Venki! Okkandhu ezhudhuradhukku time illa! But I will surely do that
Printable View
Venki! Okkandhu ezhudhuradhukku time illa! But I will surely do that
இன்று மாலை மீண்டும் ஆரம்பம்!
Quote:
Originally Posted by VENKIRAJA
:bluejump:
venkat...
waiting... :yes:
356
365 நாட்கள் ஒரு வருடத்திற்கு,இல்லையா?இங்கே வந்து சரியாக 356 நாட்கள் உருண்டோடிவிட்டன. 8-) நீங்கள் தந்த ஆதரவு இன்றென்னை ஒரு தனி வலைப்பூ தொடங்குமளவு நம்பிக்கை தந்திருக்கிறது. :D என் வாழ்வின் மிக முக்கிய நாட்கள் இவை. :P என் அனுபவங்களினூடே என்னையே அடையாளம் காட்டும் எழுத்துலகின் விசித்திரப் பிரயோகங்களினை கூர்ந்த்து அவதானித்த பருவம் இது.
"குட்டையில்
சிறுநீர் கழிக்கும் சிறுவன்
வானத்தை அசைக்கிறான்"
-வீ.இராஜசேகரன்,சேலம்(கணையாழியின் கடைசி பக்கத்தில் சுஜாதா தேர்ந்தெடுத்த ஹைக்கூ)
சில நேரங்களில் நினைவுகள் அப்படித்தான் வளையலாக பல நினைவுகளை தட்டி நெம்பி விடும்.என் பள்ளிவாழ்வின் கடையாண்டில் பிரிவின் துயரம் புலப்பட்டது.விரியப்போகும் வானைப் பற்ற புதிய பீலிகள் இதோ முளைத்துக்கொண்டே இருக்கின்றன.என் அடிப்படை பேச்சுத்திறனும்,விவாதம் செய்யும் மனப்பான்மையும்,நல்ல நண்பர்கள் வட்டத்தையும் இங்கே அளித்தமைக்கு நன்றி.இலக்கியப் பூர்வமாகவும்,உளவியல் பூர்வமாகவும் என்னுள் பிரளயங்கள் வெடித்த தருணங்கள் இவை.குறிப்பாக அரை நிஜாரும்,ஹூக் மாட்டிய கைக்குட்டையுமாய் நான் பழகிய மனிதர்களை நீங்கும் அவரோகணம்.சென்ற ஆண்டின் தொடக்கம் முதலே(எங்களுக்கு மார்ச் மாதமே பாடங்கள் தொடங்கிவிட்டன)படிப்பில் கவனம் செலுத்தும் முனைப்பில் இருந்தேன்.resolutionகளை உடைப்பது நமக்கென்ன புதிதா?அப்படி கோட்பாடுகளை காற்றில் விட்டேன்,இன்பமாக பொழுதுகள் கழிந்தன.தேர்வுகள் வரும் வேளை விழித்த தீர்மானங்கள் நல்லவேளை கைகொடுத்தன.தேர்வுகள் இனிதே முடிந்தன.இடையில் தானே விவகாரம்!
என் பள்ளி நாட்களை சத்தியமாக மறக்க முடியாது.சென்ற ஆண்டின் ஆரம்பமே பாதசாரிப்புதான்.பள்ளியில் பாண்டிச்சேரிக்கு அழைத்துச்சென்றார்கள்.அரவிந்தர் ஆசிரமத்தின் கவ்விய அமைதியை ருசித்தோம்.கடற்கரையில் கண்களால் கால்நனைத்தோம்.ஹயக்ரீவர் கோயில் சென்று வந்தோம்.ஜோக்கடித்தோம்,ஆட்டம் போட்டோம்.சவுக்குத்தோப்பிலும்,பம்பு செட்டிலும் படம் பிடித்தோம்.வரும் வழியெல்லாம் கூச்சல் போட்டோம்.நொறுக்குத்தீனி அரைத்தோம்.ஒருவன் மேல் ஒருவன் தூங்கி வழிந்தோம்.எங்கள் ஆசிரியைகள் ஜன்னல் வெளியே தலைநீட்டி குறட்டை விட்டதை படம் பிடித்தோம்.சகா ஒருவனின் பிறந்தநாளைக் கொண்டாடினோம்.இரவெல்லாம் கனவில் தொடர்ந்து பயணித்தோம்.
தேர்வுகளில் நக்கலாய் எழுதுவது பழக்கமாகிவிட்ட்டது.
$ Q: If you were the U.S president would you drop the bomb on hiroshima?give reasons.
A:No,i wouldn't have.The reasons are highly confidential,military secrecy. $
நான் கணிதத்தில் புளி,கரைந்தே விடுவேன்.இயற்பியலும் சொல்லிக்கொள்ளுவதைப்போல் இல்லை.ஆனால் வேதியியலிலும்,உயிரியலிலும் கெட்டி.ஏதோ தொண்ணூறு சதவிகிதம் வந்தால் புண்ணியம்.இந்நிலையில் நான் வருடம் முழுதும் என்ன செய்திருப்பேன் என்பது உங்களுக்கு புலப்பட்டிருக்கலாம்.அரட்டையும்,கேலியும் தான்.
(தொடரும்)
வென்கி...
குட்டை நீரில் வானத்தை அசைக்கும் சிறுவனுக்கு
ராமன் எஃபெக்ட் பற்றித் தெரியாவிட்டால்தான் என்ன ?
பாதசாரிப்பு தொடரட்டும்... வலைப்பூவைப் பார்வையிட
வருகிறோம்..
:)
நான் எழுதுவதாக சொல்லியிருந்த மாலைக்கு காமலை பிடித்து கெட்டது.இன்று அனுப்புகிறேன் தூது வருகிறதா பார்க்கலாம்.
பாதசாரி புதிய அத்தியாயம்.
இதுவரை சிறுவனாக இருந்தவன் இன்று இளைஞனாயிருக்கிறேன்.
"பைக் ஓட்டிய போது
செய்த தவறுகள்
புரியத்துவங்கின
கார் ஒட்டிய போது"
(கில்லி.காம்:மின்மினி:XAVIER)
இந்நிலையில் இந்தப் பருவத்தின் கவர்ச்சிகளில் ஈர்ர்ப்புத்தன்மை இருந்தாலும்,இசை இப்போதெல்லாம் ரொம்ப அற்புதமாக கேட்பதை சொல்லியே ஆகவேண்டும்.
இந்த ஆண்டு நிரலான என் பிறந்தநாளுக்கு நண்பன் மனோஜ் ஒரு ரேடியோ பரிசளித்தான்.வெறும் ஆள்காட்டி விரலளவு மட்டுமே இருந்த அந்த இயந்திரத்தை விடுமுறையில் இப்போது நுழைவுத்தேர்வுக்கு வகுப்புகள் செல்லும் நான் அதன் தாத்பரியத்தினை அறிகிறேன்.ரயிலில் தான் பாதி பயணம்.அந்த கணங்களில் காகிதமும்,தூரிகையும் ஈனைவதைப் போல் ரயிலின் ராகமும்,வானொலியின் பாவமும் புணர்ந்து சாஸ்வதமான் உருகவைக்கும் இசையை சமைத்தன.இணையாமல் நீண்டுகொண்டே செல்லும் ரயிலின் தண்டவாளங்கள் கானல் நீரின் திட வடிவமோ என்று எண்ணவைத்தது.பக்கத்தில் சிதறுண்ட கருங்கற்கள் வெயிலின் உக்கிரத்தைனை ரயில் வந்து சாமரம் வீசும் போது குளிர்ச்சியில் உறைந்தே போகிறது.புரோட்டா மாஸ்டரின் பதத்தில் வண்டியின் சக்கரங்களை உராய்வதை 180 டிகிரியில் பார்ப்பது குழந்தையின் சிரிப்பை நினைவூட்டுகிறது.ஓரத்தில் பயணிக்கையில் தாழ்தளத்து வீடுகள்,வட்டமிடும் கழுகுகள்,சிக்னல்கள் எல்லாம் ஒரப்பார்வையில்.இருக்கிற அரையடி கூந்தலும் காற்றில் பரத்முத்திரைகள் குவித்தபடி.துணைக்கு காலடி பெல் பாட்டம் படபட மத்தளம்.விதவித முகங்களும்,விதவித சம்பாஷணைகளும்,விதவித அலைபேசிகளும் சற்று நேரம் நங்கநல்லுர் ஆஞ்சனேயராய் என்னை மாற்றியது - அவருக்கு சஞ்சீவி மலை,எனக்கு தாமஸ் மலை.கல்வி என்ற நோக்கில் செல்லும் என் பாதை பூத்துக் குலுங்குகிறது பயணத்தின் பவழக்கிழமைகளாய்.
காற்றில் எந்தன் கீதம் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்க,கிண்டி வந்துவிட்டது.இறங்கி நடக்கையில் பனிவிழும் மலர்வனத்தில் பேருந்திற்காக காத்திருக்கிறேன்.வளையோசை கலகலகலகலவென ஒலிக்க அழகான பெண்களை கொஞ்சம் விழிகளால் கவிதை எழுதி கவிழ்க்கப் பார்க்கிறேன்.ஒன்று போனால் ஒன் மோர் உள்ளதடா என நகர்கையில் ஷேர் ஆட்டோ வருகிறது.இசையின் முதல் துளி தோட்டாவாய்த் துளைத்து காதில் தெறிக்கையில்,முதல் சொட்டுத் தேனின் சுவை.இசை அதன் ருசியை உடலெங்கும் பரவசமாக இலவசமாக பரவவிட நினைத்து நினைத்து பார்த்தேன் நான் பார்த்ததிலேயே அழகான பெண்ணை.கண்கள் தானாக மூட என்னதான் பாகவதன் இல்லையென்றாலும்,சங்கதிகளை ரசிக்கத்தெரிந்த செவித்தசைகள் உருவை உள்ளே செலுத்தியது.அலைகளை கட்டியிழுத்து என் காதில் கிடத்த செம்பூவின் வாசம்,பின் வசந்தகாலம்.மண்ணில் பெண்ணுக்கு நிகரான இன்பன் இசையெ.காற்றின் சுவாசம் கானம்.வயலினும்,சித்தாரும்,பியானோவும்,நாதஸ்வரமும்,ப ேம்பினோவும் அந்த ஒற்றைக்கருவியின் மோகனம் பரப்புகிறது.கருப்பு வெள்லைப் பூகளும்,சர்க்கரை நிலவும்,சஹாரா சாரலும்,ஒரு மாலை இளவெயிலும் ஒன்றன்பின் ஒன்றாக மோத,முன் வந்த கடன்காரனின் அலட்சியத்தால் ஆட்டோ ஓட்டுனர் போட்ட ப்ரேக் நிறுத்த ரேடியோ கழன்று விழ,அலைகள் அத்தனையும் காற்றில் கசிய,கொஞ்ச நேரத்தில் தென்றல் வரும் வழியெல்லாம் நனைந்துவிட்டன.நின்ற அலைகள் பெருகப்பெருக இசை தீபிடிக்க தீப்பிடிக்க புதுக்கவி வாசித்தது.காற்றெல்லாம் அதிர,பட்டினப்பிரவேசத்தில் கட்டிக்காப்பத்திய இசை காதிலிருந்தும்,வாயிலிருந்தும் மௌனத்தை விவாகரத்து செய்து கோப மொழியாய் தூவின.மீண்டும் அலைகளையெல்லாம் அணைகட்டி இழுத்துவருவதற்குள் வீடுவந்துவிட்டது.நடுவில் கொலை செய்த தொகுப்பாளினிகளை துறந்தபடி அடுத்த ரேடியோ ஊரைப் பார்க்க மந்திரக்கம்பளம் விரிப்பது உத்தமம்.இசை காதருகே திருக வனப்பாய் பயணத்தை இசையோடு களித்தேன்.வழிதடங்களிலெல்லாம் பாதச்சுவடுக்கு பதில் இசைக்குறிகள்.
nice .......... :)
btw un b.day eppo?
the last day of the first month of the last decade of the past century of the second millenium,
simply guessable......
ரணத்தடச்சுவடு.
"ஃநெர்ட்யுஇஒபச்ட்fக்ஹ்ஜ்க்ல்ழ்xச்வ்ப்ன்ம்
- ஒன்றும் புரியவில்லையா?qwertyuiopasdfghjklzxcvbnm:கீபோர்டின ் வரிசையை தமிழில் அடித்தால் இப்படித்தான் இருக்கும்."
அவ்வப்போது இப்படி ஈ-மெயில்கள் generate செய்வதுண்டு,அளவுக்கதிகமாக வெட்டியாக இருக்கையில்.
ஆரம்பித்த இடத்திலிருந்து மீண்டும் தொடங்கவேண்டியிருக்கிறது.
பள்ளிவாழ்வின் கடைசி ஆண்டு முடிந்த பொழுது மீண்டும் ஒருமுறை 1st standard class-u எந்த பக்கம் அண்ணா? என்று கேட்டதும்,அன்று மதியம் அம்மா ஊட்டிவிட்ட தேங்காய்சாதத்தின் ருசியும் அடிநாவில்.எதைப் பார்த்தாலும் ஒரு மிரட்சியும்,காரணமற்ற வெறுப்பும் சூழ்கிறது.என்ன என விளங்காத விந்தையும்,தினம் தினம் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் பரதேசி வாழ்க்கையும் அலுப்பு தட்டுகிறது.நண்பர்களின் முகங்களும் இறுக்கமும்,பிரிவின் வலியையும் சுமந்தபடி கானல்நீரின் தித்திப்பை பருகவைக்கிறது.நுழைவுத்தேர்வுகளின் பளு வேறு திசையில் இழுக்கிறது.வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் வெறுமை கனக்கிறது.ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சொற்கள் நாவிலிருந்து குதிக்கிறது.இந்திய கிரிக்கெட் அணி எரிகிற கொள்ளியில் நெய் ஊறுகிறது.சிவாஜியின் சுமாரான பாடல்கள் திரைப்படங்களின் மேல் வெறுப்பை ஏற்படுத்துகிறது.நாள்காட்டியின் தாள்கள் வேலையே செய்யாமல் சாகின்றது.இந்தத் தருணத்தில் ஒரு நாள்.....
