-
எஸ்வி சார்,
என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அதே கண்களுடன் வந்ததற்கு உங்களுக்கும், திரியை சுவாரச்யமாக்கும் மகேந்திரராஜ் , அருமையாய் விமரிசங்களுடன் தூள் பரத்தும் ராகுல் , எண்ண ஓட்டங்களுக்கு எல்லையில்லா கார்த்திக் ஆகிய நாலு பேருக்கு நன்றி.அந்த நாலு பேருக்கு நன்றி.
-
நடிப்பு போன்ற நேரடி பங்கெடுப்பு இல்லா துறைகளில் ஒருவர் புகழ் மற்றோருக்கு செல்வது திரைப்படத்தில் வாடிக்கை.
1)பல கவிஞர்கள் பங்கெடுப்பு ஒரே படத்தில் இருக்க நேர்வதில் குழப்பம்.
2)ஒரு படத்திற்கு ரெகார்ட் செய்ததை இன்னொன்றிற்கு உபயோக படுத்துவது. உதாரணங்கள்-
குங்கும பூவே சபாஷ் மீனாவிற்கு லிங்கப்பாவால் இசையமைக்க பட்டு பிறகு மரகதத்தில் சுப்பையா நாய்டு பேரில் வெளியானது.
புத்தம் புது மேனி இசை தேடி பாடல் (ரீதி கவுலையில் சின்ன கண்ணனுக்கு முன்னோடி)லிங்கப்பாவால் இசையமைக்க பட்டு மகாதேவன் பெயரில் சுபதினத்தில் வெளியானது.
மயக்கும் மாலை மகாதேவனால் கூண்டுக்கிளிக்கு இசைக்க பட்டு msv -tkr பெயரில் குலேபகாவலியில் வெளியானது.
பால் வண்ணம் பருவம் கண்டு msv -tkr இசையமைத்து சுப்பையா நாயுடு பெயரில் திருடாதே படத்தில் வெளியானது.
பாட்டும் நானே பாவமும் நானே பாடல் கா.மு.செரிப் என்ற கவிஞர் எழுதி கண்ணதாசன் பெயரில் வெளியானது.
அதனால் வாலியே சொன்னதை ஏற்று கொள்வதே சிறந்தது.
-
courtesy -Written by Thurai · Filed Under Cinema News
1964-ல் காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க வாய்ப்பளித்த போது ஸ்ரீதர் இவருக்கு ராமன் என்ற பெயரை ரவிச்சந்திரன் என மாற்றினார். இரண்டு வருட ஒப்பந்தத்தில் மாதம் ரூ. 500 பிறகு ரூ. 750 என சம்பளம் வாங்கினார். அப்போது ஒரு பவுன் தங்கம் விலை 75 ரூபாய்தான். சில வருடங்களுக்கு பின் மாத சம்பளத்தை ரூ. 1000 ஆக உயர்த்தினார். இயக்குனர் ஸ்ரீதர் முன் நின்று பேச பெரிய நடிகர்களே தயங்கிய சமயத்தில் முதல் சந்திப்பிலேயே தைரியமாகவும் ஸ்டைலாகவும் பேசி கவர்ந்தார்.
தமிழ் சினிமாவின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படமான காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகம் ஆனார். இவருடன் முத்துராமன், ராஜஸ்ரீ, சச்சு, பாலையா, நாகேஷ் போன்றோர் இணைந்து நடித்தனர். இப்படத்தில் வரும் விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. பிறகு கே.ஆர்.விஜயாவுடன் நடித்த இதயகமலம் படம் வெற்றி கண்டது. அதில் வரும் நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போபோ போ, உன்னை காணத கண்ணும் கண்ணல்ல பாடல்கள் ரசிகர்களின் நாடிநரம்புகளில் ஊடுருவியது.
அதே கண்கள் திகில் படத்திலும் கலக்கினார். நான், குமரி பெண், பாக்தாத் பேரழகி, மோட்டார்சுந்தரம் பிள்ளை, மகராசி உள்பட 15 படங்களில் இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார். இவர்கள் கூட்டணியில் இடம் பெற்ற படங்களின் பாடல்கள் பிரபலம். பாக்தாத் பேரழகி படத்தில் நிஜமான சிங்கத்துடன் நடிக்க வேண்டியதாயிற்று. ரவிச்சந்திரன் பயந்தார். அவருக்கு தைரியம் சொல்லி ஜெயலலிதா சிங்கத்தின் அருகில் சென்று பழகி காட்டினார்.
