்தில் வைத்துப் பார்க்க வேறு நடிகப் பிறவிகள் என்று எவரும் அகிலத்தில் உண்டோ!
வாசு - ஆரம்பம் அருமை . உண்மையில் இருதிலகங்களும் படங்கள் மூலமாகவும் , பாடல்கள் மூலமாகவும் , நடிப்பின் மூலமாகவும் வழங்கிய நல்ல கருத்துக்கள் ஏராளம் - இவைகளை மட்டுமே ஆராயிந்தால் இவர்கள் இருவரின் ஒருமை பண்பாடு , ஆரோக்கியமான நட்பு , மக்களை மதித்த விதம் , ரசிகர்களிடம் இவர்களுக்கு இருந்த ஈடுபாடு எல்லாமே தெளிவாக தெரிய வரும் - நாம் தான் இந்த ஒற்றுமையை புரிந்துக்கொள்ளாமல் மனஸ்தாபத்தை அதிகமாக வளர்த்துக்கொள்கின்றோமோ என்று சில சமயம் தோன்றுகின்றது
இதோ குழந்தைகளை அரவணைக்கும் பாடல் இரண்டு - பாணி ஒன்று
http://youtu.be/Xr4gvXXgCnU
http://youtu.be/D2kQOWCzcl4
ஒற்றுமையை இருவரும் எவ்வளவு அழகாக எடுத்து சொல்லியுள்ளார்கள் பாருங்கள் - சுதந்திர வேட்க்கை போல இப்பொழுது நமக்கு தேவை ஒற்றுமை வேட்க்கை - ஒருமித்த எண்ணங்கள் - எல்லோருமே சமம் என என்னும் பண்பு - பாடல் இரண்டு - பாணி ஒன்று
http://youtu.be/rJ8F1ANSyuE
http://youtu.be/smlQQAZHKpk
தாயின் அன்பை இவர்கள் சொன்னது போல இதுவரை நெஞ்சை தொடும் படியாக எவருமே சொன்னதில்லை - பாடல் இரண்டு - பாணி ஒன்று
http://youtu.be/2K096xYEtsY
http://youtu.be/b1PuDk_WyS0
வாசு
இன்னும் இருவரை பற்றியும் எவ்வளவோ சொல்லலாம் - உங்களுடைய சீறுகின்ற நடை என்னால் தடை பெறவேண்டாம் என்று எண்ணி , சற்றே தாமதமாக பதிவுகளை இடுகிறேன்
ஹாய் ஆல்.. செளக்கியமா..
ஆரம்பத்தில்…ஒரு மொழிபெயர்ப்பு முயற்சி
*
நீ என்ன சொன்னாய் எனத் தெரியாது
நான் என்ன கேட்டேன் எனத் தெரியாது
ஆனால் ஏதோ நிகழ்ந்து விட்டது…
வெப்ப உணர்வு ஒருபுறம்
நடுக்கும் குளிர் மறுபுறம்
நிறையக் கனவுகள் எழும்பின
ஏதோ நிகழ்ந்து விட்டது..
என் கண்கள் தாழ்ந்தன நிமிர்ந்தன
பாதங்கள் தாளமிட்டு நடுங்கி உறைந்தன
எனக்கொரு புதிய அனுபவம்….
ஏதோ நிகழ்ந்துவிட்டது
என் கூந்தல் தோள்களிலே சுருண்டன
ஒரு வாசனை மலர்ந்து எழுந்தது
ரகசிய க் கதவுகள் திறந்தன
ஏதோ நிகழ்ந்து விட்டது..
ம்ம்
ப்யாஸா வஹீதா ரஹ்மான்…(ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்திப் பார்த்தேன்..) வெகு இனிமையான பாடல்..
http://www.youtube.com/watch?feature...&v=mLGCAGHNTJU
***
கழுதைக்கும் காதலுக்கும்முக நூலில் ஒரு நண்பர் எழுதியிருந்தார்..அதை ஒட்டி நான் எழுதிப்பார்த்தது…
எண்ணப் பொதிசுமக்கும் ஏற்றங்கள் கண்டவுடன்
வண்ணமாய் மாற்றத்தை வாகாய் உரக்கசொலும்
கண்ணேற் படாமலே கால்தாவும் காலந்தான்
எண்ணக் கழுதையா மே
(இரண்டு தடவை எண்ணம் வந்துடுத்து)
கிட்ட வருமென்று கீழ்நோக்கிப் பார்த்தாலோ
எட்டாமல் நின்றுசெயும் ஏகடியம் – விட்டால்
பழுதாகிப் பாய்ந்தோடி பல்திசையும் ஓடுங்
கழுதைதான் கற்பனையே காண்..
*/*
ஆக.. முதல் வெண்பால சொல்லியிருக்கறா மாதிரி இந்தக் காலம் பாருங்க போறதே தெரியலை.. இங்க வர்றதுக்கு கொஞ்சம் நேரமாயிடுத்து..காரணம்.. இரண்டாம் பாட்டுல வந்த கற்பனை தான்.. எழுதவே வல்லைப்பா ஹையாங்க்க்..
*
வாசு சார்..கார் ஷெட்லாம் போட்டு முடிச்சாச்சா.. வேலை எல்லாம் முடிந்ததா.. வந்த ஜோர்ல புதுத் தொடர் வேறயா.. குட்.. நைஸ்..தன்யவாத்..தப்போ சுக்ரியா.. தாங்க்ஸ்.. நினைவுக்கு வர்ற பாட்டூஸ்.. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, தங்கங்களே நாளைத் தலைவர்களே, கடவுள் ஒரு நாள் உலகைக்காண..ஓ அது காஞ்ச்சுவோ..
ஞான ஒளி எஸ்.வாசு தேவனுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லியே தீரணும்..என்னுடைய வெகு நாள் ஆசையான பார்த்திராத ஜூலி பாட்டூஸ் போட்டதுக்கு.. அது போல ஜெயாபாதுரி யோட ப்ரேயர் சாங்க் மனம்கவர்ந்தது..
ம்ம் நிறைய எழுதணும் பேசணும் படிக்கணும்.. (கண்ணா எப்படா பண்ணப் போற நீ!)
அப்புறமேல்ட்டு வாரேன்..
வாசு சார்
சூப்பரோ சூப்பர்.... சமுதாயத்தில் நன்னெறி புகட்டக்கூடிய ஏராளமான நடிகர் திலகத்தின் படப்பாடல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இத்தலைப்பு மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. அருமையான தலைப்பு..
தங்களுடன் பயணம் செய்யும் வகையில் ரவியும் அமர்க்களமாய்ப் பாடல்களைக் கொண்டு வந்து விட்டார்.
இதோ அடியேனின் பங்கு..
கல்யாணியின் கணவன் (1963) படத்திலிருந்து கையிருக்கு காலிருக்கு முத்தையா..
https://www.youtube.com/watch?v=v2mZUk6vm_c
விவசாயி (1967) படத்திலிருந்து நல்ல நல்ல நிலம் பார்த்து
https://www.youtube.com/watch?v=PzBZaezGBIo
இனிய நண்பர்கள் திரு வாசு , திரு ரவி, திரு ராகவேந்திரன்
இரண்டு திலகங்கள் நடிப்பில் வந்த இனிமையான குழந்தைகளுடன் பாடிய பாடல்களை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் .
மென்மையான காதல் பாடல்களில் இரண்டு திலகங்களும் கலக்கிய காவிய பாடல்கள் என்றுமே மறக்க முடியாது .
ஒரு தாய் மக்கள்
http://youtu.be/2qAI__2gIc4
நெஞ்சிருக்கும் வரை .
http://youtu.be/ED0bwUuSQMg
அன்பின் ரவி சார், ராகவேந்திரன் சார், சின்னக் கண்ணன் சார், வினோத் சார் அனைவர்க்கும் நன்றி!
ரவி சார்,
பாடல் இரண்டு - பாணி ஒன்று தலைப்பில் தங்கள் பங்குக்கு அளித்த இரு திலகங்களின் பாடல்கள் ஜோர். ஒரே மாதிரியான கருத்துக்களை இருவரும் தத்தம் பாணியில் பாடி அசத்தி அளித்திருப்பார்கள். பாடல்களும் கொள்ளை இனிமைதான். நன்றி!
ராகவேந்திரன் சார்,
விவசாயப் பாடல்கள் அனைவரும் விரும்பி ரசித்த பாடல்கள். மக்கள் திலகம் நல்ல நல்ல நிலம் பார்த்து தர, அதில் கையிருக்கு காலிருக்கு என்று முத்தையனை உழுவதற்கு அழைக்கும் நடிகர் திலகம் என்று அசத்தலான இரு பாடல்களுக்கு நன்றி!
வினோத் சார்,
மென்மையான காதல் பாடல்கள். அதுவும் தமிழ்த் திரையுலகை இன்று வரை ஆண்டு கொண்டிருக்கும் இரு மாபெரும் நடிகர்களும் தந்தது. இரண்டுமே தென்றலின் வகையைச் சேர்ந்தவை. சுகமோ சுகம். நன்றி!