கிளம்புவது என முடிவு செய்து வீட்டினருக்கு சொல்லிக்கொண்டு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.மனோஜ் வீட்டிற்கு சுமார் 6 கீ.மி சைக்கிளை மிதித்து சென்றேன்.அவனும் வர,வண்டியை எடுத்துக்கொண்டு பாலா வீட்டிற்கு சென்றோம்.கொஞ்ச நேரம் கண்ணீரை அடக்கிக்கொண்டு,சந்தோஷ கணங்களை நினைவுகூர்ந்தபடி மௌனங்கள் உடைத்து புதிய செல்போன்களைப் பற்றி பேசிக்கொண்டு,எண்களையும் குறித்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.கொஞ்சம் கொஞ்சமாக மனதில் ஒரு மாதம் வாடகையின்றி தங்கியிருந்த சாத்தானை சாமன்களோடு வெளியேற்றினேன்.வீட்டினுள் அமர்ந்து ஊரே கேட்கிறபடி இசையை அலறவிட்டு வெறிபிடித்தாற் போல கேட்டுக்கொண்டும்,பாடிக்கொண்டும்...பாலா வீட்டில் மதியம் 2 மணி வாக்கில் கிரிக்கெட் விளையாடினோம்.நெகிழ்ச்சியான தருணங்களை,நாங்க்லள் அடிக்க முயன்ற ஓணானை,நகைச்சுவையை செல்போனுக்குள் அடைத்தோம்.அங்கிருந்து கிளம்பி மதிய உணவை இளையராஜா துணையுடன் முடித்துவுட்டு ராமநாதனுக்கு தொலைபேசியில் விவரம் தெரிவித்துவிட்டு நாகராஜ் வீட்டிற்கு சென்றோம்.அங்கு எல்லா நண்பர்களையும் வரச்சொல்லிவிட்டு,அனைவருடனும் மனம்விட்டுப் பேசி சிரித்து நொறுக்குத்தீனி உண்டு,மைதானத்திற்கு கிளம்பினோம்.அங்கு ராமநாதன் வந்து செர்ந்தான்.அனைவரும் கடைசி பள்ளி தினத்தன்று எஉத்த வீடியோக்களைபோட்டு பார்த்தோம்.நண்பர்கள் சில நகைச்சுவையான விசயங்களை விவாதித்தது,விளையாடியது,வகுப்புகள் கட் அடித்தது,விவகாரங்கள் ஆனது,நாடகம் பொட்டது,கவிதை எழுதியது,ஊர் சுற்றியது,பிரியாணி தின்றது,கும்மாளம் அடித்தௌ,சுற்றுலா சென்றது,அழகிகள் ரசித்தது,திட்டு வாங்கியது எல்லாம் எல்லாம்.எங்கள் ஆசிரியைகள் சிலர் போல நண்பர்கள் நடித்து காட்ட,கிரிக்கெட் விளையாடுகயில் சிலர் பல்பு வாங்க என அத்தனை அட்டகாசத்திற்குப் பிறகு கௌஷிக் வீட்டிற்கு சென்றோம்.அவனோடு கொஞ்சம் பேசிவிட்டு,பிரசன்னாவோடு அவன் வீட்டு மொட்டைமாடியில்,கடைசி பெஞ்சில் அமர்ந்து செய்த ரகளைகளைப் பற்றி அசைபோட்டு நான் வீட்டிற்கு வந்து,எல்லோரும் ஒரு கான்பரன்ஸ் கால் பேசினோம்.மறுநாள் எல்லோரும் கடற்கரை போகலாம் என்று முடிவு செய்து பிரிந்தோம்.என் வீட்டிற்கு கொஞ்சம் பேர் வந்தனர்.தொலைக்காட்சியும்,சினிமாவும் அளவளாவிவிட்டு அரட்டைகளை முடித்துக்கொண்டு சாப்பிட்டோம்.மனோஜ் வீட்டில்ருந்து பத்து பேர் கடற்கரைக்கு சென்று மாலையெல்லாம் விளையாடிவிட்டு,கடலில் நீராடி பேருந்தில் பேசிக்கொண்டெ வந்தோம்.அத்தனை துயரமும் கடலில் கலந்த களிமண்ணாய் விலக மீண்டும் என் வானில் சூரிய ஒளி.மகிழ்ச்சியோடு மீண்டும் மலர்ந்த முகத்துடன் உலவ ஆரம்பித்தேன்.பழயபடி எல்லாம் சமநிலைக்கு வர,இப்போதெல்லாம் தினம் எங்காவதொரு தெருமுனையில் சைக்கிள்களில் பேசிக்கொண்டு பொழுதுகள் சர்க்கரையாகப் பூக்கின்றன.
பாதசாரி-மீண்டும் ஒரு முன்னுரை.
எழுத்து தவம் தான்.எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கமுடிவதில்லை.ஆனால் தொடங்கிவிடின் முடிக்கவும் முடிவதில்லை.கொஞ்ச நாட்களாக எழுதவில்லை. ஜெயகாந்தன் சொன்னது போல,ஒரு எழுத்தாளனுக்கு எழுதாமலும் இருக்கத் தெரிய வேண்டும்.எழுத்து என்பது எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை வரலாறு தடவி சொல்வது எல்லாம் இந்த முன்னுரையின் நோக்கம் அல்ல.என்னைப் பொறுத்த வரை எழுத்து தீராத அமுதம்.தாகத்தை தீர்க்காத சுவைமிகுந்த தேவாமிர்தம்.அதை பருகுபவன் எழுதுபவன் மட்டுமல்ல,படிப்பவனும் தான்.இதையே உலகத்தை புரட்டும் நெம்புகோலாகவோ,பெண்களின் மீது வீசும் கணையாகவோ,பணம் சம்பாதிக்கும் கருவியாகவோ மாற்ற எனக்கு உத்தேசமே இல்லை.என் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி,என் மனதை பாதித்தவற்றை,அனுபவங்கள் என்று நான் ஈட்டி வைத்திருக்கும் செல்வத்தை எழுத்தாய் பதிவு செய்து,என்னுடைய மேதமையை,மொழியின் மீதிருக்கும் ஆளுமையை மட்டுமே பிரதிபலிக்கும் ஒன்றாகவே எழுத்து எனக்கு படுகிறது.அமைதியான ஆழ்கடலின் அதிர்வு அலைகளை உருவாக்கி நுரையாய்க் கரையில் கரைவது போல,மனதில் ஊறும் எண்ணங்களின் வெளிப்பாடு எழுத்துகளாகி அவை காட்சிகளாய்ப் பெருகி,மெல்ல மனதில் கரைந்துவிடுகின்றன.எனக்கு அழகானதாகப்பட்டதை உங்களுக்குக் காட்ட எனக்குக் கிடைத்த வாகனம் தான் எழுத்து.இலக்கியத்தின் ஒட்டுமொத்த நோக்கமும் அதுதான்.பிராமணன்-பாமரன்,வசதியானவன-வட்டியானவன் என்று பேதமின்றி அனைவருக்குமான ஊடகத்தில் அந்த கருத்து மின்னூட்டப்படுகிறது.ஒவ்வொருவரையும் அந்த கருத்து சென்றடையும் அளவு மாத்திரம்,அவரவரின் அனுபவம் சார்ந்து வேறுபடுகிறது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளாய் படும் கவிதையின் மாயம் சொல்லி மாளாது.வாசிப்பில் புரியாமல்,திடீரென்று நடுநிசியில்,அதீத சோகத்தில் எல்லாம் புலப்படும் கவிதைகளும் உள்ளன.பயணம் என்று நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பில் இருந்து அவ்வப்போது விலகினாலும்,பயணத்தின் அவதானிப்புகளையும்,இடங்களை தேதி-நேர-நட்சத்திரங்களின்றி என் பார்வையில் சிறைபிடித்து அனுபவங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.முன்பே கூறியதைப் போல பயணக்கட்டுரைகள்,கட்டு(ப்பாடுகளுடைய உ)ரை எனப்பட்ட பழைய நீண்ட நெடிய வாசகங்களும் வாசகங்களும் உபதேசங்களும் மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்ற உயிரற்ற பத்திகளாக மட்டுமே இருந்து வந்தன,இன்றும் இருக்கின்றன.அவற்றின் மேல் உண்டான சலிப்பு இதனை இயற்ற வைத்தது.புதிதாக,எளிதாக,சுருக்கமாக நான் கையாண்ட நடை எனக்கு திருப்தி அளித்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் எழுதியவையும் இந்த சாளரத்தில் பயணிப்பவை என்று எண்ணுகிறேன்.ஒரு சிறுவனின் வாழ்க்கையை பாதித்த நிகழ்ச்சிகள் உங்கள் பால்யத்தையும் நினைவு கூர்ந்திருப்பின்,மிக்க மகிழ்ச்சி.இனி தொடரப்போவது ஒரு இளைஞன்.இனியும் நீங்கள் அளித்துவந்த ஆதரவைத் தொடர விழைகிறேன்.
பாதசாரிப்பும் பூரிப்பும் கொண்ட,
இரா.கு.வெங்கடேஷ்.
hayya padichutten 8-)
இம்மூன்றில் இரண்டையாவது சாதிக்க உங்கள் எழுத்து உதவும் என்பது உங்கள் திறமையைப் பற்றி எனது மதிப்பீடு. அந்த குறிக்கோள்களை சிறிதாக எண்ண வேண்டாம் :-) தொடர் தொடர வாழ்த்துக்கள்Quote:
Originally Posted by VENKIRAJA
புதிய அத்தியாயம்-I
இரவலன்.
கரையைக் கடக்கும் நீச்சல்காரனுக்கு கரைகளும் சொந்தமில்லை,வழித்தள நீர்நுரைகளும் சொந்தமில்லை,அவன் கரைகடந்த பாதசாரிப்பு மட்டும் தான் சொந்தம்.நடந்து நடந்து ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு இன்று அகிலமெல்லாம் சொந்தம் கொண்டாடும் குரங்கினத்தின் கையிருப்பும்,அவனது சக உயிரினங்களைக் காட்டிலும் நடந்து வந்து பட்டறிவிலும் பாட்டறிவிலும் தேர்ந்து அவைகளை எஜமானிக்க வல்லவனாக்கிய பயணம் தான்.பிச்சைக்காரனுக்கும் பாட்டுக்காரனுக்கும் இன்னொரு பெயருண்டு:இரவலர்கள்.நான் இரண்டிலும் அரைகுறை.
நான் நாணயங்கள் சேகரிப்பவன்.கூடவே அஞ்சல் தலைகளும்.வீட்டிற்கு வந்து பொருட்களை விநியோகம் செய்யும் நபர்களின் சில்லறைகலை எல்லாம் ஆராய்ந்து அதில் பழைய நாணயங்களை,தினங்கள் இயக்கங்கள் துறைகள் எல்லாவற்றுக்கும் கௌரவம் செய்ய அச்சிடப்பட்ட நாணயங்களை அவர்களிடமிருந்து பண்டமாற்று செய்து தான் என் சேகரிப்பைத் தொடங்கினேன்.அதை வைத்துக்கொண்டு என் நண்பர்களிடமிருந்து விரிகுடா நாடுகளின் நாணயங்களையும்,மலேசியா சிங்கப்பூர் நாணயங்களையும் வாங்கினேன்.இப்படியாக வளர்ந்த என்கையிருப்பு,எனது மாமாக்கள்,தந்தை,தாத்தா இவர்களால் பல்கிப் பெருகியது.ஒருநாள் நாணய்ங்கள் விற்பதாகக் கேள்விப்பட்டு சென்ட்ரலுக்கு விரைந்தேன்.ரயிலடிக்கு அருகிலிருந்த மூர் மார்க்கெட்டில் தான் எனக்குத் தேவையான நானயங்கள் இருப்பதாக தோழன் சொன்னான்.அவனையும் கையோடு அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.அப்போது தான் நான் நகரத்தின் மையத்திற்கு முதன் முறையாக வந்திருந்தேன்.இதுவரை நகரத்தின் விளிம்பிலேயே இருந்துவிட்டு,அளாவிய மக்கட்திரளைப் பார்ப்பது வியப்பாக இருந்தது.அவர்களின் வியர்வையும்,கடின உழைப்பும் வியப்பளித்தது.மறுபுறம் சொகுசான இளைஞர்களின் பகட்டும் அலட்சியமும் தெரிந்தது.இடையில் நான்.ஒரே தளத்தில் இருவேரு விதமான வாழ்க்கைமுறைகளை கையாளும் விசித்திர உலகில் நான் எந்த பக்கம் என்று தெரியாமல் மூர் மார்க்கெட்டினுள் நுழைந்தேன்.வழக்கம் போல இங்கும் போலிகள் தான்.அயல்நாட்டு முத்திரைகளைக் குத்தி இவர்களாக அச்சிட்ட பணம்.100 வருடத்திர்கு முந்தை நாணயத்தின் பளபளப்பு என் கண்களைக் கூசச் செய்தது.விலையும் அப்படித்தான்.ஆப்பிரிக்க டாலர்களுக்கு அமெரிக்க டாலர்கள் விலை.சரியென்ரு யோசித்து ஹார்பருக்கு புறப்பட்டோம்.அருகில் ராயப்பேட்டையில் இருக்கும் ஓர் கடையில் நாணயங்கள் மாற்றிக்கொள்ளப்படும் என்றிருந்த விளம்பரத்தை நம்பி.அவனோ எங்க்ளிடமிருந்த நானயங்களுக்கு இந்தியப் பணம் தருவோம் என்று கடுப்பேற்றிவிட்டு கிளப்பிவிட்டான்.அங்கிருந்து விமான நிலையம் வந்தோம்.அங்கும் ஏமாற்றம்.அங்கு நோட்டுகள் மட்டுமெ தரப்படும் என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.கடைசியில், நணபணை அழைத்துக்கொண்டு அஞ்சல்தலை வாங்க அண்ணா நகர் தலைமைத் தபால் நிலையத்திர்கு சென்றோம்.அங்கு விலங்குகள்,மரங்கள்,காடுகள் சிறப்புக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ரொம்ப மகிழ்ச்சியாகி அந்த்த தலைகளைப் பார்த்ததோடு ஆயிரக்கணக்கில் தலைகளை வைத்திருந்த தலைகலையும் பார்க்க தலைப்பட்டோம்.அவர்களிடமிருந்து போலி தலைகளைக் கண்டுபிடிக்கவும்,மேலே குறியிட்ட தலைகளை மட்டும் சேர்க்கவும் உபதேசங்கள் கற்றுக்குண்டு,கொஞ்சம் வியாபாரம் கொஞ்சம் பண்டமாற்றும் செய்துகொண்டு வீடு திரும்பினோம்.
சென்ற நான்கு இடங்களும் நகரத்தின் நான்கு மூலைகள்.வீடோ ஏற்கனவே சொன்னதுபோல நகர்ப்புறத்தின் புறநகர்.இந்த பெரிய நகரத்தின் முரண்பாட்டுகளும்,அவசரமும்,வியாபார விஸ்தீரனமும் உண்மையிலேயே மலைக்க வைத்தன.எந்தக் கணத்திலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் ஹாரன் சப்தமும்,சினிமா பாடலும்,ஒருவித சலிப்பை ஏற்படுத்தின.யாருக்குமே இங்கு 24 மணி நேரம் போதவில்லை.ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் காரனமே இல்லாமல்;பேசவோ,உண்ணவோ கூட நேரமின்றி.இந்தத் தலைமுறையின் தங்குதடையற்ற் இரைச்சலும்,அதீத பணவெறியும் தேவையற்றவை,இலாபமற்றவை.நட்சத்திரங்களைக் காணவோ,மௌனத்தை ரசிக்கவோ,தன் மனைவியை ரசிக்கவோ தெரியாதவனுக்கு கோடி ரூபாயும் குப்பைதான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் நண்பன் ஜன்னலுக்கு வந்து எழுப்பினான்......."டேய் இங்க எங்கேயோ மூகாம்பிகை நகர்னு ஒண்ணுத்துல coin stamp எல்லாம் விக்கிறாங்களாம்டா!"முந்தைய நாளின் சிந்தனைகலெல்லாம் பஞ்சாய்ப்பறந்து நண்பர்களவிட அதிகமான எண்ணிக்கையில் நாணயங்கள் சேகரித்து விட எண்ணி மிதிவண்டியை மிதித்தேன்.அந்த மூகாம்பிகை நகரை ஒருவழியாக கண்டுபிடித்தும் விட்டேன்.ஆனால்.......
அந்த இடம் சமீபத்தில் தான் பட்டா போடப்பட்ட வெளி.வெறும் செங்கல் அடுக்குகளுள் மரங்கள் நட்டு சாலைகள் பிரித்துவிட்டு இடம் விற்பனைக்கு என்று பலகை மாட்டப்பட்ட காலியிடம்.அத்தனை காலையில் மூச்சிறைக்க வந்து,ஆசைகலையெல்லாம் வீணாக்கி......அருகிலிருந்த நண்பனை ஓட ஓட் விரட்டி அங்கேயே அடித்துவிட்டேன்.தண்டணையாக அவனை மிதிவண்டியில் ஏற்றாமல் நடக்க வைத்து கூட்டி வந்தேன்.
"டேய் கடைசியா இந்த கடைக்காரர் கிட்ட கேட்டு பார்க்கலாம்டா",என்றான்.
நான் முறைக்க,"சரி நானே கேகுறேன்...
அண்ணா இங்க பக்கத்துல எங்கேயாவது வெளிநாட்டு சில்லறையெல்லம் விக்கறாங்களாண்ணே?"
"இங்க நம்ம ஊரு ரூவாய்க்கே வக்கக் காணோம்,இதுல வெளிநாடு வேறயா?"
சிரிப்பு வெடிகள் வெடிக்க,அவனும் நானும் சோடா குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.
இப்போது என்னிடம் ஏறத்தாழ 50 நாடுகளின் நாணயங்கள் இருக்கின்றன.ஆயிரத்து ஐந்நூறு தபால் தலைகள் இருக்கின்ற்ன.தேடலில் இன்னும் பாதசாரித்துக்கொண்டேயிருக்கின்றேன்....
Good! :D Reminding of my children's interest in both these hobbies. It never took the seriousness of your passion, but still lies in them alive as hot coals!
I can't get you clearly ma'am,please elaborate.Quote:
Originally Posted by pavalamani pragasam
என் தமிழ் ஃபான்ட்டுகள் பழுதடைந்ததால் சிறிது பிசிறு தட்டி இதோ வந்துவிட்டேன் இன்னுமின்னும் பயணிக்க.......நாளை எதிர்பாருங்கள் புதிய அத்தியாயம் II......
«Åü¨È §º¸Ã¢ì¸ ±ý À¢û¨Ç¸û ¯í¸¨Çô §À¡ø ¦ÁÉ즸¼Å¢ø¨Ä ±ý§Èý!
venki :clap: :clap:
btw, naalai endru solli....ippo naal 11 aahidhu, enge....????
நிறைய எழுத விருப்பம்.....திடீரென்று தோன்றியது மீண்டும் தொடங்கலாமென்று....இவ்வருடம் முன்பு சொன்ன சிலவற்றை பூர்த்தி செய்யவும்,இடைவெளியின் குறைகளை நிவர்த்தி செய்யவும்,பாதியில் விட்ட திரைக்கதை,கட்டுரை,கதைகளை எழுதுவோமென....கூடவே....ஒரு பின்னோட்டம்:
இடைச்செருகல் # 4:
உறைந்த காலம்...
சென்ற ஆண்டு ஆரூடங்கள் கணித்தவற்றை பொய்த்து இந்த மீனராசிக்காரனுக்கு நிறைய கஷ்ட நஷ்டங்கள்.இளைஞன் ஆனதன் விளைவோ என்னவோ சிறுவனின் அணுகுமுறையிலிருந்து ஏகப்பட்ட மாற்றங்கள்...இது பக்குவமா அதிகப்பிரசங்கித்தனமா என்று கூட விளங்கவில்லை.நிறையவே கேலி,நிலா பார்த்தலிலிருந்து நிலாக்கள் பார்த்தல்,வெறித்தனமாக ஊர்பவனி,நடை உடை பாவனை எல்லாம் மாறிப்போய்;சரிதான் சரிதான்:மாற்றம் ஒன்றுதானே இங்கே மாறாதது....
சரி விருதுகள் அளிப்போமா?என்னடா என கேட்க வேண்டாம்....சும்மா நம்ம மனதை தேற்றிக்கொள்ள தான்...ஆண்டொன்றை அசைபோட இன்னுமோர் வழி...
1.இணையமும் இலக்கியமும்:
சிறந்த வலைமனைகள்:
தமிழ்த்திரைப்படங்கள்:www.behindwoods.com
செய்திகள்:www.thatstamil.com
பிற:www.sinekithan.com
வலைப்பூ:www.asifmeeran.blogspot.com
சிறந்த சிறுகதை:
நினைவெல்லாம் நித்யா...
(http://nilaraseegansirukathaigal.blogspot.com/)
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி இது! வானத்து தேவதைகளே எங்கே
சென்றீர்கள்? உலகப் புகழ்பெறப்போகும் எழுத்தாளனுக்கு கிடைத்த முதல் பரிசுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?மேகங்களே இன்றுமட்டும் பூக்களை மழையாக பொழியுங்கள். சரித்திரத்தில் இடம்பெறப்போகும் ஒரு முக்கிய எழுத்தாளன் இன்று பிறந்திருக்கிறான் என்று உலகிற்கு சொல்லுங்கள்.
என் கைகள் சிறகாக மாறி விண்ணோக்கி பறக்க ஆரம்பித்த நொடியில்...
"டேய் என்னடா அமைதியாகிட்ட?" உலுக்கிய நண்பன் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு அழைத்துவந்தான்.
"மச்சான்,என்கிட்ட கூட சொல்லவே இல்லை எப்போடா கதைய அனுப்பினே?" ஆர்வமுடன் கேட்டான் நண்பன்.அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. இந்தக் கதையை நான் அனுப்பவே இல்லையே! யார் அனுப்பி இருப்பார்கள்?
"நான் அனுப்பவே இல்லடா,எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு....யார் அனுப்பி இருப்பாங்க?"
"என்னது நீ அனுப்பலையா? அப்போ யாரா இருக்கும்...ம்ம்...டேய் அவளாதான் இருக்கும்டா" கண்ணடித்தான்
நண்பன்.
நித்யாதான் அந்த "அவள்". என் காதலி. பூக்களின் மனித வடிவம். என் கல்லூரியில் படிக்கின்ற ஐந்தடிமல்லிச்சரம்.
அவள் அனுப்பி இருப்பாளா என்று எண்ணிக்கொண்டே
கல்லூரிக்கு சென்றேன்.
"கங்கிராட்ஸ் டா" கைகுடுத்தாள் நித்யா.
"ஏண்டி, என் கதைய பத்திரிக்கைக்கு அனுப்பினா சொல்லமாட்டியா" செல்லக்கோபத்துடன் கேட்டேன்.
"என்னடா சொல்ற,நான் அனுப்பலையே" குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் என் நித்யா.
"என்னது நீ அனுப்பலையா? அப்போ எப்படி வந்தவுடனே கங்கிராட்ஸ் சொன்ன?"
"நோட்டீஸ் போர்ட்ல போட்டிருந்துச்சு அதனாலதான் சொன்னேன்"
"என்ன நடக்குதுன்னே புரியலை பத்திரிக்கைக்கு யார் அனுப்பினதுன்னு தெரியலை,அதுக்குள்ள நோட்டீஸ் போர்ட்ல வேற போட்டிருக்குன்னு சொல்ற, யார் இதை எல்லாம் பண்ணினது?"
"நான் தான்" பின்னாலிருந்து குரல்கேட்டது...
அங்கே...
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்....மின்விசிறி நின்றிருந்தது...அறைத்தோழனின் குறட்டைச்சத்தம் தவிர
வேறு எதுவும் இல்லை...
அடடா எல்லாம் கனவா? சரி, கனவுலயாவது நம்ம கதைய பப்ளிஷ் பண்றாங்களே.... என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்.
நித்யா சிரித்துக்கொண்டே கேட்டாள்.... "இதுதான் கதையா, இதே மாதிரி பலதடவை வந்துருச்சுடா"
தெரியும்டி செல்லம்...ஆனால் கனவுன்னு தெரிஞ்சதும் கதை முடிஞ்சிடும். ஆனா என் கதை இன்னும் முடியலை...
அப்படியா எப்படி டா சொல்ற?
அதுவந்துடி....
இறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த என்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.
சிறந்த write-up:வார்த்தைகளுடன் வாழ்தல் @ http://tamilnathy.blogspot.com/
சிறந்த கவிதை:
மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!
- ப்ரியன்.
மைய திரி:Movie of the week(Selvakumar-Films),Hubbers' drama(Shakthiprabha-Lounge),Yorker07(Sanguine Sridhar)
மைய அன்பர்:m23_bayarea,navin,leosimha போன்ற விடாப்படியான இரசிகர்கள் தவிர்த்து ரோஷன்(பேச்சில் தெளிவும் துணிவும்),சக்திப்பிரபா(வியக்கவைக்கும் படைப்பறிவு),ஆனா(ஆனாலும் கொஞ்சம் தொலைக்காட்சியிலிருந்து வெளியே வாங்க)
சிறந்த வெட்டிக்கதை:[மொக்கசீனோ காபி]மாஸ்டர்-அனீஷா,(ஐயோ பாவம்)தேவா-பூஜா [CC திரிகள்]
சிறந்த நகைச்சுவை:அர்ஷிதா(எ)விபா.....emoticons திரி,எம்.ஜி.பி கணேஷ்(c.c திரியில்)
avatars:{திராட்சைக் கண்ணும் முத்தமிடத் தோன்றும் கன்னங்களுடைய.....!}மது(பாப்பா...:kiki: :glux:)
signatures:பிரபு ராம்.
சிறந்த காணாமல் போனவர்கள்:ராக்கி (எ) சூர்யா.
சிறந்த நிகழ்வு:நிறைய மைய சகா-சந்திப்புகள்(ஹப்பர்ஸ் மீட்கள்)
வாராந்திர தொடர்:உலக சினிமா(செழியன்;ஆனந்த விகடன்)
மறுபதிப்பு:மெர்க்குரிப்பூக்கள்(பாலகுமாரன்,விசா பதிப்பகம்-17ம் பதிப்பு)
வயிற்றெரிச்சல்:பா.விஜய் கலைஞரை வைத்து நி(பு)கழ்த்திய வெளியீட்டுவிழா.
புத்தகம்:மல்லிகைக்கிழமைகள்(ஜெ.பிரான்சிஸ் கிருபா)
ஓவியம்:ம.செ(குமுதம் திருவேங்கிமலை சரவணன் தொடரில்)
வாரப்பத்திரிக்கை:குமுதம்
அட்டைப்படம்:எல்லா பெண்கள் பத்திரிக்கை(அழகான மங்கைகளை புடவை-தாவணியில் காட்டியதற்காக)
புகைப்படம்:கண்ணதாசனின் வாழ்க்கைக்குறிப்புகளுடன் வெளிவந்த அவரது அரிய புகைப்படங்கள்(விகடன் சிறப்பிதழ்)
வெளியீடு:ராஜு/கோபுலு/மதன் கார்ட்டூஙள்(விகடன் பதிப்பகம்)
2.தொலைக்காட்சி:
தலைசொறிதல்:செய்தி அலைவரிசைகளின் பூதக்கண்ணாடித்தனம்,கலைஞர்><சன் தொலைக்காட்சி மோதல்கள்....விதவிதப்பெயர் இணைப்பு இத்தியாதி குழப்படி,எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒரே சிறப்பு(சலிப்பு) நிகழ்ச்சிகள்,சிரிப்பு நிகழ்ச்சிகள்,போட்டிகள்.
பாடல்:காதலிக்க நேரமில்லை(ஸ்டார் விஜய்)
யோசனை:8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்(தீர்வு தவிர-ஸ்டார் விஜய்)
குழந்தைகள் நிகழ்ச்சி:டோரா(உதவி செய்தல்,நன்றி கூறுதல்,தனியாக பயணித்தல்,சுயமாய் செய்தல்,எளிய ஆங்கிலம் என பழைய நிக்கலோடியன் தொலைக்காட்சி கார்ட்டூனின் தமிழ்ப்பிரதி),ஐன்ஸ்டீன் அங்கிள்(பொம்மை,அழகுப்பொருட்கள் என்று உற்சாக பொழுதுபோக்கு)
அசம்பாவிதங்கள்:ஜோடி நம்பர் 1-ல் சிம்புவின் கூத்து,ரொம்பவே நகைச்சுவையாகிவிட்ட தமிழ்த்தொலைக்காட்சி "செய்திகள்",நடிகர் அஜித்தின் பாடல்களை கேட்டும் காட்டாத குறிப்பிட்ட தொலைக்காட்சிகள்.
ஆறுதல்:அவ்வபோது ந(ல்லி)ள்ளிரவில் பழைய பாடல்களைப் பாடும் தமிழிசை அலைவரிசைகள்,உலக இலக்கியம்/பங்குச்சந்தை/தமிழறிவு/குறும்படங்கள் பற்றி பேசும் மக்கள் தொலைக்காட்சி,குழந்தைகளுக்கு தமிழில் சுட்டி டி.வி,வெகுநாளாய் ஒளிபரப்பாகும் "இன்று" எனும் வரலாற்றுரை(ஜெயா செய்திகள்)
வி.ஜே:பூஜா(எஸ்.எஸ்.மியூசிக்)
தொகுப்பாளர்:விஜய் ஆனந்த்(கே டி.வி),பாலாஜி(விஜய்,ஜெயா டி.வி),ரம்யா(விஜய் டி.வி)
நடிகர்:மிர்ச்சி சிவா,அகில உலக பேமஸ் ப்ளாக் பாண்டி.(ஸ்டார் விஜய்)
நடிகை:எல்லாம் சப்ப பிகர் மச்சி!
தொடர்:கனா கானும் காலங்கள்(வெறும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் இருந்தவரை)
நிகழ்ச்சி:நீயா நானா(கோபிநாத்,என்.டி.டி.வி யின் முந்நாள் ரிப்போர்டர்;ஸ்டார் விஜய்)
தொலைக்காட்சி:மக்கள் தொலைக்காட்சி(தமிழ் பேசும் தொகுப்பாளர்கள்,சினிமா வாடையற்ற நேர்த்தியான திறம்பட நடையிடும் தொழில்நுட்பம்)
3.இசையும் திரைப்படங்களும்:
படமாக்கப்பட்ட விதம்:பேசுகிறேன்(சத்தம் போடாதே),அக்கம் பக்கம்(கிரீடம்)
நடனம்:எல்லாப்புகழும்(அழகிய தமிழ் மகன்),படிச்சு பார்த்தேன்(பொல்லாதவன்)
தீம் பாடல்:யுவன் ஷங்கர் ராஜா(பில்லா)
ரீமிக்ஸ்:பாட்டும் நானே(உன்னிகிருஷ்ணன்.....ப்ளுடூத் புண்ணியம்,ஆல்பம்கூட தெரியாது)
தனிப்பாடல்:காதல் ஒன்றல்லவா(ஏ.ஆர்.ரஹ்மான்)
ஜுகல்பந்தி:அருணா சாய்ராம்(சங்கித ஞானம் கம்மிதான்...தொடையெல்லாம் தட்டாமல்தான் கேட்பேன்)
வரிகள்:நா.முத்துக்குமார்(கல்லூரி,பருத்திவீரன்,கற்றது தமிழ் ஏனைய),வைரமுத்து(சிவாஜி,மொழி,ஏனைய),யுகபாரதி(பேருந்த ில் நீ:பொறி)
பாடகர்:ஹரிசரண்(சரியா இது தவறா,அரபு நாடே,இன்னும் சில)
பாடகி:பாம்பே ஜயஸ்ரீ(உனக்குள் நானே,உப்புத்தண்ணி,இன்னும் சில)
ஆல்பம்:சென்னை 600028(யுவன் ஷங்கர் ராஜா)
பாடல்:சஹானா சாரல் தூவுதோ(சிவாஜி),டோலு டோலு(போக்கிரி),காற்றின் மொழி(மொழி)
பெருமூச்சு:நல்லவேளை இந்த ஆண்டு பேரரசுவிடமிருந்து தப்பிச்சாச்சு!
இடதுகை விருது:பொம்மைக்கல்யான கோஷ்டிகள்.
சிறப்பு விருது:தமிழக அரசு,பெரியாரை ஊக்குவிதமைகாக+சத்யராஜ்-காசின்றி நடித்ததற்காக+இளையராஜா கொள்கைப்பிடிப்பிற்காக....ஆகமொத்தம் பெரியாருக்காக!
உடைகள்:அனுவர்தன்(பில்லா)
நகைச்சுவை:பிரேம்ஜி/ஷிவா/மற்றும் பலர்(சென்னை 600028),பிரகாஷ்ராஜ்/பாஸ்கர்(மொழி)
கலை:தோட்டா தரணி(சிவாஜி)
குணச்சித்ர நடிகர்/நடிகை:சரவணன்(பருத்திவீரன்),கல்லூரியில் 'கலை'யாக நடித்த பெண்.
ஐயோ பாவம்:விக்ரம்(காரணம் தேவையில்லை.....சரி பொது அறிவு இல்லாதவர்களுக்கு:2ம் ஆண்டாக படமேதும் இல்லாததால்)
சண்டை:ராம்போ ராஜ்குமார்(பொல்லாதவன்)
படத்தொகுப்பு:அந்தோனி(பில்லா)
திரைக்கதை:வெங்கட்பிரபு(cஎன்னை 600028)
போஸ்டர்:கல்லூரி(டிபன் டப்பிகள் மழையில் நனைந்த பழுப்பு நிற நிழற்படம்.....தேனாம்பேட்டையருகே பார்த்தது)
ஒளிப்பதிவு:நீரவ் ஷா(போக்கிரி,பில்லா)
தயாரிப்பு:பிரமிட் சாய்மீரா(ஒன்பது ரூபாய் நோட்டை இலவசமாக காட்டியதற்காக)
தலைப்பு:எவனோ ஒருவன்
அநாயகன்:டேனியல் பாலாஜி(பொல்லாதவன்)
இயக்குநர்:அமீர்(பருத்திவீரன்)
நடிகை:ஜோ(மாற்றுக்கருத்தே இல்லை)
நடிகர்:அஜித்குமார்(எனக்கு பிடித்தவர்,மட்டுமின்றி நல்ல நடிப்புக்காகக்கூட)
:)
வெங்கி,
:D
எங்க பெயரை எல்லாம் சிறந்த தடங்களில் பதித்து, உங்களின் முதல் கதை பிரசுரம் போல் பரவசமடைய செய்து விட்டீர்களே!
ஆனாலும் நித்யாவும் கதாசிரியரும் ரொம்ப தான் டீ/டா போடுகிறார்கள் ! :|
பாதசாரி இன்னும் அதிகம் பயணிக்க வாழ்த்துக்கள்
சிறந்த வலைப்பதிவாக
எங்கள் மரத்தடி புகழ் நண்பர் 'ஆசிஃப் மீரானி'ன் பதிவு தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து பெருமகிழ்ச்சி!
உங்கள் தோழரா அவர்?என் நன்பர் பிரியனின் வலைப்பூவிலிருந்து பயனித்த் ஏதோ ஓர் நல்பொழுதில் பார்த்தது தான் இப்பூ....நிரம்ப பிடித்தது......இவ்வருடம் வாரம் ஒரு அத்தியாயம் எழுத நோக்குகிறேன்.... :P முடிந்தால் சென்ற ஆண்டு/இந்த ஆண்டு இரண்டு விருதுகளையும் contrast செய்து பாருங்களேன்.....Quote:
Originally Posted by Shakthiprabha
சென்ற ஆண்டு விருதுகளின் சுட்டியை இடுங்கள் :)
ஆழ்ந்த இரங்கல்:எழுத்தாளர் சுஜாதா நம்மைவிட்டுப் பிரிந்தார்....!
அவரது எண்ணங்களாஇ நம்மிடமே விட்டுவிட்டு
சக்தி அண்ணி........சுட்டி இதோ:
http://www.mayyam.com/hub/viewtopic....=asc&start=127
Rest in Peace :(
தலைப்பேதும் தோன்றவில்லை....
கணம் என்றோ கனம் என்றோ தமிழின் ஏதோ ஒரு சொல்....எண்ணியவுடன் உயிரின் மிக மெல்லிய நுனியை முள் தைப்பது போல் தோன்றும் ஏதேனும் ஒரு சொல் என்று வைத்துகொள்வோம்.
காரணம் எனக்கு இப்படியெல்லாம் எழுத முடியும் என்று கற்றுக்கொடுத்த ஆசான்,ஓர் தினுசான சீனியர்,எந்த வித ரத்தசம்பந்தமுமிலாத யாரோ ஒரு நெருங்கிய உறவு.அவர் இன்று நம்மிடையே இல்லை.என்னை அவர் சுவீகாரம் எடுக்கவில்லை,அவருக்கு இன்றுவரை மின்னஞ்சல் ஏதும் அனுப்பியதில்லை.எங்கோ சாலையோரத்தில்,ரயில் நிலையத்தில்,கல்யாண வீட்டில் சந்தித்து "என்ன மாமா சௌக்கியமா?" என்று கேட்டதில்லை.பாட்டி யாரும் சொன்ன கதைகளில் அவர் இல்லை.என் சமூகத்திற்கு அவர் நெருங்கியவரல்லர்.எங்கள் ஊர்த் தெருவிளக்கை சரி செய்துவிட்டு நன்றிகளோடு கரைந்துபோன உறவில்லை.அவருக்கு பேருந்தில் எங்கோ அமர இடம் தந்ததில்லை.தவறிக்கூட ராங் நம்பரில் சந்தித்ததில்லை.நண்பனின் தம்முக்கு நெருப்பு தந்தவரில்லை.என்றேனும் செய்திகளில் நாயகனானவரில்லை.ராஜ்ஜியத் தலைவரும் இல்லை.அவரை நான் இன்னும் நேரில் பார்த்தது கூட இல்லை.ஒரு வார்த்தை பேசிக்கேட்கவில்லை.
இருந்தபோதும்,கண்ணீர்துளிகள் விழியோரம் பூக்கின்றன.மிகமிக பொறுமையாக வயலினின் இசை கேட்கிறது.மரத்தினின்று உதிரும் இலையென தவழ்ந்து மிதந்து மண் சேரும் நேரம் வரை சுகமான காட்சி....திடீரென இலை தரையை முத்தமிடும் முன்னரே புயலில் சிக்குண்டதைப் போன்ற ஒரு வலி....ஆழ்ந்த சோகம்...இனம் புரியா செய்கைகளின் கோவையாக நிகழ்ந்துவிட்ட பேரதிர்ச்சி.பாதசாரிக்கையில் அவர் கூடவே நடந்து வருவது போலிருக்கிறது,எந்த வரியை வாசித்தாலும் அவர் வாசிப்பது போலிருக்கிறது,அல்லது அவரை வாசிப்பது போலிருக்கிறது.இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.இறந்த வீட்டில் நான் இல்லை.அழுகுரல் என் காதை அடைக்கவில்லை.எந்த தீயும் என் மனதை உருக்கவில்லை.ஆனால் சுற்றியிருப்பதெல்லமே இழவு மாதிரி இருக்கிறது.கோலங்கள் அலங்கோலங்களாய்....சிக்சர்கள் க்ளீன் போல்டாய்...அழகிய பெண்கள் அரக்கிகளாய்!மரணம் தான் உலகின் மொத்த வரலாறுமே.
என்னதான் அவரை இதுவரையோ இனிமேலோ பார்க்காமல் இருப்பேன் எனினும்,பார்த்திராத யாழின் இசை கேட்டிருந்த எனக்கு யாழிசைப்பவர் இன்றோடு இல்லை என்பது தான் நெஞ்சடைப்பதன் காரணம்.நான் தான் அவருடன் பேசியதில்லை....அவர் என்னிடம் நிறைய நிறைய பேசியிருக்கிறார்.ஏகமாய் பேசுவார்.எல்லாவற்றையும் பற்றி.அதுவும் ஒருவராய் இருவராய் எல்லாம் இல்லை....பலராய்...பட்டாளமாய்...பட்டாசாய்.என் தோட்டத்து மலர்களை மட்டும் எண்ணிக்கொன்டிருந்த நான்...இன்று வேர்கள் வெடிக்கக் காண்கிறேன்.வெறும் பேச்சென்றெல்லாம் இல்லை இதெல்லாம்.எந்த குழந்தையிடம் வேன்டுமானாலும் கேளுங்கள் "உனக்கு யாராக வேண்டுமென்று ஆசை",என்று..."டீச்சர்!" என்றுதான் பதில் ஒலிக்கும்.இவர் எனக்கு அதுபோலத் தான் இருந்தார்.இருப்பார்.
என்னைப்போலவே இன்னும் பலருக்கு தோன்றுகிறதாம்.இன்னும் அடர்த்தியாய்,ஆழமாய்.
பிரிந்தோம்...சந்திப்போம்!
அட!சிந்தித்து பார்க்கையில் அவரிடம் இதற்கும் ஒரு விடை இருந்திருக்கிரது.அவர் எழுதிவைத்த எனக்கான தலைப்பு.கச்சிதம் பாஸ்!
hm...i have never read any of his works ..
தவறு.எழுத்தாளன் பேச்சு விடியறதுக்குள்ள போச்சு.கீழே சொடுக்கவும்.அறிமுகம்:என் ஓவியம்.Quote:
Originally Posted by VENKIRAJA
http://www.flickr.com/photos/25235078@N03/2381159058/
தொடரும்.
:clap: venki.. keep it up !!
( idhu just for kiNdal.. -> nalla vELai.. kaNNukku theriyumpadiyA orE oru heart mattumthAn irukku :noteeth: )
kanna :thumbsup:
வெளிசத்தில் நீ...Quote:
Originally Posted by madhu
இருட்டில் நான்.
-கௌஷிக்(பள்ளி நண்பன்)
இருட்டில் இருதய வெளிச்சத்தில்
இடிகளுக்கிடையில்
இருக்கிறாளா பார்த்துக்கொண்டிருக்கிறேன் - மௌன
இசையாக என் இணை.
what is inai? companion? :?
ஜோடி என்பதற்கு சரியான(இணையான)தமிழ்ச் சொல்:இணை.
http://www.flickr.com/photos/25235078@N03/2381996007/
நீரில் தூக்கி எறியப்பட்ட
கிட்டார் எழுப்பிய குமிழிகள் உடைந்தபோது
:musicsmile:
:P
I am planning to rearrange and post this series in my blog.Or should I post it in the hub?
blog plz :P :oops: :yesir: