-
சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் பகிர்ந்த தகவல்களுக்கு நன்றி ... மதுரையில் பிரமாண்டமான வெற்றியை ஈட்டிய திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் படைப்பு " நாடோடி மன்னன்" காவியத்திற்கு ரசிகர்கள் யாவரும் டிக்கெட் எடுத்து தாமாக பார்த்து களித்தனர்... ஆனால்... ஒரு சில நடிகர் படங்களுக்கு சாலையில் வருவோர், போவோர் என கூப்பிட்டு இலவச டிக்கெட் எடுத்து கொடுத்து ஆயிரக்கணக்கில், லட்ச கணக்கில் செலவு செய்து கணக்கு காண்பிக்கின்றனர்... இப்படியும் புத்தி கெட்ட செயல்கள் நடைபெறுகிறது மாற்று முகாமில்... இந்த செய்கை மிகவும் வெட்க கேடானது...
-
-
1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற தமிழ்திரைப்படங்கள் மக்களிடையே காலனிய ஆதிக்க எதிர்ப்பு உணர்வுகளை தூண்டின. 1931 ஆம் ஆண்டு வெளிவந்த முழுநீள பேசும் படமான காளிதாஸில் தேசிய தலைவர் காந்தி பெயரும் தேசிய முழக்கம் வந்தே மாதரமும் பயன்படுத்தப்பட்டன.
1937 ஆம் ஆண்டு வெளியான “சதி அனுசுயா” வில் அனுசுயா கைராட்டையோடு திரையில் தோன்றினார். 1936 ஆன் ஆண்டு வெளிவந்த “நவீன சாரங்க தாரா’ திரைப்படத்தில் கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக போராடும் மக்கள் காந்தி குல்லா அணிந்திருந்தனர்.
திரை அரங்குகள் நகர்புறங்களிலேயே இருந்ததனால், ஊரக மக்கள் திரைப்படங்களின் தாக்கத்துக்கு ஆட்படவில்லை. இந்திய விடுதலைக்குப்பின் ஊரக பகுதிகள் மின்மயமாக்கப்பட்டவுடன், திரைப்படம் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்தது. இச்சூழலில் திமுக திரைப்படங்களை அரசியல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொண்டது.
திரைப்பட ரீதியிலான அரசியல் பரப்புரைகள் மூன்று வழிகளில் நிகழ்ந்தது எனலாம்.
நேரடியாக திரைப்பட வசனங்கள் வாயிலாக அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள்...
நேரடி அரசியல் பரப்புரையில் ஈடுபட்ட திரைப்படங்கள் முதல்வகை. தி.மு.கவின் வெளிப்படையான பரப்புரை படங்களான நல்லதம்பி(1949), வேலைக்காரி( 1949) மந்திரிகுமாரி(1950), மர்மயோகி (1951), சர்வாதிகாரி (1951) பராசக்தி(1952) சொர்க்கவாசல், (1954) நாடோடி மன்னன் (1958) மற்றும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி (1959) ஆகியன.
திரைப்படங்களின் வெற்றிவிழா கூட்டங்களில் அரசியல் பிரச்சார உத்தி பின்பற்றப்பட்ட திரைப்படங்கள்...
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடிமன்னன் திரைப்படம் 100 நாட்களை தொட்ட பொழுது தி.மு.க அந்நிகழ்வை கொண்டாட வண்ணமயமான பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தியது. அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை முதலிய தி.மு.க தலைவர்கள் உரையாற்றினார்கள். கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் திரைப்படம் மக்களுக்கு சேவை செய்யும் கட்சி தி.மு.க என காட்டவே தயாரிக்கப்பட்டது என்றார்.
1947-இல் வெளியான “ராஜகுமாரி” படத்தில் நாயகன் கருப்புச் சட்டையில் தோன்றியது தி.க தொண்டர்களை பரவசப்படுத்தியது. 1957-இல் வெளியான சக்கரவர்த்தி திருமகன் படத்தில் “உதயசூரியன்” என பெயர் தாங்கி நடித்தார்.
1963-இல் வெளியான “எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்கு “காஞ்சித்தலைவன் “ என பெயரிடப்பட்டது. இது காஞ்சியில் தோன்றிய அண்ணாவை குறிக்கும் வகையில் இத்தலைப்புச் சூட்டப்பட்டது.
1968-இல் வெளியான “புதியபூமியில்” கதிரவன் என சூரியன் பெயரைத் தாங்கி நடித்தார்.
பாடல்கள் வழியாக மட்டும் அரசியல் பிரச்சாரம் செய்த திரைப்படங்கள்...
பாடல் வரிகளிலும் எம்.ஜி.ஆர் அண்ணா புகழ் பாடினார். இதயக்கனி படத்தில் வரும் பாடல் வரிகள்;
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
“படியரிசி கிடைக்கிற காலத்திலே – நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே – நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே..”
என்ற ‘ஒளிவிளக்கு ‘ (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி (4.8 கிலோ) அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
” வாங்கைய்யா வாத்தியாரய்யா
அண்ணனின் தம்பி; உண்மையின் தோழன்
ஏழைக்குத் தலைவன் நீங்களய்யா
சமயம் வந்தது; தருமம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததையா!
”பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைச்சவரெல்லாம் போனாங்க.
மூலைக்கு மூலை தூக்கியெறிஞ்சும்
தலை குனிவாக ஆனாங்க.”
”கடமைக் கண்ணியம் கட்டுப்பாடு
காலத்தினாலே அழியாது.
சூரியன் உதிச்சதுங்க – இங்கே
காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க -இனிமே
சரியாப் போகுமுங்க…” ( நம்நாடு – 1969)
இந்த ‘நம்நாடு’ படம் மாமூல் எம்.ஜி.ஆர். •பார்முலா படமானாலும் இதில் முனிசிபல் தேர்தல் முக்கிய இடம் பிடித்திருக்கும். நடந்து முடிந்த 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் உருவகமாக இந்த முனிசிபல் தேர்தல் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது படத்தில் முனிசிபால் தலைவராக ஜெயிக்கும் எம்.ஜி.ஆர். சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயித்த அண்ணாதுரையை குறித்தார்.. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தின் பெயரும் ‘துரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் சில ‘சுருக்’ வசனங்களும் உண்டு
” பசியை தீர்க்கறவங்களா பார்த்து ஓட்டு போடுங்க.”
” யாருக்கு ஓட்டுப் போடணும்னு சமயம் வரும்போது அய்யாவே (எம்ஜிஆர்) உங்களுக்கெல்லாம் சொல்லுவாரு. ”
” குழாய் தண்ணீ வசதி கேட்டா கவுன்சிலரு ‘ஆகட்டும் பார்க்கலாம்’னு சொல்லிட்டு
போயிடறாரு ” (‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது காமராஜர் அடிக்கடி சொல்வாராம்)
முதலமைச்சராக இருந்த அண்ணா, நோய்வாய்பட்டு 1969 பிப்ரவரி 3ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து ‘ பதவி நாற்காலிக்காக திமுகவில் அடிபிடி நடக்கும். குழப்பம் வரும். தலைவனை பறிகொடுத்தக் கட்சி காணாமல் போய் விடும் ‘ என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமூகமாக கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 10-2-1969ல் பதவியேற்றார். இந்த விஷயத்தில் எதிரிகளுக்கு மூக்குடைப்பு ஏற்பட்டு தனது ஆருயிர் நண்பர் மு.க. முதலமைச்சரான மகிழ்ச்சியை எம்.ஜி.ஆர். 1970ல் வெளியான ‘எங்கள் தங்கம்’ படத்தில் ஒரு பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.ஜி.ஆர். 1967ல், தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் பிழைத்ததை சுட்டிக் காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தியபடி தொடங்கும் ” நான் செத்து பொழச்சவன்டா. எமனைப் பார்த்து சிரிச்சவன்டா…” என்ற பாடல் தான் அது.
