Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
:lol:
Printable View
Quote:
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
:lol:
Quote:
Originally Posted by Nerd
Malaada.. Annamalai... 8-) Nice Avatar ! enna Nerd garu.. no reply to my PM..
i never posted about this ling, in this thread, instead, i posted about dasa BO in kamalhaasan updates thread. I was answering for a totally different thingi hereQuote:
Originally Posted by Nerd
Bros,
just move on to next messages.....
Source:
http://balakumaranpesukirar.blogspot...g-post_20.html
பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு படத்துவக்க விழா. அழைப்பு வந்திருந்தது. இவர் தலைமை, இவர் முன்னிலை, இவர் தயாரிப்பு, இவர் இயக்கம், இவர் இசை என்றெல்லாம் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்தாலும், குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்துபவர் ரஜினிகாந்த் என்று பெரியதாய்-நாடு மையமாய்-கண்ணைப் பறிக்கிற விதத்தில் இருந்தது. அடடே, பார்த்து நெடுநாளாயிற்று. பேசி வெகுகாலமாயிற்று. இன்று சற்று நெருங்கி நின்று ‘ஹலோ’ சொல்ல வேண்டும். முடிந்தால் பேச வேண்டும்.
ஓரமாய் நிற்பதை மாற்றிக் கொண்டு, அவர் வரும் வழியில் சரியான கோணத்தில் நின்று கொண்டேன். அருகே வந்து பேசுபவர்களிடம் குறைவாகப் பேசி, அவர் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்டூடியோ வாசலுக்கு வந்துவிட்டதாய் சொன்னார்கள். சட்டென்று பரபரப்பானார்கள். ஓரமாய் வைத்திருந்த பூக்கூடை நூறு. மடமடவென்று எடுத்துக்கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அதட்டி மிரட்டி சத்தம் போட்டு வரிசையானார்கள், வரிசையாகும் முயற்சியில் என்னைப் பின்னடையச் சொன்னார்கள். பின்னடைந்து படியேறினேன். இடதும் வலதுமாய் இளைஞர்கள்-சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டவர்களாய் ஒரு நூறு நூற்றிருபது பேர் இருப்பார்கள்.
அவர் வண்டியிலிருந்து இறங்கி நிமிர்ந்து மலரச் சிரித்து கைகூப்ப, பெரிய கைதட்டல். இரண்டு வரிசையாய் நின்ற நண்பர்களுக்கு இடையே நடக்க, பூக்கூடையிலிருந்து ரோஜாப்பூ மழையாய் கொட்டப்பட்டது. தூவப்பட்டது. சில கணங்களுக்கு எங்கும் பூ. இருபதடி உயரத்தில் எல்லா நேரமும் அந்தரத்தில் பூக்கள் இருந்தன. தரைபட்டு, துள்ளி வாசம் எழுப்பின. பூக்கள் வீசப்பட்டு தன்மேல் பொழிவது கண்டு சட்டென்று ஒரு தயக்கம் அவருக்கு-என்ன இது என்ற பார்வை. உடனே சிரிப்பு.
சரி இப்படி ஒரு அன்பா. சரி என்று கைகூப்பி ராஜநடையுடன் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வர, மற்றவர்கெல்லாம் மனசுள் என்ன தாக்கியது. ரஜினிகாந்த் மனிதர்தானே தெய்வமாய் போற்றுகிறார்களே. ரஜினிகாந்த் நடிகர்தானே, ஒரு அரசருக்கு உரிய வரவேற்பு தருகிறார்களே. மலர் மழையில் நடந்து வருமளவுக்கு என்ன உயர்த்தி... இது அன்பின் வெளிப்பாடா. சட்டென்று ஒரு புதுவிதமான காட்சி கண்ட திகைப்பில், திகைப்பின் விளைவாய் உள்ளே பொறாமை பொங்கியது.
இது என் புத்தி, எங்கே முதன்மை எவருக்கு நடந்தாலும் அது நானாய் இருக்க வேண்டும். எனக்கும் நடக்க வேண்டும் என்கிற புத்தி. இதைச் சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கமில்லை, உற்றுப் பார்த்தால் உங்களில் நிறையப் பேருக்கு புத்தி இப்படித்தான் இருக்கும். உண்மையை மட்டும் சொல்வது என்று ஊரார் தீர்மானித்தால் நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு பேர் இப்படித்தான் சொல்வார்கள்.
நான் மனசுள் பொங்கும் உணர்வுகளை காமம், காதல், பொறாமை, ஏக்கம், பேராசை இவைகளைத் தடுப்பதில்லை. ச்சீ வெளியே வராதே என்று எண்ணங்கள் வந்தால் அடக்குவதில்லை. மாறாய் அனுமதித்து விடுவேன். அது...அந்த எண்ணம் செலவாகும் போது மனம் கூர்மையாகி ஆராய்ந்து அலசி சுத்தம் செய்துவிட்ட பிறகே அனுமதிப்பதுண்டு. சட்டென்று ரஜினிகாந்த் மீது பொறாமை வந்தது. பொறாமைப்படுகிறோமே என்று வெட்கமும் வந்தது.
டேய் தம்பி, மனசுத்தம்பி, எதுக்கு பொறாமை, அவரை ஜனங்கள் விரும்ப ஆயிரம் காரணங்கள் இருக்கும். உனக்கு எதுக்கு பொறாமை. வரிசையில் நின்ற இளைஞர்களுக்கு அவர் பல்வேறு உதவிகள் செய்திருக்கக்கூடும். இது தெரியாமல் ஏன் புழுக்கம். உனக்கு அவர் கெடுதல் எதுவும் செய்ததுண்டா, இல்லையே. அப்படியிருக்க எதனால் புழுக்கம். முதலில் மற. புழுக்கம் விடு. உண்மையில் உன் உணர்வு பொறாமையல்ல. நீ பயந்து விட்டாய். நூறு பேர் ரோஜா தூவி மொத்த சூழ்நிலையையும் கண நேரத்தில் மாற்றியது உன்னை அதிர அடித்துவிட்டது. பெரிய ஆளுயர மாலைபோட்டிருந்தாலோ, சரிகைச் சால்வை சார்த்தியிருந்தாலோ, கற்பூர ஆரத்தி காட்டியிருந்தாலோ உனக்கு அதிர்ச்சி ஆகியிருக்காது. பூமழை ‘ஹா’ என்று வியக்க வைத்துவிட்டது. வியப்பு வழியே வந்த பொறாமை இது.
டேய் தம்பி, மனசுத் தம்பி தணிந்து போ, கேட்டு நடந்திருக்குமா, திட்டமிட்ட செயலா. அந்த மனிதனை உனக்குத் தெரியும். ‘ஹலோ’ என்று தானாய் நாலடி முன் வந்து கைகுலுக்கும் ஆள். ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று யார் கேட்டாலும், எப்போது கேட்டாலும், எத்தனை நேரமானாலும் அலுக்காது சம்மதம் சொல்கிற நடிகர். சிறிது முகவாட்டம் தெரிந்தாலும் உடன் வேலை செய்யும் தோழர்களிடம் என்ன காரணம் என்று உடனே தயங்காது கேட்கும் மனிதன். இங்கு இப்படி மனிதர்கள் அபூர்வம். அதனால்தான் இந்த பூமழை பூப் போன்ற அன்புமழை.
பொறாமை விட்டு உற்றுப்பார். உன்னை, ரஜினியை இடைவிடாது பார். உனக்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும், உன் அருகே அவர் பிறரோடு பேசுவதைப் பார்க்க கிடைத்தாலும் உற்றுப்பார்.
அப்படி என்ன உயர்வு, கவனி.
மனிதர்கள் இயற்கையின் குழந்தைகள். பூமி, வாயு, அக்னி, நீர், ஆகாயம் என்று இயற்கைச் சக்திகள் கலந்தவர்கள்.சூரியனின் உதயம், சந்திரனின் குளுமை, நீரின் சலசலப்பு, ஆகாயத்தின் பெரும் சக்தி, வாயுவின் அலையல்-எல்லாம் மனிதர்களில் உண்டு.
