வாசு சார்,
சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சித்தாலும் வார்த்தைகள் நமக்கு கை கொடுக்காத சூழல் நிலவும். அப்படிப்பட்ட ஒரு சூழல், உணர்வு, உங்கள் 1995 மார்ச் மாதம் கொடைக்கானல் அனுபவத்தைப் பற்றி படித்ததும் தோன்றியது. அபிமான நடிகன், ரசிகன் என்பதை தாண்டி, அபிமான் நடிகன் நடித்த படங்களில் மிகப் பிடித்த படம் என்பதை தாண்டி ஞான ஒளி உங்கள் உள்ளத்தை ஊடுருவி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தப் படம் திரையரங்கில் வந்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லையேல் உங்களுக்காக நமது NT FAnS அமைப்பின் சார்பாக நிச்சயம் திரையிட்டு விடுவோம். வந்து விடுங்கள்.
அன்புடன்