பாடல் இரண்டு
பாணி ஒன்று
தொடர் 2
இந்த ஹிப்பி இளைஞர்களைப் பாருங்கள். அடங்காத குதிரைகளான தங்கள் மனைவியை அடக்க இருவருமே ஹிப்பி வேடம் புனைந்து நாகரீக அலங்கோலத்தை விரும்பும் தங்கள் பத்தினிக்களுக்கு பாடல்கள் மூலம் பாடம் புகட்ட கிளம்பி விட்ட தமிழ்ப் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் கட்டிளங் காளைகள். இருவருமே ஒத்த குணம் கொண்டவர்கள். இருவருமே தங்கள் மனைவியத் திருத்தப் பாடுபட்டு அதில் வெற்றி கண்டவர்கள். வாழ்க்கையில் மட்டுமல்ல. வசூலிலும்தான்
முதலாவது தமிழகத்தை தன் வசப்படுத்திய கிராமத்துப் பண்பாட்டினைக் கட்டிக் காக்கும் மூக்கையாத் தேவன். வெளிநாட்டு நாகரீக மோகம் கொண்டு பிரிந்து வாழும் மனைவியை திருத்த ஹிப்பி முகேஷ் வேடம் பூண்டு
'நல்வாழ்த்து நான் சொல்லுவேன்'
என்று பாடியபடி வார்த்தைகளால் அவளுக்கு சவுக்கடி கொடுக்கும் பாடல்.
'வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை'
என்று தலைமுறைகள் வாழ்த்த வாழ்ந்த, வாழுகின்ற, வாழப் போகின்ற நாயகன்.
'பட்டிக்காடா பட்டணமா'
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HkXXY_m6EIY
இந்த ஹிப்பி வாலிபன் அதே வேலையைத்தான் செய்கிறான். 'காலம் பொன்னானது' என்று கூறி
'கண் அவன் என்பது கணவன் என்றாகும்'
என்று அறிவுறுத்தி,
'அவன்தான் ராஜாங்கத் தலைவனடி'...
'கோதைக்குக் கணவன் கோவிலடி'
என்று கணவன் பெருமையை அவளுக்கு உயர்த்த எண்ணி சீறிப் பாடுகிறானே.
'கல்யாணமாம் கல்யாணம்'
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-V61lyegx98
beautiful song from Aasai manaivi (Meenakshi koyil konda mani osai)
https://www.youtube.com/watch?v=Ydaa-04NP_I
வாசு ஜி
நலம் தானே
இதோ எல்.விஜயலெக்*ஷ்மியின் அற்புத நடனம் இசையரசியின் தெள்ளத்தெளிவான குரல்
பக்த பிரஹலதா படப்பாடல்
https://www.youtube.com/watch?v=L81B3bHcdYY
சி.க.சார்,
Jane Kya Tune Kahi
வா ... வா வார்ர்ரே வா ... இன்னா பாட்டு கண்ணா அது! அதுவும் என் உள்ளம் கவர்ந்த பாடகி. இப்படியா போட்டுத் தாக்குவது மீண்டும் போட்டாலும் கூட. 'பியாஸா' படப் பாட்டுகளுக்கு எவ்வளவோ பைஸா வேணும்னாலும் தரலாம்.
மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இருக்கிறது என்று சொல்லலாம் என்றால் எனக்கு இந்தி தெரியாது. ஆனால் பாடல்களை ரசிக்கும் ரசனை வெகுவாகவே உண்டு. இருந்தாலும் கஷ்டப்பட்டு தமிழாக்கம் செஞ்சதற்கு நன்றி!
ஆஹா! ராஜேஷ் சார்! எப்படி இருக்கீங்க? எங்கே பிடிக்கவே முடியல?
ஏற்கனவே பார்த்திருந்தாலும் இப்போதும் பார்த்து ரசித்தேன் ஜி! நன்றி!
வாசு,
நேரமின்மையாலும், நண்பர்களை சங்கட படுத்தும் பதிவுகளை தவிர்க்கும் பொருட்டும் ,இங்கு பதிவிட முடியாவிட்டாலும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம், தங்கள் பதிவுகளை, சின்ன கண்ணன் பதிவுகளை ,ராகவேந்தர் பதிவுகளை ரசித்து சுவைத்தே வருகிறேன்.சின்ன கண்ணனின் நகைசுவை ததும்பும் இலக்கிய சுவை கூடிய பதிவுகள்,உங்களின் உழைப்பு தந்து மெனக்கெட்டு பதியும் அமர்க் கள ஜுகல்பந்தி, ராகவேந்தரின் அறியா பாடல்கள் என மிக மிக சுவையாக செல்கிறது. எஸ்வி,க.வே வேறு பட்ட பங்களிப்பை செய்கின்றனர். கிருஷ்ணாவை அடிக்கடி காணாதது குறையே. ரவியின் வரவு புத்தெழுச்சி ஊட்டுகிறது. தொடருங்கள் ரவி.
நடிகர்திலகம் திரி -15 இல் உங்களின்,சி.கவின்,ரவியின் ,கிருஷ்ணாவின் பங்களிப்பை வேண்டி இப்போதே விண்ணப்பிக்கிறேன்.