மனிதரை கவனிப்பது இயற்கையைக் கவனிப்பது போல.
ரஜினிகாந்த் என்ற மனிதனை, அந்த மனிதனை நேசிக்கும் மனிதர்களைக் கவனி. ரஜினிகாந்த் உன் சகஜீவி. தென்னிந்தியா முழுவதும் வளைத்துப் பிடித்த ராஜராஜ சோழன். மராட்டாவிலிருந்து நகர்ந்து, கர்னாடகத்தில் குடியேறி, தமிழ் தேசம் வளைத்த சாளுக்கியன். அன்பான புலிகேசி.
இவரைத் தெரியாது என்று தென்னிந்தியாவில் எவராவது சொல்வார்களா, சகலருக்கும் தெரிந்த முகம். சகரும் பல தடவை உச்சரித்த பெயர். ஆறு மாதக் குழந்தையிலிருந்து அறுபது தாண்டிய பெரியோர்கள் வரை பார்த்துப் பரவசப்பட்ட முகம். டேய் தம்பி, மனசுத் தம்பி உற்றுப்பார். ரஜினிகாந்த் நெற்றியை, கண்களை, புருவத்தை, மூக்குக் கூர்மையை, கை விரல்களை, உள்ளங்கையை, தோல் நிறத்தை, நிற்பதை, நடப்பதை, முக அசைவை, கண் உருளலை, மூச்சு விடுதலை உற்றுப்பார்.
எதனால் இது இப்படி ஒரு சிறப்பு பெற்றது. ஒட்டாது உற்றுப்பார். ஐயோ என்று ஆங்காரப்படாதே. ஆஹா என்று கொண்டாடவும் செய்யாதே, ஓதுங்கி நின்று உற்றுப்பார். விருப்பு-வெறுப்பின்றி ரஜினியை ஸ்வீகரி. இப்படி தீர்மானம் செய்த ஆறாம் மாதம் மறுபடி சந்தித்தேன். மிக நெருக்கமாய் மூச்சு விடுகிற ஓசை கேட்கும் தூரத்தில் சந்தித்தேன்.
PM edhuvum varalai :?Quote:
Originally Posted by Dilbert
Source:
http://balakumaranpesukirar.blogspot...blog-post.html
அது ஒரு ப்ரிவியூ தியேட்டர்...
திரைப்படம், வழக்கமான தியேட்டர்களில் திரையிடப்படும் முன் இங்கே டெக்னீஷியன்களுக்காகவும், நடிக நடிகையருக்காகவும், விநியோகஸ்தர்களுக்காகவும் திரையிட்டுக் காட்டப்படும். அந்தப் ப்ரிவியூ தியேட்டரில் ‘ஜென்டில்மேன்’ திரையிடப்பட்டிருந்தது. உள்ளே ரஜினி படம் பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியாது. படம் பார்த்துவிட்டு, சக டெக்னீஷியன்கள் படம் எப்படி என்று அபிப்பிராயம் சொல்வார்கள். கேட்போம் என்று போனேன். படம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது.
அந்தத் தியேட்டரில் நாலு பேர் போகக்கூடிய லிஃப்ட் இருந்தது. ஏறி கதவு சார்த்தி இரண்டாவது மாடி குமிழ் அழுத்த, பெட்டி உயரே நகர்ந்தது, லிஃப்ட் இரண்டாவது மாடி தொட்டது. மாடியில் சிரிப்புச் சத்தம் கேட்டது.