அப்போது ஜெயலலிதாவின் தைரியத்தை கண்டு வியந்தார். திரையுலகில் கத்திச் சண்டை, குதிரை சவாரி போன்ற சாகசங்கள் தெரிந்தவர் விஜயபுரி வீரன் சி.எல்.ஆனந்தன். அவருடன் குதிரை சவாரி செய்து கல்யாண மண்டபம் என்ற படத்தில் நடித்தார்.
திரையுலகில் பாட்டு பாடி, சண்டை போட்ட நாயகன் ரவிச்சந்திரன் எங்க பாப்பா படத்தில் நான் பாட்டால் அடிப்பேன் ஓடி என்று பாடிக்கொண்டே சவுக்கால் அடிப்பார். நான் படத்தில் காரிலும், குமரிப்பெண் படத்தில் சைக்கிளிலும், மதராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ்சிலும், காதல் ஜோடி படத்தில் மாட்டு வண்டியிலும் பாடல்களை பாடி நடித்துள்ளார்.
ஸ்ரீதர், டி.ஆர்.கோ பண்ணா, கே.ஆர்.பாலன், ஏ.வி.எம். போன்ற பிரபலங்கள் முதல் அண்ணா, கலைஞர் கருணாநிதி வரை எல்லா முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் படங்களை பண்ணிய பெருமை இவருக்கு உண்டு.
ரவிச்சந்திரனின் அழகு, ஸ்டைல் அப்போதைய இளம்பெண்களை கவர்ந்தது. ரவிச்சந்திரன் வாழ்கையை சினிமா எடிட்டரும், எழுத்தாளருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் டாகுமெண்டரி படமாக எடுக்கிறார். 5 மலையாள படங்களில் ரவிச்சந்திரன் நடித்தார்.
-
When AV Meyappa Chettiar visited Malaysia somewhere in the seventies he visited the Radio & Television Malaysia. He was introduced to Bairoji Narayanan, a senior broadcaster in the Tamil Radio section. He was the elder brother of Ravichandran and an encyclopedia of all things Tamil films and listeners eagerly await his weekly round-up of current affairs of the Tamil cinema on the radio. But AVM appeared to be ignorant of the name of Ravichandran until his aide explained to him that he was the hero of 'Athey Kangal'. He just nodded like in courtesy and went on to talk something else much to the embarrassment of Bairoji Narayanan. Most of those around him expected AVM to express his pleasure in meeting a popular actor's brother but were disappointed. Perhaps it was below his station of life to engage in small talk on an artiste - that was the opinion of those present.
By the way, when Ravichandran was offered the role in 'Kathalikka Neramillai' he sought the advice of his brother, Bairoji Narayanan first. He wrote an urgent letter to him because of the latter's vast knowledge on the Tamil film industry. Bairoji, although disappointed that his brother will have to give up his medical studies, encouraged him to take up the offer. The reason he advanced was that the offer came from Sridhar who was the top-most director at that period of time and he can mould his future career in acting. Only after receiving the reply from his brother did Ravichandran commit to act. This piece of
info was revealed by Ravichandran himself.
-
Dear Mahendra Raj,
Thanks for your postings. It is very interesting to note that the producers like Vasan,AVM,Sundaram all looked down upon Actors and other Technicians with Feudal mentality forgetting the fact that they obtained their fame thru Cine field but they considered the crew inferior to them.
-
Esvee Sir,
Thanks for your regular contributions. I am expecting some Rare Photos of Ravi.
-
மாடி வீடு மாப்பிள்ளை
இந்த படம் ரவிச்சந்திரன் படம் என்று போன வாரம் வரைக்கும் எனக்கு தெரியாது . திடீர் என்று நிறைய ரவி படம் தேடும் பொது சிக்கின படங்களில் இதுவும் ஒன்று
இன்று தான் இந்த படம் பார்த்தேன் பார்த்த உடன் சுட சுட எழுத தொடங்கி விட்டேன்
இந்த படத்தின் ஆரம்பத்தில் காலேஜ் ஆண்டு விழாவில் மாறுவேட போட்டியில் ஜெயலலிதா ஜெயிக்கிறார் . கடைசியில் ஒரு பிச்சக்காரன் வந்து அனைவரையும் கவர்கிறார் . அவர் தான் ரவி , என்ன எங்கோ பார்த்த காட்சி போல் தெரிகிறதா ஆம் குமரி கோட்டத்தில் எது போன்ற காட்சி இருந்தது
தொடரும் காட்சியில் நாம் ரவி யின் குடும்பத்தை பற்றி பார்க்க நேர்கிறது . ரவி ஒரு ஆனதை. அவர் தங்கை இறந்து விடுகிறார் . ரவி தன் மாமா VKR யின் ஆதரவில் வளர்கிறார். VKR ஒரு பண பேய் .VKR மகள் ரமாபிரபா அவர் கணவர் நாகேஷ் .
ஜெயா வின் தந்தை அவர் மகள் ரவி யை காதலிப்பதை தெரிந்து கொண்டு , ரவியை மாப்பிளை கேட்டு வருகிறார் . VKR 10,000/- ரூபாய்க்கு ரவி யை மேஜர் விடம் வித்து விடுகிறார் .
மேஜர் யின் மனைவி தன் அண்ணன் மகன் பாலாஜிக்கு தன் மகள் ஜெயா வை திருமணம் செய்து கொள்ள திட்டம் போடுகிறார்
ஆனால் மேஜர் யின் அதரவு ரவிக்கு இருப்பதால் ரவி மாப்பிளை அகுகிறார் .
தொடர்ந்து ரவி யின் வீடு ஆட்கள் அவமான படுத்த படுகிறார்கள் , ரவியும் அவமானத்தை சகித்து கொள்கிறார் . ரவி ஆபீஸ் நிர்வாகத்தில் தலை இடுவதை TS முத்தையா ஜெயா வின் அம்மா விடம் திரித்து சொல்கிறார் .
பாலாஜி ஒரு பெண் பித்தார் . அது அவர் தந்தை
முத்தையாவுக்கும் தெரியும்.
ஒரு கலை நிகழ்ச்சி யில் ரவி தன் தங்கையை பார்க்கிறார் . அவர் மூலம் பாலாஜி தான் தன் தங்கையின் கணவர் என்பது தெரிகிறது .
ரவி தான் தங்கை உடன் பேசுவதை ஜெயா தப்பாக நினைக்க , அந்த நேரம் பார்த்து முத்தையா குழி பறிக்க , ஆபீஸ் யில் ரவி யின் அதிகாரம் குறைகிறது , தொடர்ந்து அவமான படுகிறார் (குழந்தையும் , தெய்வமும் போலே )
ரவி மாறுவேடம் போட்டு உண்மையை கண்டுபிடிக்கிறார் . இதற்க்கு இடையில் மேஜர் தன் சொத்தை ரவி யின் பெயர் யில் எழுதி வைக்கிறார் .
நாகேஷ் உண்மை யை கண்டு பிடிக்க உதவுகிறார் , முடிவில் ரவி நல்லவர் என்பதை நிரூபிக்கிறார் நாகேஷ் . பாலாஜி ரவி யின் தங்கையை கல்யாணம் செய்து கொள்கிறார் .
முழு நீள குடும்ப சித்திரம் . காமெடி kku நாகேஷ் , VKR இருந்தும்
காமெடிக்கான space ரொம்ப கம்மி . சில படங்களின் சாயல் நன்றாக தெரிகிறது .
ரவி வழக்கமான தன் துள்ளல் பாணி யில் இருந்து கொஞ்சம் subtle performance கொடுத்து இருக்கிறார் . ஜெயா திமிர் பிடித்த பெண் அக இல்லாமல் , அப்பாவி அகவும் இல்லாமல் , ஒரு balanced கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் . நாகேஷ், VKR வரும் காட்சியில் கொஞ்சம் relief கொடுகிறது .
மேஜர் மிகை இல்ல நடிப்பில் நிலைத்து நிற்கிறார் . முத்தையா silent killer . இவர் யை திரைஉலகம் சரியாக பயன் படுத்த வில்லை என்பது என் கருத்து . பாலாஜி வில்லன் அவளாவே .
கதை : சதசிவப்ரம்மம்
வசனம் : AL நாராயணன்
பாடல்கள் : கண்ணதாசன்
இசை : சலபதி ராவ்
தயாரிப்பு : AV சுப்ப ராவ்
இயக்கம் : சாரி
-
Magendraraj sir,
Thanks for discussing about Enga pappa song and tid bits about kadhalikka neramillai and Athey kangal
I cannot write about athey kangal for some time as I had to search other info about the movie as ESVEE sir and urself has given so much info
good job sir
-
Esvee sir,
Ur tidbits about Ravi saar was informative
you are a veteran
nice to see your posts
-
after writing about some relatively unknown movies now
for some time
shall write about known movies of ravi sir