-
jahir hussain
திரைவானிலே முற்றிலும் குழந்தைகளே நடித்த சினிமாக்களும் உண்டு. குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்த சினிமாக் களும் உண்டு. இத்தகைய படங்கள், குழந்தைகளுக்கு நீதிபோதனைகளை போதிப்பது மட்டுமல்லாது, பெரியவர்களும் பயன் பெறும் படியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதும் உண்டு..... நடிகர் திலகம் அவர்கள் தன்னுடைய கேரியரில் 19 படங்கள் நட்புக்காக நடித்துக் கொடுத்து இருக்கிறார்... ஒவ்வொறு படமும் ஒவ்வொறு விதத்தில் முக்கியத்துவம் பெற்ற படங்கள் அவை... ஓரிரு காட்சிகளில் தோன்றினாலும் அந்தந்த படங்களில் அவர் தோன்றி நடித்தது கண் கொள்ளா காட்சியாகும்... அத்தனை படங்களில் "குழந்தைகள் கண்ட குடியரசு"... "ஸ்கூல் மாஸ்டர்".. ஆகிய படங்கள் ஒரு விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது... அந்த படங்களின் குறிப்புகள்... குழந்தைகள் கடவுளுக்குச் சமம்’, ‘குழந்தைகளே நாட்டின் செல்வங்கள்’, ‘குழந்தைகளே நாட்டின் சொத்து’, ‘குழந்தைகள் எண்ணமே தாயின் எண்ணம்’, ‘இன்றைய குழந்தைகளே எதிர் காலத்தலைவர்கள்’. இவைகளே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ திரைப்படத்தின் கரு.
இப்படி ராஜா காலத்து கதைகளிலும் குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியும் என்ற புதியதொரு கருத்தை இப்படம் புரிய வைத்தது. இளவரசன் வில்லேந்தி என்பவன் கொடியவன் சொல்லேந்திரனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடுகிறான். இதனால் வெகுண்ட சொல்லேந்திரன் தன் பிடியிலிருக்கும் வில்லேந்தியின் தாயின் கண்களை குருடாக்குகிறான். அனல் பிழம்பான இளவரசன் வில்லேந்தி, ஆயிரமாயிரம் குழந்தைகளை படை திரட்டி போராடி கொடுங்கோல் சொல்லேந்திரனை கொன்று முடியாட்சிக்கு சரவாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.
பின் குழந்தைகள் திரண்டு புரட்சிகரமான ‘குடியாட்சியை’ நாட்டில் நிறுவுகின்றனர். இதுவே ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ படத்தின் கதைச் சுருக்கம்.
வில்லன் சொல்லேந்திரனாக ஜாவர் சீதாரமன் கர்ஜிக்கிறார். சிறையில் அடைக் கப்பட்டு கண்ணிழந்த வில்லேந்தியின் தாயாராக எம்.வி.ராஜம்மா நடித்து கண்ணீர் வடிக்கிறார். முடிவில் குழந்தைகளே வெற்றியை நிலை நாட்டுகின்றனர்.
குழந்தைகள் பாத்திரத்தில் மாஸ்டர் கோபி, வெங்கடேஷ், பேபி லட்சுமி, சித்ரா, சரளா ஆகியோர் தோன்றினர்.
இந்தப்படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டு ‘மக்கள ராஜ்யம்’ என்ற பெயரில் வெளிவந்தது. இவ்விரு மொழிப்படங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் விஞ்ஞானியாக ஒரு சிறிய பாத்திரத்தில் விநோத மேக்கப்புடன் தோன்றியுள்ளார். இத்தகையதொரு படத்தை தயாரித்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர்.
1954–ம் ஆண்டில் வெளிவந்த ‘ஊன் பவூஸ்’ என்ற மராத்திய மொழிப் படத்தை தழுவியது ‘ஸ்கூல் மாஸ்டர்’.
கடமை தவறாது கல்விக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை பற்றிய படம் இது. பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பங்கென்ன என்பதை பாங்குடன் சொல்வதே படம்.
கடமையே உருவான பள்ளித்தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம் (ஜெமினி கணேசன்); ஊரையே கொள்ளை அடிக்கும் பள்ளி நிர்வாகி நாகப்பன். தனது ஊழல்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஞானசம்பந்தத்தின் வீட்டை தீக்கிரையாக்குகின்றான் நாகப்பன். ஆசிரியர் குடும்பம் நடுத்தெருவில் தத்தளிக்கிறது.
ஆசிரியர் மீது மட்டற்ற பாசமும் நேசமும் கொண்ட அவரது பள்ளி மாணவர்கள் தங்களது பிஞ்சுக்கைகளால் கம்புகளையும், செங்கற்களையும் சேகரித்து புது வீடு கட்டி ஆசிரியரை குடிபுகச் செய்கின்றனர்.
‘ஓடி வாங்கடா, ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா’ என்ற அவர்களது பாட்டு மாணவர்களின் தாரக மந்திரமாகக் கொள்ளத்தக்கது. இதுதவிர பின்னாளில் முதுமையைச் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்த ஆசிரியர் மீது திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்டபோது, அப்போது இன்ஸ்பெக்டராயிருந்த அவரது முன்னாள் மாணவர் கண்ணன் ஆக தோன்றும் நடிகர் திலகம்... ஆசிரியரை வீண்பழியிலிருந்து காப்பாற்றி தெய்வமாக வாழவைக்கிறார்...
இப்படம் கன்னடத்திலும், மலையாளத்திலும் வெளிவந்து வெற்றி பெற்றது. முதன்முதலாக நடிகர் திலகமும் சவுகார் ஜானகியும் மலையாளத்தில் நடித்த படம் ‘ஸ்கூல் மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட படங்களை நாம் பார்க்கும் வாய்ப்பு கிட்டாவிடினும் இந்தப் படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது அல்லவா?
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1b&oe=5B04A648
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?
இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.
காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர். கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்றுகொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார்.
நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக் அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.
சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக்கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்கமுடியாது.
கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப்போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.
சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.
ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக்கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளைப் பார்வையிட சிவாஜி அமெரிக்கா வந்தபோது, விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றேன். என் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹார்ட் ஆபரேஷனுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த சமயம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கமலா அம்மாள் என்னைப் பார்த்துக் கண் கலங்கிவிட சிவாஜி சோகமானாலும், ‘ஷீ ஈஸ் சச் எ பியூட்டிஃபுல் லேடி’ என என்னைத் தட்டிக் கொடுத்தார். அழுதுவிடக்கூடாது என்று தன்னையும் கட்டுப்படுத்திக்கொண்டார்.