“ வாழை போல வெட்ட வெட்ட முளைச்சி
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா;
வந்தால் தெரியும் சேதியடா
சந்தனப் பெட்டியில் உறங்கிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளங்கிறார்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டு – அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு.
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்தை
அழகுத் தமிழில் சொல்லிச் சொல்லிக் கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா; அதனால் தோல்வியில்லையடா”
ஓடும் ரயிலை வழிமறிச்சு
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ”
அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி முதலமைச்சரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு முக்கிய பங்கிருந்ததாம். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன் போன்றோரை ஓரம்கட்டி மு.கருணாநிதி ஜெயிக்க எம்.ஜி.ஆர். பெரிதும் உதவி செய்தாரென தகவல் உண்டு. 1970ல் எம்.ஜி.ஆரை கட்சியின் பொருளாளராக்கி அழகு பார்த்தார் கலைஞர்.
” சூரியன் உதிச்சதுங்க…”
இங்கே காரிருள் மறஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனி சரியா பொகுமுங்க
என்ற எம்.ஜி.ஆர் பாடல் 1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, ‘மக்கள் திலகமாக’ அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும் •போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக.இத்தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்..........
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். ‘படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்’ என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே தோற்று போகுமளவுக்கு எம்.ஜி.ஆர்., திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949-ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்ததற்கு எம்.ஜி.ஆரின் முக்கியமான...உழைப்பும் உண்டு........... Thanks.........
-
-
-
-
பேரறிஞர் அண்ணா அவர்களின் மனைவியார் ராணி அம்மாள் அவர்கள் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்று தமிழ்ப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பின்வரும் கருத்துப்பட எழுதியுள்ளார்
தம்பி கருணாநிதிக்கு,
எனக்கும் எனது குடும்பத்துக்கும் கடந்த ஆண்டுளில் பல சிறுமைகளும், கொடுமைகளும் இழைக்கப்பட்டிருக்கிறது ....ஆயினும் கசஹ்கத்துக்கு பக்கம் வரலாகாது என்பதற்காக அவற்றை மைன்று விழுங்கி சமைத்துக்கொன்று வந்திருக்கிறேன்.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நல்லவரான கருணாநிதி விளங்குவார் என்று நான் நம்பினேன், ஆனால் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களையும் இயக்கத்தை விட்டு விலகியதால் மூலம் கழகத்தை உடைத்துவிட்டார் ......அண்ணா உருவம் பொறித்த தபால் தலையை பிரதமர் வெளியீட்டபோது அவரிடமிருந்து அதை நான் பெரும் பேற்றைக்கூட நான் பெறவிடாமல் நீ தடுத்தாய்....கடைசியாக உன் அண்ணன் பெயரால் கேட்கிறேன் கழகத் தோழர்களின் அழுகுரல் ஓய, அவர்கள் அண்டடம் சிந்தும் ரத்தமும் படும் துயரமும் நிற்க, ஊழை ஆட்சி என்ற அவப்பெயர் மறைய நீயும், உனது மந்திரி சபையும் நாள் முடுக்கு வந்து, அண்ணனின் நல்ல தம்பிகள் என்பதை நாட்டுக்கு உணர்த்துங்கள்.
[ இதற்கு தி.மு.க சார்பில் கழக செயற்குழு பொதுச் செயலாளர் நாவலர் பதிலளித்தார் ........!]...... Thanks.........
-
புரட்சித் தலைவருக்கு பாரத் பட்டம் -தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு விழா
அகில இந்தியாவுக்குமான 1971ஆன் ஆண்டிற்கான சிறந்த நடிகர் பரிசை புரட்சித் தலைவர் பெற்றார். அத்துடன் "பாரத்" பட்டமும் கிடைத்தது.
இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் புரட்சித் தலைவருக்கு பாராட்டு விழா நடத்தியது. 1972ஆம் வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் செய்யப்பட்டன.
இந்த விழாவில் புரட்சி தலைவருக்கு "நடிகர் சங்க சின்னம் பொறித்த" கேடயத்தை சிவாஜி கணேசன் வழங்கி பொன்னடி போர்த்தினார்.
பல நடிகர் நடிகைகள், பட உலக பிரபலங்கள் விசாவில் கலந்து கொண்டனர். என்.டி.ஆர், ராஜ்குமார் [கன்னடம்], பிரேம் நசிர், சஞ்சீவ் குமார் போண்டா பல மொழி கலைஞர்கள் மக்கள் திலகத்தை பாராட்டி பேசினார்கள்.
தென்னிந்திய திரையுலக சார்பில் சினிமா அதிபர் நாகி ரெட்டி, எஸ்.எஸ் ஆர், இயக்குனர் ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், நடிகர் சௌகார் ஜானகி போன்றோரும் பாராட்டி பேசினார்கள்.
- "புகைப்படம் விளக்குவதற்கானதாக மட்டுமே என்று கருதவேண்டும்" ... Thanks...
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளி முதல் (01/11/2019) சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /இரவு ) நடைபெறுகிறது .
தகவல் உதவி : தங்கசாலை நண்பர் திரு.ராமு*
-
தினத்தந்தி - 01/11/2019
என்றென்றும் கண்ணதாசன்*
----------------------------------------------
கண்ணதாசனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர் .வி.பி.ராமனின் தந்தையும் ஒரு வழக்கறிஞர் .* லாயிட்ஸ் ரோடில் (அவ்வை சண்முகம் சாலை ) அடுத்தடுத்து நான்கு பங்களாக்கள் அவருக்கு இருந்தது .இதில் ஒன்றில்தான், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் , எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் சக்கரபாணியும் வாடகைக்கு குடியிருந்தனர் .
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு .* தாங்கள் குடியிருந்த வீட்டையே வாங்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை .* ஆனால் அதற்கு வாடகை தரவே வருமானம் போதாதா நிலையில் எப்படி வாங்குவது .
ஒருநாள் வி.பி. ராமனின் தந்தை எம்.ஜி.ஆரை அழைத்து வீட்டை விற்க போகிறேன் .வேறு ஒருத்தருக்கு தர மனமில்லை.* நீயே வாங்கி கொள் என்றார் .* பதிலுக்கு*எம்.ஜி.ஆர்., வாங்கணும்னு ஆசைதான் . ஆனால் இப்போ இருக்க சூழல்ல வாங்க முடியாது என்றார் .
