சதீஷ், நான் அப்போது சென்னையில் இல்லை. திருநெல்வேலியில் படம் வெளியாகி 2 - 3 வாரம் கழித்துதான் -(6 ம் வகுப்பு கோடை விடுமுறையில்) பார்த்தேன். படம் Central திரையரங்கில் 5 வாரம் ஓடியது மட்டும் நினைவு இருக்கிறது.
Printable View
டியர் திரு. ராகவேந்தர், திரு. கார்த்திக், திரு. பம்மலார்,
நானெல்லாம் நடிகர் திலகத்தின் பரம வெறியன், பரம ரசிகன் என்று மட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும். நீங்கள் எழுதிய பதிவுகளைப் படித்ததும், நானெல்லாம் ஒன்றுமேயில்லை என்றுதான் தோன்றுகிறது. உங்களைப் போன்ற பல லட்சக்கணக்கான ரசிகர்கள்தான் அவருடைய மிகப் பெரிய பலம். நானும் எங்கள் ஊரிலிருந்த மன்ற உறுப்பினர்களிடையே மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன்; சில காலம் உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். உங்களைப் போன்ற பல ரசிகர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன்; இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்றோர் இருக்கும் இந்த ஹப்பில் நானும் ஒரு அங்கத்தினன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி,
அருமையான கட்டுரைத்தொடரை சீராகக்கொண்டு சென்று சிறப்பாக முடித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டபோது நேர்ந்த சுவையான செய்திகள் அருமை. சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
இதுபோன்ற தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்.
அத்துடன், நடிகர்திலகத்தின் பாடல் காட்சியைக்கண்டு களிப்பதற்காக நீங்கள் பிரியமாக வைத்திருந்த சைக்கிளையே தியாகம் செய்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களது தியாகமும் ஒன்றும் குறைவானதல்ல.
ரிஷிமூலம், சத்திய சுந்தரம், அமர காவியம், கல்தூண் மற்றும் அப்போதைக்கு வெளியான படங்களைப்பற்றிய நினைவூட்டல் பதிவுகளில் நம் கள நண்பர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் அருமை. ஒவ்வொருவரும் இப்படங்களைப்பற்றி அழகாக தங்கள் கண்ணோட்டத்தில் பதிப்பித்துள்ளனர். சீரான இடைவெளி இல்லாமல், வழக்கம்போல அடுத்தடுத்து வெளியிட்டதால் வெற்றிவாய்ப்புக்கள் குறைந்தன. இவற்றில் தேறியது கல்தூண் மட்டுமே. அமர காவியம் போதிய அளவு வெற்றியை ஈட்டாமல் போனது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
நடிகர்திலகத்துடன் ரிஷிமூலம், கல்தூண் படங்களில் நடித்த சக நடிகர்களின் சோடையான தேர்வு பற்றிய விவரங்களும் ஒப்புக்கொள்ளக்கூடியதே.
டியர் முரளி,
வழக்கம்போல மதுரை நிகழ்வுகளை சுவைபடத்தந்துள்ளீர்கள். மணியன் குழுவினருக்கு கல்தூண் மூலம் மதுரையில் கிடைத்த மூக்குடைப்பு தேவையான ஒன்று, மகிழ்ச்சிக்குரியதும்கூட.
சிறந்த சிந்தனையாளரான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியும் கூட மணியனோடு சேர்ந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஜால்ரா தட்டியது வேதனையான விஷயம். ஆனால் நடிகர்திலகம் அத்தனை சதிகளையும் வென்றெடுத்தார்.
அவருக்கு ஒரே உறுதுணையாக இருந்தது, அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் படை மட்டுமே.
டியர் ராகவேந்தர்,
அமரகாவியம் பட நினைவலைகள் மனதுக்கு இதமளிக்கின்றன. ஆனால் அதன் வெற்றிவாய்ப்பு இதமளிப்பதாக இல்லை. நல்ல படம். இப்படத்தை நினைக்கும்போதெல்லாம் 'ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்' என்ற பாடல் மனதுக்குள் ரீங்காரமிடும்.
இரண்டு படங்களும் ஒரு வார இடைவெளியில் ரிலீஸானபோது, பாரதவிலாஸ், ராஜராஜ சோழன் வெளியீடுகளை நினைவுபடுத்தின. எல்லோரும் ரா.ரா.சோழனை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும்போது சந்தடியில்லாமல் பாரதவிலாஸ் வெற்றிக்கனியைத் தட்டிச்சென்ரது போல, எல்லோரும் கல்தூணை எதிர்பார்த்திருக்கும்போது, அமர காவியம் சந்தடி சாக்கில் சிறந்த வெற்றியைப்பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கல்தூணே வெற்றிபெற்றது.