அமெரிக்காவில் இருந்தாலும் சிவாஜியின் பிறந்த தினம், திருமண நாள் ஆகிய விசேஷத் தருணங்களில் மறக்காமல் கணேஷூக்கு ஃபோனில் வாழ்த்து சொல்லுவேன். ஆனால், சிவாஜிக்கு எனது பிறந்த நாள்கூடத் தெரியாது.’ -
*
கணேசனின் முதல் காமெடி சித்திரம், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி…
முதல் பட விநியோகம், அமரதீபம்…
முதல் புராணப் படம், சம்பூர்ண இராமாயணம்…
இரட்டை வேட நடிப்பு, உத்தமபுத்திரன்…
தமிழில் முதல் சரித்திரம் மற்றும் சிவாஜியின் முதல் வண்ணப்படம், வீரபாண்டிய கட்டபொம்மன்.
ஆசிய அளவில் முதல் அயல்நாட்டு விருது, வீரபாண்டிய கட்டபொம்மன்…
சிவாஜி புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பு, வியட்நாம் வீடு...
என, சிவாஜியின் பல முதல்களில் பத்மினிக்கும் அதிகப் பங்கு உண்டு. சிவாஜியின் மிக ராசியான நட்சத்திரம் அவர்.
‘தில்லானா மோகனாம்பாள்’ பற்றிச் சொல்லாமல், பத்மினியின் சினிமா வாழ்வு பூர்த்தி பெறாது.
ஏறக்குறைய, இளமையைத் தொலைத்துவிட்ட நிலையில், தில்லானா மோகனாம்பாள், பத்மினியின் திரை உலகப் பயணத்தில் மாபெரும் பாக்கியம். என்றைக்கும் பத்மினியை இளைய தலைமுறை மறந்துவிடாமல் இருக்க, கலைத்தாய் சூட்டிய மகுடம்! கொத்தமங்கலம் சுப்புவின் காலத்தை வென்ற படைப்பான மோகனாம்பாள், பத்மினிக்குக் கிடைக்கக் காரணமானவர் ஏ.பி.நாகராஜன்.
ஏ.பி.நாகராஜன் நீண்ட வருடங்களாக, அக்கதையைப் படம் எடுக்க வேண்டும் என்று வாசனிடம் கேட்டு வந்தார். வாசன் அதற்குச் சம்மதிக்கவில்லை. மோகனாம்பாளாக வைஜெயந்திமாலா நடிக்க, ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் தானே தயாரிக்கப்போவதாக வாசன் சொல்லி அனுப்பிவிடுவார்.
1965-ல், ஏ.பி.நாகராஜன் உருவாக்கிய ‘திருவிளையாடல்’, வாசனைக் கவர்ந்தது. மீண்டும் நாகராஜன் வந்து கேட்டபோது, தில்லானா மோகனாம்பாள் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.
‘எனக்கு மணமான பிறகு நான் நடித்த படங்களில் முக்கியமானது தில்லானா மோகனாம்பாள். என்னால் மறக்க முடியாத ஓர் அனுபவம்! நாட்டியமாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் படம் அது. அதன் ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அனுபவித்து நடித்தேன்.
‘தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தயாரிக்கணும்னு முடிவு பண்ணினதுமே, நீதாம்மா மோகனா. சிவாஜி சிக்கல் ஷண்முகசுந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். உங்க ரெண்டு பேர்ல யார் ஒருத்தர் நடிக்கலைன்னாலும் படத்தை எடுக்கிறதா இல்லை என்றார் ஏ.பி.என். எப்பேர்ப்பட்ட வார்த்தை! சிலிர்த்துப் போனேன்.
நான் அன்று அடைந்த சந்தோஷம், எவ்வளவுன்னு சொல்ல முடியாது. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே, இந்தக் கதை படமானால் மோகனாம்பாள் கேரக்டர் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். கதையோடு பத்திரிகையில் கோபுலு வரைந்த சித்திரங்கள் பற்றியும் பரபரப்பாக பேசப்பட்டது. கோபுலுவின் ஓவியங்களைப் போலவே, எங்களுக்கான மேக் அப்பும் காஸ்ட்யூமும் அமைந்தன.
18 வயசுப் பெண் ரோல் அது. எனக்கு அப்போ 38. என் மகன் பிரேம், சிறுவனாக இருந்த நேரம். மோகனாம்பாளின் யவ்வன பருவத்தை நினைத்துக்கொண்டு நடிக்கவேண்டி இருந்தது. உடம்பை ஒல்லியாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த மாதிரி சமயத்தில், நமக்கு நம்ம வாழ்வே சொந்தமில்லே. சினிமா தொழிலுக்கும் ஜனங்களுக்கும்தான் அது சொந்தம்.
எனக்கும் சிவாஜிக்கும் கதைக்கு ஏற்ற மாதிரி நிஜமான போட்டி உணர்வு ஏற்படணும்னு நாகராஜன், சாரதா ஸ்டுடியோல இரண்டு தனித்தனி காட்டேஜ் அமைச்சார். சிவாஜி க்ரூப் ஒரு காட்டேஜ். என் குழுவினர் ஒரு காட்டேஜ். யாரை யார் மிஞ்சறாங்க பார்க்கலாம் என்கிற போட்டியை உருவாக்கினார். அதனால்தான் மோகனாம்பாள் வெற்றிப் படமாச்சு.
வாத்தியக் கோஷ்டியுடன் நான் ஜரூராக ஒத்திகை பார்த்துக்கொண்டிருப்பேன். சிக்கலாரின் செட்டில் தவில் வாசிப்பவர், நாயணக்காரர், ஒத்து ஊதுபவர், தாளம் போடுபவர் என்று அங்கேயும் தீவிரமான ரிகர்ஸல் நடக்கும். அவர்கள் மிஞ்சிவிடுவார்கள்போல... என்று எனக்கு இங்கே தகவல் வரும். நாங்கள் இன்னும் மும்முரம் காட்டுவோம்.
பப்பி முந்திக்கொண்டுவிடுவார் என சிவாஜிக்கு செய்தி போகும். கணேஷ் பார்ட்டியின் வேகம் கூடும். ஏ.பி.என்., இரண்டு தரப்பினரையும் வந்து பார்த்து உற்சாகப்படுத்திவிட்டுப் போவார். இரண்டு கோஷ்டியை வைத்தும் ஃபைனல் பார்ப்பார். இந்தக் காட்சி சிறப்பா அமையணும்னா, எல்லாரும் உடம்பு பலவீனம் இல்லாம நடிக்கணும்னுவார்.
என் முகத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்டினாலும், ‘உடம்பு சரியில்லயாம்மா... ஷூட்டிங்கை கேன்சல் செய்துடவா’ என்று அக்கறையுடன் கேட்பார்.
கடைசியில் இந்தப் போட்டிக் காட்சி பிரமாதமாகவே அமைந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டோம்’ -
தில்லானா மோகனாம்பாளுக்காக, பத்மினியை 1968-ம் ஆண்டின் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தது தமிழக அரசு. விருது வழங்கியவர், அன்றைய முதல்வர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதிக்கும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் மிகவும் பிடித்த படம் தில்லானா மோகனாம்பாள். அதிலும், ‘நலந்தானா…’ பாடலுக்கு பாலசந்தர் பரம ரசிகர்!
சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் படம் தில்லானா மோகனாம்பாள்! இன்றளவும் (சமீபத்தில் 2015 ஏப்ரல் 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு) ப்ரைம் டைமில், சன் டிவி போன்ற தனியார் சேனல்கள், தில்லானா மோகனாம்பாளைத் ஒளிபரப்புகின்றன. ஒவ்வொரு பிரேக்கும் 10 நிமிஷம் இருந்தாலும், ஜனங்கள் 1968-ன் உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரே படம்!
மோகனாம்பாளில் ஒட்டுமொத்தமாகக் கொட்டிய கடும் உழைப்பை மிஞ்சுகிற மாதிரி, ஒரே ஒரு நாட்டியத்துக்காகவும் பத்மினி ஆடவேண்டி வந்தது. திருவருட்செல்வரில் இடம் பெற்ற ‘மன்னவன் வந்தானடி…’ பாடல் காட்சி, திரையில் ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் வரக்கூடியது
இன்றளவும் சின்னத்திரையில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட உச்சக்கட்டப் போட்டிகளில், கல்யாணி ராகத்தில் அமைந்த அப்பாடலை பாலகர்கள் பிரமாதமாகப் பாடி, லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டை பரிசாகப் பெற முடிகிறது.
‘மன்னவன் வந்தானடி…’ பாடல் பற்றி பத்மினி மனம் திறந்தவை.
‘இந்தப் பாட்டில் நீங்கள் ஒன்பது உருவங்களுக்கு முன்னால் நடனம் ஆடுகிறீர்கள் என்று ஏ.பி.என். சொன்னதும் உற்சாகமாக இருந்தது. ஷூட்டிங்கின்போது அதன் சிக்கல் புரிந்தது. வண்ணச்சித்திரமான திருவருட்செல்வரில், ஒவ்வொரு பதுமை முன்பும் நான் வெவ்வேறு ஆடைகளில் ஆட வேண்டும். கேட்பானேன்?
சரியான சோதனை. பத்து நாள்கள் இடைவிடாமல் உடை மாற்றி மாற்றி ஆடியதில், நான் அல்லாடிப் போனேன். சிக்கலான மேக் அப் வேறு. பாட்டில் சில அடிகள் படமானதும், நான் புதிய காஸ்ட்யூமில் வருவேன். அடுத்த வரிகளுக்குத் தொடர்ந்து ஆடுவேன். அதுபோல் ஒன்பது தடவைகள் நடந்தது.
இனிமையான கர்நாடக இசை நாதமும், அதற்கேற்ப எனது ஆடலும் பிரம்மாண்ட தர்பாரில் நடிகர் திலகம் வந்து நிற்கும் கம்பீரமான தோற்றமும், என்றும் என் மனத்தை விட்டு அகலாது. அதற்காக நான் பட்ட பாடு அம்மாடி! அந்த மாதிரி வேறு எந்தப் பாட்டுக்காவது நான் கஷ்டப்பட்டிருப்பேனா... சந்தேகம்தான்’.
யார் ஹீரோ என்றபோதிலும், ஏராளமான படங்களில் டைட்டில் ரோல் பத்மினிக்கே சொந்தம். பெண்மைக்கு உயர்வளிக்கும் உயர்ந்த நோக்கமோ அல்லது வணிக உத்தியில் பத்மினிக்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தோ இரண்டில் ஏதோ ஒன்று.
நடிப்பில் மணமகள் தொடங்கி, தொடர்ந்து மருமகள் (ஹீரோ என்.டி.ஆர்.), காவேரி, மங்கையர்திலகம், மல்லிகா (நாயகன் ஜெமினி), அமரதீபம், பாக்யவதி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, மரகதம், சித்தி, தில்லானா மோகனாம்பாள், பெண் தெய்வம் என தாய்க்கு ஒரு தாலாட்டு வரை பத்மினியின் நடிப்பில் வெளிவந்தவை, அவரது அற்புத நடிப்புக்காகவே ஓடியவை.
‘பத்மினிக்குக் கிடைத்த வெற்றியில், பெரும்பாலும் கணேசன் குளிர் காய்ந்தார். சிவாஜிக்காகவேண்டி படங்கள் விழா கொண்டாடவில்லை’ என நடிகர் திலகத்துக்கு வேண்டாதவர்கள் விஷமப் பிரசாரத்தில் ஈடுபட்டதும் உண்டு.
அமெரிக்காவுக்குப் போனாலும், ஆண்டுதோறும் மார்கழி மஹோத்சவத்துக்கு சென்னையில் இருப்பதை, கடைசி வரை தன் வழக்கமாக பத்மினி கடைப்பிடித்தார். அவ்வாறு, 1976-ல் சென்னை வந்த பத்மினி, ‘சிவாஜி வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க வேண்டும்’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த ஆண்டில் கடைசி சிவாஜி படம் ரோஜாவின் ராஜா. அதில் அவர் கல்லூரி மாணவராக நடித்திருந்தார். அதையொட்டி எழுந்த கேள்விக்கான பதில், சிக்கலை ஏற்படுத்தியது.
‘கணேஷுக்குக் குழந்தை மாதிரி சுபாவம். கோபம் வந்தாலும் உடனே தணிந்து போகும்’ என்கிற பத்மினியின் வாசகத்தை, சிவாஜி நிரூபித்துவிட்டார். பத்மினி தன்னைக் குறித்து சொன்னதை அவர் பொருள்படுத்தவே இல்லை. எப்போதும்போல் தோழமை தொடர்ந்தது. அதன் விளைவு, 1977-ல் கே.பாலாஜியின் ‘தீபம்’ படத்தில் பத்மினி கௌரவ வேடத்தில் ப்ளாஷ்பேக்கில், ஒரு காட்சியில் தாயாராக நடித்திருப்பார். அதில் பத்மினி தோன்றும் புகைப்படம். தொலைந்துபோன தம்பி விஜயகுமார்தான், நாயகி சுஜாதாவுடைய காதலன் என சிவாஜிக்கு உணர்த்தும்.
பத்மினி பற்றி, கணேசனும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
‘உங்களுக்கு ஜோடியாக நடித்தவர்களில் உங்களுக்கு இணையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் யார்?’
நிச்சயமாக பப்பிதான். பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல. சிறந்த அழகியும்கூட. குணச்சித்திரம், காமெடி, நடனம்... வாட் நாட்…?
எல்லாப் பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை. ஷீ ஈஸ் ஆன் ஆல்ரவுண்டர். சின்ன வயதிலிருந்தே நானும் பப்பியும் பழகி வருகிறோம். வீ ஆர் ஆல் இன்டெலக்சுவல் ஃப்ரண்ட்ஸ். எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு’.
படித்ததில் பிடித்தது.
நன்றி: திரு. நவீனன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...51&oe=5B3F3CF5
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ff&oe=5B043294
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...34&oe=5B00EC1E
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...14&oe=5B0ABDFD
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...03&oe=5B4D1E57
courtesy nadigar thilagam sivaji visirigal
-
Jahir hussain
சிவாஜி தாழ்ந்த ஜாதி! அரசியலே அறியாதவன்! ம்ம் யார்? தானும் நாடும் ஒன்றெனக் கண்டு... தன்னையே தந்த மன்னன் சிவாஜி தாழ்ந்த ஜாதியா? மன்னர் குலத்தில் பிறக்காதவன், பரம்பரை உரிமை இல்லாதவன், மானம் காக்கும் குடியானவன், மகுடம் தாங்க முடியாதா? தார்தாரியார் தந்த புரவியில் அமர்ந்து ஆர்த்தெழுந்த சிவாஜியைக் கண்டு.... நாட்டுக்குடைய நல்லவனென்றும் போர்ப்பாட்டு முழக்கும் மன்னவனென்றும், ஆரத்தியெடுத்த மக்களே எங்கே? ஓரத்தில் நின்று வெற்றி வரட்டும் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று காத்திருந்த இந்த ஆணவக்காரர்கள் எங்கே? உறையிருந்த வாளெடுத்து ஒவ்வொரு முறையும், முழங்கி இரையெடுக்கத் துடித்த வேங்கை போல் எங்கே பகைவர் எங்கே பகைவர் என்று தேடி கறை படியாத என் அன்னை நாட்டை காப்பேன்! காப்பேன்! என சூளுரைத்து... இந்த நாடு என் சொந்த நாடு. இந்த மக்கள் என் சொந்த மக்கள், உயிரினும் இனிய என் மக்களுக்காக ஓடினேன். பகைவரைத் தேடினேன். வாள் கொண்டு சாடினேன். வெற்றியை நாடினேன். பகைத் தேடி வெல்ல மட்டும் உரிமை உண்டாம். முடி சூட்டிக் கொள்ள மட்டும் தடை செய்வாராம்... இந்த ஒருபகுதி வசனம் ராமன் எத்தனை ராமனடி படத்தில் இடம் பெற்ற மராட்டிய மாமன்னன் சிவாஜிக்கானது.. நம்மவரின் நடிப்பாளும் திறன் கொண்டு முழங்கி இருப்பார்.. பரவசமான எபிஸோட் அது... இந்த வசனங்கள் பல இடங்களில் நம்மவருக்கும் பொருத்தமாக இருப்பதும் சிறப்பு...
இதே கம்பீரம்.. தான் தாங்கிய எந்த கதாபாத்திரத்திலும் இருக்கும்.... அத்தனை ஆளுமை மிக்க கலைஞர் அவர்.... தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் பதின்மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.
வேறென்ன செய்ய முடியும்?
உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற கண்ணன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்ற உணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதி இருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்கு உரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி அவர்கள் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால் தான் முடியும்.
மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் நம்மவர். ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்து கொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் நடிகர் திலகத்தின் ஆளுமை! கம்பீரம்....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5B0696F9
courtesy nadigar thilagam sivaji visirigal
-
-
sundar rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வரும் 16.03.2018 வெள்ளி முதல்
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
நடிகர்திலகம் இருவேடங்களில் மின்னி, இளையதிலகம் பிரபு இணைந்து நடித்த ...
மாபெரும் வெள்ளிவிழா காவியம் சந்திப்பு வெற்றிநடை போட வருகிறது.
தொடர்ந்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடிகர்திலகத்தின் படங்களுக்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து,
சாதனை சக்கரவர்த்தி சிவாஜி ஒருவரே
என நிரூபித்து வரும்,
சிங்கத்தமிழனின் சீறும் சிங்கங்களே....
சந்திப்பு படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து வெற்றிபெறச் செய்வோம்.
இன்றே வரவேற்க தயாராவோம்
திரையுலக டான் சிவாஜி அவர்களை....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f7&oe=5B437498
courtesy net
-
-
-
-
K.S.Narsimhan
நடிகர்திலகம்அவர்கள் நடித்த 21வது படமான முதல்தேதி வெளியான நாள் இன்று. வெளியான நாள் 12/3/1955.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2a&oe=5B08BF5C
-
-
ஞான ஒளி-(11/03/1972)
நான் சற்றே நேரம் எடுத்து சிலவற்றை விஸ்தாரமாய் விளக்கி விட்டு நடிகர்திலகத்தின் நடிப்பு வெள்ளத்தில் நீந்துவேன். தயவு செய்து உங்கள் புரிதல் பற்றிய உடன் வினை-எதிர்வினை இன்றியமையாதது.
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியும் மனித வாழ்க்கை ,முடிந்து விடாத நிலையில் தொடர்வதை இருத்தல் என்று குறிப்போம். இருத்தல் என்பதன் சிறப்பம்சம் மானுட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை படைப்பதுவே ஆகும்.அவ்வப்போது அந்த அர்த்தத்தை புதுப்பித்து ,அதற்குண்டான பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.வாழ்க்கையின் மதிப்பு இடை விடாத முயற்சியில்தான் உள்ளது.நம் வாழ்க்கைக்கு ஒரு ஞாயம் தானாக கிடைப்பதில்லை என்றாலும்,தொடர்ந்த தங்களது செயல்கள்தான் அதை அளிக்க இயலும்.சுதந்திரமாக இருக்கும் மனிதனால்தான் தன் இருத்தலுக்குண்டான பொறுப்பை ஏற்க இயலும்.இந்த அடிப்படையில் இயங்கும் செயல்பாடுகள் ,ஒட்டுமொத்தமான அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கும்.மற்றவர் எண்ணங்களுக்கும் ,அவர்களுக்கும் தவிர்க்க முடியாத போராட்டம் இருந்து கொண்டே உள்ளது.ஒருவர் சுதந்திரம் ,மற்றவர் சுதந்திரத்தை அழுத்தி, அழித்து விட எத்தனிக்கிறது.
ஒரு அனாதையான மனிதன் வரம்புகளற்ற சுதந்திரம் பெற்றிருக்கிறான்.அவனுடைய பொறுப்புகளும் அதிகம்.அவனுடைய அவசிய தேவைகளுக்கு கூட அவனாகவே செயல் பட வேண்டி உள்ளது.(ஒரு சராசரி மனிதனுக்கு அவசிய தேவைகளுக்கு குடும்பம் பொறுப்பேற்கிறது,ஒழுக்க நெறிகள் வரையறுக்க பட்டு சுதந்திரம் எல்லைக்குள் கட்டமைக்க படுகிறது.) அநாதைகளோ தங்கள் morality என்பதை கூட தாங்களே வகுக்க வேண்டும். அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உகந்த master morality என்பதை வகுத்து slave morality என்பதை தவிர்க்கும் கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.போலி மனசாட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
ஒரு முரட்டு தகப்பனின் மகனான அந்தோணி, விவரம் தெரிந்த வயதில் அனாதையாக பட்டு ஒரு கிறிஸ்துவ பாதிரியால் ஆதரிக்க பட்டு ஓரளவு religious institution பாதிப்பில் ,அதுவும் பாதிரியாரின் மேல் உள்ள பக்தி என்ற ஒற்றை இலக்கில் பயணித்தாலும் ஆதார குணங்களை இழக்காதவன் அந்தோணி.
