http://i64.tinypic.com/ww0w40.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' . 31.5.1952
இன்று 64 ஆண்டுகள் நிறைவு தினம் .
ராஜகுமாரி படம் தொடர்ந்து ராஜாராணி கதையம்சம் படங்களில் நடித்த மக்கள் திலகம் சமூக கதை யான
என்தங்கை படத்தில் பாசமிகு அண்ணனாக வாழ்ந்து காட்டினார்.அமைதியான , உருக்கமான ,யதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை வென்றார் .மறக்க முடியாத காவியம் .
ரிக்ஷாக்காரன் முதல் நாள். சிறப்பு காட்சி 29.5.1971.
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி மற்றும் அவருடைய அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள் .தமிழ் திரை உலக பிரமுகர்கள் பலரும்
மக்கள் திலகத்தின் எம்ஜிஆர் மன்றங்கள் - ரசிகர்கள் மற்றும் மக்கள் வெள்ளம் சூழ திருவிழா போல் அண்ணா சாலை திக்கு முக்காடியது .
முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் படத்தை ஸ்டீரியோ ஒலியுடன் , இந்த அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது .டைட்டில் மியூசிக் - சைக்கிள் ரிக்ஷா ரேஸ் - பாடல்கள் பின்னனி இசை - சைக்கிள் ரிக்ஷா சண்டை - மனோகருடன் மோதும் சண்டை - கிளைமாக்ஸ் சண்டை - காட்சிகளில் மெல்லிசை மன்னரின் பிரமாண்ட இசை யின் தாக்கம் தேவிபாரடைசில் காண முடிந்தது . அவ்வளவு அருமையாக இருந்தது .
முதல் காட்சியிலே ரிக்ஷாக்காரன் வெற்றியை அறிய முடிந்தது .எம்ஜிஆர் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நினைவானது .எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , இந்திய திரை உலகத்திற்கும் , பல பெருமைகள் இந்த ரிக்ஷாக்காரன் தருவார் என்று எதிர்பார்த்தோம் .
1972ல் எங்கள் கனவு நிறைவேறியது . 1971ல் வந்த ரிக்ஷாக்காரன் - சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது .
1971ல் வசூலில் இமாலய வெற்றி அடைந்தது .
உலகமெங்கும் பரவியிருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மீண்டும் 1972ல் ஒரு கனவு . அதை மக்கள் திலகம் 1977ல் நிறைவேற்றிவிட்டார் . மீண்டும் எங்கள் கனவு பலித்தது .
ரசிகர்களை திருப்தி படுத்துவதில் மக்கள் திலகம் என்றுமே முதல்வர் .
பல சாதனைகளை உருவாக்கிய ரிக்ஷாக்காரன் - 45 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த படத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது .