http://i61.tinypic.com/1621dt4.jpg
Printable View
நடிகர் திலகத்தின் நல்லிதயங்கள் அனைவருக்கும் பணிவன்புடன் கூடிய வணக்கங்கள்..!!
ஆருயிர் அண்ணலின் வான்புகழ் ஓங்க ஒவ்வொரு பதிவையும் அளித்துக் கொண்டிருக்கும் பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வளமான வாழ்த்துக்கள்..!!
http://i1110.photobucket.com/albums/...a198462c0e.jpg
இந்த சாதாரண சுவாமிநாதனின் பிறந்த நாளுக்காக இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை, ஆசி மலர்களை நல்கிய கலைவேந்தன் சார், அன்பு அடிகளார், ரசிகவேந்தர் சார், மூத்த ரசிகர் சுப்ரமணியம் ராமஜெயம் சார், சிகர ரசிகர் செயல்வீரர் சந்திரசேகரன் சார், கனடா சிவா சார், இனியவர் பாஸ்கர் சார், கவிஞர் ஆதவன் ரவி அவர்கள், அதிரடி சரவெடி ஆர் கே எஸ், SSS சார், ஆதிராம் சார், மூவேந்தர் ரசிகர் சிவாஜிசெந்தில் சார், ஆருயிர்ச் சகோதரர் என்னுயிர் நெய்வாசு, ஆய்வுச் செம்மல் சாரதி சார், பரணி அவர்கள், அருமை நண்பர் ஜேயார் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!!
பாசத்துடன்,
பம்மலார்.
அலைபேசி மூலம் அன்பான வாழ்த்துக்களை அளித்த
http://i1110.photobucket.com/albums/...65d2ecedf0.jpg
மூத்த சகோதரர் ராகவேந்திரர், சித்தூர் வேலூர் சென்னை (தென்னகம் சுற்றும் வாலிபன்) வாசு சார், பெங்களூரு கண்ணன் சார், போரூர் நடராஜன் சார், கோவை டாக்டர் ரமேஷ்பாபு அவர்கள், ராஜபாளையம் திருப்பதி ராஜா அவர்கள், தூத்துக்குடி வக்கீல் பேரன்புக்கும், மரியாதைக்கும் உரிய பெரியவர் பண்பாளர் நடராஜன் சார், திறனாய்வுத் திலகம் மை டியர் முரளி சார், அருமைச் சகோதரர் சீனிவாசன் அவர்கள், சிவாஜி பேரவைத் தலைவர் சந்திரசேகரன் சார், அருமைச் சகோதரர் திருவல்லிக்கேணி பாஸ்கரன் அவர்கள், ஜென்டில்மேன் ராமஜெயம் சார், கோவை மாணிக்கம் சார், மதுரை சந்திரசேகரன் சார், கண்ணனூர் சிவசுந்தரம் சார், நேரில் வாழ்த்திய உடன்பிறவா சகோதரர் அம்பத்தூர் சுப்ரமணியன் உள்ளிட்ட அனைவருக்கும் மற்றும் இந்த எளியவனை என்றென்றும் வாழ்த்திக் கொண்டிருக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கும் எனது உளப்பூர்வமான உன்னத நன்றிகள்..!!
பாசத்துடன்,
பம்மலார்.
Belated birthday wishes to "aavana thilagam" pammalar
yours friendly
sivajidhasan
Belated birthday wishes to "aavana thilagam" pammalar
yours friendly
sivajidhasan
வரும் வியாழகிழமை அதாவது பக்ரித் தினம் முதல் 24-09-2015 கோவை ராயல் திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக நமது நடிகர் குல சாம்ராட் நடிகர் திலகம் இரு வேடங்களில் பட்டையை கிளப்பிய கெளரவம் திரைப்படம் திரயிடபடுகிறது.
]https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...a3&oe=5692E88B
வெகுவிரைவில் அதனை தொடர்ந்து கோவை ராயல் திரை அரங்கம் மற்றும் கோவை டிலைட் திரை அரங்கங்களில் கீழ் கண்ட திரைப்படங்கள் திரையிட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன் !
http://i501.photobucket.com/albums/e...ps75856727.jpg
http://i501.photobucket.com/albums/e...pscaedd8a1.jpg
http://i501.photobucket.com/albums/e...ps21763e16.jpg
சங்கம் வளர்த்த மதுரையில் நடிகர் திலகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்ட்ரல் திரை அரங்கில் நடிகர் குல சாம்ராட்டின் உத்தமன் திரைப்படம்
http://i501.photobucket.com/albums/e...ps3kfh62yp.jpg
October 2 முதல் திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சிபொங்க தெரிவித்து கொள்கிறேன்
RELEASING WITH PRIDE by MADURAI SIVA MOVIES !