அமர காவியம் படத்துக்கு தாங்கள் டிசைன் செய்ததாக நீங்கள் இங்கு குறிப்பிட்ட பதாகை எப்படி இருந்திருக்குமோ என்று ஆவல் மேலிடுகிறது. என்ன செய்வது?. இப்போது போல இப்படியெல்லாம் ஆவணக்காப்பு செய்யும் வசதிகள் அப்போது இல்லை (உதாரணம்: செல்போன் கேமரா).
நீங்களே மிகவும் சிலாகித்துச் சொல்லும்போது நிச்சயம் அது மிகச்சிறந்த பேனராகத்தான் இருந்திருக்க வேண்டும். சகோதரி கிரிஜா அப்போதே ஆக்டிவாக களத்தில் இருந்தாரா?. ஆச்சரியமாக இருக்கிறது. தவிர உங்கள் பதிவில் நீங்கள் ஸ்ரீபிரியா வீடு என்று குறிப்பிடுவது மாதவியின் வீட்டைதானே?.
மொத்தத்தில் மலரும் நினைவுகள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகின்றன.
அன்புச் சகோதரி சாரதா அவர்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
ஸ்ரீப்ரியாவுடன் தன்வானத்தை பாடலில் நடிகர் திலகம் நடிக்கும் காட்சியில் காணும் அழகூட்டப் பட்டதூண்கள் போன்று வரையப் பட்டிருந்தது. நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
திருவருட் செல்வர் சென்னை சாந்தியில் அண்மையில் திரையிடப் பட்டபொழுது ஞாயிறு 17.04.2011 அன்று மாலைக் காட்சியில் அரங்கில் நடைபெற்ற கோலாகலங்களின் ஒளிக்காட்சி தங்கள் பார்வைக்கு...
http://www.youtube.com/watch?v=K4PCubQk3tM
அன்புடன்
டியர் கார்த்திக்,
உங்களது மலரும் நினைவுகள் கண்களைப் பனிக்க வைத்தன. இவை யாவும் இதுவரை நீங்கள் சொல்லாதவை. இதயம்பேசுகிறது பத்திரிகை எரிப்புப்போராட்டம், உண்ணாவிரதப்போராட்டம், கைது, நடிகர்திலகத்தின் கைகளால் உண்ணாவிரதத்தை முடித்தது யாவும் ஆச்சரியப்பட வைத்தன. நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குப்பின்னும் இதுபோன்ற உணர்வுமிக்க சம்பவங்கள் ஒளிந்திருக்கும்.
(என் தந்தையாரும் ஒரு முறை ராணி பத்திரிகையில் வ்ந்த "சிவாஜி கணேசன் - கறுப்பு ஆடு" என்ற கட்டுரைக்காக அந்தப்பத்திரிகையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மறுநாள் விடுதலையானார். அதுபோல ஒருமுறை விலைவாசி உயர்வை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில், சைக்கிள் ரிக்ஷாவில் தோசை சுட்டு விற்கும் வித்தியாசமான போராட்டத்தை செய்தார்).
இதுபோல அன்றைய சிவாஜி ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலைவனுக்காக சிறியதோ, பெரியதோ தியாகம் செய்து இயக்கத்தை வளர்த்தனர். சிவாஜி படை என்பது வெறுமனே விசிலடித்து வளர்ந்த கூட்டம் அல்ல. அந்த வகையில் உங்கள் தியாகத்தைப்போற்றுகிறேன்.
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற இருக்கும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
http://www.metromatinee.com/gallery/...anesan7189.jpg
அன்புடன்
டியர் கார்த்திக்,
தங்களது போராட்ட பங்களிப்பு முற்றிலும் புதிய தகவலாகும். சகோதரி சாரதா அவர்கள் கூறியது போல் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் தத்தம் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் என்பதற்கு தங்கள் பதிவு ஒரு சான்றாகும். அதே போல் திரு பார்த்தசாரதி அவர்கள் தங்கள் பிரியமான வாகனத்தைத் தொலைத்ததை பெரிது படுத்தாமல் நடிகர் திலகத்தின் பாடலே முக்கியம் என்று இருந்தது எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளத்தில் ஆழமாக நடிகர்திலகம் ஆக்கிரமித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அன்புடன்
ராகவேந்திரன்
ராகவேந்திரா ஐயா,
திருவருட்செல்வர் கொண்டாட்ட ஒளிப்பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி .
கார்த்திக்,
இத்தனை நாள் இந்த விஷயங்களைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லையே! களப்பணி ஆற்றிய மன்ற மறவர் என்பது தெரியாமல் போய் விட்டதே! வாழ்த்துகள். ஆனாலும் ஒன்று! காங்கிரஸ் செயல் வீரர் கார்த்திக் இன்று கழக அனுதாபியாக மாறிப் போனதை என்னவென்று சொல்வது?
சதீஷ்,
சென்னை வரும்போது சாரதியை சந்தித்து பேசுங்கள். சைக்கிள் தொலைந்து போனது கூட தெரியாமல் சிவாஜி படம் பார்த்துக் கொண்டு இருந்ததைப் போன்ற பல சுவையான தகவல்களை அவரிடமிருந்து நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
கல்தூண் படத்தை பற்றி பதிவிட்டவர்களுக்கும் பதிவை பாராட்டியவர்களுக்கும் நன்றி.
அன்புடன்
அன்புள்ள முரளிசார்,
பாராட்டுக்கு நன்றி. குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் பற்றி இதுவரை சொல்லவில்லையே தவிர, பல ஆண்டுகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியதையும், சாந்தி வளாக ரசிக நண்பர்களுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக நேரடியாக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததையும், அத்தகைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீடுகளின்போது நடந்த சம்பவங்களையும் எல்லோருடனும், குறிப்பாக ராகவேந்தர் சார் அவர்களுடன் பலமுறை இத்திரியில் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக அவருடன் பகிர்ந்துகொள்ளக் காரணம், அவரும் அப்போது அங்கு நடந்தவைகளுக்கு சாட்சியாக இருக்கிறார் என்பதுடன், எனக்குத்தெரிந்த பல சாந்தி வளாக நண்பர்களை அவருக்கும் தெரியும். இதுபற்றி இதே பாகத்தில் சில பக்கங்களுக்கு முன் நாங்கள் பேசியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
அடுத்து கழக அனுதாபி என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கான விளக்கம். நான் எப்போதும், இப்போதும் காங்கிரஸ் அனுதாபிதான், இடையில் தமிழக முன்னேற்ற முன்னணி தொண்டனாக இருந்த காலம் நீங்கலாக, எப்போதும் காங்கிரஸ்காரன்தான். இப்போது நான் பதிப்பவை தி.மு.கழக ஆதரவுப் பதிவுகள் அல்ல. ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவுகள். ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவு எனும்போது, அது தானாகவே தி.மு.க. ஆதரவு பதிவுகளாகத் தோற்றம் தரத்துவங்கி விடும், தமிழக அரசியலில் இருப்பது இரண்டே சாய்ஸ் என்பதனால். தவிர, கருணாநிதி பற்றி எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், திரு மு.க.ஸ்டாலின் மீதுள்ள தனிப்பட்ட அபிமானம். (இவற்றையெல்லாம் பறிமாறிக்கொள்ள இந்த திரி சரியான இடமில்லையாதலால் வேறு இடத்தில் தொடருவோம்).
தவிர நான் இப்போது பணி நிமித்தம் வெளி மாநிலத்தில் இருப்பதால் (கர்னாடகாவிலுள்ள ரெய்ச்சூர்) என்னுடைய ஆதரவாலோ, எதிர்ப்பாலோ ஒரு ஓட்டுக்கூட எந்தக்கட்சிக்கும் கூடவோ, குறையவோ போவதில்லை. நான் சென்னை வரும்போது உங்கள் அனைவரையும் அவசியம் சந்திக்க வேண்டும்.
என் முந்தைய பதிவைப்பாராட்டிய ஜோ, ராகேஷ், பார்த்தசாரதி, சாரதா, ராகவேந்தர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
Good morning guys,
Some time ago Seablues requested of NT's thatuva padalgal, I have just come up with 10 songs, I believe our friends will add more and more.
1. Yaarai enge vaipathu entru (http://www.youtube.com/watch?v=fQST_...D0E878F7945FE5)
2. Neelgal aathanai perum uthaman (http://www.youtube.com/watch?v=jwf_1...2F9ED913A4A263)
3. Nallavan ennakku nane nallavan (http://www.youtube.com/watch?v=LeugMwVQFBA)
4. Thangakale naalai thalaivargale
5. Ullathai solven solvathai seiven (http://www.youtube.com/watch?v=oI-7I...eature=related)
6. valthu parka vendum
7. Nallavarkellam kallangal Ontru (http://www.youtube.com/watch?v=TdsDL...eature=related)
8. Ellorum Kondadum Allaven Perai solli (http://www.youtube.com/watch?v=_vLau...eature=related)
9. Thaiyenum Deivangal (http://www.youtube.com/watch?v=9e2Y9...eature=related)
10. Yaarada manithen enge (http://www.youtube.com/watch?v=6Ed6E...1&feature=fvwp)
Cheers,
Sathish
மறுபடியும் நீங்கள் யார் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
உ.சு.வா ஓடிய மீனாட்சி திரைஅரங்கம் ஏறக்குறைய 1300 இருக்கைகள் உள்ள திரை அரங்கு. த.ப ஓடிய சென்ட்ரல் திரை அரங்கமும் ஏறக்குறைய அதே அளவுதான்.
அது எப்படி 134 நாட்கள் ஓடிய த.ப 217 நாட்கள் ஓடிய உ.சு.வாவை தோற்கடித்தது?
விளக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.
அப்பொழுது சென்ட்ரல் திரை அரங்கில் டிக்கெட் விலையை ஏற்றி விட்டார்களா?
அல்லது தினமும் 5 காட்சிகள் ஓடியதா?
தயவு செய்து உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லவும்.
வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த நடிகர் திலகத்தின் பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு [டிவிடி] வெளியாகி இருக்கிறது. எப்போதும் இது போன்ற தகவல்களை முந்திக் கொண்டு தரும் ராகவேந்தர் சார் ஒரு சில அலுவல்கள் காரணமாக பிசியாக இருப்பதால அவரை முந்தி நான் இதை இங்கே பதிகிறேன்.
டிவிடி என்றதும் வேறு ஒரு விஷயம். கர்ணன் டிவிடி முன்பு 69 ரூபாயாக இருந்து பின்பு 109 ரூபாயாக அதிகரித்து இப்போது 199 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 30 ரூபாய்க்கு டிவிடி கிடைக்கும் காலத்தில் 199 ரூபாய்க்கு விற்கப்பட்டும் கூட கர்ணன் படத்தின் நெடுந்தகடுகள் hot cakes போல் காலியாகிறது. சனியன்று மாலை ஒரு மணி நேரத்தில் 10 டிவிடிகள் விற்றுப் போயின. மேலும் இருவர் வந்து கர்ணன் இருக்கிறதா என்று கேட்டு இல்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி போனதை நேரிடை சாட்சியாக பார்த்தேன். அடுத்த வருடம் கர்ணன் தியேட்டரில் வெளியாகும் போது வரவேற்பு எப்படியிருக்கும் என்பதை அப்போதே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.
அன்புடன்
சதீஷ் சார்,
இத்திரியின் முதல் பக்கத்தில் இருக்கும் அட்டவணையில், nov அவர்கள் எழுதிய 'பாக்கியவதி' திரைப்பட விமர்சனத்தின் இணைப்பு கிடைக்கும்.
அதில் 'கிளிக்'கி, அப்படத்தைப்பற்றி உங்களுக்கு வேண்டிய விவரங்களை அள்ளிக்கொள்ளுங்கள்.
மேற்கொண்டு, நீங்கள் கேட்டதுபோல முரளி சார் விவரித்தால் அதுவும் கூடுதல் இன்பமே.
முரளி சார்,
இன்றைய சூழலில் மற்ற படங்களெல்லாம் டிவிடி 30 ரூபாய்க்கு விலை போவதற்கே திணறிக்கொண்டிருக்கும்போது, 'கர்ணன்' திரைக்காவியத்தின் நெடுந்தகடு 199 ரூபாய்க்கு சுடச்சுட விற்பனையாகிக்கொண்டிருப்பது, அப்படத்துக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் மவுசைக்காட்டுகிறது.
தொலைக்காட்சிகளில் அப்படத்தின் பாடல் காட்சிகளும், உணர்ச்சி மிகுந்த காட்சிகளும் அவ்வப்போது கான்பிக்கப்பட, அப்படத்தின்மீது மக்களுக்கு ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இப்படம் நம்வீடுகளில் நிரந்தரமாக இருக்க வேண்டிய படம் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கி வருவதையே இது காட்டுகிறது. இது, போன தலைமுறையைச்சேர்ந்த நம் அப்பன்மார்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் என்று கூடச்சொல்லலாம்.
அவர்கள் மட்டும் இதுபோன்ற எழுச்சிமிகு வரவேற்பை அன்றைக்கு தந்திருந்தால், அன்றைக்கு கர்ணனும் பல இடங்களில் வெள்ளிவிழாவைக் கொண்டாடியிருக்கும்.
(ஆனால், மதுரை 'தங்கம்' திரையரங்கில் கர்ணன் 108 நாட்கள் ஓடியது, சென்ட்ரல் போன்ற அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியதற்கும், சுகப்பிரியா அரங்கில் பொன்விழாவைக் கொண்டாடியதற்கும் சமம் என்பது வேறு விஷயம்).
Thanks Mahesh sir,
Here is the link http://www.mayyam.com/talk/showthrea...610#post254610.
Regards,
Sathish
டியர் ராகவேந்திரா சார்,
திருவருட்செல்வர் கொண்டாட்டங்கள் வீடியோ மிகவும் அருமை .இந்த ஆதாரம் ஒன்று போதும் ,நடிகர்திலகத்தின் ஸ்டார் பவரை நிரூபிக்க .
திரு முரளி சார்,
கர்ணன் படத்தின் டிவிடி பற்றிய தகவலுக்கு நன்றி .
திரு ராஜாராம்,
தயவு செய்து இந்த திரிக்கு வராதீர்கள் .ஏனென்றால் நீங்கள் சொல்வதை கேட்க நமது ஹப்பர்கள் ஆகட்டும் அல்லது இதை ரெகுலராக படிப்பவர்களாகட்டும் யாருமே தயாராக இல்லை
டியர் முரளி சார்,
தாங்கள் கூறியது போல் வேறு சில அலுவல்கள் நிமித்தமாக இருந்ததால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. பாக்கியவதி டிவிடி மற்றும் கர்ணன் டிவிடி விற்பனை பற்றிய தங்கள் செய்திகள் நடிகர் திலகத்தின் தாக்கம் தமிழர்கள் மத்தியில் எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு சான்றாகும். அனைத்து நண்பர்களின் பார்வைக்காக இதோ பாக்யவதி பட நெடுந்தகட்டு படங்கள்
http://i872.photobucket.com/albums/a...agyavathiF.jpg
http://i872.photobucket.com/albums/a...agyavathiR.jpg
அன்புடன்
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
பாக்கியவதி DVD -ஆக வெளிவந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. மறைந்த இயக்குனர் மேதை எல்.வி.பிரசாத் அவர்களின் இயக்கத்தில் உருவான படம் இது. நடிகர் திலகம் அவர்களே முன்னொரு நாள் அளித்த ஒரு பத்திரிகைப் பேட்டியில், "நாடக நடிப்புக்கும், சினிமா நடிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை, பெரியவர் எல்.வி.பிரசாத் அவர்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்" என்று கூறியிருந்தார். நடிகர் திலகம் பிறவி நடிகர் என்றாலும், இது போன்ற நுணுக்கமான விஷயங்களை நடிகர் திலகம் பலரிடமிருந்து கற்றுக்கொண்டார் - அப்படிச் சொல்வதை விட - அதற்கு முனைப்பு காட்டினார் - பொதுவாக, சரளமாக அவர் முதல் படத்திலிருந்தே நடிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக தன் சிறகை விண் முட்டும் அளவிற்கு விரித்ததற்கு, அவரது அந்த attitude-தான் அடிப்படைக் காரணம்.
கர்ணன் - நான் இருக்கும் ஏரியாவில் உள்ள DVD-க்கள் விற்பனை செய்யும் ஒரு கடையிலும், இதையே தான், அதன் உரிமையாளர் கூறினார். இந்த நிமிடம் வரையில், அவரது கடையிலும், நடிகர் திலகத்தின் படங்கள் தான் பெருமளவிற்கு விற்பனையாகிறது மற்றும் மேலும் மேலும், ஆர்டர் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்று கூறினார். உண்மையைச் சொல்லப் போனால், புதிதாக நடிகர் திலகத்தின் படங்கள் எதுவும் முதன் முறை VCD/DVD-ஆக வந்திருக்கிறது என்றால், குறைந்தது ஒரு பத்து எடுத்து தனியே வைத்து விடுவார். என்னைப் போன்றவர்களுக்காக. மேலும், நான் அவரது கடைக்குள் நுழையும் போதே, தயாராக அந்த புதிய DVD -க்களை உடனே கொடுத்து விடுவார்.
இந்த ஒரு விஷயம்தான் - இதைப் போல் பல இருக்கிறது என்றாலும், - இந்த ஒரு விஷயம் தான் - அதாவது loyal fan base - அவரது அந்த அளவில்லாத் திறமைக்காக ஏற்பட்ட எந்த நிலையிலும் மாறாத ரசிகர் கூட்டம் - இது தான், அவரை உலகில் உள்ள மற்ற அத்தனை கலைஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
தங்கள் பதிவின் மூலம், எனது இந்தப் பதிவிற்கு ஊக்குவித்த தங்களுக்கு நன்றி.
அன்புடன்,
பார்த்தசாரதி
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
பாக்கியவதி பற்றிய திரு. முரளி அவர்களின் பதிவிற்கு என்னுடைய பதிவினைப் பதிந்து விட்டுப் பார்த்தால், இன்ப அதிர்ச்சி! கொள்ளை அழகுடன் நடிகர் திலகம் காட்சி தரும் குறுந்தகட்டின் அட்டைப்படத்தைப் பதிவிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள்.
நான் சொன்ன அந்தக் கடைக்குச் சென்று இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. இதோ, முடிந்தால், இன்று இரவே அடிக்கிறேன் விசிட்!
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் mr_karthik,
இருப்பினும் 'தேவி'யில் "அமரகாவியம்" [வெளியான தேதி : 24.4.1981], 6 வாரங்கள் வரை நன்றாகவே ஓடியது. அப்படி ஓடியதால் தான் அடுத்த 2 வாரங்கள் பகல் காட்சியாகவும் திரையிடப்பட்டு ஆக மொத்தம் 'தேவி' திரையரங்கில் 56 வெற்றி நாட்களைக் கண்டது.
"கல்தூண்" காவியத்திற்கும், "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு"விற்கும் இரு மாதங்கள் இடைவெளி.
"கல்தூண்" வெளியான தேதி : 1.5.1981 / "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு" வெளியான தேதி : 3.7.1981
[நமது நடிகர் திலகத்தின் திருமண நாளன்று வெளியான காவியம் "கல்தூண்". இதே தேதியில் [மே ஒன்று] வெளியான இன்னொரு கலைக்குரிசிலின் காவியம் "காவல் தெய்வம்(1969)". நமது நடிகர் திலகத்தின் பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று வெளியான ஒரே திரைக்காவியம் "துணை(1982)".]
['இமயம்' சாய்ந்த அன்று 'இமயம்' எழுந்தது. எப்படி?! கலையுலகின் இமயமான நமது கலைக்குரிசில் மண்ணுலகை விட்டு மறைந்த தேதியில் (ஜூலை 21/2001), திரைக்காவியமான "இமயம்(ஜூலை 21/1979)" வெள்ளித்திரையில் வெளியானது. தேதிரீதியாகக் கூட என்ன ஒரு தெய்வாதீனமான ஒற்றுமை பாருங்கள்.]
தங்களது பதிவில் உள்ள ஆதங்கம் நியாயமானது.
அன்புடன்,
பம்மலார்.
பாக்கியவதி மற்றும் கர்ணன் படத்தின் டிவிடி செய்திகள் பற்றிய எனது பதிவை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. பாக்கியவதி படத்தின் நெடுந்தகடு அட்டைப் படங்களுக்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி. இதைப் பற்றி மேலும் ஒன்று சொல்ல வேண்டும். நடிகர் திலகம் படங்களின் டிவிடி விற்பனையை பார்த்து விட்டு டிவிடி தயாரிப்பில் ஈடு்பட்டிருக்கும் பல நிறுவனங்களும் நடிகர் திலகத்தின் பல படங்களையும் டிவிடிகளாக வெளியிட்டு லாபம் அடைகின்றனர். அதாவது நடிகர் திலகத்தின் ஒரே படத்திற்கு இரண்டு மூன்று நிறுவனங்கள் டிவிடி வெளியிட்டிருக்கின்றன. உதாரணமாக திருவிளையாடல்,தில்லானா, புதிய பறவை, தெய்வ மகன், தங்கப்பதக்கம், பாசமலர், ஆண்டவன் கட்டளை, இரு மலர்கள், ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அநேகமாக நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களும் குறைந்தது இரண்டு நிறுவனங்களின் டிவிடியில் கிடைக்கிறது. வேறு எவருக்கும் இப்படி இருப்பது போல் தெரியவில்லை.
டிவிடி பற்றி எழுதும்போது மேலும் ஒரு செய்தி, நேற்று எழுத விட்டுப் போனது. டிவிடி விற்பனையில் மேலும் ஒரு சாதனை படைக்கும் படமாக கடையில் விற்பனையாளர் குறிப்பிட்டது வியட்நாம் வீடு படத்தைப் பற்றி, குறிப்பாக Moser Baer வெளியிட்ட ஒரு மூன்று பட தொகுப்பு. அதில் இடம் பெற்ற படங்கள் வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம். இந்த டிவிடி விற்பனையை இதுவரை வேறு எந்த டிவிடியும் விஞ்சியதில்லை என சொன்னார்.
அன்புடன்
ராகவேந்தர் சார்/சாரதி,
இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.
நமது ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் அளித்த பதிவுகளின்படி "பாக்கியவதி(1957)" டிவிடியாக வெளிவந்துள்ள நிலையில், 1950களில் வெளியான நமது நடிகர் திலகத்தின் 52 தமிழ்த் திரைக்காவியங்களில் கீழ்க்காணும் 9 தமிழ்த் திரைக்காவியங்கள் மட்டும் தற்பொழுது விசிடி/டிவிடி வடிவில் நமது நல்லிதயங்களால் [அடியேனையும் சேர்த்து] எதிர்பார்க்கப்படுகின்றன. [1950களின் மற்ற 43 தமிழ்த் திரைக்காவியங்களும் கம்பெனி விசிடி/டிவிடிக்களாகவே வெளிவந்துவிட்டன. விற்பனையிலும் சக்கைபோடு போடுகின்றன.]
1. பூங்கோதை(1953)
2. கண்கள்(1953)
3. மனிதனும் மிருகமும்(1953)
4. இல்லற ஜோதி(1954)
5. உலகம் பல விதம்(1955)
6. கோடீஸ்வரன்(1955)
7. நல்ல வீடு(1956)
8. நானே ராஜா(1956)
9. அவள் யார்(1959)
இவையனைத்தும் கூடிய விரைவில் நமது அன்புக்கரங்களை அலங்கரிக்கும் என்கின்ற நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.
கும்பகோணத்துக்கு அருகே உள்ள 'நகரசம்பேட்டை' பகுதியில் இருக்கும் 'கமலா' டூரிங்கில், இன்று 11.5.2011 புதன் முதல் தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தித்திக்கும் இத்தகவலைத் தந்த குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குஷியான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
சற்றேறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர், h.m.v. நிறுவனம் இந்த மூன்று காவியங்களின் பாடல்களையும் ஒரே ஒலிநாடாவில் [கேஸட்] பதிவு செய்து வெளியிட்டது. அப்பொழுது அதன் விலை 40 ரூபாய். இந்த கேஸட் மிகக் குறுகிய காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது.
ஆடியோவோ, வீடியோவோ மூம்மூர்த்திகளான பத்மநாப ஐயரும், ரஜினிகாந்தும், சௌத்ரியும் என்றென்றும் ஆராதனைக்குரியவர்களே !
இந்த அளவுகோல் நமது நடிகர் திலகத்தின் பெரும்பாலான காவியப் படைப்புகளுக்கு பொருந்தும் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
அன்புள்ள திரு. முரளி மற்றும் திரு. பம்மலார் அவர்களே,
வியட்நாம் வீடு, கெளரவம் மற்றும் தங்கப்பதக்கம் படங்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியாவதற்கு முன்னமே, இந்தப் படங்களைத் தனித்தனி குறுந்தகடுகளாக வாங்கி வைத்து விட்டதால், இந்தப் படங்கள் ஒரே குறுந்தகட்டில் வெளியானபோது, வாங்காமல் இருந்து விட்டேன்.
இவை மூன்றும், அதாவது ப்ரெஸ்டிஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த் மற்றும் எஸ்.பி.சௌத்ரி - திரு. பம்மலார் அவர்கள் குறிப்பிட்டபடி மும்மூர்த்திகள் மட்டுமல்லாது - முக்கனி - மா, பலா, வாழை - மேலும், தேனும், ஊனும், உயிரும் கலந்தவை என்றும் கூறலாம்.
அன்புடன்,
பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தாங்கள் குறிப்பிட்ட படங்களில், "இல்லற ஜோதி" படத்தை ரொம்ப நாட்களாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல பத்திரிகைகள், மற்றும், என் உறவினர்கள் மூலமாக, இந்தப் படத்தைப் பற்றியும், குறிப்பாக, அதில் வரும் "அனார்கலி" ஓரங்க நாடகத்தைப் பற்றியும், அதில் நடிகர் திலகத்தின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நடிப்பு மற்றும் வசனக் காட்சிகளையும் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க ஏங்கிக்கொண்டிருக்கிறேன் (றோம்).
என் தந்தை "நானே ராஜா" படத்தைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறுவார் (அவர் MGR ரசிகர் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.). அந்தப் படத்தில், அவர் வில்லன் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் நடிக்க ஆரம்பித்த புதிதில் வெளிவந்த படம். ஆரம்ப காலங்களில், அவர் எந்த வேடத்தில் வந்தாலும், அவர் scene stealer -aaga இருந்ததால், (எப்போதுமே அப்படித்தான் என்றாலும்), நிறைய படங்களில், அவருக்காக முக்கியமான பாத்திரத்தைப் படைத்து, (இடைச்செருகல் என்று சொல்லலாம்) மற்றவருடைய படங்களில், அவரை நுழைத்து, (வியாபார ரீதியாக படத்தை ஓட வைக்க), அந்தப் படங்களையும் சேர்த்து, ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தயாரிப்பாளர்கள், லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வகையில், அந்தக் காலத்தில், மிக முக்கியமான படம், பி.ஆர். பந்துலுவின் தயாரிப்பு, மற்றும் இயக்கத்தில் வந்த "ஸ்கூல் மாஸ்டர்" படத்தில் வரும் அந்த போலீஸ்காரர் பாத்திரம். முதலில், அந்தப் படம் கன்னடத்தில் வெளிவந்து, ஒட்டு மொத்த கர்நாடகாவையே அவரது நடிப்பு புரட்டிப்போட்டு, அந்தப் படத்தில், நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்க்க மட்டுமே மக்கள் குவிந்து, ஏராளமான லாபத்தை, பந்துலுவுக்கு கொடுத்தது எனலாம். அந்த அளவிற்கு, நடிகர் திலகத்தின் நடிப்பு அந்தப் படத்தில் இருக்கும். (பல வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன்.) அதனால், அந்தப் படத்தை, பந்துலு மலையாளத்திலும், பின்னர் ஹிந்தியிலும், எடுக்கும்போது, நடிகர் திலகத்தையே மீண்டும் மீண்டும் அந்த போலீஸ்காரர் பாத்திரத்தில் நடிக்க வைத்து மேலும் மேலும், லாபம் சம்பாதித்தார். இதைப் பற்றி மேலும், விரிவாக எழுதவிருப்பதால், இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
//இந்த பதிவை இங்கே இடு்கையில் ஜெயா தொலைக்காட்சி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் பிடித்த சிவகாமியின் செல்வன் படத்தின் மேள தாளம் கேட்கும் காலம் பாடல் காட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி சரணத்திற்கு முன்னர் வரும் இடை இசையில் சுற்றிலும் மாபெரும் மரங்கள் சூழ்ந்திருக்க நடுவில் சரிவான பாதையில் நடிகர் திலகம் அந்த இசையின் தாள லயத்திற்கேற்ப மான் போல துள்ளி வருவார்.எப்போதும் ரசித்துப் பார்க்கும் அந்த காட்சியை இன்றும் ரசித்துப் பார்த்தேன்.//
முரளி சார்,
அந்தப்பாடல் ஒளிபரப்பானபோது நானும் ஆர்வத்துடன் கண்டுகளித்தேன். ஏனென்றால் அடிக்கடி ஒளிபரப்பாகாத பாடல் மட்டுமல்ல, மிகவும் அருமையான பாடலும்கூட. அப்படத்தின் பாடல்களை வரிசைப்படுத்தினால், முதலிடம் பெறும் பாடலும் இதுதான்.
அழகிய ரோஸ் கலந்த சிவப்பு வண்ண கோட் சூட்டில் நடிகர் திலகம், உள்ளே பூப்போட்ட டிசைனில் சட்டை, அழகான நேர்த்தியான மேக்கப், சிறந்த ஜோடிகளில் ஒருவரான வாணிஸ்ரீ, அழகான வண்ண ஒளிப்பதிவு, அழகான லொக்கேஷன், குளோஸ்-அப், மிட்லாங் ஷாட், லாங்ஷாட் என்று வகை வகையாக அசத்தும் சி.வி.ஆர். எல்லாமே இப்பாடலின் சிறப்பு.
சிவாஜி வாணிஸ்ரீ ஜோடிப்பாடல் என்றாலே உடனே எல்லோரும் 'மயக்கமென்ன, இந்த மௌனமென்ன' பாடலையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல், இதுபோன்ற ரம்மியமான பாடல்களையும் சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்.
சில நாட்களுக்கு முன் இதே சகோதரி t.m. ஸ்ரீதேவிதான், இதே ஜோடியின் இன்னொரு அருமையான பாடலான 'அலங்காரம் கலையாத சிலையொன்று கண்டேன்' (ரோஜாவின் ராஜா) பாடலையும் ஒளிபரப்பினார்.
Prabhu Sir, now Dr. Prabhu Ganesan.
http://i872.photobucket.com/albums/a...ationforPB.jpg
More photos and info to be added shortly at www.ilaiyathilagamprabhu.com.
Raghavendran