இதே 'பக்த பிரகலாதா' படத்தில் நால்வர் நாட்டியம். 'வெண்ணிற ஆடை' நிர்மலா, விஜயலலிதா, கீதாஞ்சலி, சாந்தா ('அவளுக்கென்ன அழகிய முகம் புகழ்' முற்றித் தெரிகிறார்) ஆகியோர் நாட்டியத்தில் பின்ன, அற்புதமான பாடல்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t2jg_CZ7XIA
தேங்க்ஸ் கோ.
உங்கள் பங்களிப்புகள் அவசியம் இங்கு தேவை. காத்திருக்கிறேன். இன்னொன்று. நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயம் நீங்கள் பதிலுக்குப் பங்கெடுத்துக் கொள்வது போன்று ஒரு பதிவை நான் இடுகை செய்ய வேண்டியுள்ளது. பிளான் பண்ணி எல்லாம் அல்ல. தற்செயலாகத்தான்.. அந்தப் பதிவிற்கு நீங்கள் பதில் பதிவு அளித்தால் அது முழுமை பெறும். ரெடியாக இருக்கவும்.
கிருஷ்ணாஜி சிஸ்டம் கொஞ்சம் பிஸி. வேறு ஒன்றும் காரணம் இல்லை. விரைவில் வந்து விடுவார். அவர் அலுவலகத்திலும் கொஞ்சம் ஜோலி அதிகம். அதனால் ஜாலி கம்மியாகி விட்டது.
ஆம் வாசு ஜி
நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அருமை. இசையரசி ஜானகி வசந்தா பாடியது என்று நினைவு.
ராஜேஷ்ஜி!
நேற்று அருமையான இசையரசியின் பாடல் ஒன்று கேட்டேன். இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் பல்லவியின் முதல் 4 வரிகள் டாப். கிராமத்து குயிலாக சுசீலாம்மா இசைக்கும் இந்தப் பாடல் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை. நீங்கள் கைவிரல் நுனியில் வைத்திருப்பீர்கள். இதோ அந்தப் பாடல் உங்களுக்கும், நம் அன்பு நண்பர்களுக்கும்.
'என்னதான் முடிவு?'
இசையரசியின் குரலின் இனிமைக்கு முடிவேது? குரலின் அடிமுடி தொடமுடியாத அற்புத கான சரஸ்வதி அல்லவா?
'பொண்ணப் பார்த்து மயிலைக் காளை
மயங்குதிப்போது
இந்தப் பொண்ணப் பார்த்து மயங்கும்
ஆளும் வருவதெப்போது'
ஆமாம் அந்த நடிகை யார்? இதுவரை பார்த்ததாக தெரியவில்லையே. உதவுங்களேன்! ப்ளீஸ். (இவர் பெயர் நிர்மலா என்று நினைவு. ஆனால் 'வெண்ணிற ஆடை' நிர்மலா அல்ல. வேறு எந்தப் படத்தில் நடித்திருந்தார் என்றும் தெரியவில்லை).
இன்னொன்றுஜி! 'என்னதான் முடிவு?' படத்தைப் பற்றி விரிவாக எழுதவுள்ளேன். ஏனென்றால் விஷயம் நிறைய இருக்கிறது இந்தப் படத்தில். கே.எஸ்.ஜி.நிறைய பாதிப்பை உண்டாக்கி விட்டார். அதனால்தான் இந்த முடிவு.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DOGmJERSWMQ
<Dig>
வாசு,
பார்த்தீர்களா? எங்கள் மதுரையின் வரவேற்பை பார்த்தீர்களா? உங்களுக்கு மிகவும் பிடித்த மருத்துவருக்கு எத்தனையோ முறை எங்கள் ஊருக்கு வந்திருந்தபோதிலும் இப்போதும் நாங்கள் கொடுத்த வரவேற்பு எப்படி?
அன்புடன்
<end dig>
அடாடாடா! முரளி சார்,
மயங்கிப் போனேன்
கிறங்கிப் போனேன்
உருகிப் போனேன்
அடேயப்பா! நடிப்பின் மன்னனுக்கு மதுரை ரசிக மன்னர்கள் மலைக்க வைத்த மாலைகள், கனக்க வைத்த பேனர்கள், ஆகாய ஆர்ச்சுகள், பட பட பட்டாசுகள் என்று அலங்காரம் செய்து விட்டீர்கள்.
இருக்கட்டும். இருக்கட்டும். எங்கள் கடலூரில் மன்னவன் வலம் வரட்டும். பிறகு பேசிக் கொள்கிறேன்:) மதுரையா கடலூரா என்று.
அருமை முரளி சார். அருமையான ஆர்ப்பாட்டம். ஸ்டோர் செய்து விட்டேன்.