சிவாஜி ரசிகன்
http://i1065.photobucket.com/albums/...psw4mhqgqa.jpg
ஒரு நடிகனின்படம் வந்து அது சிறப்பான பேரைப் பெற்றுமேலும் சில படங்கள் வந்து அதுவும் நல்ல பெயரைப் பெற்றும் அந்த நடிகனின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு ஒருவன் அந்த நடிகனின் நடிப்புக்கு ரசிகனாகிறான்.ஒரு நடிகனுக்கு ரசிகனாக ஒருவன் ஆகும் நிலை பொதுவாக இப்படித்தான் இருக்கும்.
முதல் படத்திலேயே படம் பார்ப்பதற்கு முன் பொதுப்பார்வையாளனாக தியேட்டருக்குள் நுழைந்துபடம் முடிந்து வெளியே வரும் போது ஒரு நடிகனின் ரசிகனாய் வந்த அதிசயம் நடிகர்திலகத்திற்கு மட்டுமே இருந்திருக்கும்.பராசக்தி ரிலீஸான முதல் காட்சியிலேயே உருவான சிவாஜி ரசிகர்கள் எத்தனைபேரோ?
அன்று தொடங்கிய ரசிப்பு இன்று வரை மாறவில்லை.சொல்லப்போனால் அந்த ரசிப்பு இன்னும்பல மடங்கு அதிகரித்தே உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத நடிப்பு அவருடைய நடிப்பு.
ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு அனுபவம் அவரது படங்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு கிடைக்கிறது.அது போக,20வயதில் ரசித்த நடிப்பு 30வயதில் வேறொரு கோணத்தில் வியக்க வைக்கிறது.40வயதில் அதுவே வேறொரு கோணத்தில் ரசிக்க வைக்கிறது. 50வயதில் மற்றொரு பார்வையில் ரசிப்பை மேம்படுத்துகிறது.இப்படியே இறுதிவரை யோசிக்க வைத்துக்கொண்டே வைத்திருக்கும்.
அவருடைய படங்களை 20வயதில் பார்க்கும்போது அவருடைய நடிப்பை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் அந்த நடிப்பை மற்றவர்களின் ரசனையோடு நம்முடைய ரசனையையும் சேர்த்துப் பார்த்து பரவசம் அடைவோம்.அப்போது நாம் சுயமாக சம்பாதிக்க தொடங்காத காலகட்டங்கள்.அந்த வயதில்பெரும்பாலும் பிறரைச் சார்ந்தே இருப்போம்.மற்றவர்கள் சொல்லக்கேட்டும் விமர்சனங்கள் படித்தும்நம்முடைய ஈடுபாடும் சேர்ந்து அந்த நடிப்பு வியக்க வைத்திருக்கும்.
பின் 30வயது எனும் போது நாம் சம்பாதிக்க ஆரம்பித்திருப்போம்.நமக்கு என்று ஸ்டேட்டஸ் வந்து விடும்.அப்போது நமக்கு சுய சிந்தனை 20வயதை விட மேம்படிருக்கும்.அந்த காலகட்டங்களில் அவருடைய நடை உடை பாவனை களில் மனம் லயிக்கும்.நமக்குள்ளும் அவரைப் போன்றே ஆடைகள் உடுத்திக்கொள்ளவும்,அங்க அசைவுகளை வெளிப்படுத்தவும் ஆசை வரும்.அதை செய்கையிலும் எத்தனையோ ரசிகர்கள் பின்பற்றியுள்ளனர்.
40வயதில் குடும்ப உறவுகள் அதிகரித்த காலகட்டம்.மேலும் பக்குவப்பட்ட மனது.உள்ளத்து உணர்ச்சிகள்,முக பாவனைகளைஉணர நம்முடைய அனுபவங்கள்கை கொடுக்கும்.
பல படங்களில் கணவன் மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவருடைய நடிப்பை பாருங்கள்.அந்த அந்நியோன்யமான நடிப்பு திருமணத்திற்கு முன்பு விடதிருமணமாகிய பின்புநாம் ரசிக்கும் ரசனையை அதிகமாக்கி விட்டிருக்கும்.நுணுக்கமான அவரின் நடிப்பு பாவனைகள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
"பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே "பாடலைஅப்போதும்,இப்போதும்
எப்படி உணர்ந்தீர்கள் நினைத்துப் பாருங்கள்
இது போன்ற விஷயங்கள் மற்ற நடிகர்களுக்கும் பொருந்தும் தானே? என்று கேள்வி எழலாம்.ஆனால் இது போன்ற நடிப்புகளை யார் செய்திருக்கின்றனர் என்று அடுத்த
கேள்வியும் வருகின்றதே.
ரசிகர்களில் கடவுள் பற்று கொண்டவர் இல்லாதவர்என்று இரு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும்இருக்கலாம்.கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்ட நாத்திகவாதிகளையே தன் கடவுள் வேட நடிப்பை ரசித்து ஏற்றுக்கொள்ளச்செய்த பெருமை சிவாஜிக்கு மட்டுமே உண்டு.
