-
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...8d&oe=5B0DC0D9
யாருக்காக ... இவர் நமக்காக...
Sivaji Ganesan Definition of Style 37
நடிகர் திலகத்தின் படங்களும் பாடல் காட்சிகளும் காலங்களைக் கடந்து, தலைமுறைகளைக்கடந்து சமுதாயத்துடன் பின்னிப் பிணைந்து நிற்கும் வல்லமை படைத்தவை என்பதற்கு சான்றாக சமீபத்தில் ஓர் அனுபவம் ஏற்பட்டது.
வசந்த மாளிகை – இதைப் பார்க்காத சிவாஜி ரசிகன் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். நூற்றுக்கு ஆயிரம் மடங்கு உறுதியிட்டு சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் படப்பெயரைச் சொன்னவுடனேயே மயக்கமென்ன பாடலும் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் இணைந்த ஏதாவது போஸ் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு உச்சகட்ட பிரபலத்தை அடைந்த பாடல். காதல் உணர்வை மிக தத்ரூபமாக வெளிக்கொணர்ந்த பாடல்.
அப்பேர்ப்பட்ட காதலுக்கு சோதனை வரும் போது ஒரு காதலன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை சமகாலத்திற்கேற்ப சொன்ன காட்சிகள். பார்ப்போரை ஒன்ற வைத்து காதல் தோல்வியின் ஆழத்தை சிறப்பாக எடுத்துரைத்தன.
காதலின் மேன்மையை பாடல்கள் மூலமாக கவியரசரும் உரையாடல் மூலமாக பாலமுருகனும் இணைந்து படைத்த அற்புதப்படைப்பு.
அதில் காதல் தோல்வியால் விரக்தியின் உச்சத்தை அடையும் காதலன் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் முடிவெடுக்கிறான். அவனுடைய மனது எந்த அளவிற்கு புண்பட்டிருக்கிறது என்பதை அந்தப் பாடல் வரிகள் சொல்ல வேண்டும். திரை இசைத் திலகம் கவியரசர் இணையும் போது அங்கே ஒரு காவியம் பிறப்பது உறுதி செய்யப்படுகிறதல்லவா. அதை மீண்டும் நிரூபித்தனர் வசந்த மாளிகையில், யாருக்காக பாடல் காட்சி மூலம்.
காதலி தன்னை விட்டுப் பிரிந்து இன்னொருவனை மணக்க இருக்கிறாள் என்பதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார் நாயகன் ஆனந்த். இந்தப் பாடலின் அத்தனை வரிகளும் காதல் வயப்பட்டவர்களை சுண்டி இழுத்து பாட்டுடன் ஐக்கியப்படுத்தி விடுகின்றன. அது 46 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது என்பது தான் இப்பதிவிற்கான காரணம்.
மலரைத்தானே நான் பறித்தது – கை
முள்ளின் மீது ஏன் விழுந்தது
உறவைத்தானே நான் நினைத்த்து – என்னை
பிரிவு வந்து ஏன் அழைத்த்து
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரனென்று...
--- இந்த வரிகளாகட்டும்
கண்கள் தீட்டும் காதல் என்பது அது
கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை
பித்தனாக்கி அலைய வைப்பது ...
----- இந்த வரிகளாகட்டும்
எங்கிருந்து சொந்தம் வந்த்து – இன்று
எங்கிருந்து நஞ்சு வந்த்து
அங்கிருந்து ஆட்டுகின்றவன் – தினம்
ஆடுகின்ற நாடகம் இது
இப்படி ஒவ்வொரு வரியும் காதலில் தோல்வியுற்றவர்களின் உள்ளத்தை கண்ணாடி போல் பிரதிபலித்து இன்றும் ஜீவனுடன் வாழ்கிறது.
வசந்த மாளிகை .. முன்பே குறிப்பிட்டிருந்தபடி,. சென்னை சாந்தி தியேட்டர் இப்படத்தின் மூலம் அக்கால இளைஞர்கள் பலரின் வாழ்க்கையிலே இரண்டறக் கலந்து விட்ட படம். எத்தனையோ இளைஞர்கள் சாந்தி தியேட்டரில் தங்கள் காதலியுடனோ அல்லது அதைப் பற்றி அறிந்த நண்பர்களுடனோ மீண்டும் மீண்டும் பார்த்து தங்களை ஐக்கியப் படுத்திக்கொண்ட நிகழ்வுகளுக்கு சாட்சி. அதைக் கண்ணால் கண்ட எங்களுக்கு அது புதிய பரிமாணம். அது வரை குடும்பம் குடும்பமாக உற்றார் உறவினரோடு புடை சூழ நடிகர் திலகத்தின் படங்களைப் பார்க்க வந்த மக்கள் மத்தியில் இது மிகவும் புதுமையான வித்தியாசமான மகிழ்வூட்டும் அனுபவமாக இருந்தது. அந்த தியேட்டரில் வெள்ளி விழா ஒடிய அப்படத்தின் பெரும்பாலான நாட்களில் புதிய காதலர்களை உருவாக்கிய சிறப்பும் இப்படத்திற்கு உண்டு. இவையெல்லாம் வெறும் சம்பிரதாயத்திற்கான வர்ணனைகள் அல்ல. நாங்கள் நேரில் கண்டறிந்த அநுபவங்கள்.
ஏன் இதைப் படிப்பவர்களில் கூட அப்படி ஓர் அனுபவத்தை அடைந்தவர்கள் யாராவது இருக்கலாம்.,
குறிப்பாக இப்பாடல் காட்சியில் திரையரங்கே கோலாகலமாகி விடும். பெரும்பாலான பார்வையாளர்கள் பாடல் வரிகளை முணுமுணுத்தபடி இருப்பார்கள். ரசிகர்களோ நடிகர் திலகத்தின் நடிப்பில் தம்மை மெய்ம்மறந்து சுற்றம் மறந்து இருக்கைகளை விட்டு வெளிவந்து கூடவே ஆடுவார்கள்.
படம் முடிந்து வெளியே வரும் போது மக்கள் படத்துடன் ஐக்கியமாகியிருந்த நிலையில் இருந்து வெளிபேற சற்று நிமிடங்களாகும் என்ற நிலையில் வெளியே வருவார்கள். இந்தப் பாடல் அந்த உணர்வைத்தந்து படத்தின் வெற்றியை ஆணித்தரமாக பதிவு செய்தது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இப்பாடல் இன்றைய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினரிடம் எப்படி சென்று சேரும் என்ற ஆர்வம் எப்போதுமே தலைகாட்டும். அதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தபோது என்னையே நான் மறந்து விட்டேன்.
ஓரிரு வாரங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சிக்காக இரயில் பயணம் மேற்கொள்ள நேரிட்டது. இரவு பயணம் என்பதால் படுக்கை வசதியுடன் பதிவு செய்யப்பட்டிருந்த என் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அந்தப் பெட்டியில் வடசென்னையில் உள்ள ஒரு பள்ளி மாணவ மாணவியர் சுற்றுலா செல்வதற்காக பதிவு செய்திருந்தனர். ஆசிரியர்களும் மாணவ மாணவியருமாய் பெட்டி ஒரே கோலாகலமாய் இருந்தது. எல்லோரும் வந்து சேர்ந்து வண்டி புறப்படும் நேரத்தில் செட்டிலாகிவிட்டார்கள். எங்களைச் சுற்றியிருந்த இருக்கைகள் மற்றும் படுக்கைகள் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் ஒரு பத்து பேர் இருக்கும். வண்டி புறப்பட்டவுடன் தங்களுடைய நண்பர்களோடு நடனமாடிக்கொண்டும் சில புதிய திரைப்படப்பாடல்களைப் பாடிக்கொண்டும் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றோரனைவருமே மாணவர்கள். அந்த மற்றொருவரும் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டுக்கான வழிமுறைகளை முடித்து உறங்கப் போய் விட்டார். சில புதிய திரைப்படப்பாடல்கள் நம் பொறுமையை சோதித்தன.,
அப்போது தான் துவங்கியது அந்த இன்ப அதிர்ச்சி. திடீரென ஒரு மாணவன் யாருக்காக பாடலைப் பாடத்துவங்கினான். அவ்வளவுதான் அத்தனை மாணவர்களும் உடன் சேர்ந்து கொண்டனர். அந்த மாணவன் ஒவ்வொரு வரியும் உணர்வு பூர்வமாகவும் உச்சரிப்புத் தெளிவாகவும் பாடினான். கூடவே மற்றவர்களும் சேர்ந்தனர். பாடல் முடியும் வரை காத்திருந்தேன். அந்தப் பாடலைப் பாடிய மாணவனை அழைத்து புதுப்பாடலைப் பாடிய நீ இந்தப் பாட்டை எப்படித் தேர்ந்தெடுத்தாய் என்றதற்கு அவன் சொன்ன பதில் அப்ப்டியே என்னை ஆனந்தக் கூத்தாட வைத்து விட்டது. இந்தப் பாட்டின் இசை உன்னைப் பிடித்ததா என்றேன் ஆமாம் சார் என்றான். டி.எம்.எஸ். குரல் ரொம்ப படித்த்தா என்று கேட்டேன். ஆமாம் சார் என்றான். இந்தப் பாட்டின் வரிகளைப் பிடித்துள்ளதா என்று சற்றே குத்தலாக கேட்டேன். அதற்கு அவன் அளித்த பதில் என்னைப் பொறியில் தட்டியது போல் இருந்தது. சார் உங்க காலத்துப் பாட்டையெல்லாம் நான் ரொம்பக் கேட்பேன் சார். எல்லாமே கருத்துள்ளதாக இருக்கும் என்றான். கூடவே இதையெல்லாம் கேட்ட நீங்கள் அதில் நடித்த சிவாஜி சாரைப் பத்தி ஏன் சார் கேக்கலே என்றானே பார்க்கலாம்.
அதைத் தான் அடுத்து கேக்க இருந்தேன் என சமாளித்தேன். ஏம்பா தம்பி அதை நீயே சொல்லேன் என்றேன்.
சார் சார் என குறிக்கிட்டான் பக்கத்தில் கூட இருந்த பையன். சார் அவன் சிவாஜி ரசிகன் சார். அவர் படத்தை டிவிலே போட்டா அதைப் பாத்துட்டு தான் வேற வேலை பாப்பான் சார் என்றான் அடுத்த மாணவன். உடனே குறிக்கிட்ட இந்த முதல் மாணவன், சார் நானே சொல்றேன் சார். இந்தப் பாட்டு வர்ற வசந்த மாளிகை படத்தை நான் தியேட்டர்லே பார்த்தேன் சார். இதுலே சிவாஜி சாரோட ஸ்டைலைப் பார்த்து நான் ஷாக்காயிட்டேன் சார். அதுவும் இந்த யாருக்காக பாட்டை தியேட்டரில் பாத்தபோது – சமீபத்தில் டிஜிட்டலில் பார்த்தாராம் – ரசிகர்கள் செஞ்ச ஆரவாரத்துலே நான் மெய் மறந்துட்டேன் சார் என்றான்.
சரிப்பா இந்தப் பாட்டோட அர்த்தம் தெரியுமா உனக்கு என்றேன். சார் லவ் ஃபெயிலியர் பத்தின பாட்டு சார். எத்தனை புது படத்திலே நாங்க பாத்திருக்கிறோம். ஆனால் இந்தப் பாட்டை கேட்டா நாமளே லவ் ஃபெயிலியராயிட்டவங்க மாதிரி ஒரு ஃபீலிங் வருது சார் என்றான்.
உடனே தலைவர் ஞாபகம் நமக்கு வந்து விட, தம்பி அந்த ஃபீலிங் படத்தோட இருக்கட்டும் நிஜத்தலே பெரியவங்க பாத்து வெக்கிற பொண்ணைத் தான் பண்ணிக்கணும். அதுவுமில்லாமே அதுக்கெல்லாம் இது வயசுமில்லே. இப்போதைக்கு உன் கவனம் படிப்பிலே மட்டும் இருக்கட்டும் எநக் கூறினேன்.
பள்ளியிறுதி மாணவர்களையும் ரசிகராக்கும் வலிமை பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே, காலங்களைக் கடந்து சிரஞ்சீவியாக வாழ்கிறார் என்பதற்கு இதை விட வேறென்ன வேண்டும்.