Typical Behaviours of an orphan-
1)Poor Self Regulation
2)Emotional Volatility.
3)Act on Impulse.
4)Immediate Urge for self-gratification.
5)Mixed Maturity levels.
6)Self parenting syndromes-Taking justice in their hands.
7)Learned Helplessness
8)Extreme Attention seeking.
9)Indiscriminate friendliness.
9)Absessive compulsive Tendencies.
10)Idiosynchrasies.
மேற்கூறிய எந்த விஷயங்களும் என் மூளையில் உதித்தவை அல்ல. இவையெல்லாம் பிரபல மெடிக்கல் journals இல் இருந்து post -orphanage behaviour பற்றி திரட்ட பட்ட சில points .
அந்தோணி ஒரு ஒழுங்கற்ற கோபகார தகப்பனுக்கு பிறந்து ஏழ்மையில் வாழ்ந்த போது இல்லாத பிரச்சினைகள், தகப்பன் தன்னை அடித்தவனை வெட்டி விட்டு தண்டனை பெற்று ,தாயையும் இழக்கும் போது ,அவன் trauma மற்றும் அநாதை நிலை ,பாதிரியாரால் படிப்பறிவின்றி , மத நம்பிக்கைகள் மட்டும் சொல்லி வளர்க்க பட்டு ஆதரிக்க பட்டாலும், அவன் அடிப்படை குணங்கள் மாறாமலே வாழும் ஒருவன். பாதிரியாரால் கூட அவன் அடிப்படை குணங்களை மாற்ற முடியாமல் ,பெயில் கொடுத்து போலீஸ் ஸ்டேஷன் போய் அடிக்கடி அழைத்து வந்து damage control தான் செய்ய முடிந்திருக்கிறது.
தனக்கென்று இலட்சியங்கள் இல்லாத அந்தோணி,பாதிரியாரின் லட்சியங்களை சுவீகரிக்கிறான்.. அது சார்ந்த கோட்பாடுகள் மட்டுமே ,அவன் master - morality என்பதை தீர்மானிக்கிறது.தொடர்ந்து தனக்கென்று அமைத்து கொண்ட உறவுகளை இழந்தோ,உறவுகள் சிதைந்தோ அவனின் மற்ற எல்லா ஆசைகளையும் தகர்க்கிறது.
poor self regulation and emotional volatility என்பது முதல் காட்சியில் இருந்தே வெளிபடுத்த படும். மற்ற கதாபாத்திரங்களின் வசனங்களும் அதையே நமக்கு சொல்லும். சிவாஜி அதை இளமையில் ஒரு விதமாகவும், நடு வயதில் ஒரு விதமாகவும், பணக்கார வயதான அருணில் வேறு விதமாகவும் வெளிப்படுத்தும் விதம் பிறகு விவரமாக அலச படும்.
தன் மகளிடம் கூட அவர் ஆசை brolier கோழி போல அவள் வளருவதே தான் தன் பாதிரி சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவே ,அவளுக்கு மற்ற ஆசைகள் தவிர்க்க பட வேண்டும் என்று மகளின் விருப்பங்களை சாராத முரட்டு தனமான ஆதிக்க அன்புதான். ஊரில் அநியாயங்களை தட்டி கேட்பதில் சட்டத்தை கையில் எடுக்கும் புத்தி ,மகளுக்காக செய்யும் செயல்களிலும் வெளிப்பட்டு ,நினைத்ததை நினைத்த படி அப்பொழுதே செய்ய துடிக்கும் விளைவுகள் பாராத உணர்வெழுச்சி நிலை.மகள் தவறி விட்டாளே என்பதை விட கனவுகளை தகர்த்த கொடுமைதான் வாழைகளுக்கு யமனாகிறது.சில சமயம் அதீத புத்தியை காட்டி அதிசயிக்க வைத்தாலும், அப்பாவித்தனம் தொனிக்கும், சமயா சந்தர்ப்பம் தெரியாமல் எட்டி பார்க்கும் விளையாட்டு தனம், சவாலை ஜெயிக்க விரும்பும் (அல்லது ஜெயித்து விட்ட) அசட்டு தனம் கலந்த சவடால்கள், சிறு சிறு தற்காலிக வெற்றிகளில் இன்பம் காணும் mixed maturity,learned helplessness ,Idiosynchrasies எட்டி பார்க்கும் இடங்கள் ஏராளம்.
obsessive compulsive நிறைந்த தோள் தடவும் mannerism ,யாராவது ஒன்றை அழுத்தி சொல்லும் போது அதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது (வரேன்டாடாடா )என இடது கை aggressive முரடனுக்கு இந்த படத்தில் நடிப்பிலும் , திரைக்கதை அமைப்பிலும் கொடுக்க பட்டிருக்கும் அற்புதமான psychology கொண்ட ஒத்திசைவு ,சிவாஜி இந்த பாத்திரத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து ஒவ்வொரு அசைவிலும் நெளிவிலும் வெளிபடுத்தும் அதிசயத்தை எப்படி வியப்பது?
துளி கூட தன் நண்பனின் லட்சியங்களுக்கு,நம்பிக்கைக்கு,எதிர்காலத்துக்க ு உலை வைப்பதில் குற்ற உணர்ச்சி கொள்ளாமல், அவனை ஜெயித்து விட்ட தொனியில் சவால் விட்டு உலவும் அந்தோணியை எப்படி விவரிப்பது?
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
-
vanilla .v
1. மனோகரா
2. உயர்ந்தமனிதன்
3. பாகப்பிரிவினை
4. தூக்கு தூக்கி
5. குங்குமம்...
6. வணங்காமுடி
7. வளர்பிறை
8. இருவர் உள்ளம்
9. மக்களைப் பெற்ற மகராசி
10. தங்கைக்காக
11. சொர்க்கம்
12. தேனும் பாலும்
13. காவேரி
14.பாபு
15.ராஜா
16. ஞானஒளி
17. குலமகள் ராதை
18. பாலும் பழமும்
19. பாசமலர்
20. உத்தம புத்திரன்
இவையெல்லாம் என்ன தெரியுமா?
11:03:1972 ஞானஒளி வெளியான நாளிலிருந்து 25:04:1972 வரை 45 நாட்களுக்குள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில், 80% மேற்பட்ட 38 அரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய நடிகர்திலகத்தின் மறு வெளியீட்டுப் படங்களின் பட்டியல்.
சென்னை அதன் நகர்ப்புறம் மட்டுமல்லாது டூரிங் கொட்டகையிலும் அய்யனின் பழைய படங்கள் திரையிடப்பட்டு "எங்கெங்கு காணிணும் சிவாஜியடா..." அன்று வசூல் சுனாமினையே ஏற்படுத்தி இருக்கிறது, 1972 ஆமாண்டு...