சிவாஜியை ஒருவர் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நிலையிலிருந்து சற்றும் இறங்கி வந்ததாக எந்த சிவாஜி ரசிகரும்
சரித்திரத்தில் இல்லை
சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்,பெரும் பதவியில் இருப்பவர்கள்,மெத்தப்படித்தவர்கள்,கல்வி போதிப்பவர்கள,அரசுத்துறைகள் போன்று பல உயர்ந்த துறைகளிலும் இருப்பவர்கள்சிவாஜியின் நடிப்புக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.சிவாஜியின் படங்கள் பாச உணர்வுகளையும், பண்பாட்டையும்,தாய்நாட்டின் மீது பக்தியையும் ஊட்டுகின்றன என்பதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் சொல்ல தயங்குவதில்லை.சிவாஜி ரசிகர்கள் என்பதிலே பெருமை கொள்கின்றனர்.
பாசமலர் படம் எத்தனை அண்ணண்களை தங்கைககளிடம் பாசத்தை அதிகரித்தது.காவல்துறையில் பணிபுரிந்த எத்தனை யோ பேருக்கு
தங்கப்பதக்கம் spசௌத்ரீ முன்னுதாரணமாக விளங்கினார்.பல பிராமண குடும்பங்கள்தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு
பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரை உதாரணம் காட்டி அறிவுரை
செய்தவைகள் ஏராளம்.இவையெல்லாம் ஒரு சிறு துளியே.
எனது நடிப்புக்கு ஒருவர் ரசிகரானால்
அவர் இறுதி வரை எனக்கு மட்டுமே ரசிகராகவே இருப்பார்-
இது நடிகர்திலகத்தின் வேதவாக்கு.
கர்ணனுக்கும்,கட்ட பொம்மனுக்கும்இன்றும்பழைய
திரைப்படங்களுக்கு வரும் கூட்டங்களே இதற்கு சாட்சி.எந்தவித பிரதிபலன்கள் இன்றியும் கட்சி, அதிகாரங்கள் எதுவுமின்றியும்சொந்தபணத்தில் செலவுகள் செய்து இன் றும் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் பெரும் ஆளுமை செய்து வருகிறார்கள்.
63 வருடங்களாக இந்த ஆளுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.இனிமேலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
சிவாஜி ரசிகர்கள் எல்லா வகையிலும் சிறந்தவகையில் செயல்பட்டு வருகிறார்கள்.இப்போது வரும் இளைஞர்கள் கணிணி,இன்டர்நெட் போன்ற துறைகளில் படிக்கும்போதே
அனுபவங்கள் பெற வாய்ப்பிருக்கிறது.ஆனால் உத்தேசமாக 1970 க்கு மேல் பிறந்த ரசிகர்களுக்கு அந்த பயிற்சி எப்படி கிடைத்திருக்கும்?ஆனாலும் 60 வயதிற்கு மேற்பட்ட சிவாஜி ரசிகர்கள் கூடஇன்றும் இன்டர்நெட்,போட்டோ ஷாப்,போன்றவைகளில் வியக்கத்தக்க செயல்களை செய்து வருகின்றனர்.
ஒரு சிவாஜி ரசிகன் மற்ற நடிகர்களின்பத்து ரசிகர்களுக்கு சமம்.
சமுதாய பங்களிப்புகள் மட்டுமல்ல விவாதங்கள்,பட்டிமன்ற பேச்சுகள்,
மேடைப்பேச்சுகள்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றிலும்
சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டுவெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.
63வருடங்களாக எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும்,சோதனைகள் வந்தாலும்
அரசியல் கட்சிகளால் ஆதாயம் கிடைக்கா விட்டாலும்ஏறு முன்னேறு என காட்டாற்று வெள்ளமாய் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிவாஜியையும் சரி,சிவாஜி ரசிகர்களையும் சரி எத்தனையோ பேர் ஏமாற்றினாலும்,
சிவாஜியும்.,சிவாஜி ரசிகர்களும் யாரையும் ஏமாற்றியதில்லை.
சிவாஜி ரசிகன் காரணம் இன்றி எந்த நடிகரையும் அவரின் ரசிகர்களையும் விமர்சனம் செய்ய விரும்புவதில்லை.முதல் கல் எதிரணியிடம் இருந்து வந்தாலொழிய.உலகத்திலேயே சிறந்த நடிப்புக்கு நாம் ரசிகனாக இருக்கிறோம்,அந்த நடிப்பை உள் வாங்கவே இந்த ஜென்மம் போதாது, ,அதையே சதா சிந்திக்கும் மனம், பிறகெப்படி அடுத்தவரின் கல்லடிகளை கவனத்தில் கொள்வது என்ற சிந்தனையே காரணம்.
சிவாஜி ரசிகர்களின் சாதனைகள் பெரும்பாலும் உலகிற்கு தெரிவதில்லை.சிவாஜிக்கு செய்யும் செயல்களை அவன் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றிஆத்ம திருப்தியுடன் செய்து அவற்றிலே ஆத்மதிருப்தியும் அடைந்து விடுதலே காரணம்.அந்த நடிப்புக்கு அவன் செய்யும் மரியாதை வேறு யாரையும் பெரிதாக எண்ணவிரும்புவதில்லை.
