தானே தன்னை பகையாது
தன்னை தானே இழியாது
தானே தனக்கு நண்பனென்று
தன்னை தானே தெரிந்தவன்
தாழான் என்றும் தரணியில்
தேனாய் இனிக்கும் அவன் இல்
https://encrypted-tbn2.gstatic.com/i...Dk7ryHPsL4zlbu
நன்றி : பகவத் கீதை
Printable View
தானே தன்னை பகையாது
தன்னை தானே இழியாது
தானே தனக்கு நண்பனென்று
தன்னை தானே தெரிந்தவன்
தாழான் என்றும் தரணியில்
தேனாய் இனிக்கும் அவன் இல்
https://encrypted-tbn2.gstatic.com/i...Dk7ryHPsL4zlbu
நன்றி : பகவத் கீதை
இல்லை என்பார்க்கு இல்லாதவன்
இருக்கிறான் என்பார்க்கு வழங்குபவன்
கண்ணால் காண முடியாதவன்
எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவன்
தலைவனுக்கு தலைவனாய் தலைமையேற்பவன்
அடிமைக்கு அடிமையாய் உழைப்பானவன்
பிறப்பும் இறப்பும் கொள்ளாதவன்
எதையும் தனக்கு கொள்ளாதவன்
எல்லா உருவும் எடுப்பானிவன்
அவனையே நாம் தேடுவோம்
நம்முள்ளே அவனை நிறுத்துவோம்
நிறுத்துவோம் ஆணின் அகங்காரத்தை
நடக்கும் அக்கிரமத்தை அடக்குமுறையை
நஞ்சாய் படிந்த அவன் அழுக்கு புத்தியை
நரகமாய் மாறிய நங்கையர் நாட்களை
இந்த நேரத்தில் இன்ன நபருடன் சென்றாய்
வன்புணர்ந்தபோது அடங்காது திமிறினாய்
அதனால் கொன்றோம் இதுவே தொடரும்
சாகக் காத்திருக்கும் விலங்கின் வாக்குமூலம்
தூக்குக்கயிறு போதாது போதவே போதாது
எப்படி நொடியில் இவனை கொல்லலாம்
எண்ணெய் கொப்பரை சுண்ணாம்பு காளவாசல்
குலை நடுங்கும் பல்வேறு சித்திரவதைகள்
தரவேண்டாமா இதயமற்ற இக்கயவர்க்கு
இதயமற்ற இக்கயவர்க் கென்ன வேண்டும்..
நான் கேட்கின்றேன்
இப்படி பலவிதமாய்
மக்களின் பணத்தை செலவு
பலவாறாய்ச் செய்கிறார்களே..
நான் கேட்கின்றேன்
ஏன் அப்படி..
நான் கேட்கின்றேன்..
பேச்சாளர் திரும்பக் கேட்டபோது
எழுந்த்து குரல்
உங்களுக்கும் வேண்டுமா பங்கு
காதில் விழுந்த்தாலோஎன்னவோ
முடித்தார் விரைவாக பேச்சை...
பேச்சைக்குறை கூறாதே குறை
எண்ணியே கூறு எதையும் ஆழமாய்
ஏச்சு வேண்டாம் என்றுமே அது பகை
மிகை வேண்டாம் வேண்டுமே புன்னகை
மற்றவரை அறிந்து உண்மையை புரிந்து
மயக்கமின்றி பேசுதல் மாந்தர்க்கு அழகு
https://encrypted-tbn3.gstatic.com/i...qc7kGPLcZcko-H
அழகுதனைக் காட்டிவிட்டே சற்றே ஓடி
...ஆடித்தான் மறைந்துவிட்டாய் நினைவி லுண்டா..
பழகுதற்கு இனியகுரல் பார்வை மட்டும்
.. பளபளத்து அங்குமிங்கும் சுற்றி ஓடும்
வளமுடனே விகசிக்கும் இளமைத் துள்ளல்
...வாகாக உடைநடையில் தெரியும் அன்றோ
கலகலப்பாய்ச் சிரித்திருந்தாய் அந்தக் காலம்
...கண்களிலே ஈரமின்று ஏனோ சொல்வாய்
என்னவெல்லாம் பேசுகிறாய் போடா போப்போ
...ஏதேனும் தெரியாமல் இருந்த காலம்
எண்ணமெலாம் சிறுவயதில் உந்தன் பின்னே
...ஏந்திழையாய்த் தொடர்ந்திருந்த காலம் நெஞ்சில்
இன்னுமின்னும் பேசத்தான் ஆசை உண்டு
... இன்றெனக்குப் பொழுதில்லை கண்ணின் ஈரம்
வண்ணமாக உனைப்பார்த்த ம்கிழ்ச்சி யால் தான்
...வாழ்வினிலே எனக்கொன்றும் குறையொன் றில்லை
குறையொன்றில்லை கண்ணா
மூதறிஞர் அழகாய் சொன்னார்
பாலையில் நடக்கையிலவன்
தோள் மீதெனை சுமக்கையில்
வாட்டமெனக்கு வருவதில்லை
வருந்தாத மனம் நிலைக்கட்டும்
நிலைக்கட்டும் என்றே நாம் நினைப்பதுண்டு
நிலைத்திட்டால் இவ்வுலகு நமக்கில்லை
நிலையானதில்லை என்ற வார்த்தையே நிலை
நிலையானதில்லை வேறொன்றுமே என அறிவோம்.
அறிவோம் போலிகளை
பொய்களை புரட்டுகளை
பாசாங்கு பேச்சுக்களை
பச்சோந்தி பிறழ்வுகளை
பொங்காத பாலாய்
போதுமா பொறுமை
பொறுமை இன்றி பித்தாய் என்றும்
பொருள் தேடி புரட்டி அலைகின்றோம்
என்றோ ஒருநாள் சாகப் போகின்றோம்
செத்தால் அன்று வேகப்போகிறோம்-ஆனால்
அனுதினமும் வெந்து வெந்து சாகிறோம்
அழுக்காறு அவா வெகுளி கொண்டே சகா !
http://www.videoinspiration.net/blog...4/11/greed.jpg
சகா இல்லா வாழ்வு
சுகமில்லா பயணம்
சத்தியம் பொய் பேச
சமயமறிந்தவனவன்
சாம்ர்த்தியமானவன்
சமரோ சமாதானமோ
சகாயம் செய்வான்
சளைக்காத தோழன்
தோழன் இருந்தான் காசும் இருந்தது
கடனாய் கேட்டான் கொடுத்தேன் காசு
காலம் கழிந்தது காணோம் அவனை
கண்டேன் ஒருநாள் கேட்டேன் கடனை
காசும் தோழனும் இழந்தேன் அன்றே
:-( :-(
அன்றே மற நன்றல்லாததை
இன்றை நினை இனிமையாய்
நன்றே நடக்கும் அனைத்தும்
என்றோ வரட்டும் விடுதலை
விடுதலை என்பது உடைப்பது தளை
கெடுதலை எதிர்க்கலாம் கேள்வி கேட்கலாம்
அறிதலை பகிரலாம் அது இந்திய விடுதலை
அடிமை நாட்டிலும் அதுபோல் பேசலாம்
அதன் பின்னுண்டு அவனுக்கு விடுதலை
அமரனாவான் ஆணை அங்கு 'எடுதலை'!