இவையெல்லாம், தேர்தலில் வென்றவர்கள் மட்டுமே சினிமாவிலும் ஜெயித்திருக்க முடியும் என்று கண்மூடித் தனமாக நம்பும் இன்றைய ஊடகங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...
பகிர்வோம்... தெரியப்படுத்துவோம்...
ஆதாரத்திற்கு பின்னிணைப்பாக உள்ள 'ஞானஒளி' படத்தின் விளம்பரம் காண்க!.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...98&oe=5B42B448
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...32&oe=5B48CC56
courtesy net
-
-
Usha R
மேலே பதிவு செய்யப்பட்டுள்ள தினமலர் கட்டுரை தெளிவாக நம் பார்வைக்கு.
பாசமும், நேசமும் நிறைந்த குடும்பத் தலைவர் சிவாஜி!
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் அவர்கள்
மூன்றாம் பிறை, கிழக்கு வாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், மணிரத்தினம், கதிர், செய்யாறு ரவி, கரு.பழனியப்பா, திருமுருகன், கண்ணன், பத்ரி வெங்கட் போன்ற பல இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை, தமிழில் அறிமுகப்படுத்தியவரும், "ஆனந்தம், இதயம்' போன்ற பல, மெகா, "டிவி ' தொடர்களையும் தயாரித்தவருமான பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, சுவாரசியமான, பசுமையான விஷயங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
பிரபு, ராம்குமார் போல, நானும் சிவாஜி கணேசனை ,"அப்பா' என்றே அழைப்பேன். அவ்வளவு நெருக்கமான பழக்கம். நடிப்பைத் தவிர, அவர் அறிந்த இரு விஷயங்கள், பாசமும், நேசமும் தான்!
எங்கள் குடும்பத்திற்கும், சிவாஜி குடும்பத்திற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி, டி.ஏ.மதுரத்தின் இளைய சகோதரி தான், என் அம்மா, டி.ஏ.பட்டம்மாள். இளம் நாடக நடிகராக இருக்கும் போதிலிருந்தே, சிவாஜிக்கு என் அம்மாவிடம் மிகுந்த பாசம். "பட்டு' என்று, அம்மாவை பாசமாக, சகோதரர் என்ற உரிமையோடு அழைப்பார்.
என் தந்தை, டி.கோவிந்தராஜும், வீனஸ் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து, வீனஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, ஸ்ரீதரின் கதை, வசனத்தில், "அமர தீபம்' (சிவாஜி, பத்மினி) என்ற படத்தை தயாரித்தனர். அது, மிகப்பெரிய வெற்றிப் படமானது. தொடர்ந்து என் தந்தை தயாரித்த, "உத்தம புத்திரன்' சிவாஜி, இரு வேடங்களில் நடித்த முதல் படம். அப்படமும்,பெரிய வெற்றியைப் பெற்றது. நட்பு ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், சிவாஜிக்கும், எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான உறவு, மேலும் வலுப்பட்டது.
அரை நிக்கர் அணியும் பருவத்திலிருந்தே, வாரத்திற்கு ஒரு முறையாவது சிவாஜி வீட்டுக்கு சென்று, அன்று முழுவதும் தங்கி இருப்பேன். சிவாஜிக்கு, தோட்டமும், பண்ணை வீடும் ராமாவரத்தில் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் ராம்குமார், பிரபு, கிரி, முரளி, மற்றும் நெருங்கிய உறவினர்களின் மகன்கள், நான் எல்லாரும் ஒன்றாக இருப்போம்.
தோட்டத்தில் பெரிய பம்ப் செட்டு போட்டு, குற்றாலம் அருவி போல தண்ணீர் கொட்டும். அங்கு, ஆசை தீர எல்லாரும் குளிப்போம். சில சமயம், சிவாஜியும் எங்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியாக குளிப்பார். தோட்டத்தில், அவர் குதிரை சவாரி செய்வார். டார்கெட் வைத்து, துப்பாக்கி சுடுவார். குறிபார்த்து டார்கெட்டை சுடுவதில், அவர், "எக்ஸ்பர்ட்!'
நான் சினிமாவிற்கு வர வேண்டாம் வேறு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக, மேனேஜ்மென்ட் படிக்க வேண்டும் என்று, என் தந்தை, என்னை எம்.பி.ஏ., படிக்க, அமெரிக்கா அனுப்பி வைத்தார். ஆனால், எம்.பி.ஏ., படித்து முடித்து, இந்தியா திரும்பியதும், நான் சினிமாத் துறையிலேயே சேர்ந்தேன்.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பணிபுரிந்தவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வி தான் என் மனைவி. என் தந்தை, வீனஸ் கோவிந்தராஜ் மற்றும் ஆர்.எம்.வீ., இருவரும் நல்ல நண்பர்கள். பெரியவர்கள் பார்த்து, எங்கள் திருமணத்தை நிச்சயம் செய்தனர்.
"நீங்க கண்டிப்பாக வர வேண்டும்...' என்று, சிவாஜியிடம் நான் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர் பல ஆண்டுகள் கழித்து, என் மாமனார் வீட்டுக்கு வந்தார். என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சிவாஜியும், எம்.ஜி.ஆரும் அருகருகே அமர்ந்து, நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினர்.
"நான் மாப்பிள்ளை சைடு' என்று சிவாஜியும், "நான் பெண் வீட்டு சைடு' என்று எம்.ஜி.ஆரும் அறிவித்தது, மேலும், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கியது. இருவரும் நிகழ்ச்சி முழுவதும் இருந்து, எங்களை கவுரவித்தனர்.
சிவாஜி அமெரிக்கா சென்றிருந்த போது, கலைவாணரின் மகளும், என் சகோதரியுமான கஸ்தூரி கிருஷ்ணன் வீட்டில் தங்கினார். அங்கு, தனக்கு கிடைத்த சுதந்திரத்தை ரொம்பவும், "என்ஜாய்' செய்தார். சினிமா தியேட்டரில், மக்களோடு மக்களாக க்யூ வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி உள்ளே சென்றார். ஷாப்பிங் மாலில், "டிராலி'யில் பொருட்களை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார். இது பற்றி, சிவாஜி என்னிடம் சொல்லும் போது, "இதெல்லாம் மெட்ராசிலே செய்ய முடியுமா? அங்கு பலருக்கு நம்மை தெரியாதுங்கிறதும் ஒரு சுகம் தானேடா' என்றார்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில், "புதிய வானம்' என்ற படத்திற்காக, ஸ்கிரிப்டை ஓ.கே., செய்தோம். அதில், ஒரு பவர் புல்லான போலீஸ் அதிகாரி கேரக்டர், அதை சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினோம். சிவாஜி ஒப்புக் கொள்வாரா? இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரும், நானும் அன்னை இல்லம் சென்று, அவரிடம் கதையை சொன்னோம்.