கடவுளை வணங்கிணாலும்,சிவாஜி என்று வரும்போது கடவுளை விட சிவாஜியை வணங்கும் ரசிகர்கள் ஏராளம்.
சிவாஜிக்கு அவமரியாதை யை மற்றவர்கள் செய்யும்போது கூட தங்களின் எதிர்ப்பை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில்அறவழியில் ஊண்ணாவிரதம்.,வன்முறையில்லாத போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.அதனால்தான் சிவாஜி ரசிகர்களுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் உள்ளது.
சிவாஜி ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்.எந்த ஒரு செயலானாலும் இறுதி வரை போராடும் குணம் கொண்டவர்கள்.
சிவாஜி ரசிகன் என்று கூறிக்கொள்வதில் சிவாஜி ரசிகர்கள்
பெருமை கொள்கின்றனர்.
De-Addiction சிகிச்சை தேவையில்லாத ஒரே Addiction சிவாஜி மட்டுமே...
முத்தையன் அம்மு,
நான் எந்த புகைப்படத்தை மனதில் கற்பனை பண்ணுவேனோ ,அவை நிஜமாகவே வந்து விழும்.உங்கள் கற்பனை,எடிட்டிங் நேர்த்தி,உழைப்பு அலாதி. நான் உங்கள் ரசிகன். 7000 கடந்ததற்கு என் மனபூர்வ வாழ்த்துக்கள்.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு கூடல்மாநகர் மதுரையில் வசூல்சக்கரவர்த்தி நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உத்தமன் திரைப்படம் மதுரை சிவா மூவீஸ் சார்பாக அக்டோபர் 2 முதல் மதுரை-சென்ட்ரல் தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகிறது. அனைவரும் வருக - மக்கள்தலைவரின் ஆசி பெறுக.
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...eb&oe=5664BE59
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல... எவரும் எட்டாத அதிசயம்.
Mr Senthilvel
It is true that Sivaji Rasigan will die as Sivaji Rasigan only.
அருமை...செந்தில்வேல் சார்.
திரு.ராகவேந்திரா சார் இதே திரியில் கொஞ்ச காலத்துக்கு
முன் சொல்லியிருந்ததைப்
போலவே உங்கள் எழுத்தின்
மேன்மை கூடிக் கொண்டே
போகிறது.
காலகாலமாய் தனக்கு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிற மாபெரும்
கலைஞன் நம் நடிகர் திலகம்.
தலைவனின் புகழ் காக்கும்
பல கோடி சிவாஜி ரசிகர்களின்
இதயத்தில் இதம் சேர்க்கும்
உன்னதமான பதிவு...உங்களுடையது.
"என்னை ரசிப்பவன்,இறுதி வரை எனக்கே ரசிகனாயிருப்பான்" என்று
அய்யன் உரைத்த சொல்
எத்தனை சத்தியமானது!?
பார்த்த படத்தையே கொஞ்சகாலம் கழித்து திரும்பப்
பார்க்கையில் வேறு விதமான
பரவசங்கள் கிடைப்பது..
பழைய வயசில் நமக்கிருந்த
ரசனை, காலம் செல்லச் செல்ல
மேம்படுவது...
இவையெல்லாம் ஒவ்வொரு
சிவாஜி ரசிகனுக்கும் அன்றாடம் நிகழ்கிற அதிசயங்கள்.
சரியான வார்த்தைகள் கிடைக்காத, கிடைத்தாலும்
சொல்லத் தெரியாமல் போன
என் போன்ற கோடிக்கணக்கான
ரசிகர்களின் ஒற்றைக் குரலாய்..
நீங்கள் பேசியிருக்கிறீர்கள்.
"உங்கள் திரைப்படம் காண
திரையரங்கத்தினுள்
நுழைகிறவன்
மூன்று மணி நேரம் கழித்து
வெளியேறுகிறான்..
உங்கள் ரசிகனாக"
-என்று நான் கூட ஒரு கவிதை
எழுதியதுண்டு.
சிவாஜி ரசிகன் ...
நன்றி மறவாதவன்.
சிவாஜி ரசிகனைப் பெருமை செய்த சிவாஜி ரசிகனுக்கு
அவன் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறான்.
நன்றி..
செந்தில்வேல் சார்!
முத்தையன்
மிகவும் குறுகிய காலத்தில் 7000 பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் தங்களுடைய ஒவ்வொரு நிழற்படத்தின் பின்னாலும் உள்ள தங்களின் உழைப்பு பிரமிக்கவைப்பதாகும்.
குறிப்பாக நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
முத்தையன் அம்மு சார்!
https://pbs.twimg.com/media/Boio882IMAAAazK.jpg:large
தங்களது சாதனைப் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். உடல் வருத்தி 7000 பதிவுகள். உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு. தங்களது ரசனைக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள். உடல்நலத்தோடு உத்தமனின் படங்களை வழக்கம் போல உன்னதமாகப் பதிவுடுங்கள். நன்றி!
