-
இன்று (30/05/2016) பிற்பகல் 2 ,மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தொழிலாளி " திரைப்படம் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/13zu1kl.jpg
-
THE HINDU - CINIMA PLUS-29/05/2016
http://i65.tinypic.com/1550ymh.jpg
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் -
திட்டப்படி, சென்னை கோடம்பாக்கம் பகுதியில் அமையப்பெற்ற எம். எம். பிரிவியூ அரங்கில், நேற்று (29-05-16 - ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் சரியாக 3.00 மணிக்கு துவங்கிய. மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றிக்காவியம் "நாடோடி மன்னன்" மாலை 6.40 மணி வரை, துல்லியமாக ஒளிபரப்பப்பட்டது.
http://i65.tinypic.com/dxbp69.jpg http://i66.tinypic.com/iwown9.jpg
160 இருக்கைகள் கொண்ட எம். எம். பிரிவியூ அரங்கம், மக்கள் திலகத்தின் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. சுமார் 200 பேர் வரை காவியத்தை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்ததுதான்.
இந்த நிகழ்ச்சியின் 15 நிமிடம் இடைவேளையில், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள் :
1. பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழாவினையொட்டி, வரும் 17-01-2017 அன்று முதல் இயங்கவிருக்கும் " பொன்மனம் பண்பலை வரிசை " யின் காரணகர்த்தாவும், புரட்ச்சித்தலைவர் காலத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்த்தின் வடசென்னை மாவட்ட மாணவர் அணி நிர்வாகியும், தொழிலதிபருமான திரு. ஆர். எம். சிவக்குமார் அவர்கள்,
2. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றிய போது, அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழுவில் இடம் பெற்ற மருத்துவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
3. "இதயக்கனி" மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்கள்,
4. "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை ஆசிரியர் மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர். நற்பணி சங்க நிர்வாகி திரு. பி. எஸ். ராஜு அவர்கள்,
5. " தர்மம் தலை காக்கும்" இதழ் ஆசிரியர் திரு. மின்னல் பிரியன் அவர்கள்
6. கலைவேந்தன் எம்.ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு. கே.ஈ. பாஸ்கரன் மற்றும் சிவபெருமாள் அவர்கள்,
7. மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற நிர்வாகி திரு. தேவ சகாயம் அவர்கள்,
8. ஆயிரத்தில் ஒருவன் - இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி திரு. பாண்டியராஜன்
ஆகியோர், பொன்னாடை அணிவிக்கப்பட்டு,. சிறப்பிக்கப்பட்டனர்.
மேலும், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும், சுவையான இனிப்பு, காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தலைவர் திரு. எம். தம்பாச்சாரி அவர்கள், துணைத் தலைவர் திரு. எஸ். எம். மனோகரன், செயலாளர் பேராசிரியர் சௌ. செல்வகுமார், இணை செயலாளர் திரு. சந்திரசேகரன், சங்கப்பொருளாளர் திரு. கே. பாபு, மற்றும் காப்பாளர் திரு. ஏ. ஹயாத், உறுப்பினர்கள் சுரேந்திரன், ஏ.ஆர். ஹுசைன், கே. குபேந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த சென்னை மாவட்ட அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், அரங்கம் அளித்து உதவிய நிர்வாகத்தினருக்கும், சங்கத்துணைத்தலைவர் திரு. எஸ். எம். மனோகரன் அவர்கள் நன்றி கூறியபின், இந்த குடும்ப விழா இனிதே மாலை சுமார் 6.50 மணி அளவில் நிறைவு பெற்றது.
தெய்வதின் புகழ் பரவட்டும். நன்றி
-
-