அவருக்கு அந்த கதாபாத்திரம் பிடித்துப் போனதால், ஓ.கே., சொன்னார். "நான் உங்களுக்குப் படம் பண்ணினால், எம்.ஜி.ஆர்., ஏதாவது நினைப்பாரா?' என்றார். "மாமா (ஆர்.எம்.வீ.,) எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருப்பார்...' என்றேன்.
சிவாஜி, சத்யராஜ், ரூபினி, கவுதமி படத்தில் முக்கிய ஸ்டார்கள். சிவாஜி படப்பிடிப்பிற்கு எப்போதும் சரியான நேரத்திற்கு வருவார் என்பது, திரைப்படத் துறையில் இருக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், அதை நேரில் பார்க்கும் போது, தனி த்ரில் தான்! படத்தில் நடிக்க சிவாஜி போட்ட ஒரே கண்டிஷன், "காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டும். இரண்டு மணிக்கு(மதியம்) என்னை விட்டுடணும். அவுட்டோரிலேன்னா, கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை...'
வாஹினி ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டிருந்தோம். 7.00 மணிக்கு படப்பிடிப்பு என்பதால், அவசரமாக கிளம்பி, 7.00 மணிக்குள் அங்கு போய் சேர்ந்தேன். முழு காஸ்ட்யூம் அணிந்து, மேக்-அப் முடிந்து, 6.45 மணிக்கே அங்கு வந்து சேர்ந்து, படப்பிடிப்பு தளம் பூட்டி இருந்ததால், வெளியே ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சிவாஜி.
சிவாஜி நடிப்பதை, அருகே இருந்து பார்ப்பது, பெரிய பாக்கியம். அவரிடமிருந்து, ஒவ்வொரு நாளும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம்.
நடிகர் திலகம் காங்கிரசிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தார். தேர்தலின் போது, ஓட்டு சேகரிக்க தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தார். நிறைய அலைச்சலுக்குப் பின், தன் சொந்த ஊரான சூரக்கோட்டைக்கு வந்தார். அவரை சந்திக்க, அங்கு சென்றேன்.
"ஐயா மாடியில் இருங்காங்க...' என்றனர். மாடியில் ஒரு உதவியாளர் அவருக்கு கை, கால் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரை போகச் சொல்லி விட்டு, நான் இதமாக அவருக்கு பிடித்து விட்டேன். "உள் கிராமங்களிலே ஜாக்கெட் கூட அணியாமல், புடவை மட்டும் உடுத்தி, பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்கடா... எவ்வளவு ஏழ்மை, பார்த்தாலே கஷ்டமாக இருந்தது...' என்று சொல்லி, அவர்களுக்காக உண்மையாக வருந்தினார். அதை, என்னால் உணர முடிந்தது.
சிவாஜி, அப்போலோ மருத்துவமனையில் இறந்து விட்டார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். உடனே, ராம்குமாரை தொடர்பு கொண்டேன். "தியாகு... நீ இப்போ வீட்டுக்கு வராதே. எக்கச்சக்கமான கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து போட்டிருக்காங்க. நீ நேரே அப்போலோ போயிடு. சிவாஜி உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வருகிற பொறுப்பை, நீ எடுத்துக்கோ. ஜாக்கிரதை...' என்றார் ராம்குமார்.
ஆம்புலன்ஸ் வண்டி வந்ததும், சிவாஜியை அதில் ஏற்றி, தி.நகர் போக் ரோட்டில் உள்ள, அன்னை இல்லத்திற்கு எடுத்து சென்றோம்.
திரை உலகில், அவர் செய்த சாதனைகள், பாசமிகு குடும்பத் தலைவரான அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவருடன் நெருங்கி பழகியது எல்லாம், என் மனத் திரையில் ஓடியது. அவருடன் இறுதியாக இருந்த சில நிமிடங்கள், என் வாழ்நாளில் மறக்க முடியாது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f6&oe=5B08B2DF
courtesy nadigarthilagam visirigal
-
-
-
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...c2&oe=5B052D0D
Sivaji Ganesan – Definition of Style 41
தமிழ்த் தாய் தலைநிமிர்ந்து சில விஷயங்களில் கர்வத்தோடு புன்னகை புரிகிறாள் என்றால் அதில் நிச்சயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அங்கம் வகிப்பார். தமிழ் மொழி உள்ளவரை, நல்ல கலை ரசிகன் உள்ளவரை நடிகர் திலகத்தின் புகழ் நிலைத்து நீடித்திருக்கும்.
இறைவனால் படைக்கப்பட்ட ஓர் அவதார புருஷன் நடிகர் திலகம். இறுதி மூச்சு வரை அவருடைய கலை அவரை விட்டுப் பிரியவில்லை. அதே போல் அவர் போனவுடன் அவருடனேயே அந்தக் கலையும் பறந்து விட்டது.
இத்தொடரைப் பொறுத்தமட்டில் இதுவரை காட்சிகளுக்கே விளக்கங்கள் ஆய்வுரைகள் இடம் பெற்று வந்தன. ஆனால் ஒரு நிழற்படத்துக்கே ஒரு பெரிய வியாக்கியானத்தை எழுதும் அளவிற்கு அவருடைய முகபாவம் அமைந்துள்ளது என்றால் அது இறையருளால் அவருக்குக் கிடைத்த வரப்பிரசாதமான நடிப்பு என்னும் கலையன்றோ.
ஆம். இன்று இத்தொடரில் இடம் பெறுவது ஓர் நிழற்படத்திற்கான விளக்கவுரை. கண்ணிலே கலைவண்ணம் கண்ட காவிய நாயகனின் முகமும் அதில் பாவனையும் அவருடைய காலப்பிரமாணத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் அற்புத நிழற்படம்.
1992ம் ஆண்டில் அவருடைய இந்த உயிரோவியமான நிழற்படம் நம்மை இந்த அளவிற்கு பாதிக்கிறதென்றால் இதை என்னென்பது.
இது வெறும் நிழற்படமல்ல. ஆயிரம் கதை கூறும் அஜந்தா ஓவியமாய் காலங்களைக் கடந்து நிற்கும் வல்லமை பெற்றது.
ஒரு மருத்துவமனையின் ஊழியர்கள் இருவர் இறந்து கிடக்கின்றனர். இரண்டுமே வெவ்வேறு இடங்களில் கிடப்பதால் காவல் எல்லை குறுக்கிட காவல் அதிகாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
மரணமான இரு ஊழியர்களைப் பற்றி கீர்த்தி விசாரிக்க ஒரு ஊழியர் வலியமுன் வந்து அந்த மருத்துவமனையின் சில மர்மங்களை அவரிடம் கூறுகிறான். அந்த சாட்சியை நவீன் கடத்தி வந்து வலுக்கட்டாயமாக பொய் சொல்ல வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் விஷயம் தெரிந்து கீர்த்தி அவரை விடுவித்து அழைத்துச் செல்கிறார்.
கீர்த்தி மற்றும் நவீன் ஆகிய இரு காவல் அதிகாரிகளுக்கும் இதனால் பகை உணர்வு தலைதூக்குகிறது.
ஒரு கட்டத்தில் காவல் துறையில் நேர்மையாக பணியாற்றுவதற்கு ஏற்படும் இடையூறுகளால் கீர்த்தி மனம் நோகிறார். தன் காவல் பணியை ராஜினாமா செய்கிறார். ஆனால் மருத்துவமனையில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் மோனா அவருக்கு உதவுவதாக கூறுகிறார். இதற்கிடையில் கீர்த்தியின் நண்பன் அவரை டைகர் சதுர்வேதி என்கிற பிரபல வழக்கறிஞரிடம் அறிமுகப்படுத்துகிறான். டைகர் சதுர்வேதி மிகப் பெரிய வக்கீல், மிகப் பெரும் அறிவாளி. திறமைசாலி. அவரிடம் ஒப்ப்டைத்தாலே நிச்சயம் உண்மை வெளிவரும் எனக்கூறுகிறான் கீர்த்தியின் நண்பன்.
டைகர் சதுர்வேதி கீர்த்தியை வரவேற்று ஆறுதல் கூறுகிறார். மருத்துவமனை ஊழியர்கள் மரணம் பற்றிய விவரங்களை கேட்டறிந்து மேற்கொண்டு அதைத் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி அவனை பம்பாய்க்கு அனுப்புகிறார்.
மருத்துவமனையில் மோனா சந்திக்கும் சில நிகழ்வுகள் அவளிடம் பாதிப்பை ஏற்படுத்த, ஆர்ச் பிஷப்பிற்கு தகவல் தெரிவிக்கிறாள். ஆர்ச் பிஷப்பும் டாக்டர் ராஜசேகர் அவர்களை நியமித்து மருத்துவமனையில் நடைபெறும் மர்ம விஷயங்களை கண்காணித்து அனுப்ப ஆணையிடுகிறார். அதன் பேரில் மருத்துவ மனைக்கு வரும் டாக்டர் ராஜசேகர் மோனாவிடம் கலந்துரையாடுகிறார். டாக்டர் ராஜசேகர் கணக்காளரும் கூட என்பதால் கணக்கு வழக்குகளில் எங்கே அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் சிலருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக டாக்டர் ஜான்சனுக்கு இவருடைய வரவு கிலியை ஏற்படுத்துகிறது. தன் மேலிடமான ரத்தினசாமியிடம் தகவல் தெரிவிக்கிறார். இவர்கள் மிகவும் தந்திரமாக இதில் டாக்டர் மோனாவை நுழைத்து விடுகின்றனர். டாக்டர் ராஜசேகர் கொலை செய்யப்படுகிறார்.
மருத்துவமனை ஊழியர்களைக் கொன்றது யார்.
டாக்டர் ராஜசேகர் கொல்லப்பட்டாரா
அப்படியானால் அவரைக் கொன்றது யார்.
மருத்துவமனையில் என்ன மர்ரம் இருந்தது.
இவற்றிற்கெல்லாம் படம் பார்த்து விடை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கட்டத்தில் திடீரென சதுர்வேதியின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. லேசான அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது. டாக்டர் மோனா அவரை கவனித்துக் கொள்கிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக ஊசி செலுத்த முற்படும் போது சதுர்வேதி வேண்டாம் என முரண்டு பிடிக்கிறார்.
இரும்பு மனம் கொண்ட சதுர்வேதியின் நெஞ்சத்தை அசைத்துப் பார்க்கிறார் டாக்டர் மோனா. ஊசி செலுத்தும் போது, நான் உங்கள் மகளாக இருந்தால் ஊசி போட மறுப்பீர்களா என மோனா கேட்க சதுர்வேதியால் ஒன்றும் பேசமுடியவில்லை. காரணம் சதுர்வேதியும் அவர் மனைவி லக்ஷ்மியும் சிறுவயதிலேயே தங்கள் குழந்தையை பறிகொடுத்து விட்டிருந்த படியால் இது அவரை அசைத்து விடுகிறது. மோனாவின் வார்த்தை அவருக்குள் அவருடைய மகளின் நினைவை தூண்டி விடுகிறது. பாசத்தால் உருகும் சதுர்வேதி, டாக்டர் மோனாவின் முகத்தைப் பார்க்கிறார். அதில் அவருக்கு தன் மகளை இழந்த துக்கம் மேலிடுகிறது. அதில் அவளுடைய வளர்ந்த மகளாய் மோனா காட்சி தருகிறாள். மகளின் நினைவால் துயருறுவதா அல்லது மோனாவின் ஆறுதலால் மகிழ்வுறுவதா என தடுமாறுகிறார் சதுர்வேதி. காயத்ரி மந்திரம் சொல்லியே என்னை கவுத்துட்டியேம்மா என அன்போடு அவளிடம் உருகுகிறார் சதுர்வேதி. காயத்ரி அவருடைய மகளின் பெயராகும். அவருடைய முகம் நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகிறது. மோனாவைத் தன் மகளாகவே பாவித்து விடுகிறார். லக்ஷ்மியும் அவரைப் போலவே மோனாவிடம் தங்கள் மனதைப் பறிகொடுத்து அவளைத் தங்களுடைய மகளாக பாவிக்கிறார்.
டைகர் சதுர்வேதியாக நடிகர் திலகம், காவல் அதிகாரி கீர்த்தியாக இளைய திலகம் பிரபு, சதுர்வேதியின் மனைவி லக்ஷ்மியாக ஸ்ரீவித்யா, டாக்டர் மோனாவாக ராமாயணம் புகழ், முன்னாள் நாடுமன்ற உறுப்பினர் தீபிகா, டாக்டர் ராஜசேகராக சரத்பாபு, காவல் அதிகாரி நவீனாக கேப்டன் ராஜ், ஜான்சனாக நாசர், கீர்த்தியின் நண்பனாக ஜனகராஜ் மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.
இநத் காட்சியில் நடிகர் திலகத்தின் முகத்தில் ஒரே சமயத்தில் சந்தோஷமும் சோகமும் பிரதிபலிப்பதை எடுத்துக்காட்டுவதே இணைக்க்ப்பட்டுள்ள நிழற்படம். எப்பேர்ப்பட்ட கலைஞன். ஒரு முகத்தில் தான் எத்தனை முகபாவம்..
இப்போது முதல் பாராவை மீண்டும் படியுங்கள்.
-
கோபால்,
மீண்டும் கலக்கல்., அருமையான Analysis. அந்தோணி பாத்திரத்தை மிக நன்றாக அலசியிருக்கிறீர்கள். அந்தோணி அருணாக Transform ஆகும் போது Psychological Transformation கூடவே ஏற்படுவதை உருவகப்படுத்தி எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்கு ஒரு Theory உருவாக்கி அதில் தன்னுடைய தனித்துவத்தையும் கொண்டு வந்து ஒரு கல்லில் பல மாங்காய் அடித்திருக்கிறார். No Actor in the Entire Univeerse Ever can conceive such an exemplary performance except the one and only NADIGAR THILAGAM and Gnana Oli is the Prime evidence.. Hats off to you
-