சில வார்த்தைகள் சேர்ந்த ஒரு வாக்கியத்தை, தன்னுடன்
நடிக்க வைப்பதென்பது நம்
நடிகர் திலகத்தால் மட்டுமே முடிந்த காரியம்.
"படிக்காதவன்" படக்காட்சி.
தாய்,தகப்பன் இல்லாத குறை
தெரியாமல் போற்றி வளர்த்த
தன் தம்பியர் இருவரையும்
பொறுப்பாய் பார்த்துக் கொள்ளுமாறு மனைவியிடம்
சொல்லி விட்டு வெளியூர் சென்று திரும்பும் நடிகர் திலகம், மனைவி வடிவுக்கரசி
தம்பிகளைக் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டிய கதை தெரியாமல், "தம்பிகளா..நான்
வந்துட்டேன்டா" என்று அழைத்தபடி உள்ளே வர..
அவர்களைக் காணாமல் மனைவியை விசாரிக்க..
மனைவி,மழுப்பலாய் "உங்க தம்பிங்க என் கூட சண்டை போட்டுகிட்டு வீட்டை விட்டு
ஓடிட்டாங்க..!" என்று சொல்ல..
பொய் மனசை ஊடுருவிப்
பார்க்கும் ஒரு பார்வையுடன்
மனைவியுடன் பேசும் அந்த
வாக்கியம் உயிர் பெற்று நடிக்கத் துவங்குகிறது
"உன் கூட சண்டை போட்டுகிட்டு..வீட்டை விட்டு
ஓடிப் போற வயசா அவங்களுக்கு..?"
இந்த சிறிய வாக்கியத்தை
என்னமாய் அர்த்தப்படுத்துகிறார்.. ?
"உன் கூட சண்டை போட்டுகிட்டு.."-மனைவி சொல்லும் பொய்யை எள்ளல்
செய்யும் தொனி.,
"போட்டுக்கிட்டு" என்று சொன்ன பிறகு அவர் விடும் ஒரு மிகச் சிறிய இடைவெளியை,பொய் சொல்லும் மனைவி கூசிக் குறுகும் விதமாய்ப் பயன்படுத்துதல்..
"வீட்டை விட்டு ஓடிப் போற
வயசா அவங்களுக்கு?"-இதை
அவர் சொல்லும் போதே..
ஏதுமறியா அப்பாவி முகங்களுடன் இரண்டு சிறுவர்களை நமக்குக் காட்சிப்
படுத்துவது..
அட போங்கப்பா..!
அவர்..அவர்தான்!
திரு.முத்தையன் அம்மு சார்,
7000 பதிவுகளை சிறப்புடன், சிரமேற்கொண்டு பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
https://www.youtube.com/watch?v=-khK58F2pUU
ஏவி.எம். சரவணன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் மக்கள் தலைவர் உரையாற்றும் அபூர்வ காணொளி.
நன்றி யூட்யூப் இணைய தளம் மற்றும் தரவேற்றிய நண்பருக்கு.
ஊற்றெடுக்கும் கருத்துக் கோர்வையான நிழல்படப் பதிவுகளால் நடிப்பின் தங்கச் சுரங்கத்தை அரங்கேற்றிய முத்துச்சர பதிவர் முத்தையன் அம்மு அவர்களின் 7000 பதிவுச்சாதனை நடிகர்திலகம் புகழ்பாதையில் மலர்படுகையாக விரிந்து பறந்திட வாழ்த்துக்களும் வேண்டுதல்களும்!!
செந்தில்
https://www.youtube.com/watch?v=f2gQqwbeJRM
Prabhu 's interview about NT donations.
https://www.youtube.com/watch?v=jET42x9OQAc
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஒருவரைக் கூட மறக்காமல், மக்கள் திலகம் திரிக்கு வந்து நன்றி சொன்னதோடு, பொன்மனச் செம்மலின் கலக்கலான புகைப்படத்தை பரிசளித்திருக்கும் பண்புமிக்க நண்பர் பம்மல் திரு.சுவாமிநாதன் அவர்களுக்கு பாசமிகு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.வாசு சார்,
எல்லோரையும் அசர வைக்கும் அசராத உழைப்புக்கு சொந்தக்காரரான தாங்கள் 8,000 பதிவுகள் கண்டதற்கு வாழ்த்துக்கள். 22-ம் தேதி வரை பதிவிட மாட்டேன் என்று நான் கூறியிருந்ததால் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். தங்களின் ஒவ்வொரு பதிவிலும் என்ன ஒரு உழைப்பு, தான் ரசித்ததை அப்படியே சிந்தாமல், சிதறாமல் மற்றவர்களுக்கு கடத்தும் ஆற்றல். பாராட்டுக்கள் சார்.
தங்கள் 8,000 பதிவு சாதனைக்கும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துக்கள். அயரா உழைப்புக்கு வணக்கங்கள். நன்றி.
