Your grandma must have more expressive than mine!!! :D
Printable View
Your grandma must have more expressive than mine!!! :D
# 280 & #282 :clap: :clap:
appaa...so manyyyy that are soo apt!!!
Suvai, Yes many are very apt even today.
283. மாடு மேய்க்காம கெட்டது, பயிர் பாக்காம கெட்டது.
284. போரோடு திங்கிற மாட்டுக்கு புடுங்கி போட்டா கட்டுமா?
ஆஹா!
285. ஊம போல இருந்துகிட்டு எரும போல சாணி போடுறான்.
286. கரும்ப கட்டோடு வச்சா எறும்பு தானே வரும்.
287. நத்தையின் வயிற்றிலும் முத்து பிறக்கும்.
288. தூங்குற பசு பால் கறக்காது.
289. அப்பன் சோத்துக்கு அழுகுறான், புள்ள கும்பகோணத்துல கோதானம் செய்யுறான்.
290. யான மேல போறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டது மாதிரி.
291. அமாவாச இருட்டுல பெருச்சாளி போனதெல்லாம் வழி.
# 285 :clap: it also sounds funny :rotfl:
thanks nga punnaimaran...some of them enaku puriyala but i am sure they must be equally valued....:-)
சுவை,
புரியாததை கேட்டு தெரிந்து கொள்ளலாமே!!
292. அஞ்சு காசுக்கு குதுரயும் வேணும், அதுவும் ஆத்த கடந்து பாயவும் வேணும்.
293. ஆயிரம் பொன்னுக்கு வாங்குன குதுரக்கும் சவுக்கடி உண்டு.
294. யானய பாக்க கண்ணாடியா?
295. ஆயிரம் காக்காவுக்கு ஒரு கல்லு.
296. அத்திப்பூவ பாத்தவன் உண்டா, ஆந்த குஞ்ச கண்டவன் உண்டா?
தங்கசுரங்கம் மாதிரியில்ல இருக்கு!!!
297. யானய சீதனமா குடுத்தாலும், தொறட்டி தரலியேன்னு ஆவலாதி சொன்னாளாம் மாமியாக்காரி.
298. சோத்துக்கு வழியில்லாத வீட்டுல காக்கா கஞ்சிக்கு கரஞ்சுதாம்.
299. பசு வேற நெறமானாலும், பால் வேற நெறமாகுமா?
300. யான விழுந்தா கொம்பு, புலி விழுந்தா தோல்.