Quote:
உலக திரைச் சரித்திரத்தில் எந்த ஒரு கதாநாயகனும் எடுத்தவுடன் உச்சகட்டப் புகழை எட்டிப் பிடிக்க முடிந்ததில்லை. உலகின் மிகப்பெரிய ஹீரோக்கள் வரிசையில் வருபவர்கள் சார்லி சாப்ளின், ஹம்ப்ரி போகார்ட், கேரி கிராண்ட், ஜேம்ஸ் பாண்ட் ஷான் கானரி, மார்லன் பிராண்டோ, கிரகரி பெக், புரூஸ் லீ.....
யாருமே ஒரே இரவில் நடிகர்திலகம் நடத்திக் காட்டிய மந்திர நிகழ்வான நட்சத்திர நாயகர் அந்தஸ்தை எட்டிப் பிடித்ததில்லை! சிறு வேடங்களில் தோன்றி படிப்படியாக வளர்ந்து ஆறேழு வருடங்களுக்குப் பிறகே மக்கள் மனதில் ஒரு இனிமையான நிலையான வரவேற்பைப் பெற முடிந்தது !
நடிப்பிலக்கணத்தின் தொல்காப்பியராக நடிப்பின் அடியும் முடியும் கண்டிட இயலாத விசுவரூபதாரியாக ஒரே படத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் கலைக்குரிசிலாம் நடிகர்திலகம் மட்டுமே !
படிப்படியாக ஹீரோ ஸ்தானத்தை அடைந்தவர்கள் அந்த புகழ்த் தேனை அருந்துவது சொற்பகாலமே மீண்டும் படிப்படியாக இறக்கம் கண்டு வில்லன் குணசித்திர நடிகர் காமெடியன் துணை நடிகர் என்றெல்லாம் இறக்கமடைந்து இறுதியில் ஜீரோ ஆனவர்களே அதிகம் ஹீரோ டு ஜீரோ சகஜமே !! ஆனால் அமரத்துவம் அடைந்த பின்னரும் மக்களின் இதய சிம்மாசனத்தில் தனது ஹீரோ ஸ்டேட்டசை இக்கணம் வரை பசுமரத்தாணி போலப் பதித்திட்ட நடிகர்திலகமே ஹீரோக்களின் ஹீரோ என்ற சாகாவரம் பெற்ற சிரஞ்சீவிக் கலைஞர் !
பாகுபலி புயல் கரை கடக்கும் நேரத்தில் நமது மகாபலி தென்றலாம் கட்டபொம்மனாரை வரவேற்றிட அத்தப் பூக்கோலமிட்டு வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம் !