பேரறிஞர் அண்ணாவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் உள்ள மேலே இருக்கும் அரிய படத்தை பதிவிட்டிருக்கும் அன்பு நிறை பண்பாளர் திரு.ராகவேந்திரா சார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு நண்பர் திரு.ஆதிராம் அவர்களுக்கு,
‘உங்கள் பதிவால் திரிகள் களை கட்டுகின்றன. இத்தனாம் தேதி வரை பதிவிட மாட்டேன் என்பது போன்ற விரதத்தை கைவிடுங்கள்’ என்று நீங்கள் எனக்கு விடுத்த அன்பான அழைப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.
கடந்த வாரம் எங்கள் திரிக்கு வந்து உலகம் சுற்றும் வாலிபனை சென்னையில் துர்கா பிலிம்ஸ் மூலமாக மக்கள் திலகம் வெளியிட்டார் என்று கூறினீர்களே. உங்களுக்கு பழைய விஷயங்கள் நிறைய தெரிந்திருக்கிறது. திரு.கார்த்திக் சாரைப் போல. அவரது பதிவுகளில் நிறைய பழைய விஷயங்கள் விரவி இருக்கும். இதை ஏதோ ஒப்புக்காக சொல்லவில்லை. இந்த தலைமுறையினர் எத்தனை பேருக்கு மகாதேவன் பிள்ளையைத் தெரியும். ஆனால், அவரைப் பற்றி ஒரு பதிவில் திரு.கார்த்திக் சார் சொல்லியிருப்பார். அவன் ஒரு சரித்திரம் பதிவில் என்று நினைவு.
கத்தி சரியாக இலக்கை நோக்கி வீசப்பட்டிருக்கும் விதத்தையும் அது இறங்கியிருக்கும் ஆழத்தையும் வைத்தே கத்தியை வீசியவரின் திறமையை கண்டுபிடித்து விட முடியும். அப்போதே, நினைத்தேன். இவர் விஷயம் தெரிந்தவர் என்று. அவர் திரிக்கு வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அந்த குறையை நீங்கள் போக்கலாமே. தங்கள் பழைய நினைவுகளையும் அனுபவங்களையும் எழுதி எல்லாரையும் மகிழ்விக்கலாமே.
திரு.வாசு சாருக்கு 8,000 பதிவுக்கு வாழ்த்து கூறும்போது, ‘உங்கள் ஆதி’ என்று கூறியிருக்கிறீர்கள். உங்கள் மீது எனக்கு சாஃப்ட் கார்னர் உண்டு. பேரறிஞர் அண்ணாவின் தம்பிமார்களில் ஒருவர். அது மட்டுமல்ல, எல்லாரையும் அரவணைத்து செல்வது மக்கள் திலகத்திடம் நாங்கள் கற்றுக் கொண்ட பாடம். அதோடு மட்டுமல்ல, ஆரம்ப காலத்தில் எங்கள் திரியின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்காற்றியுளளீர்கள். மக்கள் திலகத்தை ‘தலைவர்’ என்றெல்லாம் போற்றி புகழ்ந்துள்ளீர்கள். அந்த வகையில் நீங்கள் ‘எங்கள் ஆதி’யும்தான்.
உங்களிடம் இருந்து ஆக்கபூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வாசு,
தாமதத்திற்கு மன்னிக்கவும். வாழ்த்து சொல்ல வந்தது பொட்டு வைத்தோ முகமோ பாடலின் சிறப்புக் கட்டுரைக்கு இல்லை. அதற்கும் முன்பு நீங்கள் எழுதிய எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் பதிவிற்காக. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்ததாலும் சில தேவையற்ற விவாதங்கள் திரியை கையடக்கியிருந்ததாலும் இந்த பாடல் பற்றி பேச முடியவில்லை. [மதுர கானங்கள் திரியிலும் நீதிதேவன் மயக்கம் மற்றும் புதிய வாழ்க்கை படங்கள் பற்றி சொல்ல நினைத்தேன்]
அற்புதமான பாடல். அருமையான படம். ரா கண்ணா ரா என்ற தெலுங்கு படத்தின் [சோமயாஜலு, கேஆர்விஜயா] ரீமேக். 1980-களில் நடிகர் திலகம் பற்றி அவர் ஏற்கும் பாத்திரங்கள் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்த காலம். அந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம். நமது ஹப்பிலேயே 6,7 வருடங்களுக்கு முன்பு ஒரு சிலர் [ஈஸி சேர் விமர்சகர்கள்] அப்படி நடித்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாம் .சொந்த படமாக கூட தயாரித்திருக்கலாம் என்றெல்லாம் எழுதுவார்கள். 1982-லேயே இப்படி பேரனின் பாசத்திற்காக ஏங்கும் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார் அதுவும் சொந்தப் படம் என்று நாம் எடுத்துச் சொல்லும்போது அதைப் பற்றிய விவரங்களே அவர்கள் அறிந்திருக்கவில்லை.