கதவு திறக்க, ரஜினிகாந்த். நான் வெளியே வர முயல, ரஜினி என்னை மறுபடி லிஃப்டுக்குள் தள்ளினார். “பாலகுமார் சார்... க்ளாஸ்... ஏக்ளாஸ் படம், ரொம்ப நல்லா வந்துருக்கு” கைகுலுக்கினார். அவரும் இன்னொரு நண்பரும் உள்ளே வர, லிஃப்ட் கதவு சார்த்தி தரை நோக்கி போகும் குமிழை அந்த நண்பர் அழுத்த, லிஃப்ட் கீழிறங்கத் தொடங்கியது. ஐந்தடிக்கு ஐந்தடிபெட்டியில், அவர் மூச்சு என்மீது படும் அளவு நெருக்கமாய் நின்று படம் பற்றி சில வாக்கியங்கள் சொன்னார். என் காதில் ஏறவில்லை. எல்லாம் பாராட்டுக்கள் என்று தெரிந்தது. ஆனால், மனசுள் வாங்கவில்லை.
ரஜினிகாந்த் அருகே இருக்கும் திகைப்பு மட்டுமல்ல காரணம். ஒரு சிறிய வெட்கமும் உள்ளே சேர்ந்தது. அவர் கூறும் பாராட்டுக்களை ஏற்க மறுத்தது. சினிமா ஒரு டீம் ஓர்க். ஒரு படத்தின் வெற்றிக்கு இன்னார்தான் காரணம் என்று கூற இயலாது. ஒரு நூறு பேர் மிக கவனமாய் ஒருங்கிணைந்து, புரிந்து கொண்டு பரஸ்பரம் விட்டுக்கொடுத்து செயலாற்ற வேண்டிய இடம். நாவல் ஒரு தனிமனிதனின் சக்தி. ஒரு நாவல் சிறப்புடையதானால் எழுத்தாளரே கொண்டாடப்பட வேண்டியவர். நாவல் வந்த பத்திரிகையோ, அச்சிட்டவரோ, கம்பாஸிடரோ அங்கு பேசப்படுவதில்லை.
ஆனால் சினிமா நூறு துடுப்புகள் போடப்பட்ட நீண்ட ஓடம். எந்தத் துடுப்பால் படகு வேகமாயிற்று என்று சொல்வது கடினம். நடுவே நாலு துடுப்பு சரியாகப் போடவில்லையெனில், வேகம் குறைந்து ஆட்டம் அதிகமாகும். மற்ற துடுப்புகளுக்குச் சிரமம் வரும் என்பதும் நிச்சயம். போடப்பட்ட நூறு துடுப்பில் ஏழாவது துடுப்பைப் பார்த்து, ரொம்ப சந்தோஷம்... ஜெயிச்சுட்டீங்க என்றால் என்ன பதில் சொல்வான் அந்தத் துடுப்புகாரன்.
பாராட்டை ஏற்றும், ஏற்காமலும் கைகூப்பி நிற்க வேண்டியதுதான்.
பாராட்டிய ரஜினிகாந்துக்கும் இது தெரியும். அவரும் பல நீண்ட ஓடங்களை ஓட்டிய துடுப்புக்காரர்தான். ஜெயித்து கரையேறிய போது, எதிர்ப்பட்ட துடுப்பாளை ரஜினிகாந்த் கைகுலுக்கிப் பாராட்டுகிறார் என்பது சிறிது நேரம் கழிந்து புரிந்தது.
லிப்ட் தரை தொட்டது.
“எல்லாப் பெருமையும் டைரக்டருக்கே” என்று சொன்னேன்.
“உண்மை...” ரஜினி பதில் சொன்னார். “அதோடு கூட இது ஒரு நல்ல டீம். படத்தின் எல்லா கலவையும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.” மறுபடி அவர் மூச்சுக்காற்று என்மீது பட்டது. என் காற்றும் அவரைத் தொட்டிருக்கும்.
லிஃப்ட் திறக்க, சரட்டென்று வெளியேறி கார் ஏறிப் பறந்து போனார்.
வேகமான ஒரு சுழல்பந்து தலை உரசிப் போனது போல, அந்தப் பந்தை எப்படி விளையாடுவது என்று தெரியாத பேட்ஸ்மேன் போல திகைத்துக் கிடந்தேன்.
‘டேய், பாலகுமார் தம்பி, முட்டற மாதிரி ரஜினி எதிர்க்க வந்தே...அதனால் பாராட்டு கிடைச்சுது. ரொம்ப எமோஷனலாயிடாதே... இது மரியாதை...அன்பு. பெரிய முக்கியத்துவம் உனக்கு எதுவும் இல்லை. அடடா... ரஜினியே கைகுலுக்கினார்... நாலுபேர்கிட்ட பேசாதே... சும்மா இரு.’ திகைப்பிலிருந்து வெளிவந்தேன்.
மற்ற நண்பர்கள் தியேட்டர் வாசலில் பாராட்டினார்கள். இன்னொரு காட்சி ப்ரிவியூ தியேட்டரில் ஆரம்பமாக, வீடு திரும்பினேன்.
படியேறினேன்.
“ரஜினி வீட்டுலேர்ந்து போன் வந்தது... ஜெயராம் கேட்டாரு உங்களை”... வீட்டில் கூறினார்கள்.
“அப்படியா... இப்பதானே பேசிட்டு வரேன்.” நான் எண்களைச் சுழற்றினேன். ரஜினியின் உதவியாளர் ஜெயராம் போனை எடுத்தார். “அண்ணன் பேசணும்னார் சார்” ஒரு நிமிஷம், சில விநாடிகள் நகர்ந்தன. “ஹலோ பாலகுமார் சார்... பிரமாதமா பண்ணிட்டீங்க... அங்க நிறைய பேச முடியவில்லை, வாசல்ல கும்பல் ஜாஸ்தியாயிடுச்சு. அடுத்த ஷோ நம்மால ஜாம் ஆயிடக்கூடாதுன்னு வண்டியேறிட்டேன். படத்துல பல இடங்கள் தனியா தெரிஞ்சுது. ஷங்கர் யாரு... யார்கிட்ட இருந்தாரு”. பத்து நிமிடங்கள் படத்தின் பல சிறப்புகள் பற்றிப் பேசி.. மனதாரப் பாராட்டி.. வாய் விட்டு சிரித்து.. அப்படியானால் வெறுமே எதிர்ப்பட்டதால் வெளிவந்த பாராட்டில்லையா... உண்மையாகவே என் வேலை பிடித்திருக்கிறதா... இது மனசு திறந்த பாராட்டா...சக தொழிலாளியைக் கட்டிப் பிடித்து உற்சாகமூட்டும் செயலா.
சினிமா ஒரு டீம் ஓர்க்...
இதனால் சில சங்கடங்கள் உண்டு. நாவலில் கிடைக்கிற தனித்துவம் சினிமாவில் எவருக்கும் கிடையாது. ஒரு காட்சி அமைப்பு, காமிரா, நடிக நடிகையரின் மேக்கப்; செட் ப்ராப்பர்டி, லொகேஷன் போன்றவையும் காரணமாய் இருக்கலாம். ஒரு நல்ல காட்சி வசன பலமின்மையால், வசன பலமிருந்தாலும் காமிரா கோணம் சரியின்மையால் காமிரா, வசனம் சரியாய் இருப்பினும் நடிகர் உணர்ந்து செயலாற்றாததால்; நடிப்பு, காமிரா, வசனம், சரியாய் இருப்பினும் எடிட்டரின் கவனக்குறைவால் சிதையலாம்.
சினிமா ஒரு நெட்டி வேலை...
ஒரு நெட்டி பொம்மையை, கோவில் கட்டடம் போன்ற நெட்டி பொம்மையை நூறு பேர் சேர்ந்து செய்யும் வேலை. ரஜினி தனித்தனியே எல்லோரையும் என்னிடம் பாராட்டினார். “ எனக்கு டைரக்டர் நம்பர் தெரியாது. அதனால் உங்ககிட்ட என் பாராட்டைச் சொல்றேன். ஷங்கர் கிட்டே என் பாராட்டை சொல்லுங்க”.
நண்பர் ரஜினிகாந்தின் பாராட்டு பற்றி யூனிட்டில் சொல்ல, அங்கே பலபேருடைய முகம் மலர்ந்து.. மகிழ்ந்து மறுபடி என்னைச் சொல்லச்சொல்லி கேட்டு புளகாங்கிதமடைவதை நான் உணர்ந்தேன். ரஜினிகாந்த் இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு அவ்வளவு முக்கியம். அவர் பாராட்டு மிகப்பெரிய பெருமை.
சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தை இப்படி மனம் நிறைய பாராட்டுபவர்கள் மிகக்குறைவு. ப்ரிவியூ தியேட்டரில் நான் பல முகங்களை உற்றுக் கவனித்திருக்கிறேன். “படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நிச்சயம் நூறு நாள் கவலையேபடாதீங்க”. டைரக்டரிடம் கைகுலுக்கிவிட்டு, தியேட்டர் தாண்டி தெருவுக்கு வந்ததும், எப்படி படம் என்று எதிர்ப்பட்டவர் கேட்க, “ஊத்திக்கிச்சு. ஊத்திக்கிச்சு” என்று நீட்டி முழக்கி சிரிப்பவர்களை கண்டிருக்கிறேன்.
‘கிட்டதட்ட இதே ஸ்டோரி நான் சொன்னேன். எவனும் கேட்கலை, இப்ப அதே கதையே வச்சு சக்ஸஸ் ஆக்கிட்டாம் பார்...’
“சக்ஸஸுன்றே...”
“அட, நாப்பது நாள் ஓடும்பா...பாட்டு சரியா அமைஞ்சு போச்சு. நடிகர் சரியா அமைஞ்சு போச்சு.. வசனம் கூட சரியா வுழுந்துடுச்சுப்பா”. இந்த வெற்றி, பிறர் திறமை என்பது ஏற்காமல், தெய்வச் செயல், எதேச்சை என்று பாராட்டும் பாதி மனங்களை கண்டிருக்கிறேன்.
ரஜினி முழுமையானவர்...
பிறகு ஒருநாள் அவரிடம், நீங்கள் இத்தனை மனமுவந்து பாராட்டிப் பேசுவீர்கள் என்று நினைக்கவேயில்லை என்று சொல்ல, சிரித்தார் ,நிதானமாய் பேசினார். “சினிமாவில் ஒரு படம்கூட ஃபெயிலியர் ஆகக்கூடாது. சுமாரான படத்தைக் கூட நல்லா பாராட்டணும். நல்ல படத்தை வாய்விட்டு மனசார பலமுறை பாராட்டணும். அந்தப் பாராட்டால இன்னும் நாலு நல்ல படம் சம்பந்தபட்டவங்க தரணும். சினிமா இன்டஸ்ட்ரில ஒரு படம் கூட ஃப்பெயிலியர் ஆகக்கூடாது. அது யார் படமா இருந்தாலும் சரி... என்னவிதமான படமா இருந்தாலும் சரி...”
தனக்கு ஒரு கண் போனாலும்,பிறருக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று வேண்டும் உலகத்தில் இந்த மனிதர் வித்தியாசமானவர்.
எதனால் இப்படி.. பலபேருக்கு இல்லாத இந்தத் தெளிவு ரஜினி எப்படி வந்தது. “இது மொத்தமும் ட்ராமா, இந்த நடிகன் அந்தஸ்து, பணம், புகழ், கைதட்டல், பூமாலை, பூத்தூவல் எல்லாம் நாடகம். இந்த நாடகத்துக்கு வேற யாரோ ஒருத்தர் தான் டைரக்டர்.
இந்த உலகத்துல உங்களுக்கு ரைட்டர் வேஷம். எனக்கு நடிகன் வேஷம். அவருக்கு மேக்கப் மேன் வேஷம். கொடுத்த வேஷத்தை டைரக்டர் திருப்தி ஆகற மாதிரி செய்யணும். அந்த டைரக்டர் பேரு கடவுள், ஆண்டவர், அல்லா, ராம், சிவா, புத்தன், விஷ்ணு எதாவது வச்சுக்கலாம். எல்லாப்பணமும், புகழும் ட்ராமா, நாடகம், இது நானில்லை.”
