முடியாதென முடிவெடுத்த பின் முயலும்
முயற்சி முடிவை தரா.
-
கிறுக்கன்
Printable View
முடியாதென முடிவெடுத்த பின் முயலும்
முயற்சி முடிவை தரா.
-
கிறுக்கன்
Yes!Yes!
எழில்கண்டு செய்யும் தொழில்கண்டு பிறரை
மதித்தலும் மிதித்தலும் மடமை.
-
கிறுக்கன்
வாங்க! வாங்க!
vaanga seekiram vaanga..:noteeth:
நித்தம் நித்தம் நோக வைத்து
என்ன சுகம் கண்டாயோ
எந்தன் மூச்சு நின்று போனால்
நீயும் அமைதி ஆவாயோ
குத்தி குத்தி நொந்த நெஞ்சில்
குருதி வருவதை அறிவாயோ
காயம் பட்டு கல்லறை சென்றால்
உள்ளம் நீயும் குளிர்வாயோ.
-
கிறுக்கன்
இறைவா
வெட்டுபட்ட உள்ளத்தில்
ரத்தம் ரொம்ப கொட்டுதடா
மருந்தை நானும் தேடுகிறேன்
மரணவலி என்னை கொல்லுதடா
உள்ளம் நொந்து போனதனால்
உன்னை ரொம்ப தேடுதடா
ஆறுதல் சொல்லி தேற்றிட
அருகில் நீயும் வாராயோ
முடியாதென தெரிந்திருந்தும்
முட்டாள் மனம் ஏங்குதடா
மனம் கொஞ்சம் தேறிட
கனவிலேனும் வருவாயோ
சோர்ந்து போய் இருப்பதனால்
சோகம் ரொம்ப தூக்கலடா
பாரம் உன்மேல் ஏற்றிடேன்
என்னை நீயும் சகிபாயோ
-
கிறுக்கன்
இறைவா, தீர்த்துவிடு வலிகளை!
என்ன கேட்டேன் உன்னிடம்
என்ன தந்தாய் என்னிடம்
வெட்டுபட்ட நெஞ்சின்
வலி நீக்க உனைகேட்டால்
வெட்டும் கைமட்டும் மாறியது
ரத்தம் இன்னும் கொட்டியது
ஆள் மாறி மாறி வெட்டுவதை
பார்த்து பார்த்து ரசித்தாயோ
என் தாங்கும் சக்திகாண
கைகட்டி நின்றாயோ
தாங்கும் வரை தாங்கிடுவேன்
கைமீறி போயின் பொசிங்கிடுவேன்
-
கிறுக்கன்
ஏனிந்த சோதனை?