குற்றம் சொல்லுவதற்கு ஓடி வருபவர்கள் நல்ல படங்கள் வரும்போது அதற்கு ஆதரவளிப்பதில்லை. வா கண்ணா வா போன்ற படங்கள் வெளியான காலத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. அதே நேரத்தில் சென்னையில் மூன்று அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி 20 லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது.
வெளியான நேரத்தில் இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்குள்ளாக நடிகர் திலகத்தின் 4 படங்கள் ரிலீஸ் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஜனவரி 26 அன்று ஹிட்லர் உமாநாத் வெளியாகி ஓடிக் கொண்டிருக்க பிப்ரவரி 5-ந் தேதி ஊருக்கு ஒரு பிள்ளை வெளியாக மறுநாள் பிப்ரவரி 6 -ந் தேதி இந்தப் படத்தை அதுவும் சொந்தப் படத்தை ரிலீஸ் செய்ய யாருக்கு மனசு வரும்? இதெல்லாம் போதாதென்று அதே பிப்ரவரி 25-ந் தேதி கருடா சௌக்கியமா வேறு ரிலீஸ். உலகத்திலேயே இது போன்ற வணிக கட்டமைப்பு உள்ள [Producer -Distributor - Exhibitor set up] எந்த மொழிப் படமானாலும் சரி இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ஆரம்ப நிலை கதாநாயகன் கூட இப்படி ரிலீஸ் செய்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நடிகர் திலகம் என்றைக்கு அதையெல்லாம் பார்த்தார்? In spite of all these things அவர் வெற்றிகளை குவித்தவர் அல்லவா?
இந்தப் படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் படம் பார்த்த திரு.வி.சி.சண்முகம் அவர்கள் இயக்குனர் யோகானந்தை ஆரத் தழுவி சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சரித்திரத்தில் இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த படம் எடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றாராம்.
நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பை. அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டியிருந்தன. குறிப்பாக துக்ளக் இதழ் அவரது நடிப்பை பற்றி விவரித்து விட்டு சிவாஜியின் கால் நகத்தின் நடிப்புக்கு கூட யாரும் ஈடாக முடியாது என்று எழுதியிருந்தது. ஆனந்த விகடன் இதழும் வெகுவாக பாராட்டியது. குறிப்பாக நீங்கள் பதிவு செய்திருக்கும் எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுதான் இனிமேல் கிருஷ்ண ஜெயந்தி பாடலாக ஒலிக்கப் போகிறது என்றும் சொல்லியிருந்தார்கள். கவிஞர் வாலி நமது சொந்தப் படத்திற்கு முதன் முறையாக பாடல் எழுதியதும் இந்த வா கண்ணா வா படத்திற்குதான் [என நினைக்கிறேன்].
இந்த படம் வெளியானபோது அதற்கு முன்பே மதுரையிலிருந்து கிளம்பி விட்ட நான் பத்திரிக்கை விமர்சனங்களை படித்துவிட்டு நான் இருந்த இடத்திலிருந்து 70 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த படத்தை போய் பார்த்தேன். நான் இருந்த ஊருக்கு படம் வந்தபோதும் இரண்டு மூன்று முறை பார்த்தேன். கொஞ்சம் ஆந்திர வாடையை குறைத்திருந்தால் மக்களால் படத்தோடு மேலும் ஒன்றியிருக்க முடியும் என்பது என் எண்ணம். நல்ல பாடல் தந்ததற்கு நன்றி.
பொட்டு வைத்த முகமோ பாடல் பற்றி நான் என்ன சொல்ல? சொல்வதற்கு ஒன்றுமே பாக்கியில்லாமல் நீங்கள் எல்லாம் எழுதி விட்டீர்கள். மற்றவர்களும் எழுதி விட்டனர். சுமதி என் சுந்தரி பற்றி முன்பே நிறைய எழுதியிருக்கிறேன் மீண்டும் அதை எழுதினால் போரடிக்கும்.
ஆனால் இந்தப் படத்தின் இளமை quotient எந்த காலத்திலும் சிலிர்ப்பை தருவதோடு நீங்கள் குறிப்பிட்ட அந்த பின்னணி ஹம்மிங் மனதுக்குள் மழையாக பெய்து இறங்கும். சென்ற மாதம் நமது NT FAnS அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மெல்லிசை மன்னருக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் எம்எஸ்வி அவர்களின் பின்னணி இசையின் மாற்றை எடுத்துக் காட்டும் ஒரு உதாரணமாக சுமதி என் சுந்தரி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை திரையிட்டோம். மீண்டும் பெரிய திரையில் தியேட்டர் effect-ல் காட்சி விரிந்தபோது அந்த ஹம்மிங் கொடுத்த சந்தோஷமே அலாதி.
நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு பெருமைப்பட்டுக் கொள்வது போல இந்தப் படத்திற்கும் நாங்கள் மதுரைக்காரர்கள் பெருமை கொள்வோம். காரணம் படம் அதிகபட்ச நாட்கள் ஓடியது மதுரை அலங்காரிலும்தான். சென்னை சித்ராவிலும் அதே நாட்கள் [12-வது வாரம் முழுமையடையாமல்] என்று ராகவேந்தர் சார் சொல்வார். [கார்த்திக் இருந்திருந்தால் அவரும் சொல்லியிருப்பார்]. ஆனால் மதுரையின் பெருமை அதோடு முடியவில்லை. அதே நாள் வெளியான பிராப்தம் அதிகபட்ச நாட்களை கடந்ததும் எங்கள் மதுரை சென்ட்ரலில்தான்[10 வாரம் முழுமை பெறாமல்].
பல விஷயங்களை பேச வாய்ப்பளித்த உங்கள் பதிவிற்கு மீண்டும் நன்றி வாசு! .
அன்புடன்
வாசு, நேற்று இரவே இதை எழுதி முடித்து பதிவிட நினைத்தேன். சட்டென்று ஒரு செய்தி வந்தது. சன் லைஃப் சானலில் சுந்தரும் உமாவும் சாந்தியும் லைவ் ஆக வந்திருக்கின்றனர் என்று. அதன் பிறகு அவர்களை பார்க்காமல் இருக்க முடியுமா? அதனால் நேற்றிரவு பதிவு மிஸ் ஆகி இன்று செய்திருக்கிறேன்
நன்றி முரளி சார்.
மறக்க முடியுமா? 'கட்டபொம்மன்' பார்க்கையில் கூட 'மலர்கள்' பற்றித்தான் பேசினோம். அன்பே பிரதானமாகக் கொண்ட மனித வடிவ தெய்வங்கள் அல்லவோ சுந்தரும் உமாவும் சாந்தியும்.
http://thiruttudvd.net/wp-content/up...argal00004.jpghttp://thiruttudvd.net/wp-content/up...argal00002.jpg
http://thiruttudvd.net/wp-content/up...argal00005.jpghttp://thiruttudvd.net/wp-content/up...argal00006.jpg
காதல் மட்டும்தான்.. எச்சிலை
முத்தமாக்குகிறது.
காதல் மட்டும்தான்.. நடக்கும்
போதே பறக்கிற பிரமையைத்
தருகிறது.
நம் காதலுக்குரிய நடிகர் திலகத்தின் எண்ணற்ற காதல் பாடல்களில்., எனக்கு மிகவும்
பிடித்த பாடல்களில் ஒன்று-
இந்தப் பாடல்.
அந்த மென்மையிலும், மென்மையான புன்னகை ஒன்றை மட்டும் வைத்தே
உறுதியாகச் சொல்லலாம்..நம்
நடிகர் திலகம்.."ரோஜாவின்
ராஜா"தானென்று.
கனவுப் பாடலிது.
கனவுகள்,இங்கிதமில்லாதவை.
எப்போதும் கண்ணியமாகவே இருக்கக் கூடிய உத்தரவாதம்
இல்லாதவை. ஒழுக்கம் உணர்த்த வேண்டிய உலக நிர்ப்பந்தங்களுக்காக ஒளித்து
வைத்திருந்த அடி மனசின்
அழுக்கு எண்ணங்களையும் அதிரடியாய் வெளிப்படுத்த
வல்லவை.
ஆனால்,இந்தப் பாடல் போல
கனவு வந்தால்..அது வரம்
நமக்கு.
பள்ளிக் குழந்தைகளை ஏதேனும் நல்ல காரியத்துக்காக
ஊர்வலமாய் அழைத்துப் போவார்களே..!? அந்த ஊர்வலக் குழந்தைகளின் ஒழுங்கில் காணும் அழகை..
நடிகர் திலகத்தின் பாவனைகளில் காணலாம்.
கனவுதானே என்று சும்மா பிதற்றாமல் பாடலுக்குள் ஒரு
கவித்துவம் புகுத்தியிருக்கிறார்கள் ..பாடலோடு சம்மந்தப்பட்ட
எல்லோரும்.
சில நிமிடங்களில் பாடல் முழுவதுமாய் முடிந்த பிறகு..
மனசு பாடத் துவங்குமே..
அது..
பாமர ரசிகன், மெல்லிசை மன்னருக்குச் செலுத்தும்
ரகசிய அஞ்சலி.
https://youtu.be/lORp7dvVNsg
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
http://i58.tinypic.com/155t4xf.jpg
இல்லாமை தீர்ந்ததென்ற
இணையற்ற சந்தோஷம்,
இசை வடிவமாயிற்று.
தியாகம்-
அதன் ஆதார ராகம்.
பசி தீர்ந்த, பசி தீர்த்த
மன நிறைவே பாடல் வரி.
பாராட்டி ஒலிக்கின்ற
கரவொலியே அதன் தாளம்.
இனிதான திருநாளில்
எல்லோர்க்கும்
இசையோடு
வாழ்த்துரைப்போம்.
https://youtu.be/27nZJEdKEvw