Quote:
ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை - சந்தோஷியின் அனுபவம்!1
பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை, பெரிய திரையில் நடித்து வருகிறார் சந்தோஷி, தற்போது இளவரசி தொடரில் ஹீரோயினாகவும், 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையாராகவும் நடித்து வருகிறார். ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்கிறார் சந்தோஷி. இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது... அம்மு தொடர் மூலமாக அறிமுகமானேன் அப்போது எனக்கு 18 வயசுதான். அதற்கு பிறகு நிறைய தொடர்களில் நடித்தேன். ராதிகா மேடத்தின் அத்தனை தொடர்களிலும் நடித்தேன். திடீர்னு பிரண்ட்சுங்க சினிமா ஆசையை தூண்டி விட்டாங்க. ரொம்ப எதிர்பார்ப்போட பாபா படத்துல நடித்தேன். முதல் படமே சூப்பர் ஸ்டார் படம் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும்னு நினைச்சேன். படம் தோல்வி அடைந்ததால் சினிமா வாய்ப்பும் இல்லாமல் சீரியல் வாய்ப்பும் இல்லாமல் தவிச்சேன். இடையில் உன்னை சரணடைந்தேன், ஆசை ஆசையாய் படங்களில் தங்கை கேரக்டரில் நடிச்சேன். அதிலிருந்து தங்கை கேரக்டர்களாக குவிந்ததால் போரடித்து சினிமாவிலிருந்து ஒதுங்கினேன்.
பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராதிகா மேடம் கைகொடுத்தாங்க. இளவரசி தொடர் மீண்டும் லைஃப் கொடுத்தது. அதில் ஜோடியாக நடிச்சவரே நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானார். இப்போது 63 நாயன்மார்கள் தொடரில் காரைக்காலம்மையராக நடிக்கிறேன். மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏற்றமும், ஏமாற்றமும் நிறைஞ்சதுதான் வாழ்க்கை இரண்டையும் ஏத்துக்கிட்டு வாழ பழகணும் இது என்னோட அனுபவம். என்கிறார் சந்தோஷி.