ஒரு நாள் ரஜினி பேச, எனக்கு கேள்வி வந்தது,
ரஜினி புரிந்து பேசுகிறாரா.. இல்லை, எவரேனும் பேசியது கேட்டு பேசுகிறாரா.. சந்தேகம் வந்தது.
நான் எழுத்தாளன்... எதையும் சந்தேகத்தோடு பார்ப்பதே என் வழக்கம்.
SOURCE:
http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/3.html
சந்தேகம் வந்தபோது மனசு சட்டென்று வெகுதூரம் பின்னோக்கிப் போயிற்று.
தர்மயுத்தம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு ரஜினிகாந்த் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. ரஜினிகாந்தின் பரபரப்பான நேரம் அது. வெற்றிகள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு விதத்தில் அவர் எல்லோராலும் கவரப்பட்டார். அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் உச்சக்கட்டம் அடைந்திருந்த காலம் அது.
சாவி பத்திரிக்கையின் சார்பாய் அவரை பேட்டி காணச் சென்றிருந்தேன். காலை எட்டு மணி இருக்கும்.
“டிபன் சாப்பிட்டீங்களா”. ரஜினி கேட்டார்.
“இல்லை”.
“கார் எங்கே’- தேடினார்.
அவருடைய கார் எங்கேயோ போயிருந்தது.
“எதில் வந்திருக்கிறீர்கள்”.
“ஸ்கூட்டர்”
“வாங்க போவோம்”
நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய, ரஜினிகாந்த் என்னிடமிருந்து வண்டியை வாங்கிக் கொண்டார். நான் பிலியனில் ஏறிக் கொள்ள, வண்டியை அவர் ஓட்டினார். டிரைவ்-இன் ஓட்டலுக்கு வண்டி போயிற்று,
கூட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசினார். அவர் பேசிய விஷயங்கள் பலது எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன. என் வாழ்க்கையில் அந்தப் பேச்சுகள் மிகவும் உதவின. அவர் சொன்ன நேரடி வாக்கியங்கள் நினைவில் இல்லை. அதனால் அதன் சாராம்சம் சொல்கிறேன்.
“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள்.
தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.
கண்டக்டரா, கன்னடமா, தமிழ், இங்கிலீஷ், ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.
இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.
மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”
இது ரஜினிக்கு மட்டுமல்ல, பாலகுமாரனுக்கும் பொருந்தும். செய்யும் வேலைக்குக் கேலி வரும். அது மனிதர் குணம். நமக்கு அடுத்த வேலை தான் கவனம். கேலி சாதாரணம்.
வார்த்தைகளாய் அன்று இருந்த ரஜினி, வார்த்தைகளை உள்வாங்கி ஜெயித்திருக்கிறார். உங்களுக்கு இது அது தெரியுமா எனக் கேட்டு, இழிவுபடுத்துவார்கள் என்று நினைத்த ரஜினிகாந்த், இன்று சித்தர்கள் பாடல் பற்றி சொல்லச் சொல்லி கேட்கிறார். ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் தத்துவங்கள் பற்றி படிக்கிறார். ரமணர் வாழ்க்கை பற்றியும், வாக்கு பற்றியும் அதிகம் தெரிந்திருக்கிறார்.
தத்துவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் பெருமையான விஷயம் இல்லை. அவைகளை உள்வாங்கி ஒட்டி வாழ்தல் முக்கியம் என்பது புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் கோபப்படுவதில்லை. ஆனால் தீர்மனாமாய் இருக்கிறார்.
ரஜினிகாந்த் இனிமையாய் இருக்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் இணக்கமாய் இருந்து விடுவதில்லை. மனசு விட்டு பாராட்டுகிறார்.
‘பாலகுமார் சார், அந்த காலேஜ் அட்மிஷன் பத்தி யுவராணி பேசறாது நல்லாயிருந்தது.’
நான் அன்றைய ஷுட்டிங்கிற்கு எழுதிக் கொடுத்து விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டேன். ஆனாலும் கூப்பிட்டு பாராட்டி, “ரஜினி சார்.. நான் நேத்து ஷுட்டிங்க்கு வரலைன்றதுக்காக இப்படி கூப்பிட்டு பாராட்டறா மாதிரி..”