https://www.youtube.com/watch?v=uU2XY2UplO8
-
sekar p
இன்று இரவு 7:00 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் * *தில்லானா மோகனாம்பாள்*
அவ்வப்போது நடிகர் திலகத்தை உதாரணம் கொண்டு வைரலாகும் மீம்ஸ்கள்,
இதை நாம் ஆதரிக்கவும் முடியவில்லை, எதிர்ப்பதும் சரியா என தெரியவில்லை,
காரணம் இளைஞர்கள் தான் இது போன்ற மீம்ஸ் கிரியேட்டர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு நடிகர் திலகம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் தானே அவரை உதாரணத்திற்கு கொண்டு மீம்ஸ் உருவாக்குகிறார்கள், அவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய தலைமுறையினர் நடிகர் திலகம் திரைப்படங்களை Yo...uTube ல் அதிகம் அலசுகிறார்கள் என்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது, மேலும் எத்தனை ஆயிரம் திரைப்படங்கள் வந்திருந்த போதும் எவ்வளவோ நடிகர்கள் உருவாகியும் கூட நடிகர் திலகம் மட்டுமே விஷேசமாக எல்லாக் காலகட்டத்திலும் அமைகிறார்,
சென்ற ஆண்டும் கூட தற்போதைய துனை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மெரினா சமாதியில் மௌன விரதம் இருந்து பின் பேசியதற்கு உருவாக்கிய நடிகர் திலகம் மீம்ஸ் வெகு வேகமாக பரவி இளைஞர்கள் மத்தியில் சரஸ்வதி சபதம் படத்தை தேட வைத்தது
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...45&oe=5B109E76
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...da&oe=5B1BDB66
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...53&oe=5B1CD4D8
-
-
-
-
ponraj ponraj
மார்ச் 3 -3-18 முதல் தூத்துக்குடி சத்யா திரையரங்கில் அய்யன் சிவாஜியின் வசந்த மாளிகை அய்யனின் ரசிகர்கள்அனைவரையும் தூத்துக்குடி மாநகர சிவாஜி மன்றம் சார்பில் வரவேற்கிறோம் எங்களுக்கு இந்த திரைப்படத்தை வழங்கிய அய்யனின் கன்மனி திரு வடிவேல் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...8f&oe=5B107820
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
31 வது வெற்றிச்சித்திரம்
ராஜா ராணி வெளியான நாள் இன்று
ராஜா ராணி 25 பெப்ரவரி 1956
https://upload.wikimedia.org/wikiped..._Rani_1956.jpg
https://i.ytimg.com/vi/jVsctziqCNY/maxresdefault.jpg
-
-
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
ஆழ்ந்த இரங்கல்கள்
-
பரவசம்நாயகன்
டி.எம்.செளந்தர ராஜன் ஒரு முறை சொன்னாா்.....
எனக்கு திருப்புமுனை ஏற்படுத்தி மிகுந்த புகழை கொடுத்த பாடல்கள் ஐந்து பாடல்கள்....
1. ஏறாத மலைதனிலே.......
2. மலா்களைப்போல தங்கை உறங்குகிறாள்.....
3. எங்கே நிம்மதி.....
4. பொன்மகள் வந்தாள்.....
5. அடி என்னடி ராக்கம்மா.....
இவைகளெல்லாம் நடிகா் திலகத்தின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c1&oe=5B4D09F1
-
vee yaar
நினைத்தாலே இனிக்கிறது. நெஞ்செல்லாம் பெருமையால் விம்முகிறது. எப்பேர்ப்பட்ட தேச பக்தனுக்கு நாம் ரசிகராய் தொண்டராய் இருக்கிறோம் என்பதை நினைத்தால்....
இந்திய ராணுவ வீரன் குமாராக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய ரத்த திலகம் படம் முரசு தொலைக்காட்சியில்..
ஒவ்வொரு காட்சியும் நான் இந்தியன் என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொள்ளும் காட்சியமைப்பு கதைக்களம்.
... வானொலியில் பாரத பிரதமர் நேருவின் வேண்டுகோளை செவிமடுத்து, ராணுவத்தில் சேர தீர்மானித்து, தனக்கு வந்த நல்ல உத்தியோகத்தையும் துறந்து அதற்கான உத்தரவையும் கிழித்தெறியும் தேச பக்த்ன் குமார் ஒரு அடையாளச் சின்னம்.
தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக படமெடுத்தவர்களின் மத்தியில் தன் நாடு நிற்க வேண்டும் என படமெடுத்தவர் நடிகர் திலகம்.
இன்று இந்திய விடுதலைப் போர் என்றால் அதையறிய உதவுவது நடிகர் திலகத்தின் கப்பலோட்டிய தமிழன் ராஜபார்ட் ரங்கதுரை சினிமா பைத்தியம் போன்ற படங்கள்.
இந்திய வரலாற்றில் நம் நாடு சந்தித்த யுத்தங்களைப் பற்றி அறிய உதவுவது ரத்த திலகம் உள்ளிட்ட படங்கள்.
இந்திய சைனா யுத்தத்தின் போது நாடு சந்தித்த சவால்களை சித்தரிக்கும் உன்னத சித்திரம் ரத்த திலகம்.
சீனர்கள் எவ்வளவு குயுக்தியுடன் நம் நாட்டில் ஊடுருவ முயன்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள ரத்த திலகம் படம் உதவுகின்றது.
நம் ராணுவ வீரர்கள் எவ்வாறெல்லாம் சிந்தித்து செயல்பட்டு எல்லையில் நம்மை காக்க வியூகங்களை அமைத்து செயல்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ரத்த திலகம் படம்.
எதிர்கால தலைமுறையினர் இந்நாட்டின் வரலாற்றில் மேற்காணும் சம்பவங்களை அறிய முனையும் போது அவர்களுக்கு பாடத்திட்டங்களில் இடம் பெறும் அளவிற்கு உதவுபவை நடிகர் திலகத்தின் படங்கள்.
சண்டைக்காட்சிகளும் கனவு டூயட்களும் கண நேர இன்பத்தோடு காற்றில் கலைந்து போய் நாளடைவில் மறக்கப்பட்டு விடும்.
சினிமா என்பது வரலாற்றினை அறிய உதவும் சாதனம் என்பதை விளக்க சான்றுகளைத் தேடும் போது அங்கே முன் நிற்கப்போகின்றவை
நடிகர் திலகத்தின் படங்களே..
பெருமை கொள்வோம்..
சிவாஜி ரசிகனாய் வாழ்வதற்கு
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...3c&oe=5B09ED71
-
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
36 வது வெற்றிச்சித்திரம்
மக்களைப்பெற்ற மகராசி வெளியான நாள் இன்று
மக்களைப்பெற்ற மகராசி 27 பெப்ரவரி 1957
https://upload.wikimedia.org/wikiped...a_Magarasi.jpg
https://i.ytimg.com/vi/x2auE6bScOM/maxresdefault.jpg
-
sekar p
தொலைக்காட்சி சேனல்களில் இன்று மட்டுமே ஏழு முத்தான சித்திரங்கள்,
நடிகர் திலகத்தின் காவியங்கள்,
காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்-- *கந்தன் கருணை,
... பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்-- ** தியாகம்*,
பிற்பகல் 1:30 க்கு கேப்டன் டிவியில்-- தாம்பத்யம்,
பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்-- ** நீதிபதி",
இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்- *அன்புக்கரங்கள்*,
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்-- **பாசமலர்*,
இரவு 11:55 க்கு ஜெயா தொலைக்காட்சியில்-**புதிய பறவை
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...9e&oe=5B0429A3
-
-
-
Nadigar Thilagam films released in the month of March
Arivaali அறிவாளி 01 03 1963
Nenjirukkum Varai நெஞ்சிருக்கும் வரை 02 03 1967
Manohara மனோகரா 03 03 1954
Kuravanchi குறவஞ்சி 04 03 1960
Thiyaagam தியாகம் 04 03 1978
Arunodhayam அருணோதயம் 05 03 1971
Muthukkal Moondru முத்துக்கள் மூன்று 06 03 1987
Naan Sollum Ragasiyam நான் சொல்லும் ரகசியம் 07 03 1959
Thaai தாய் 07 03 1974
Aanandakkanneer ஆனந்தக் கண்ணீர் 07 03 1986
Naam Iruvar நாம் இருவர் 08 03 1985
Gnaana Oli ஞான ஒளி 11 03 1972
Mudal Thedhi முதல் தேதி 12 03 1955
Naangal நாங்கள் 13 03 1992
Padhi Bakthi பதிபக்தி 14 03 1958
Bangaaru Bapu (G) (T) பங்காரு பாபு (தெலுங்கு) 15 03 1973
Paava Mannippu பாவ மன்னிப்பு 16 03 1961
Tharaasu தராசு 16 03 1984
Ennaippol Oruvan என்னைப் போல் ஒருவன் 18 03 1978
Padikkaada Pannaiyaar படிக்காத பண்ணையார் 23 03 1985
Bharatha Vilas பாரத விலாஸ் 24 03 1973
Kulama Gunamaa குலமா குணமா 26 03 1971
Thanga Churangam தங்க சுரங்கம் 28 03 1969
Iruvar Ullam இருவர் உள்ளம் 29 03 1963
Valar Pirai வளர் பிறை 30 03 1962
Raja Raja Chozhan ராஜ ராஜ சோழன் 31 03 1973
-
-
-
-
-
-
sekar.p
நடிகர் திலகம் 1989 ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இன் அதிமுக ( ஜானகி அணி)வுடன் கூட்டணி அமைத்து பெரும் சரிவை சந்தித்தார் என்பது நாம் அறிந்ததுதான், நடிகர் திலகம் முதல்வர் பதவிக்காக போட்டியிடவில்லை என்பது கூட அன்றைய நாளில் நாட்டு மக்களுக்கு தெரியாது, நடிகர் திலகம் போதுமான கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அவசர ரீதியில் தேர்தலை சந்தித்தாலும் கூட உண்மை ரசிகர்கள் அவரைத் தொடர்ந்தனர், நடிகர் திலகம் தெளிவுபட பல மேடைகளில் நம் பின்னால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றே பேசி வந்தார், ஒரு போதும் அதிமுக வினரின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை, நடிகர் திலகத்தின் கணக்குப்படி அந்த தேர்தலில் த.மு.மு, அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 22.5 லட்சம் அது அந்த தேர்தலின் 10% வாக்குகளாகும், அதிமுக வின் ஒட்டுமொத்த வாக்குகளும் ஜெயலலிதா அணிக்குத் தான் சென்றது,
நடிகர் திலகம் குறிப்பிட்ட மூன்று லட்சம் மன்றப் பிள்ளைகள் போராடிய போராட்டம் அது தான் 20 லட்சம் வாக்குகள் பெறக் காரணமாக அமைந்தது, உண்மையில் அந்தத் தேர்தலில் த.மு.மு தோல்வியை தழுவவில்லை என்று தான் கணக்கில் கொள்ள வேண்டும், ஆனால் நடிகர் திலகத்தின் சரிவை மட்டுமே எதிர் நோக்கியிருந்த கூட்டத்திற்கு இந்த தேர்தல் முடிவுகள் பெரும் வரப் பிரதாட்சமாய் அமையப் போக தேர்தல் தோல்வியை ஊதிப் பெரிதாக்கின, அவை சில காலங்கள் மட்டுமே பேசப்பட்டன, அந்தப் பேச்சுக்கள் ஏறக்குறைய 90 லிருந்து 2016 வரையிலும் பேசப்படவில்லை என்பது நிதர்சனம் ஆனால் தற்போது ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பின்னால் பிளவுபட்ட அதிமுக காரணத்தினால் நடிகர்களின் அரசியல் பிரவேசம் எனக் காரணம் காட்டி மீண்டும் நடிகர் திலகத்தின் தேர்தல் சரிவை தூசித் தட்டி எடுக்கிறார்கள் ஊடக பெருமக்கள், அதே சமயம் அப்போதைய தேர்தல் சரிவுகளுக்கு பிறகும் கூட நடிகர் திலகம் திரைப்படங்கள் அன்றைய புதிய படங்களைக் காட்டிலும் கூடுதல் வசூலைக் குவித்து வந்தன என்ற வரலாற்று நிகழ்வுகளை நினைவில் கொள்ள மறுக்கின்றனர்,
அன்றைய நாட்களில் என்னதான். நடிகர் திலகத்தின் புகழை சீர்குலைக்க முயன்றாலும் கூட. நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்ட வண்ணமே இருந்தன,
பின்னாளில் திரையரங்குகள் டிஜிட்டல் Qube தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்த காரணத்தால் நடிகர் திலகம் திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடுவது குறைந்து வந்தன, பின்னர் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மீண்டும் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் 100 நாட்களையும் கடந்து வெற்றி வாகை சூடி வருகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் * நவராத்திரி" ஒளி பரப்பாகிறது
இந்தச் செய்தியை அறிந்தவுடன் எனக்கு நவராத்திரியை முதன் முதலாக பார்த்து மகிழ்ந்த அந்த நாளைப் புரட்டிப் பார்த்தேன, நவராத்திரியை நம் வாழ்வில் காண்போமா? என ஏங்கித் தவித்த காலம் அது, நடிகர் திலகத்யின் 100 வது படத்தை இன்று வரையில் நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சை விடாத நாள் இருக்காது, அந்தச் சூழலில் தான் எனக்கு திரையிட்ட இந்தத் தியேட்டர் சொர்க்கப் புரியாகப் போனது.
அந்த இனிமையான நாளைக் குறிப்பிடும் அந்த அதி முக்கியமான பேப்பர் விளம்பரம் தான் இணைப்பில் உள்ளது, சில மாதங்களுக்கு முன் முகநூலில் நண்பர்கள் பதிவேற்றம் செய்து இருந்ததை உஷாராக பிடித்துக் கொண்டேன்.
கல்லூரியில் படிக்கும் போது முதன் முதலாக நவராத்திரியை பார்த்தேன், இத்தனைக்கும் தேர்வுகள் நடந்துக் கொண்டிருந்த நிலையிலும் முதல் நாள் நான் பார்த்து விட்டு மறுநாள் நண்பர்களையும் அழைத்துச் சென்று காண்பித்தது, பார்த்த அனைவரும் அளவிலாத மகிழ்ச்சிக் கடலில் திகைத்துப் போனது என்றென்றும் நினைவை விட்டு நீங்காத ஒன்று,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9c&oe=5B076D1B
-
athavan ravi
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e6&oe=5B00EB60
.................................................. .................................................. ....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...02&oe=5B08E993
-
vaannila vijayakuimar
உங்களுக்குத் தெரியுமா?
1931 அக்டோபர் 31 அன்று வெளியான
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' முதல் கறுப்பு-வெள்ளைப் படங்களின் காலக்கட்டம் முடிந்த 1979 ஆம் ஆண்டுவரை, தமிழில் (இந்தியாவிலேயே)
கறுப்பு-வெள்ளையில் முதன்முதலாக 100 படங்களில் நாயகனாக நடித்து, அதில் 50க்கும் மேற்பட்ட வெற்றிக் காவியங்களைத் தந்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே....
இந்த யுகம் முடியுமட்டும் எவராலும் இனி வெல்ல முடியாத வரலாற்றுச் சாதனையை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்.
அடுத்தத் தலைமுறை அறிய வேண்டிய செய்தி இது. அதிகம் பகிருங்கள் தோழர்களே ...
வெற்றிப் படங்களின் பட்டியல் மட்டும்....
1. பராசக்தி 294 நாட்கள்
2. மனோகரா 156 நாட்கள்
3. சம்பூர்ண ராமாயணம் 165 நாட்கள்
4.பாகப்பிரிவினை 216 நாட்கள்
5. படிக்காத மேதை 153 நாட்கள்
6. பாவமன்னிப்பு 177 நாட்கள்
7. பாசமலர் 176 நாட்கள்
8. பட்டிக்காடா பட்டணமா 182 நாட்கள்
8அ. SCHOOL MASTER (Kannada) 188 Days
9. திரும்பிப்பார் 116 நாட்கள்
10. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி 105
11. தூக்குதூக்கி 103 நாட்கள்
12. எதிர்பாராதது 100 நாட்கள்
13.காவேரி 100 நாட்கள்
14. மங்கையர்திலகம் 100 நாட்கள்
15. தெனாலி ராமன் 101 நாட்கள்
16. பெண்ணின் பெருமை 105 நாட்கள்
17. அமரதீபம் 125 நாட்கள்
18. மக்களைப் பெற்ற மகராசி 122 நாட்கள்
19.வணங்காமுடி 100 நாட்கள்
20. தங்கமலை ரகசியம் 105 நாட்கள்
21. பாக்கியவதி 106 நாட்கள்
22. உத்தமபுத்திரன் 140 நாட்கள்
23. பதிபக்தி 100 நாட்கள்
24. அன்னையின் ஆணை 101 நாட்கள்
25. சபாஷ் மீனா119 நாட்கள்
26. காத்தவராயன் 105 நாட்கள்
27. தங்கப்பதுமை 102 நாட்கள் ( சேலம் மற்றும் மதுரையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா ஓடியது)
28. மரகதம் 100 நாட்கள்
29. இரும்புத்திரை 156 நாட்கள் (ஷிப்டிங்கில்
230 நாட்கள்)
30. தெய்வப்பிறவி 121 நாட்கள்
31. விடிவெள்ளி 104 நாட்கள்
32. பாலும் பழமும் 139 நாட்கள்
33. கப்பலோட்டியதமிழன் 102 நாட்கள்
34. பார்த்தால் பசிதீரும் 105 நாட்கள்
35. படித்தால் மட்டும் போதுமா 112 நாட்கள்
36. பந்தபாசம் 100 நாட்கள்
37. ஆலயமணி 105 நாட்கள்
38. இருவர் உள்ளம் 126 நாட்கள்
39. அன்னை இல்லம் 104 நாட்கள்
40. பச்சை விளக்கு 105 நாட்கள்
41. கை கொடுத்த தெய்வம் 108 நாட்கள்
42. நவராத்திரி 108 நாட்கள்
43. சாந்தி 100 நாட்கள்
44. மோட்டார் சுந்தரம்பிள்ளை 100 நாட்கள்
45. இருமலர்கள் 100 நாட்கள்
46. கலாட்டா கல்யாணம் 106 நாட்கள்
47. என்தம்பி 103 நாட்கள்
48. எங்க ஊர் ராஜா 105 நாட்கள்
49. உயர்ந்த மனிதன் 105 நாட்கள்
50. தெய்வமகன் 105 நாட்கள்
51. திருடன் 98 நாட்கள்
52. வியட்நாம் வீடு 111 நாட்கள்
53. ராமன் எத்தனை ராமனடி 103 நாட்கள்
54. குலமா குணமா 118 நாட்கள்
55. பாபு 114 நாட்கள்
56. ஞானஒளி104 நாட்கள்
57. தவப்புதல்வன் 100 நாட்கள்
இவை தவிர்த்து பணம், அன்பு, புதையல், தங்கை, தங்கைக்காக,குறவஞ்சி உள்ளிட்ட பல கறுப்பு வெள்ளைப் படங்கள் 83 முதல் 91 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன.
இதையெல்லாம் முறியடிக்க இனி எந்த நடிகரின் படங்களாலும் முடியாது என்பது உறுதியான ஒன்று.
ஒருவேளை நம் அய்யனே மறுபடியும் அவதாரமெடுத்து வந்தால் முடியுமோ!?
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...93&oe=5B4B137D
-
-
-
-
-
-
-
-
-
vaannila vijayakumar
உங்களுக்குத் தெரியுமா?
நடிகர்திலகம் நடித்து 100 நாட்களைக் கடந்து ஓடிய 120க்கும் மேற்பட்ட படங்களில், நாற்பதுக்கும் மேலான படங்களில் மருந்துக்கேனும்கூட சண்டைக் காட்சிகள் இடம் பெற்றதில்லை.
ACTION HERO வாக நடித்தால் மட்டுமே திரையில் காலூன்றி நிற்க முடியும் என்ற வறட்டுக் கொள்கையை உடைத்தெறிந்து வெற்றிநடை போட்டவர் நம் நடிகர்திலகம்.
கதையின் சிறப்பம்சமே படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று சண்டைக்காட்சி இல்லாமல் நடித்து, வெற்றி பெற்ற தமிழகத்தின்... மன்னிக்கவும் ...ஏகபாரதத்தின் ஒரே நாயகன் நம் நடிகர்திலகம் மட்டுமே!
இனிமேல் ரசிகர்களே சண்டைக் காட்சிகளை விரும்பாவிட்டாலும், சண்டை காட்சியில்லாமல் எந்த நாயகனும் உதிக்கமாட்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
நடிகர்திலகம், சண்டைக் காட்சிகள் இல்லாமல் நடித்து நூறுநாட்கள் ஓடிய திரைப் படங்களின் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்காக ...
பின்குறிப்பு:
வில்லனின் சட்டையைப் பிடித்து உலுக்குவதும், ஒரே ஒரு அறை கொடுப்பதையும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதையும் சண்டைக்காட்சிகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் தோழர்களே!
1. பராசக்தி
2. எதிர்பாராதது
3. மங்கையர் திலகம்
4. பெண்ணின் பெருமை
5. அமரதீபம்
6. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி
7. சபாஷ் மீனா
8. பாகப்பிரிவினை
9. தெய்வப்பிறவி
10. படிக்காத மேதை
11. பாவ மன்னிப்பு
12. பாசமலர்
13. ஸ்ரீவள்ளி
14. பாலும் பழமும்
15. பார்த்தால் பசி தீரும்
16. பந்தபாசம்
17. படித்தால் மட்டும் போதுமா?
18. ஆலயமணி
19. இருவர் உள்ளம்
20. அன்னை இல்லம்
21. பச்சை விளக்கு
22. புதியபறவை
23. கை கொடுத்த தெய்வம்
24. சாந்தி
25. மோட்டார் சுந்தரம்பிள்ளை
26. இரு மலர்கள்
27. தில்லானா மோகனாம்பாள்
28. உயர்ந்த மனிதன்
29. வியட்நாம் வீடு
30. எங்கிருந்தோ வந்தாள்
31. கௌரவம்
32. ராஜபார்ட் ரங்கதுரை
33. அவன்தான் மனிதன்
34. சிவகாமியின் செல்வன்
35. தீபம்
36. ஜெனரல் சக்கரவர்த்தி
37. ரிஷிமூலம்
38. கல்தூண்
39. கீழ்வானம் சிவக்கும்
40. வா கண்ணா வா
41. பந்தம்
42. முதல் மரியாதை
43. சாதனை
44. மருமகள்
-
-
-
-