ஏன் முடியாது. இதுவரையில் நீ தந்த வாடகையை அட்வான்ஸாக வைத்துக் கொள்கிறேன் . பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக தா என்றார் வி.பி.ராமனின் தந்தை*
அப்படி எம்.ஜி.ஆர். வாங்கிய வீடுதான் இன்றைக்கு அ.இ .அ .தி.மு.க. வின் தலைமை அலுவலமாக* இருக்கிறது .* *இதை எம்.ஜி.ஆர். நான் ஏன் பிறந்தேன்*என்கிற தான் எழுதிய நூலில் குறிப்பிட்டு உள்ளார். அதை வெளியிட்டது கண்ணாதாசன் பதிப்பகம் .
-
1967 நவ 1 தீபாவளி ரிலீஸுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னால் விவசாயி படத்தின் பிரிவ்யூ ஷோ எம்ஜிஆரிடம் போட்டு காண்பிக்க பட்டது. அதைப் பார்த்த எம்ஜிஆர் படத்தின் ஓப்பனிங் சீன் சரியில்லை, ரீ ஷீட் பண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார். படத்தின் ஓப்பனிங் சீன் விவசாயி பாடல்தான். உடனே வசனகர்த்தாவை வரச்சொல்லி விவசாயியின் பெருமையை பாடலுக்கு முன்னாடி சேர்க்க வேண்டும், அதற்கு தகுந்தவாறு வசனத்தை எழுத வேண்டும் என்றார். பின்னர் அதை உடனே ரீ ஷுட் செய்து படத்தை குறிப்பிட்ட நாளிலேயே வெளியிட்டார்.
அப்படி அவர் சேர்க்க சொன்ன வசனம்
எம்ஜிஆருடைய தாயும் தகப்பனும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியில்
என்னங்க நம்ம பையனுக்கு பொண்ணு பார்த்திட்டீங்களா என்றவுடன் அப்போது பார்த்து கல்யாண புரோக்கர் எம்ஜிஆரின் தகப்பனாரிடம் கைவசம் ஏகப்பட்ட இடம் இருப்பதாக கூறுவார்.உடனே அவரும் யாரெல்லாம் சொல்லுங்கள் என்பார்.
புரோக்கரும் பண்ணையார் மகள், ஜமீன்தார் மகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி கொண்டே போவார். சரி எதையாவது ஒன்றை பேசி முடியும் என்பார்.
புரோக்கர் உடனே ஜமீன்தார் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேணுமாம், பண்ணையார் மகளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை வேணுமாம் என்பார்.
உடனே கோபமுற்ற எம்ஜிஆரின் தந்தை வெளியே போங்கையா என்பார்.
எம்ஜிஆரின் தாய் நாள் அன்றைக்கே சொன்னேன் பையனை நல்ல படிப்பு படிக்க வைங்கேன்னு சொன்னேன் நீங்க தான் விவசாயப்படிப்பை படிக்க வைச்சிட்டீங்க இப்ப பாருங்க பொண்ணு கிடைக்க மாட்டேங்குது என்பார். உடனே எம்ஜிஆருடைய அப்பா ஏண்டி இந்த படிப்புக்கு என்னடி அந்த ஜமீன்தார், பண்ணையார்,ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடறவன் யாரு ,யாரு என்று உரக்க பேசியவுடன் தலைவர் விவசாயி, விவசாயி என பாடும் போது பறக்கும்
விசில் சத்தம் நடுவே பாட்டு உங்களுக்கு கேட்டதா ஒரு சாதாரண காட்சியை சூப்பர் சீனாக மாற்றியது தலைவருடையை திரைக்கதை அறிவு............. Thanks.........
-
இனிய மாலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
புர*ட்சித்த*லைவ*ருட*ன் சிலோன் எம்ஜிஆர் என்றழைக்க*ப்ப*ட்ட* விஜ*ய* கும*ர*ணதுங்கே!
இவ*ர் 114 ப*டங்க*ளில் ந*டித்துள்ளார். பெரும்பாலும் வெற்றிப்ப*ட*ங்க*ளே. பாட*க*ர், அர*சிய*ல் த*லைவ*ர், த*யாரிப்பாள*ர் என ப*ன்முக*த்தன்மை கொண்ட*வ*ர்.
தன*து அர*சியல் எதிரிக*ளால் 1988 பிப்ர*வ*ரியில் கொடூர*மாக சுட்டுக்கொல்ல*ப்ப*ட்டார். அப்போது இவ*ர் வ*ய*து 43 மட்டுமே. விஜ*ய* கும*ர*ணதுங்கே ம*றைந்த* பிற*கும் இவ*ர் ந*டித்த சில ப*ட*ங்க*ள் வெளியாகி வெற்றி பெற்ற*ன. த*மிழில் ந*ங்கூர*ம் என்ற* ப*ட*த்தில் லட்சுமிக்கு ஜோடியாக* ந*டித்துள்ளார்.
1984ல் ஸ்ரீல*ங்கா ம*காஜ*ன க*ட்சியை விஜ*ய*குமார*துங்கே துவ*க்கினார். இவ*ர*து மனைவி ச*ந்திரிகா குமார*துங்கே சிலகாலம் இலங்கை அதிப*ராக இருந்துள்ளார்........ Thanks...
-
“ராம்சந்தருக்கு பால் கொண்டு வாடா..!” எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்: நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -
ராம்சந்தர்
பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.
இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.
படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.
எம் ஜி.ஆர்
இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.
எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.
எம்.ஜி.ஆர்நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.
'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.
தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.
ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.
வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.
அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.
சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.
எம்.ஜி.ஆர்
கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?........... Thanks.....
-
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம் எஸ் மணியன் அன்பு ரத்ததின் ரத்தமானா உடன்பிறப்புகளுக்கு எனது இளைய மகள் s சந்தியா அவர்களின் திருமணம் 15.11.2019 திருமலையில் நடைபெற உள்ளது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் அண்ணன் சைதையார் அவர்களின் ஆசியுடன் திருமண வரவேற்பு 18.11.2019 அன்று சென்னை அசோக் நகர் m p k மஹால் லக்ஷ்மன் ஸ்ருதி அருகில் புகாரி ஓட்டல் எதிரில் மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்து ம்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் .......... Thanks...
-
-
எம் ஜி ஆருக்கு எத்தனை முகம்
அழகு காட்டும் முகம் ஒன்று
கருணை காட்டும் முகம் ஒன்று
வீரம் காட்டும் முகம் ஒன்று
பாமரனை காக்கும் முகம் ஒன்று
வள்ளலாகி தரும் முகம் ஒன்று
வெற்றி காணும் முகம் ஒன்று
எவராலும் வெல்ல முடியாத முகம் ஒன்று
எத்தனை முகம் கண்டாலும் அகத்தின் அழகான பொன்மனதின் அழகு தானே முகத்தில் பிரகாசிக்கிறது
வாழ்க எம். ஜி. ஆர் ., புகழ்.......... Thanks.........
-
உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத அதிசயம் என்னவென்றால் திரைபடத்தின் மூலம் ஒரு நடிகராக படிப்படியாக [1936-1947]உயர்ந்து தன்னுடய கொள்கைக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்து ஒரு சாதாரண மக்களின் உள்ளங்களில் குடிக்கொண்டு
திரைப்படம் காண வந்தவரை ஒரு ரசிகனாக மாற்றி ,1954ல் மலைக்கள்ளன் படம் மூலம் புரட்சி நடிகராக உயர்ந்து 1977 வரை திரை உலகில்
புரட்சி நடிகர்
மக்கள் திலகம்
வாத்தியார்
வசூல் சக்ரவர்த்தி
கலைவேந்தன்
கொடைவள்ளல்
பொன்மனச்செம்மல்
பாரத்
புரட்சித்தலைவர்
என்ற பட்டங்களை மக்கள் மன்றமும் ரசிகர் மன்றமும் வழங்கிய பாராட்டுக்களை பெற்றவர் நம் மக்கள் திலகம் .
அவர் திரைபடத்தில் ஏற்ற பாத்திரங்களும் ,கதை அமைப்பும் , பாடல்கள் , வசனங்கள் எல்லாமே சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட பிரச்சினைகளை பிரதிபலித்தது .
1950,1960,1970,1980,1987 ..... கால கட்டங்களில் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கும் மக்கள் காவலனாய் , பல நல திட்டங்கள் வகுத்து நாடோடி மன்னனில் சொன்னதை 1977ல் செய்து காட்டி 1987 வரை நல்லாட்சி புரிந்து அவர் மறைந்து 30 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆட்சி இன்றும் தொடர்கிறது .
அவரது திரைப்படங்களும் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது .
மக்கள் திலகத்தின் புகழ் ஒரு அமுத சுரபி போல் ...........
நீங்கள் சொன்னதை போல் நம் இதய தெய்வம் மக்கள் திலகம் அவரின் படங்களை மக்களும் ரசிகர்களும் எதையெல்லாம் உண்மையோ அதை மட்டும் நம்பினார்கள் .
ரசிகர்களையும் மக்களையும் என்றுமே யாரும்
ஏமாற்ற முடியாது ............ Thanks.........
-
-
கண்களும் நடிக்கும் அவரது புருவமும் நடிக்கும் என்று காலங்காலமாக கதையளக்கும் போலிகளே, இந்தக்காட்சியைப் பாருங்கள் ... தனது ஒரு காலில் காயம் உண்டாகி நடக்க முடியாமல், இருக்கும்போதும் தன்னைக் கொல்ல வரும் எதிரியை சாதுரியமாக தடுத்து அவனையே அடித்து விரட்டும் தலைவரின் சாதுரியத்தைப் பாருங்கள் ...தமிழர்களின் கலையில் இதுவல்லவோ வீரம் ... இது. இவருக்குத் தானே வருது... அப்ப இவர்தானே சூப்பர்நடிகர்... புரட்சித்தலைவரின் வீரத்தில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும்..... மதுரை எஸ் குமார்....(தாயின் மடியில் காவியம் காணொளி)...... Thanks.........
-
1979.....திரு K.A. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக மந்திரியாக பதவி ஏற்றவுடன் அவரை இருக்கையில் அமரசெய்த காட்சி .
உடன் இருப்போர் திரு சோமசுந்தரம் மற்றும் திரு நாஞ்சில் மனோகரன் .
1976ல் புரட்சிதலைவர் அவர்கள் அண்ணா திமுக கொடியினை தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கையில் பச்சை குத்திக்கொள்ள சொல்லியபோது திரு நாஞ்சிலாரும்அண்ணா திமுக கொடியினை தந்து கையில் பச்சை குத்தி .
கொண்டார் .நாஞ்சிலார் கையில் அதை காணலாம் .......... Thanks.........
-
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்.
1965-ஆம் ஆண்டில் பரங்கிமலைத் தொகுதியில் பாலம் கட்டவும், நீர்த்தேக்கம் அமைக்கவும் தந்த தொகை ரூபாய் 41,500 ஆகும்.
1968-ஆம் ஆண்டில் மட்டும் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, விழுப்புரம் கல்லூரி, செங்கல்பட்டு கல்லூரி, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, மராட்டிய மாநில வெள்ள நிவாரணங்கள், ராஜஸ்தான் பஞ்சநிவாரணம், ஒரிஸ்ஸா பூகம்ப நிவாரண மற்றம் பல நற்செயல்களுக்கும் வழங்கிய தொகை இலட்ச ரூபாய்களுக்கும் மேலாகும்.
இவ்வளவுதானா? …. 1968 – ஆம் ஆண்டே சென்னையில் தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தந்த தொகை ரூபாய் ஒரு இலட்டசமாகும்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. விழாக்களுக்கு மட்டும் பலமுறை தந்த ரூபாய் ஐந்து இலட்சங்கள்.
இவை போன்று எத்தனையோ, தமிழ்ச்சான்றோர்கள், கலையுலகப் பிரமுகர்கள், நலிந்த கலைஞர்கள் எம்.ஜி.ஆரிடம் தனிப்பட்ட முறையில் பெற்ற நிதி ஏராளம்! ஏராளம்!
தாராளமாய்க் கலியுகப் பாரிவள்ளலாம் எம்.ஜி.ஆர். கரங்கள் ஈந்த நிதிக்கு எல்லாம் பட்டியல் ஈந்தால் அதிவே ஒரு நூலாக மலர்ந்து விடும்.
இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடக் காரணம், கவியரசர் பார்த்த பார்வையில் எம்.ஜி.ஆர் இறுதி வரையில் ஈயும் மனத்தோடு இருந்தார் என்பதனைச் சுட்டிடவே என்பேன்.
அதுமட்டுமல்ல… ‘கண்ணதாசன் என்ற கவிஞரின் வாக்கு, பொய்த்ததில்லை’ என்பதனை இந்தப் தமிழ்ப்புவியும் அறியவேண்டும் என்ற ஆவலுமே எனலாம்.
கவிஞரின் பாராட்டுக் கடிதத்தில் பவனி வரும் சில சொல்லோவியங்களைப் பாருங்களேன்!
இதய கீதமாக மட்டுமா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இலட்சோப இலட்சம் மக்களின் இதய தெய்வமாக அல்லவா எம்.ஜி.ஆர் திகழ்ந்தார். இன்றும் திகழ்ந்து கொண்டல்லவா இறந்தும், இறவாயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்னும் கவியரசரின் கணிப்பைச் சற்று, காண்போமா?
இது கணிப்பு மட்டுமல்ல… 1954 – 56 – ஆம் ஆண்டுகளில் வெளிவந்த படங்கள் சரிந்திர சாதனைகளுமே எனலாம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த படங்கள் மூன்று. அவை முறையே,
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்குப்பின் தாரம்
இம்மூன்று படங்களுமே வித்தியாசமான கோணங்களில் வெளிவந்து மகத்தான வெற்றிகளை ஒரே ஆண்டில் கண்ட ஒப்பற்ற படங்களாகும்.
12.1.1956 அன்று வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியீடான, டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ தமிழில் வெளியான முதல் கலர் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் மகத்தான வெற்றி வெற்றதோடு, மதுரை ‘சிந்தாமணி’ திரையரங்கில் தொடர்ந்து, தினமும் மூன்று காட்சிகளாக 168 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது.
‘மதுரை வீரன்’ – இப்படத்தின் பெரும் பெருமைகளில், சிலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.
‘தாய்க்குப்பின் தாரம்’ 21.9.1956 அன்று வெளியிடப்பட்ட வெற்றிப் படமாகும். இப்படமும் மதுரை மாநகர் சந்திரா டாக்கீஸில் 161 நாள்கள் ஓடி, சாதனை படைத்தது. இப்படத்தின் சிறப்புகளையும் கண்டோம்.
ஆக, புரட்சி நடிகர் நடித்து 1956 – ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்று திரைக்காவியங்களும் மகத்தான வெற்றிகளைக் கண்டன என்பதனை நாம் அறியலாம்.
இனி இரண்டு படங்கள் எவை?
மலைக்கள்ளன்,
குலேபகாவலி – எனும் இவையே.
‘மலைக்கள்ளன்’, அன்றைய தமிழக அரசின் ஆஸ்தானக் கவிஞராக இருந்த நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய கதையாகும். இக்கதை பட்சிராஜா பிலிம்ஸாரின் சார்பில் திரைப்படமாகத் தயாரித்தபோது, கலைஞர் மு. கருணாநிதி, வசனங்களைத் தீட்டினார். 1954 – ஆம் ஆண்டு வெளியான இப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றதோடு, ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்ற பேற்றினையும் பெற்றது. அப்படம் கோவையில் 150 நாள்கள் தொடர்ந்து ஓடியது.
குலேபகாவலி – ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர் ராமண்ணா இயக்கத்தில் உருவானது. இப்படத்தின் பாடல்கள், வசனங்களைத் தஞ்சை இராமையதாசு எழுதினார். 1955 – ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் மகத்தான வெறியைக் கண்டது. திருச்சி பிரபாத் திரையரங்கில் இப்படம் 166 நாள்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.
பெரும் அதிசயம் என்னவெனில், இந்த ஐந்து படங்களும் இலங்கையில் பல திரையரங்குகளில் நூறு நாள்களுக்கும் மேலாக ஓடி மேன்மைமிகு சரித்திரங்களைப் படைத்துக் காட்டின.
இந்த ஐந்து படங்களில், ‘குலேபகாவலி’ தவிர ஏனைய நான்கு படங்களில் நடிப்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த பி. பானுமதியே புரட்சி நடிகருடன் கதாநாயகியாய் நடித்துப் பெருமை பெற்றார்.
தமிழ்ப்படவுலக வரலாற்றில் வசூல் சாதனைகளைச் செய்து காட்டிய இந்தப் படங்களைத் தொடர்ந்து, மக்கள் திலகம் நடித்த ஏனைய படங்களும் எல்லையற்ற சாதனைகளைச் செய்து காட்டின.
அப்படங்களின் பட்டியலைப் பாருங்களேன்.
1957 – ஆம் ஆண்டு;
சக்கரவர்த்தி திருமகள்
மகாதேவி
புதுமைப்பித்தன்
ராஜராஜன்.
இவற்றில் முதல் மூன்றும் இணையற்ற சாதனைப் படங்களே.
1958 – ஆம் ஆண்டு;
நாடோடி மன்னன்.
நம்பிக்கை நாயகனாக எம்.ஜி.ஆரை மாற்றி, நாட்டிலேயே பெரும் புரட்சியை உருவாக்கிய படமே நாடோடி மன்னன்.
1959 – ஆம் ஆண்டு;
கல்பனா கலா மந்திர் தயாரித்த , அறிஞர் அண்ணா கதை எழுதி, இராம. அரங்கண்ணல் வசனம் எழுதி, ஆர்.ஆர். சந்திரன் இயக்கத்தில், அருமையான பாடல்களோடு வெளிவந்த படமே ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற புரண்ட்சிக்கருத்துகள் நிறைந்த படம்.
புரட்சி .நடிகரோடு, ஜமுனா கதாநாயகியாக நடித்த இப்படம் எதிர்பாத்த வெற்றியை ஈட்டவில்லை.
இப்படத்தில் கவியரசரின்,
“ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புவமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்’ என்று தொடங்கும் ஒப்பற்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டு:
பாக்தாத் திருடன்
மன்னாதி மன்னன்
ராஜா தேசிங்கு
இம்மூன்றில், எம்.ஜி.ஆரோடு வைஜயந்திமாலா இணைந்து நடித்த, பாக்தாத் திருடன் பெரும் வெற்றியைப் பெற்றது.
கவியரசர் கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களைத் தாங்கி, வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ முதலில் பரபரப்பான வெற்றியை எட்ட இயலாத நிலையில் இருந்து, பின்னர் யாரும் எதிர்பாராத வெறியை ஈட்டியது. ன்றளவும் இப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் வெற்றிப்படமாகவே திகழ்கிறது.
கவியரசர் வசனத்தில், எம்.ஜி.ஆர். பானுமதி, பத்மினி, கலைவாணர், டி.ஏ. மதுரம் போன்றோர் நடித்து, மதுரை வீரனைத் தயாரித்த லேனா செட்டியார் தயாரிப்பில், டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளியான ‘ராஜாதேசிங்கு’, இஸ்லாமியக் கோட்பாடுகளில் சில சிக்ல்களால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இதன்பின்னர், ஜீபிடர் பிக்சர்ஸ் வெளியீடான ‘அரசினங்குமரி’: ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் வெளியிட்ட, கண்ணதாசன் வசனத்தில் வெளிவந்த ‘திருடாதே’; தேவர் பிலிம்ஸ் வெளியீடான ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘குடும்பத் தலைவன்’ ஆகிய படங்களெல்லாம் மக்களால் வர்வேற்கப்பட்ட மகோன்னத வெற்றிப்படங்களாய்த் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரின் புகழ்க்கொடியை ஏந்திப் பறக்க வைத்தன.
இன்னும் நம் இனிய கவிஞர் சொன்ன இதயம் கவர்ந்த கருந்துகள் ஒன்றிரண்டைக் காண்போமே! அவை நல்கும் ஒப்பற்ற செய்திகளை அறிவோமே!
1955 – 56 – ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பெற்ற ‘ராணி லலிதாங்கி’ திரைப்படத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார். தஞ்சை இராமையதாஸின் வசனம் பாடல்கள் இடம்பெற்ற இப்படத்தில், எம்.ஜி.ஆரின் இயக்கக் கொள்கைகளுக்கு மாறுபட்ட கதையமைப்பும், பாடல் காட்சிகளும் இடம்பெறத் தொடங்கின.
‘ஆண்டவனே இல்லையே!
தில்லையம்பல நடராஜனைப்போல்
ஆண்டவனே இல்லையே!’
என்ற பாடல் காட்சியில், நடிக்க இயலாது என்று எம்.ஜி.ஆர் சொல்லியும், தயாரிப்பாளர் சார்பில் விட்டுக்கொடுக்காத நிலை உருவாகியது.
உடனே, எம்.ஜி.ஆர். தான் நடித்த காட்சிகளுக்கான செலவனைத்தையும் தந்துவிட்டு, படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர் சிவாஜிகணேசன், பானுமதியோடு இணைந்து நடித்து, அப்படம் 1957 – ஆம் ஆண்டு வெளியானது.
ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில், டி.ஆர். ராமண்ணா தொடங்கிய ‘காத்தவராயன்’ படத்தில், கட்சிக்கோட்பாடுகளைக் கருத்தில் கொண்டு, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடிக்க மறுத்துவிட்டார். இது போன்று, கட்சிக் கொள்கைகளுக்காக எம்.ஜி.ஆர் பல இலட்சங்களை இழந்தார். ஆனாலும் பல இலட்சம் இளைஞர்களின் இதயங்களை எம்ழஜி.ஆர், பரிசாகப் பெற்றுத் திகழ்ந்தார் என்பது மட்டும் அன்றே பெருமைக்குரிய செய்தியாகத் திகழ்ந்தது.
புரட்சி நடிகர் தன்னுடைய கோட்பாடுகளில் இருந்து, மாறுபட்ட காட்சிகள் அமைந்து, திரைப்படம் தயாரிப்பவர்களின் மடங்களில் என்றுமே நடித்ததில்லை. 1967, 68 – ஆம் ஆண்டுகளில், அன்றைய பிரபல இயக்குநர் ஸ்ரீதர், தயாரித்து இயக்கிய ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பிலான படத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் கொள்கை கோட்பாடுகளுக்கு, மாறுபட்ட ஓரிரு காட்சிகள் படத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்து, ஸ்ரீதரிடம் வாங்கிய தொகையைக் கொடுத்துவிட்டு வந்தார்.
அதன்பின்னர், அந்தப் படம் சிவாஜி நடித்து ‘சிவந்த மண்’ என்ற பெயரில் வெளியானது. ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற தலைப்பு ஜெய்சங்கர் நடித்த வேறொரு படத்தின் பெயராகிப்போனது.
காலவோட்டத்தில் மீண்டும் ஸ்ரீதர், தனக்கு ஏற்பட்ட சோதனையான காலகட்டத்தில், புரட்சி நடிகரைப் பார்த்து உரையாடி, ‘உரிமைக்குரல்’, என்ற படத்தைத் தயாரித்து, வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
இவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்: கண்ணதாசன், எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதசக்தியைப் பார்த்து, கணித்துச் சொன்ன கருத்துகள் எனல்லாம் உண்மைகளாய், என்றும் உயர்ந்து நின்றன என்பதனை அனைவரது உள்ளங்களிலும் பதியவைத்திட வேண்டும் என்பதற்காகவே.
இன்னும், எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தபோதும்; பதவிகளில் இல்லாத போதும், சங்கத்திற்காக ஆற்றிய பணிகள் சரித்திர சாதனைகள் படைத்தனவே. அவரது பணிகளை நடிகர் உலகமே நன்கறியும், அவரது அரும்பணிகளின் அடியொற்றி, இன்றைய சங்கத்தலைவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடிகர்கள் பட்டாளத்தை ஓரணியில் திரட்டி, நடிகர் சங்கத்தையமு, கட்டடத்தையும் கடனில் இருந்து மீட்டுள்ள சாதனையை எம்.ஜி.ஆர். சார்பில் பாராட்டி மகிழ்வோமாக.
தொடரும்............... Thanks.........
-
சார் வணக்கம்.
பார் புகழும் எங்கள்
பொன்மன செல்வம்
எங்கள் மீனவ குலத்தின் வேதனைகளையும், விம்மல்களையும் இந்த
தரணிக்கே புரியும் படியாக ஆணித் தரமாகவும், அழுத்தமாகவும் தன் பண்பட்ட இயற்கை நடிப்பின் மூலமாகவும்
பாடல்கள் மூலமாகவும்,
காட்சி அமைப்புகள் மூலமாகவும் எடுத்துரைத்து பாரெங்கும் ஜெயக் கொடி பறத்தி 1964 ஆம்
வருடம் வசூல் பிரளயம்
நிகழ்த்தி அந்த வசூல்
பிரளயத்தை இன்று வரை தொடர்ச்சியாக
நிகழ்த்திக் கொண்டிருக்கும் " படகோட்டி" வெளியான
வரலாற்று சிறப்பு மிக்க
தினம் இன்று( 03/ 11/ 1964)
என்னடா இவன் ஒரு சாதாரண திரைப் படம்
வெளியான தினத்தை
வரலாற்று சிறப்பு மிக்க
தினம் என்று குறிப்பிடு கிறானே என யாரும் நினைக்க வேண்டாம்
காரணம் என்னைப் பொறுத்த வரைக்கும்
வரலாற்று தினம் என்று
குறிக்க பல காரணங்கள் இருக்கிறது
கழிந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தித் தாள்களில் எல்லோரும் ஒரு வேளை படித்திருக்க வாய்ப்பிருக்கிறது அது
என்ன செய்தி என்றால்
சமீபத்தில் அடித்த " கியார்" புயலில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச்
சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த
92 மீனவர்களை காணவில்லை என்ற
செய்திதான் அது , ஆனால் நிறையப் பேர்
அந்த செய்தியை படித்திருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் எல்லா பத்திரிக்கைகளிலும்
நான்காம் பக்கத்தில்
ஒரு மூலையில் இந்த
செய்தி பிரசுரிக்கப் பட்டதால் இதை யாரும்
ஒரு பொருட்டாகவே
மதித்திருக்க மாட்டார்கள் , எல்லோர்
கவனத்தையும் வேறு ஒரே ஒரு செய்தியை
மட்டும் படிக்கத் தூண்டும் வகையில் முதல் பக்கம் பிரசுரிக்கப்பட்ட செய்தி
நாட்டுக்கு மிகவும் முக்கியமான செய்தி
தேசத்தின் வறுமையை
போக்கும் செய்தி , ஏழைகளின் கண்ணீரை
துடைக்கும் செய்தி
வேறு ஒன்றுமில்லை
நடிகர் ரஜினி காந்துக்கு
வாழ் நாள் சாதனையாளர் விருது
கிடைத்துள்ளது
இப்படிப் பட்ட ஊடகங்களைப் பெற்றிருக்கும் நம் தமிழ்
சமுதாயம் பெருமைப் பட வேண்டாமா?
இந்த சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு செல்ல தன்
படங்களை ஒரு பாடமாக
பயன்படுத்திய ஒரு உத்தம ராசாவுக்கு இந்த
விருது கொடுக்க வேண்டியதுதான் ஏற்கெனவே பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்
பாடப் புத்தகத்தில் இவரைப் பற்றிய பாடம்
இணைத்தாகி விட்டது
எப்பேர்ப் பட்ட தியாகி
சரி அது போகட்டும்
இரண்டு வருடங்களுக்கு முன் இதே குமரி மாவட்டத்தில் " ஒகி" புயல் அடித்த போது நூற்றுக் கணக்கான
மீனவர்கள் மடிந்து போனார்கள் , இப்போதும் 92 மீனவர்களை காணவில்லை இதைப்
படிக்கும் எல்லோருக்கும்
இது ஒரு சாதாரண ஒரு
வரி செய்திதான் ஆனால் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்
தன் வீட்டுப் பிள்ளைகளை யாரால் பசி, பட்டினி இல்லாமல் யாரால்
வளர்க்கப் பட்டாமோ அந்த கடல் தாயிடமே தூக்கிக் கொடுத்து விட்டு தணலில் இட்ட
புழுவாகத் துடிக்கும் அந்த குடும்பங்களை
நினைத்துப் பாருங்கள்
கடல் தாயின் மடியில்
படுத்துறங்கி அந்த தாயின் அரவணைப்பில் மூன்று
வேளை நிம்மதியாக
கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் குமரி
மண்ணில் ஈர உள்ளங்கள் கொண்ட
மீனவ குலத்தில் தான்
நானும் பிறந்தேன்
எங்களின் வாழ்க்கை
" சுறா" என்னும் படத்தைப் போன்று வெறும் காசுக்காக முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியில் தயாரிக்கப் பட்ட படத்தைப் போல அல்ல
அது வலியும் வேதனையும் கண்ணீரையும் சுமந்து
செல்லும் ஒரு நெடிய பயணம்.
நிறைய பேர் நினைக்கலாம் ஏன் இந்த மீனவ மக்கள் எம்.ஜி ஆரை இந்த அளவுக்கு தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று
அதற்கு காரணம் இருக்கிறது , எங்களின்
வாழ்க்கை முறையையும், கடல் தொழிலில் உள்ள கஷ்ட
நஷ்டங்களையும், வேதனைக் குமுறல்களை யும் , ஒற்றுமையாக போராடினால் எல்லா
நன்மைகளையும் நம்மால் நிச்சயமாகப்
பெற முடியும் என்பதையும் கருத்துள்ள வசனங்களாலும், மனதை வருடுகின்ற பாடல்களாலும், நம் ஊரில் கூட இப்படித்தான் நடக்கிறது என்று படம் பார்க்கும் ஒவ்வொரு
மனிதனையும் சிந்திக்க
வைக்கும் காட்சி அமைப்புக்களாலும் இப்படி ஒரு படம் இது வரை வந்ததில்லை என்னும் அளவுக்கு எங்கள் மீனவ குலத்தின் பிரதிபலிப்பாக " படகோட்டி" வந்ததைப் போல எந்த படமும் இந்த 2019 வரையிலும்
வர வில்லை இனி மேலும் வரவே முடியாது
சக்தி கிருஷ்ணசாமி அவர்கள் இந்த படத்துக்கு முன்னும் படங்களில் வசனம் எழுதி நாமும் பார்த்தோம் ஆனால் அதெல்லாம் திரை அரங்குக்கு வெளியே எதிரொலித்த தில்லை
காரணம் அதெல்லாம்
வெறும் பணத்திற்கான
வெற்று அலங்கார கூச்சல்கள்
ஆனால் இங்கே சக்தி கிருஷ்ணசாமி எழுதுகிறார் பாருங்கள்
வசனங்கள்
ஒரு இடத்தில் நம்பியார்
ஆவேசமாக கேட்கிறார்
எங்க வந்து என்ன பேசுற?
அதற்கு தலைவர் சொல்லும் பதில் " என் மக்கள் கிட்ட அவங்க அறியாமையைப் பற்றி
பேசுறேன்"
அசோகன் நம்பியாரின்
உத்தரவின் பேரில் தலைவரை வெளியே தள்ள வரும் போது
தலைவர் முகமெல்லாம்
சிவக்க சொல்லுவார்
பாருங்கள் ஒரு வசனம்
தியேட்டரே ரெண்டாகி யிருக்கும் " நெருங்காதே ஜாக்கிரதை"
ஒரு இடத்தில் அசோகன்
சொல்வார் " எஜமான் உங்களை அவமானமாக இவன் பேசுகிறான் அதைப் பார்த்து நீங்கள் பொறுமையாய் இருக்கலாம் ஆனால் என்னால் இருக்க முடியாது என்று
அதற்கு தலைவர் அசால்ட்டாக சொல்லும்
வசனம்" ரொம்ப அவமான மாயிருந்தா நாக்கை புடுங்கிகிட்டு செத்துப் போயேன்"
அதே போல் தலைவர்
இன்னொரு இடத்தில்
சொல்லும் வசனம்
" இல்லாதவங்க குறைவது நன்மை
இல்லாதவங்க நிறைவது தீமை"
இதுபோல இன்னும் பல
இடங்களில் சும்மா கத்தி
சொருகுகிற மாதிரி இருக்கும் வசனங்கள்
ஒற்றுமையைப் பற்றி
தலைவர் சொல்லும் வசனங்கள் எல்லாமே
உண்மையின் உரை கல்லாக அப்படியே ஜொலிக்கும்
வாள் யார் கையில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால்
அதை வீசுபவன் கை
வலிமையையும், திறமையையும் பொறுத்துதான் சாம்ராஜ்யங்கள் அமைந்தது அது போல
எல்லோரும் வசனம் பேசலாம் ஆனால் அது
யார் வழியாக வெளியில் வருகிறது என்பது தான் முக்கியம்
அதனாலதான் எங்கள்
மீனவ சமுதாயம் என்றைக்கும் தலைவரின் அதி தீவிர
விசுவாசிகளாக இருக்க
காரணம்
படகோட்டி திரைப் படத்துக்கு முன்பு வெளியான என் கடமை
படம் தலைவர் எம். எல். சி பதவியை ராஜினாமா
செய்ததால்தான் சரியாக ஓடவில்லை என்று வீணர்கள் ஊளையிட்டார்கள் ஆனால் அதற்கு அடுத்ததாக படகோட்டி
வெளியாகி வசூலில் இமயம் தொட்டு கொடி
நாட்டியதும் ஊளையிட்ட
பதர்களின் வாய்கள் எல்லாம் பெவிக்கால் போட்டது போல ஒட்டிப் போனது
சென்னை பிளாசா 102 நாள் மற்றும் மேற்கு மாம்பலம் சீனிவாசா அரங்கு 100 நாள்
கிரவுன்72 நாள், புவனேஸ்வரி 79 நாள்
ஓடி எதிர்த்து வந்த ராத்திரி முரடர்களை ஓட
ஓட துரத்தி வரலாறு
படைத்தது
படம் என்றால் கமர்ஷியல் கலந்து கருத்துள்ள படமாகவும்
இருந்தால் மக்கள்
கொண்டாடுவார்கள்
என்பதற்கு "படகோட்டி"
ஒரு உதாரணம்
அது மட்டுமல்ல பாட்டுக்கொரு "படகோட்டி " என்று இன்று வரை மக்களை
பேச வைத்த படம் தலைவரின் "படகோட்டி"
நன்றி!.......... Thanks.........
-
1-11-1967...1-11-2019... கலையுலக நடிகர்கள், நடிகைகள், உட்பட சினிமா சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் சமுதாயத்தில், சமூகத்தில் அந்தஸ்து... பெருமை... தேடி தந்த ஒரே வள்ளலாம் மக்கள் திலகம் "விவசாயி" காவியம் வெளிவந்து... 52 ஆண்டுகள் நிறைவு பெற்று... 53 ம் வருட தொடக்கம்... 1967ம் வருடம் "தீபாவளி" நாளில் வந்த படங்களில் தலையாய வசூல் கண்டு ஏற்றம் கண்டதும்... மறு வெளியீடுகளிலும் இன்று வரை சக்கை போடு போடுவதும்... "விவசாயி"...
-
மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்
இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.
புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..
சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்
நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..
மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.
விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்........... Thanks.........
-
-
1969ம் ஆண்டின் டைரி - எம்ஜிஆர் ரசிகனின் பொன்விழா ஆண்டு மலரும் நினைவுகள் .
************************************************** ************************************************** ******************
1968 ஆண்டு என்னை போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் தமிழ் திரையுலகத்திற்கும் மறக்க முடியாத ஆண்டாக நிறைவு பெற்றது .
எம்ஜிஆரின் 8 படங்கள் வெளிவந்தது .8 படத்திலும் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார் . 3 வண்ணப்படங்கள் .5 கருப்பு வெள்ளை படங்கள் .
எம்ஜிஆரின் 100 வது படமாக ''ஒளிவிளக்கு '' 20.9.1968ல் வெளிவந்தது . ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில் , ஒளிவிளக்கு - 3 படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து விட்டது .புதியதாக எம்ஜிஆருக்கு ஏராளமான ரசிகர்களும் , ரசிக மன்றங்களும் உருவாகிய நேரம்
.
இனி ....
..
1969 டைரி .......
தினத்தந்தி , முரசொலி , சுதேசமித்திரன் , தினமணி , போன்ற தினசரி பத்திரிகைகளிலும் , சமநீதி திரை உலகம் , திரைச்செய்தி , பொம்மை , பேசும்படம் போன்ற சினிமா இதழ்களிலும் எம்ஜிஆர் நடித்து கொண்டிருந்த படங்களை பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .ஏறத்தாழ 6 மாதங்களாக எம்ஜிஆர் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்காரவேலன் , எங்கள் தங்கம் , தேடிவந்த மாப்பிள்ளை , குமரிக்கோட்டம் அன்னமிட்டகை , தலைவன் , ஒருதாய் மக்கள், என அண்ணன் சங்கே முழங்கு ஆகிய படஙக்ளில் நடித்து கொண்டு வந்தார் .
அடிமைப்பெண்
********************************
ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்த அடிமைப்பெண் 1.5.1969ல் வெளிவந்தது . ஹாலிவுட் படம் போல் அடிமைப்பெண் படம் இருந்தது என்று திரை உலக ஜாம்பவான்கள் கருத்து கூறினார்கள் .
ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்தாக அமைந்து விட்டது . வசூலை வாரி குவித்தது .திரை உலகத்தினர் அனைவரும் எம்ஜிஆரின் சாதனையை புகழ்ந்து பாராட்டினார்கள் .வெள்ளி விழா காவியமான அடிமைப்பெண் முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடத்தில் நின்றது மீண்டு 6 மாத இடைவெளி .......
நம்நாடு
*******************
7.11.1969 அன்று நம்நாடு படம் திரைக்கு வந்தது . அடிமைப்பெண் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் நம்நாடு படமும் வசூலில் கலக்கியது .
எம்ஜிஆரின் நடிப்பு , சமூக அக்கறை கொண்ட ஜனரஞ்சகமான பொழுது போக்கு படமாக வெற்றி பவனி வந்தது .
அடிமைப்பெண் மற்றும் நம்நாடு இரண்டு படங்கள் 1969ல் மக்களால் , ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட படங்களாக இருந்தது
1969 இறுதியில் எம்ஜிஆர் ரசிகர்களுக்காக ''மாட்டுக்கார வேலன் '' திரைப்படம் 1970 பொங்கல் விருந்தாக திரைக்கு வருவதை அறிந்தது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் வரவேற்க . காத்திருந்தார்கள் .
1969ல் எம்ஜிஆரின் சாதனைகள்
***********************************************.
அடிமைப்பெண் - மதுரை நகரில் வெள்ளிவிழா
தமிழகத்தில் 14 திரை அரங்கில் 100 நாட்கள்
சென்னை நகரில் 4 அரங்கில் தொடர்ந்து 400 காட்சிகள் ஹவுஸ் புல்
1969 பிலிம் பேர் - விருது
1969 தமிழ் நாடு - சிறந்த படம் விருது
காலத்தை வென்றவன் நீ - பாடல் மூலம் எம்ஜிஆரின் அரசியல் வெற்றிகளுக்கு அஸ்திவாரம் கண்டது .
நம்நாடு - ஒரு அரசியல் படம் என்ற சாதனை பெற்றது
தவறுகள் செய்யும் அனைவருக்கும் ஒரு படிப்பினை தந்த படம்
வாங்கய்யா ...வாத்தியாரய்யா பாடல் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தந்தது .
1969ல் யாருமே நினைத்து பார்க்கவில்லை .
நம்நாடு - 9 ஆண்டுகளுக்கு பின்னர் 1977ல் எம்ஜிஆர் கைக்கு கிடைத்தது . ரசிகர்கள் . தொண்டர்கள் ஆனார்கள் . சட்ட மன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . பலர் அமைச்சர்கள் ஆனார்கள் . நம்நாடு படத்தில் நடித்த எம்ஜிஆர் தமிழக முதல்வர் ஆனார் . 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக நீடித்தார் .
எம்ஜிஆரை நேசித்த
ஜெயலலிதா
பன்னீர்செல்வம்
பழனிசாமி மூவரும்
எம்ஜிஆரின் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக இருந்தார்கள் , இருக்கிறார்கள் என்பது நம்நாடு படம் தந்த வெற்றிதான் காரணம் .
1969 ல் உருவான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வெற்றிகள் 2019 லும் 50 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருவது உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் , எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை . குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்களுக்கு முழு பங்கு உள்ளது .
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் .(இறைவன் அருளால்... நாம் தான்... நாம் மட்டுமே... கொடுத்து வைத்தவர்கள் என்றால் அது மிகையில்லை...)...... Thanks..........
-
கோவை சண்முகா DTS., தியேட்டரில் புரட்சித்தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் " தொடர்ந்து 2 வது வாரம் ,வழங்கம்போல் பட்டாசு வெடித்து ,பால்அபிசேகம் செய்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்........... Thanks.........
-
-
எம் ஜி ஆராலே தமிழகம் ஏற்றம் கண்டது கல்வியில்
ப்ளஸ் டூ தந்தவர் எம் ஜி ஆர்
அண்ணா பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
அன்னை தெரசா பல்கலைகழகம் தந்தவர் எம் ஜி ஆர்
பாரதியார் பலகலைகழகம் தந்தவர் எம் ஜி ஆர்
பாரதி தாசன் பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
தமிழுக்கு பல்கலை கழகம் தந்தவர் எம் ஜி ஆர்
இன்னும் பல பல்கலைகழகம் எம் ஜி ஆர் தந்தது
வாழ்வுக்கு முக்கிய உணவை சத்துணவாக தந்து வலுவான தமிழ் சமூகம் உருவாக்கியவர் எம்ஜிஆர்
கல்வியின் பொற்க்காலம் எம் ஜி ஆர் ஆட்சி
சிலர் காமராஜ் பள்ளி கூடங்கள் திறந்தார் என வக்காலத்து வாங்கலாம் அப்போது சுதந்திரம் கிடைத்த புதிது அடிபடை கடாடுமானம் அமைகாக 20 அம்சதிட்டம் போன்ற திட்டமும் எவர் வந்தாலும் செய்யும் அடிபடை வசதிகளே அவை
தொழிற்க்கல்வி மேற்கல்வியில் புரட்சி முன்னேற்றம் தந்தவர் எம் ஜி ஆர்
வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்....... Thanks...
-