“கடவுளே.. மனசாரப் பாராட்டக் கூடாதா. ஏன் சந்தேகமாவே பார்க்கறீங்க. எனக்கு பிடிக்காத விஷயத்தை மூஞ்சிக்கு நேர சொல்லி விடுவேன்”.
“இதுவரைக்கும் சொன்னதில்லை”
“பிடிக்காதது எதுவும் இதுவரை உங்களாண்ட எனக்குத் தெரியலை. சொல்லலை”
ஆனால் சட்டென்று ஒருநாள் மெத்தென்ற குட்டு விழுந்தது.
“இந்த ஸீனை இப்படி ஆரம்பிச்சா என்ன..” அவர் சொல்ல ஆரம்பிக்க, அதனுடைய நூல் புரிந்து கொண்ட நான் அதே விதமாகவே யோசித்து வைத்திருந்த சந்தோஷத்தில் குறுக்கிட்டு, “க்ரெக்ட்.. இது சொன்னதுக்கப்புறம் அந்த டயலாக் தொடர்ச்சிய..”
சட்டென்று உற்றுப் பார்த்தார்.
“பாலகுமார் சார்.. உங்கக்கிட்ட ஒரு தப்பு இருக்கு.. சொல்லட்டா”.
“சொல்லுங்க சார்”.
“ஸ்பீட் ரொம்ப ஜாஸ்தி. இது தேவையில்லை. என்னை முழுக்கப் பேசவிடறதேயில்லை நீங்க. ஒரு இடம் தொட்டவுடனே மடமடன்னு கம்ப்யூட்டர் கணக்கா போயிடறீங்க. போலாம். தப்பில்லை. எதிராளியைப் பேசவிட்டு அப்புறம் உங்க நேரம் வரபோது பேசுங்க”.
“சரி சார். ஸீன் சொல்லுங்க”
சொன்னார். சொன்ன பிறகு கருத்து கேட்டார்.
அந்த ஸீன் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முடித்த விதம் உறுத்தியது.
சொன்னேன்.
“பார்த்தீங்களா.. கரெக்ட்டுன்னு கத்தினீங்களே.. இப்ப இது திசைமாறி இருக்கறது புரியுதா”
“புரியுது சார்..” நான் ஸீனைத் தொடர்ந்து சிந்திக்க தள்ளிப் போனேன்.
அன்று போகும் முன் என்னைத் தேடி கை குலுக்கிவிட்டு முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப்போனார். அந்த வினாடி நேரத்தில் எனக்கு அவர் எண்ணம் புரிந்தது.
“புத்தி சொல்வது போல் எங்கோ உங்கள் மனதை மிதித்து விட்டேனா. ஆமெனில் மன்னிக்க,” முகம் பேசியது. மறுநாள் நேரடியாய் வாய் வார்த்தையாகவும் சொல்லப்பட்டது.
“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் கேட்டார்.
நான் சொன்னேன்.
:bow: :bow: :bow:Quote:
வார்த்தைகளாய் அன்று இருந்த ரஜினி, வார்த்தைகளை உள்வாங்கி ஜெயித்திருக்கிறார்.
Excellent article :clap:
Balakumarayum jalraanu sonnaalum solvaanga (or already sollitteengala?)
Superb article.. :clap:
but an usual one.. :wink: We have seen many such and we will see more such.... coz Rajini is that kind of person who is really loved by all ..
It is surprising to see, being in that kind of industry ( clearly explained by Balakumaran in this article itself) still Rajini is being loved and respected by all despite being the No.1 star for a long time continiously.. That shows who, Rajini the man is :boo:
It is very clear these are said from the heart, not said for the sake of saying it or pleasing him....
Rajini :notworthy: :thumbsup:
The title is justified again by this article :cool:
and last but not the least.... whether Rajini likes it or not till he is there in Industry he will be the No.1 star :yes: So friends, chill out and enjoy.. :cool: