Quote:
திருப்பங்களுடன் `பராசக்தி'
வசந்த் டிவியில் 150 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது `பராசக்தி' தொடர்.
சொத்துக்கு ஆசைப்பட்ட அப்பாவின் கட்டாயத்தால் சாந்தியின் கழுத்தில் தாலிகட்டுகிறான், கவுதம். தன் காதலியின் ஆலோசனைப்படி சாந்தியை தேனிலவுக்கு அழைத்துச்சென்று அங்கு அவளை கொலை செய்யத் திட்டமிடுகிறான்.
கவுதமின் குடும்பத்தைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மாணிக்கமோ, சாந்தி - கவுதம் தேனிலவுக்காக கேரளா செல்வதையறிந்து சாந்தியைத் தீர்த்துக்கட்ட அவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறான், சாந்தி தன் மகள் என்று தெரியாமல்.
இந்நிலையில் சாந்தியால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட அவளது அத்தை ஆண்டாளும் சாந்தியை பழிவாங்க தனக்குத் தெரிந்த கேரள மந்திரவாதி மூலம் மந்திராலோசனை நடத்துகிறாள்.
தன்னை மூவர் கொலை செய்யத் திட்டமிட்டதை அறியாத சாந்தி கணவனுடன் கேரளா செல்கிறாள். கணவனை நம்பி அவனுடன்தேனிலவுக்கு சென்ற சாந்தியை கவுதம் கொலை செய்தானா? மாணிக்கத்தின் பிடியில் இருந்து சாந்தி தப்பித்தாளா?
ஆண்டாள் அனுப்பிய மந்திரவாதி சாந்தியை என்ன செய்தான்...?
கேள்விகளுக்குப் பதிலாக, திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பராசக்தி தொடர்.
சாந்தியாக சித்தாரா, கவுதமாக ஷியாம் கணேஷ் நடிக்கிறார்கள்.
தொடரை வசந்த் டிவிக்காக மீடியா அசோசியேட்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார், பி.ராஜபாண்டி.