எடுதலை என்றுவிட்டீர் என்பதியைக் கொன்றுவிட்டீர்
..எங்கினும் கண்டதுண்டோ இதுபோன்ற மதியீனம்
உடும்பென நீதிதன்னை உளத்தினிலே பிடித்துநீரும்
..உதவிடும் சாட்சியான சிலம்பினையே மறந்துவிட்டீர்
குறுகிய நெஞ்சமன்றோ கோமகனே கொண்டுவிட்டீர்
,,கூற்றுவன் கொண்டுசென்ற கணவந்தான் வந்திடுவானா
சுடுமழை சொற்களங்கு சடசடத்தே கனலைப்போல்
..சூழ்ந்ததும் மதுரைபின்னர் எரிந்தததுவும் அறிந்தகாதை..
//முரளீஈ... நற நற :)//
அறிந்தகாதை அறிந்த கதைதானா
பணம் பதவி பவிசு குறைவின்றி
மனைவி மக்கள் இளைய வாரிசுகள்
பார்வைக்கு மிக நிறைவான வாழ்வு
மறக்காதே அனுபவ பழமொழியிதை
ஒய்யார கொண்டையிலே தாழம்பூ
உள்ளே இருக்கும் ஈரும் பேனும்
கண்ணை நம்பாதே ஒரு நாளும்
நாளும் ஒரு காரணம் நவிலும் சகியே
நீளும் உன் பட்டியல் தேடி தேடியே
நேரம் கழித்து இன்றேன் வந்தாய் சொல்
நாடியே கேட்டதனால் நன்குரைப்பேன் நானே
ஓடியே வந்தேனா மூச்சிறைக்க படி ஏறி
தேடியேக் காரணம் காண மறந்தேன் சகியே !
சகியே உன்னை நினைத்தால் நெஞ்சில்
..தடைகள் தகர்ந்தே எழில்கள் ஊறும்
உரமாய் நானும் உயரத் தானே
..உணர்வில் கலந்தே உயிராய் நின்றாய்
கரத்தை நீட்டி ககன வெளியில்
..காற்றைப் போலப் பறக்கவும் வைப்பாய்
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே..!
தமிழே அமுதே தரம்கூடிய தங்கமே
குமிழாய் எத்துனை மொழி குறைந்தாலுமே
தன்னிகர் இலக்கியம் அததுனையும் தந்தாயே
தரணியிலே முன்மொழியாய் நீடு வாழ்வாயே
வாழ்வாயே வையத்தில் எல்லாம் பெற்று
... வளமுடனே குறையெதுவும் கொள்ளா வண்ணம்
நாள்பொழுது எக்கணமும் இன்பங் கூட்டி
.. நலமாக இருவென்றே சொல்லி என்னை
ஆழ்கடலில் தள்ளிவிட்டீர் அப்பா உங்கள்
..அரசினையே காப்பதற்கு எண்ணி நீவிர்
பாழ்மனதைக் கொண்டவந்தப் பகைவன் இல்லில்
..பட்டெனவே சேர்த்துவிட்டீர் ஆனால் அப்பா..
பெண்மனது என்னவென்று அறிய மாட்டீர்
..பிழையெல்லாம் புரிவதற்கும் அஞ்ச மாட்டீர்
என்னம்மா இதுசரியா என்ற கேள்வி
..எப்பொழுதும் கேட்டதில்லை நீவிர் என்னை
சொன்னசொலைக் காப்பதற்கு என்றே சொல்வீர்
..சோகந்தான் பெண்களுக்கா சொல்லும் அப்பா
மன்னனென்றால் மக்களுக்கு மட்டும் தானா
..மகளான எனக்குநீதி கிடையா தாப்பா..
கிடையாதாப்பா ஒரு நல்லவன்
கேள்வி இது துரியோதனனுக்கு
கிடையாதாப்பா ஒரு கெட்டவன்
இக்கேள்வி மூத்தவன் தர்மனுக்கு
கீதை உரைத்த கண்ணன் குசும்பு
பார்வைதான் புலப்படுத்துகிறது
பங்காளி பய மக்கா என்றுணர்த்த
பரீட்சை வைத்தான் பரந்தாமன்
பரந்தாமன் வடமொழியா அல்ல தமிழ் வழியா
பறந்து வந்ததாலா அல்ல பருந்து மேல் வந்ததாலா
பரந்து விரிந்த பார் அதிபனா இல்லை பாலி
பரக்ரிதியா பகர்வாயே பரந்தாமா !
--------------------
*பரக்ரிதி,பாலி – தமிழ் வடமொழிக்கு முன்னோடி
பரந்தாமா போதும் உந்தன் பொல்லாத விளையாட்டு
பேதை என்னை விட்டு விடு பாதையை நீயே காட்டு
திக்கு தெரியாத காட்டில் எனக்கு ஏனிந்த கண்கட்டு
தடுமாறி நிற்கிறேன் தவிக்கிறேன் நேரான வழிகாட்டு
காட்டு வழியிடை இரவுப் பயணம்
கானம் ஒன்றே வழித்துணையாகும்
பாட்டரவம் என்னை விலங்கிடம் விலக்கும்
பால் நிலா வெளிச்சம் பாதையைக் காட்டும்
நாட்டு மக்களின் தொந்தரவு தாண்டியே
நானே கண்டேன் புதிய பாதையை
வீட்டில் உள்ளோர் விடுகின்ற மூச்சு
வீதிகள் தாண்டியே என்னைத் தீண்டும்
பூட்டிய நெஞ்சிலே பெற்றவர் போதனை
பூவைப் பெற்றவள் அறியாப் பயணம்
வாட்டிய சோகத்தில் வாடிப் போனேன்
வந்தவள் நெஞ்சிலே அழுதே நின்றாள்
கட்டிலில் இருந்தே கீழே விழுந்தேன்
கனவுகள் விலக்கிக் காயம் கண்டேன்
கெட்ட கனவை கலைத்தக் காலையே
கெடாமல் என்மனம் காப்பான் இறைவன்
இறைவன் நினைத்தாலும்
மனிதன் நினைக்காவிட்டால்
ரன் எடுக்க முடியாது
என வாஸ்ஸப் மெஸேஜ் அனுப்பினால்
என்னா மேன்
என்னா வேலபாக்காம வெள்ளாட்ட பாக்கறியா
அச்சோ பாஸீக்கு எப்படி
தப்பா மெஸேஜ் போச்சு
ஆண்டவா காப்பாத்து..
காப்பாத்து கருணைக்கடவுளே
நாலு பக்கம் துன்பம் வந்தால்
ஓடுவதெங்கே ஒளிவதெப்படி
யானையும் சேனையும் துரத்த
ராணியும் உக்கிரமாய் பார்க்க
சதுரங்க ராஜா நான் செத்தேன்
செத்தேன் என்றாயே சும்மாதானே
செத்தேன் என்பவர் சாகவில்லை
செத்தவர் வந்து செப்பியதில்லை
சாவு மட்டுமே நிச்சயம் அது
செமிகோலனா சிறிய புள்ளியா
சரியாய் எதுவும் புரியவில்லை
சாமியே இல்லை நாமே அதுவும்
சாவு மட்டும் நம் கையில் இருந்தால்!
கையில் இருந்தால் அள்ளி வீசு
காசை தேன் துளியாய் மாற்று
கணங்களை முழுதாய் வாழு
கடந்து போனவை திரும்பாது
திரும்பாது முன்னோக்கு நான் முதுகில்குத்தும் நபரில்லை
துரும்பாக எனை நினைத்தாலுமுனை வைதேனில்லை
அரும்பாது நம்காதல் எனகண்டும் உனைவெறுத்தேனில்லை
விரும்பாது என்னோடுவாராதே வாழ்க்கை விளையாட்டில்லை
விளையாட்டில்லை என சொல்லியே விளையாட்டில் திளைக்கிறோம்.
பூமி மாதாவின் மீது நச்சுரம் பூச்சிகொல்லி மிகை மடிகறக்கும் விளையாட்டு.
அசல் மாதாவை துதி பாடி தெய்வமாக்கி உதிரம் உறிஞ்சும்
விளையாட்டு.
பாரதமாதவை பிளாட் போட்டு அன்னியர்க்கு விற்று கள்ளபண விளையாட்டு.
சக ஜீவிகளை சோதனையாக்கி வாழ்விடங்களை ஒழித்து தின்று தீர்க்கும் விளையாட்டு.
நட்பு சோதரம் நன்கு தரமிறக்கி நற் கொள்ளையடிக்கும் நகை
விளையாட்டு.
மனைகாதலி என்ற கற்பு சிலுவையில் கட்டி கவ்வி குதறி காம
விளையாட்டு.
சாலைகளில் சுதந்திரம் தேடும் சக எதிர்பாலினரின் மீது தோல் ,இரும்பி கத்தி கீறும்
குரோத விளையாட்டு.
காற்றும் மழையும் கடலும் பனியும் சூரியனும் சுழன்று திசை மாறி தாக்கும்
விளையாட்டு
காட்டுகிறது விளையாட்டில்லை வாழ்க்கை ,பலியாக போவது புற்றுக்கா மேகத்திற்கா கோழி பன்றி
காய்ச்சலுக்கா ,சாட் புட் த்ரீ விளையாட்டு
பிரளயம் எனது தேர்வு.
தேர்வு என்பது ஒரு சோதனை
படபடப்பு அதன் சுருதி தாளம்
பரிதவிப்பு அது புது அனுபவம்
வினாத்தாளை பார்த்தவுடன் பீதி
பதட்டம் அடங்கிடும் விரைவில்
பிரவகிக்கும் எழுத்தெனும் ஊற்று
உளைச்சலும் ஆக்க விளைச்சலும்
ஆயிற்று அரை நூற்றாண்டு போல
ஆயினும் தொடருது அத்தொந்தரவு
இன்னும் இரவில் வரும் கனவினிலே
கனவினிலே தான் வெற்றி நமக்கு
காற்றினிலே விட்டு விட்டோம்
கிரிக்கட் கோப்பையினை
காத்திருப்போம் காலம் வரும்
விளையாட்டே வேள்வி என்று
விரும்பி ஏற்பவர் சிலர் உண்டு
சச்சின் ஆனந்த் சாயினா போன்று
சாகசம் செய்பவர் அவரே நன்று
வருமானம் பெருக்கவே சுருக்கான வழி
விளையாட்டதில் தப்பாட்டம் ஆடி
தன்வலி தேடாமல் ஆள்பலம் தேடி
ஏற்றமற்ற போட்டி கொண்டு
ஏமாற்றியவர் பலர் உண்டு
ஏமாந்ததில் இந்தியாவும் ஒன்று
என்றே நான் சொல்வேன்!
/** ச்சே ! இந்தியா நியுசி பைனல்ஸ் போச்சே :banghead: /
சொல்வேன் உண்மையை
கொல்வேன் தீமையை
வெல்வேன் அதர்மத்தை
மன்னனோ கணவனோ
தாட்சண்யமேயில்லை
மாண்டான் நெடுஞ்செழியன்
எரிந்தது அன்று மாமதுரை
கண்ணகியின் கற்பு யாகம்
குண்டலகேசியின் தந்திரம்
கொலை தடுத்த கொலை
தயங்காது தாய்க்குலம்
தைரியமதன் தனி குணம்
தனி குணம் தான் அவனுக்கு
வள வள வள வள என
நான் பேசிக்கொண்டே போகக்
காது கொடுப்பான்
பதில் எதுவும் சொல்ல மாட்டான்..
கூர்மையாய்ப் பார்ப்பான் என்னை..
கொஞ்சம் தடுமாறும் வார்த்தைகளை
மறுபடி கோர்ப்பேன்..
ஏதாவது பிரச்னையைத்
தீர்ப்பதற்கும்
ஒருவரிதான் பதில் வரும்..
ஆனால் ஆழமாக..
ஆனாலும்
அவன் நிறையப் பேசாதது
கொஞ்சம் கஷ்டமாய்..
சூழ்நிலையில்
எதற்கோ மும்பை போய் வந்தான்
அலுவலக விஷய்மாய்..
வாஸ்ஸப் இல்லை
ட்விட்டர் இல்லை
செல்பேசியும் இல்லை..
ஒருவாரம் கழித்து மின்னஞ்சலில்
அதே இடம் அதே நேரம் எனச்
சுருக்கமாக வர
வேகமாய் அரைமணி முன்னால் போய்
காத்திருந்தால்..
வந்தான்..
கண்டதும் குட்டியாய்
ஆனால் இறுக்கமாய் ஒரு
ஆங்கில அணைப்பு
ஒரு வெகுகுட்டி முத்தா கண்ணிமைகளில்..
வெட்கத்திலிருந்து மீள்வதற்கு முன்
பேசினான் பேசினான்..
பிரிந்தது கஷ்டமாம்
என் நினைப்பு தானாம்..
சாரி செல்லம் வேலை என்பதால்
எந்தத் தொடர்பும் வைக்கவில்லை..
சீக்கிரம் உன் அப்பாவிடம்
பேச வரட்டா...
இன்னும் என்னவெல்லாமோ..
சந்தோஷப் பூ
உள்ளூர விகசித்து
மணம்பரப்ப
கேட்டுக்கொண்டே இருந்தேன்
வெளியில் முகம்மட்டும்
நிச்சலனமாய்...
நிச்சலனமாய் நிர்மலமோனமாய்
நித்திலம் உறங்கும் நீலக்கடலாய்
நிழல் பிம்பம் கட்டும் நீர்பரப்பாய்
நித்தமும் நெஞ்சே நீ நிலைத்திரு
நிலைத்திருப்பது தெய்வம் மட்டுமே என்றுதான்
நினைத்திருந்தேன் அதையும் நட்டுமே சிலையாய்
கலைந்துபோனதே நினைப்பு அது களவுபோனதிலே
கணப்பொழுதும் நில்லாமல் பிரபஞ்சம் காப்பவர்
நிலையாக நிற்பதாகாதென நிரூபித்தனர் கள்வர்.
கள்வர் கொள்ள முடியா செல்வம்
செல்வர் வழங்க முடியா தானம்
எடுக்க முடியா கொடுக்க முடியா
சொத்து எழுத்து கற்பனை கர்வம்
கர்வம் கறையல்ல குறையல்ல
கண் மறைக்கும் திரையுமல்ல
கூழைக்கும்பிடு வெறுத்தலும்
குனிய மறுப்பதும் குற்றமல்ல
தனை மிஞ்சி எவருமல்ல
தானே உயர்ந்தவன் என்பது
தலை நிமிர்ந்தே நடப்பது
தன் தம்பட்டம் அடிப்பது
தனியனாய் இருக்க நினைப்பது
தலைவனுக்கு தேவை இவை
தலைக்கணம் சுயமரியாதை - அதனால்
தவறல்ல அதுவொரு நிலை !!
நிலை தடுமாறினேன் விழப்போனேன்
நீட்டினாய் கையை பற்றிக்கொண்டேன்
நிழலாய் கூட நடக்கிறாய் நிற்காமல்
நின் கருணை நானறிவேன் பரமனே
பரமனே என்றால் அனைத்துமானவனேவென புரியாதவரில்லை
புரிந்தும் சிலர் மனிதனை நீயாக கொள்ளவில்லை
பாவம் தானும் பரமனில் ஓருருவென அறிந்தாரில்லை
போகட்டும் எல்லோரும் எல்லாமும் அறிந்திட்டால் நீயில்லை